இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சேக்கிழார் காலத்துக் கல்விச்சூழல்

முனைவர் மு. பழனியப்பன்


பன்னிருதிருமுறைகளில் காப்பியத் திறனுடையது பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் ஆகும். இதனை இயற்றியவர் சேக்கிழார். இவர் பல்வேறு காலச் சூழலில் வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாகப் படைத்தளித்துள்ளார். இந்நாயன்மார்கள் பலர் கல்வியறிவில் சிறந்தவர்கள் ஆவர். அவர்கள் வேதக்கல்வி, பள்ளிக்கல்வி, சமயக்கல்வி, குலக்கல்வி போன்ற பற்பல கல்விகளைக் கற்றவர்கள் ஆவர். இவர்களின் கல்விச்சூழலை விளக்கவரும் சேக்கிழார் அவ்வவ் இடங்களில் அவ்வவ் கல்வி குறித்த சிந்தனைகளை வகுத்தளித்துள்ளார். அவற்றை எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.



வேதக்கல்வி

பெரியபுராணத்துள் வரும் அந்தண குலத்தவர்கள் வேதக்கல்வியைப் பயின்றுள்ளனர். விசாரசருமர் (சண்டேசுர நாயனார்) கற்றது வேதக்கல்வியாகும்.

ஐந்து வருடம் அவர்க்கு அணைய
அங்கம் ஆறும் உடன் நிறைந்த
சந்த மறைகள் உட்படமுன்
தலைவர் மொழிந்த ஆகமங்கள்
முந்தை அறிவின் தொடர்ச்சியால்
முகைக்கு மலரின் வாசம் போல்
சிந்தை மலர உடன் மலரும்
செவ்வி உணர்வு சிறந்ததால் ( பாடல் எண்- 1223)



அந்தண குலத்தில் ஐந்தாம் வயதில் வேதக்கல்வி தொடங்கப் பெற்றுள்ளது. வேதங்களில் உள்ள ஆறு அங்கங்கள் குழந்தைகளுக்கு வேதவல்லவர்கள் கற்றுக் கொடுத்தனர். சிக்ஷை, வியாகரணம் சந்தோ, விசிதி, நிருத்தம், சோதிடம், கற்பம் முதலானவை வேதங்களில் உள்ள ஆறு அங்கங்கள் ஆகும். இவ்வாறு அங்கங்களும் விசாரசருமருக்கு கற்பிக்கப் பெற்றுள்ளன.

மொட்டுக்குள்ளே வாசம் நிறைந்திருப்பதைப்போல சென்ற பிறவியிலேயே வேதத்தின் தொடர்பை விசாரசருபர் பெற்றிருந்ததால் அவர் விரைவில் வேதக்கல்வியில் தேர்ச்சி பெற்றார் என்று உவமை வாயிலாகச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

சிறுத்தொண்டர் புராணத்துள் அவரின் மகன் சீராளன் பள்ளியில் படித்த நிகழ்ச்சி சுட்டப் பெறுகிறது. சிறுத்தொண்டரும் மகாமாத்திரர் என்ற அந்தணக் குலப்பிரிவில் ஒருவகைப்பட்டவர் ஆவார். இவர் வேந்தருக்கும் அந்தணருக்கும் இடைப்பட்ட மரபினர் என்ற கருத்தும் உண்டு. இவரின் குழந்தை கல்வி கற்க பள்ளி சென்றது.

வந்துவளர் மூவாண்டில் மயிர்வினை மங்கலம் செய்து
தந்தையாரும் பயந்த தாயாரும் தனிச்சிறுவர்
சிந்தைமலர் சொல்தெளிவில் செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தம்அற வந்தவரைப் பள்ளியினில் இருத்தினர் (பாடல்எண்: 3686)

இப்பாடலில் மூன்றாம் வயதில் சீராளன் பள்ளிக்கு அனுப்பப் பெற்றுள்ளாள்ன. வேதக்கல்வியே சீராளனுக்கும் வழங்கப் பெற்றது.



இப்பாடலில் இடம்பெறும் மயிர்வினை மங்கலம் என்பது செய்யப்பெற்றவுடன்தான் கல்விநிலையத்திற்குக் கல்வி கற்கப் பிள்ளைகள் அக்காலத்தில் அனுப்பப் பெற்றுள்ளனர். இதனை சவுளக் கல்யாணம் என வடமொழியில் அழைப்பர். சேக்கிழார் இச்சொல்லைத் தமிழாக்கித்தந்துள்ளார். மயிர்களையும் இச்சடங்கு அந்தணர்க்கு மட்டுமே உண்டு. ரிக்,யசுர் வேதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே இச்சடங்கு நிகழ்த்தப் பெற்றுள்ளது. மற்றவர்கள் மயிர்களைதல் தவிர்க்கப் பெற்றுள்ளது. (தற்காலத்தில் முடிகாணிக்கை என்ற பெயரில் அனைத்துத் தரப்பாரும் மயிர்களைதலைச் செய்து கொள்ளுகின்றனர் என்றாலும் இம்முறை ஒரு சடங்காகத் தற்போதைய தமிழ்ச்சமுதாயத்தில் இல்லை)



சேக்கிழார் காலத்தில் அந்தணர்க்கு மட்டும் வேதக்கல்வி வழங்கப் பெற்றுள்ளது என்பது தெளிவாகத் தெரியவருகிறது. இவ்வேதக் கல்வி முறையில் மறைகள், கலைகள் போன்றன கற்பிக்கப் பெற்றுள்ளன. அடுத்து அரச மரபினருக்கு வேதம் சார்ந்த சில பகுதிகளை அறிவிக்கும் கல்வி வழங்கப் பெற்றுள்ளது.

சோழ அரசன் மனுநீதியின் மகனான வீதிவிடங்கன் அளவுஇல் தொல்கலைகள் கற்றுத் தேர்ந்தவன் என்று சேக்கிழாரால் குறிக்கப் பெறுகிறான். சுந்தரர் ஆதிசைவ மரபினர். இவர் முந்நூல் சாத்தி கலைகள் கற்ற முறைமை அவரது புராணத்தில் குறிக்கப் பெற்றுள்ளது.

பெருமைசால் அரசர் காதல் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்
வருமுறை மரபில் வைகி, வளர்ந்து மங்கலம் செய் கோலத்து
அருமறை முந்நூல் சாத்தி அளவுஇல் தொல்கலைகள் ஆய்ந்து
திருமலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப்பருவம் சேர்ந்தார் (பாடல்எண் 152)

என்ற பகுதி அரசரால் தன்பிள்ளையாக வளர்க்க ஏற்றுக் கொள்ளப்பெற்ற சுந்தரருக்குக் கல்வி தரப் பெற்றுள்ளது. அரசர், அரசர் சார்ந்தோர் போன்றோருக்கு வேதக்கல்வி விரிவுபடுத்தப் பெற்றிருந்ததை இந்நிகழ்வுகள் அறிவிக்கின்றன.

மற்ற பிரிவினர் அவரவர் தொழில்சார்ந்த கல்வியைக் கற்றுள்ளனர். திண்ணன் எனப்படும் கண்ணப்பர் சிலைத்தொழில் பயிற்ற வேண்டி முந்தை அத்துறையில் மிக்க முதியவரை அடைத்துக் கூட்டி ( பாடல்எண்; 68) என்ற குறிப்பின்படி வேடக்குலத்துக்கல்வி திண்ணனாருக்குக் கற்பிக்கப் பெற்றமை தெரியவருகிறது.

இவ்வாறு குலம் சார்ந்த கல்வி என்ற நிலையில் சேக்கிழார் கால சமுதாயத்தில் பிற வகுப்பினருக்குக் கல்வி கற்பிக்கப் பெற்றுள்ளது.



சமண சமயம் சார்ந்த கல்வி

திருநாவுக்கரசர் மருள்நீக்கியாராக இருந்த காலத்தில் அவர் சமண சமயக் கல்வியைக் கற்றுள்ளார். அவர் பாடலிபுத்திரம் என்ற நகரத்திற்குச் சென்று அங்குள்ள சமணப்பள்ளியில் இணைந்துக் கல்வி கற்றார் என்ற குறிப்பு பெரியபுராணத்துள் உள்ளது. வேளாள மரபினைச் சார்ந்த இவர் வேதக்கல்வி கற்க இயலாதவர் என்பதால் மாற்றுக்கல்வி முறைக்குச் செல்ல வேண்டியவரானார்.

பாடலிபுத் திரம்என்னும் பதி அணைந்து சமண்பள்ளி
மாடுஅணைந்தார் வல்அமணர் மருங்குஅணைந்து மற்றவர்க்கு
வீடுஅறியும் நெறிஇதுவே எனமெய்போல் தங்களுடன்
கூடவரும் உணர்வுகொளக் குறிபலவும் கொளுவினார் (பாடல்எண்: 1308)

பண்டைக் காலத்தில் பாடலிபுத்திரம் என்று இரு நகரங்கள் இந்தியாவில் இருந்தன. வடநாட்டில் இருந்த தற்போது பீகாரின் தலைநகராக விளங்குகின்றன பாட்னா என்பது ஒரு நகரம். இந்நகரில் பௌத்தமதம் சிறந்து விளங்கி அதனைப் பரப்பும் நிலையங்கள் இருந்தன. அசோகர் காலத்திலேயே பௌத்தக் கல்வி இங்குச் சிறந்து விளங்கியது. பௌத்தக் கல்வி இங்கு சிறந்திருந்தது என்ற குறிப்பின் காரணமாக இங்குச் சமணக்கல்வி சிறந்திருக்க வாய்ப்பில்லை என்பதாகக் கொள்ள்லாம்.



தமிழகத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் (தற்போது கடலூர் என்று அழைக்கப் பெறும் ஊர்) என்பது அக்காலத்தில் பாடலிபுத்திரம் என்றழைக்கப் பெற்றுள்ளது. இங்குச் சமணர்கள் அதிகம் இருந்தனர். இங்கிருந்த சமணப் பள்ளியில் மருள்நீக்கியார் இணைந்துக் கல்வி கற்கத் தொடங்கினார் அவருக்கு சமண நூற்கள் பலவும் கற்பிக்கப் பெற்றுள்ளன. அமண் சமயத்து அருங்கலைநூல் எல்லாம் அங்கு பயின்று அவர் தருமசேனர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். மேலும் பல்சமயத்தாரையும் வாதில் வென்று சமண சமயத்தை அவர் நிலைநிறுத்தினார் என்று சேக்கிழார் சமண சமயக் கல்வி குறித்துப் பெரியபுராணத்தில் காட்டியுள்ளார்.

சேக்கிழார் பல அடியவர்களை இணைத்துக் காப்பியத்தை இயற்றியிருந்தாலும் அவர்காலக் கல்விச்சூழல் அவரின் காப்பியத்தின் வழியாக வெளிப்படுத்தப் பெற்றுள்ளது. கல்விமுறை சிலருக்கு மறுக்கப் பெற்றதும், சிலருக்கு அளிக்கப் பெற்றதுமான கல்வியில் ஏற்றத்தாழ்வு மிக்க சமுதாயமாக சேக்கிழார்காலச் சமுதாயம் இருந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.

முடிவுகள்

1. பெரியபுராண காலத்தில் வேதக்கல்வி, குலக்கல்வி, சமணசமயக் கல்வி முதலானவை அவரவர் திறத்திற்கு ஏற்ப வழங்கப்பெற்றுள்ளன.

2. அந்தணர்கள் வேதக்கல்வியைக் கற்றுள்ளனர். அரசர்கள், அரசர்களின் துணை பெற்றோர் வேதக்கல்வி கற்க அனுமதிக்கப் பெற்றுள்ளனர்.

3. வேதக்கல்வியைக் கற்க இயலாத வணிகர், வேளாளர் போன்றோர் வேற்று சமயங்கள் வழங்கும் கல்வியைக் கற்கச் சென்றுள்ளனர்.

4. வேடர் போன்ற உழைப்பாளர்கள் தம் குலத்துக் கல்வியைத் தம் குலமுதல்வர்கள் சொல்லித்தர அதனைக் கற்றும் தம் பணியைச் செய்துள்ளனர்.

5. கல்விநிலையில் இருந்த இந்த ஏற்றத்தாழ்வுகள் மிகத்தெளிவாக பெரியபுராணத்திற்குள் பதிவு செய்யப் பெற்றுள்ளன.

துணைநின்ற நூல்கள்

1. கலியாணசுந்தரனார். திரு.வி.க. ( அரும்பத உரையாசிரியர்) திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் ஆராய்ச்சி மையம், சென்னை, 1993

2. நடராசன். பி.ரா. (உரையாசிரியர்) பெரியபுராணம்( நான்கு தொகுதிகள்), உமாபதிப்பகம், சென்னை, 2006

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p56.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License