இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

நற்றிணையில் மனிதன் x மனிதன்

சி. இரகு


முன்னுரை

ஒரு தனிமனிதனின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கருத்துப் பெட்டகமாகத் திகழ்வது சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் நூல்கள் ஒவ்வொன்றும் மனிதகுலத்தின் மாண்புகளை எடுத்தியம்பக் கூடியவை. மனித மனங்களில் ஏற்படும் இன்னல்களினால் மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்கின்ற நிலை (செயல்) தடுமாற்றம் ஆகும். இத்தகைய செயல் தடுமாற்றம் மனிதனின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கின்ற தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயலுகின்ற பொழுது ஏற்படுகின்றது. சங்க இலக்கியப் பனுவல் வரிசையில் முதன்மையாகத் திகழும் நற்றிணையில் இத்தகைய நிகழ்வுகள் செலவழுங்கல் என்னும் துறையில் அமைந்திருக்கின்றது. இத்துறையில் அமைந்த பாடல்கள் மனிதன் அதே மனிதனோடு முரண்பட்டு நிற்கும் நிலையின் அடிப்படையில் ஆராயப்படுகின்றன.

மனிதன் x மனிதன் விளக்கம்

மனிதன் x மனிதன் ஒரு மனிதன் தனக்குத் தானே முரண்பட்டு நிற்கும் செயல்களைச் செய்யும் நிலையைக் குறிக்கும். அதாவது சங்க இலக்கியம் ஒரங்க நாடகப் பாங்கில் இயற்றப்பட்டுள்ளதால், அவற்றில் இடம்பெறும் கதைமாந்தர்கள் தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி, நற்றாய், கண்டோர் என்று நற்றிணையில் இடம் பெறுகின்றனர்.

இக்கதைமாந்தர்களில் தலைவன் தனக்குத்தானே உரையாடிக் கொள்ளும் நிலையைக் குறிக்கும். தலைவன் அகத்திற்குள் ஏற்படும் செயல் தடுமாற்றம் தலைவன் புறத்தில் காண்கின்ற தோற்றத்தின் மூலம் செயல்களில் முரண்பட்டு நிற்பதை அறிய இயலும். அப்பொழுது தலைவன் எந்தச் சூழ்நிலையில் என்ன செய்கின்றான் என்பதை வைத்தே தலைவனைத் தீர்மானிக்க இயலும்.

ஒரு தனிமனிதருக்குள் ஏற்படும் உணர்வுகள் அவரது அகத்தைச் சார்ந்தும், புறத்தைச் சார்ந்தும் இருக்கின்ற பொழுது பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாக நேரிடுகின்றன. ‘காதல், ஏக்கம், பயம், வருத்தம்’ ஆகிய மாற்றங்கள் அகம் சார்ந்து அமைந்து விடுகின்றன. அகத்திற்குள் எழுந்த மாற்றத்தினால் புறத்தில் நிகழவேண்டிய செயலுக்குத் தடையாக அமைந்து விடுகின்றது.



முரண்பாடு - வரையறை

ஒவ்வொரு மனிதரையும் எதிர் கொள்கின்ற பொழுது அவர் இருக்கின்ற மனநிலையினை வைத்துத்தான் முரண்பாட்டைக் குறிப்பிட முடியும். முரண்பாடு “மனிதனின் உள்ளார்ந்த உடன்படாத் தன்மை முரண்பாடு ஆகும். முரண்பாட்டின் இறுக்கமான சிக்கலுற்ற நிலை பிணக்கு, பூசல் எனப்படும். சிலர் முரண்பாட்டைப் (Differences) பிணக்கு என விவரிக்கின்றனர். முரண்பாடு எங்கும் எப்போதும் காணப்படும் ஒருவகை மாதிரியான தோற்றப்பாடே (Typical Phinomina) ஆகும்”.

மனித உளவியல்

உளவியல் என்பது மனித மனதின் இயல்புகளை எடுத்தியம்பக் கூடியது. ஒரு மனிதன் அவனுடைய மனத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மனமானது முக்கிய பங்காற்றி வருகின்றது. அத்தகைய வகையில் ஒரு செயலை ஏற்றுக் கொள்வதற்கும், அச்செயலைத் தவிர்ப்பதற்கும் இடையில் நிகழ்கின்ற ஒரு விதமான போராட்டம் பற்றி எடுத்துரைப்பதாக உளவியல் அமைகின்றது.

ஒருவரின் மனதில் ஏற்படுகின்ற மனப்போராட்டம் (Mental Conflict) என்பது ஒருவரின் மனதிற்கும், அறிவுக்கும் இடையில் நடைபெறுகின்ற போராட்டம் என்று குறிக்கின்றர். உளவியல் அறிஞரான கர்ட் லீவின் (Kurt Lewin) மனப்போராட்டம் என்பதினைக் குறிப்பிடும் பொழுது “இரண்டு சமவலிமையுள்ள ஊக்கிகள் நிறைவுபெற இயலாமல் ஒன்று மற்றொன்றிற்குத் தடையாக இருப்பின், மனம் இவற்றிற்கு இடையில் கிடந்து தடுமாறும், போராடும் இத்தகு மன ஊசலாட்டமே மனப்போராட்டமாகும்”. (தா. ஏ. சண்முகம், உளநலவியல்,பக்.40-41) என்று புலப்படுத்தியுள்ளார்.



நற்றிணையில் மனிதன் x மனிதன்

நற்றிணையில் சிறைக்குடியாந்தயார் பாடிய பதினாறாம் பாடல் பாலைத் திணையில் இயற்றப் பெற்றள்ளது. இப்பாடல் செலவழுங்குவித்தல் என்னும் துறையில் அமைந்துள்ளது. “செலவழுங்குவித்தல் இவற்றில் செலவு என்பது பயணம், அழுங்கல் என்பது கைவிடல் என்பதாகும். செலவழுங்குவித்தல் என்பது பயணத்தைக் கைவிடல் என்பதாகும்” (தேவிரா, தமிழ் இலக்கணம், ப.235) அதாவது தலைவி மீது உள்ள காதலால் தலைவன் தான் மேற்கொண்ட பயணத்தைத் தவிர்க்கும் பொருட்டு அமைந்த பாடலாகும்.

தலைவன் தலைவி தந்த இன்ப நுகர்ச்சியில் ஈடுபாடுடையவனாக இருக்கின்றான். ஆகையால் தலைவன் தன் நெஞ்சினை விளித்து அதனோடு உரையாடிய நிகழ்வாகப் பாடல் புனையப் பெற்றிருக்கிறது. திருமணம் முடித்த பிறகு இல்லற வாழ்க்கைக்காகப் பொருள் தேடச் செல்வது வழக்கம். ஆனால் தலைவன் தலைவியோடு கூடியிருந்த இன்ப வாழ்க்கையை மனதில் நினைத்துக்கொண்டு அவ்வின்பத்திலேயே மூழ்கியிருக்கின்றான். அப்போது

புணரில் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியில் புணராது புணர்வே யாயிடைச்
சேர்பினுஞ் செல்லா யாயினு நல்லதற்
குரியை வாழியென் னெஞ்சே பொருளே.

என்று குறிப்பிடுகினறான். தலைவன் தன் நெஞ்சிற்குப், பொருள் தேடச் செல்லாமல் இருப்பதே நல்லது என்கின்றான். தலைவியை விட்டுப் பொருள் தேடச் செல்ல வேண்டிய தருணம் வந்ததும், தலைவன் மனதிற்குள் பொருள் தேடச் செல்வதா, தலைவியை விட்டுப் பிரிவதா என்ற மனப்போராட்டம் நிகழ்கின்றது.

வாடப்பூவின் பொய்கை நாப்பன்
ஓடுமீன் வழியிற் கெடுவ யானே

என்று தலைவன் உரைக்கின்றான். அப்போது தலைவன் தன் நெஞ்சிடம் உரையாடும் பொழுது யான் அறிந்தவரையில். தன் தலைவியிடமிருந்து கிடைக்கப்பெற்ற இன்பநுகர்வு, பொய்கையில் இருக்கின்ற (குளத்தில்) வாடாத மலர்களைப்போன்றது. அப்பொய்கையில் வாழ்கின்ற மீன் புதுநீர் வருகையால் இருக்கும் இடம் அறியாமல் அப்புதுநீரோடு சென்று வாழ்வதறியாமல் தன் வாழ்க்கையை தொலைத்துவிடும். அந்த மீன் போல் நான் இருக்கக் கூடாது. ஆகையால் என் நெஞ்சே,

விழுநீர் வியலகந் தூணி யாக
எழுமா ணளக்கும் விழுநெதி பெறினுங்
கனங்குழைக் கமர்த்த சேயரி மழைக்கண்
அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனன்
எனைய ஆகுக வாழிய பொருளே.

என்று உரைக்கின்றான்.

தலைவன் நெஞ்சிடம் உரைக்கும் பொழுது இவ்வுலகில் பெரிய கடல் சூழ்ந்த பரந்த நிலத்தை அளக்கும் மரக்காலாகக் கொண்டு ஏழு மரக்கால் வரையில் அளக்கத்தக்க பெரும் பொருள்கள் கிடைத்தாலும் அப்பொருளை நான் விரும்பமாட்டேன் என்று நெஞ்சிற்கு உரைக்கின்றான்.

இல்லற வாழ்வினை நடத்துவதற்குப் பொருளானது இன்றியமையாதது, ஆனால் மிகப்பெரிய பொருள் கிடைத்தாலும் அந்தப் பொருளை வேண்டாம் என்று எண்ணித் துணிகின்றான். தலைவன் மனத்தில் தலைவி அளித்த இன்பநுகர்வே காரணமாக அமைந்து விடுகின்றது. இறுதியில் பொருளைவிடத் தலைவி தரும் இன்பமே சிறந்தது என்று பொருள் தேடுவதைத் தவிர்த்து விடுகின்றான்.

நற்றிணையில் முடத்திருமாறன் பாடிய 105 வது பாடலில் பொருள் தேடிப் புறப்பட்ட தலைவன் இடைச்சுரத்துத் தலைவியை நினைத்து திரும்பிவிட எண்ணுகிறான். அப்போது தலைவன் மனதிற்குள் ஏற்படும் மனப்போராட்டத்தை தன் நெஞ்சானது இகழ்ந்து கூறுவதைப் பின்வரும் பாடல் சுட்டுகிறது.

முளிகொடி வலந்த முள்அரை இலவந்து
ஓளிர்சினை அதிர வீசி விளிபட
வெல்வளி வழங்கும் வேய்பயில் மருங்கில்
கடுநடை யானை கன்றொடு வருந்த
நெடுநீர் அற்ற நிழலில் ஆங்கண்
அருஞ்சுரக் கவலைய என்னாய் நெடுஞ்சேன்
பட்டனை வாழிய.

இப்பாடல் தலைவனின் மனப்போராட்டதை வெளிப்படுத்துகின்றது. பொருள்தேடச் சென்ற தலைவன் சுர வழியில் செல்லும் பொழுது தன்நெஞ்சிடம் உரையாடுகின்றான். அப்பொழுது முட்கள் பொருந்திய அடியை உடைய இலவமரத்தில் காய்ந்த கொடிகள் சுற்றியுள்ளன. இக்காய்ந்த கொடிகளைக் கண்டதும் தலைவன் மனதில் தலைவியோடு கூடியிருந்த நாம் இப்போது தனிமையில் இருக்கும் நிகழ்வினை எண்ணி மனம் வருந்துகிறது. “இலவமரத்தில் இருக்கும் காய்ந்த கொடிகள் போன்று மனத்தில் உள்ள ஆசைகளை எல்லாம் தொலைத்து காய்ந்த கொடி” போன்று மனமானது சுட்டப்படுகிறது.



இலவமரத்தில் இருக்கும் காய்ந்த அம்மரக்கிளைகள் நடுங்கும்படி பெருங்காற்றானது வீசி அம்மரத்தினை முறிக்கின்றது. இல்லற வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் தேட வேண்டும் என்ற பெரும் காற்றானது என்னுடைய வாழ்வில் வீசி என்னுடைய வாழ்வையே நடுங்க வைக்கின்றது. மூங்கில்கள் அடர்ந்திருக்கும்; அப்பக்கத்தில் விரைந்து செல்லும் பெண் யானை தன் கன்றோடு வருந்தி நிற்கிறது. அவ்வழி நீரும் நிழலும் அற்ற வழியாகும். சுரத்திடத்துள்ள கடத்தற்கரிய அந்நெறிகளை நீ எண்ணமாட்டாய்.

--- --- --- --- --- --- --- நெஞ்சே குட்டுவன்
குடவரைச் சுனைய மாயிதழ்க் குவளை
வண்டுபடு வான்போது கமழும்
அஞ்சில் ஓதி அரும்படர் உறவே.

தலைவன் தன் நெஞ்சிடம், “நெஞ்சே குட்டுவனது மேற்குமலைப்பகுதியில் காணப்படுகின்ற சுனையில் மலர்கள் மலர்ந்துள்ளது. அம்மலர்களில் பெரிய இதழையுடைய குவளை மலர்களில் வண்டுகள் மொய்க்கின்றன. அம்மலரைச் சூடுவதால் என்னுடைய காதலியின் அழகிய கூந்தல் நறுமணம் கமழ்கின்றது. இந்த நறுமணம் அவளுக்குப் பெரும் துன்பத்தினை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் நெஞ்சே நீ நெடுந்தூரம் வந்துவிட்டாய்” என்று தலைவன் நெஞ்சிற்குச் சொல்லிப் பின்னர்; இடையிலேயே பொருள் தேடுவதைத் தவிர்த்து இல்லம் திரும்புகின்றான்.

இப்பாடலில் பாலைநிலத்தில் நிகழும் சுரத்தின் கொடுமையும் குறிஞ்சி நிலத்தின் வளமையும் கண்டு தலைவன் மனதிற்குள் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மனிதன் தனக்குள் மனப்போராட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதனால் தொடர்ந்து பொருள்தேடச் செல்லாமல் பின்பு பாதி வழியிலேயே திரும்பி விடுகின்றான். இதனால் தலைவன் தனக்குத் தானே முரண்பட்டுக் காணப்படுகின்றான்.

முடிவுரை

நற்றிணையில் செலவழுங்கல் என்னும் துறையில் அமைந்த பாடல்கள் ஒரு தனிமனித உணர்வுகளில் ஏற்படுகின்ற எண்ண ஓட்டங்களையும் அதனடிப்படையிலான மனித செயல்பாட்டு மாற்றத்தையும் சுட்டுகின்றன. இப்பாடல்களில் தனிமனிதன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்ற நிலையைக் காணமுடிகிறது. அதனால் மனிதன் முரண்பட்டு நிற்கும் நிலையும் அறியமுடிகின்றது. இத்துறையில் அமைந்த பாடல்களில் சமவலிமை உடைய இரண்டு செயல்கள் காணப்படுகின்றது. இவற்றில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்வதற்குத் தகுந்தவாறு மனிதனின் மனம் காணப்படுகின்றது. இவ்வாறு மனித மனத்தின் உள்ளார்ந்த உடன்படாத் தன்மையைச் செலவழுங்கல் துறையில் அமைந்த பாடல்களில் காணமுடிகின்றது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p90.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License