இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில் உவமை இன்பம்

முனைவர் செ. ரவிசங்கர்


முன்னுரை

தமிழ் மொழி பக்தி மொழி என்ற அடையைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணமாக விளங்குகின்ற நூல்களில் நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் ஒன்றாகும். வைணவ சமயத்தை வெளிப்படுத்தும் நூல் இது என்றால் இது மிகையல்ல. வைணவ சமயத்தின் முழுமுதல் கடவுளான திருமாலை மையமாக வைத்து படைக்கப்பட்ட நூல். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்களை 12 ஆழ்வார்கள் இயற்றியுள்ளனர். இந்நூலில் மொத்தம் 3884 பாடல்கள் உள்ளன என்றும் 3776 பாடல்கள் தான் உள்ளன என்றும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனாலும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்கின்ற பெயர் கொடுத்து அழைக்கப்படுகிறது. இந்நூலில் ஐந்தாவது ஆழ்வாராக வைத்துப் போற்றப்படுகின்ற நம்மாழ்வாரின் திருவிருத்தம் பகுதியில் இடம்பெற்றுள்ள உவமையை இக்கட்டுரை ஆராய்கிறது.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் பிறந்தவர். 16 ஆண்டுகள் தவநிலை மேற்கொண்டவர் இவர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எண்ணும் நான்கு நூல்களை இயற்றியுள்ளார். இவரை வைணவ சமய வாதிகள் (நம்மாழ்வாரை) உயிராகவும் ஏனைய ஆழ்வார்களை உடலாகவும் கொள்வது மரபாகக் கொண்டுள்ளனர். இவர் 35 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார்.

நம்மாழ்வார் திருமால் திருவடியில் எப்போதும் விளங்குவதாக வைணவ சமயம் கூறுகிறது. அதற்குக் காரணம் நம்மாழ்வார் சாதாரண குழந்தையைப் போல் பிறக்கவில்லை ‘அவர் பிறந்த நாளிலிருந்து மற்றக் குழந்தையைப் போல் அழுது உண்ணவில்லை, அழவில்லை, கண்களைத் திறந்து பார்க்கவில்லை’ என்று பி. சுப்பிரமணியன் கூறுகிறார். இதன் மூலம் அவர் கடவுள் பிறவி என்று கூறலாம்.

மேலும் இவர் வளர்ந்த விதம் வியப்பை ஏற்படுத்துகிறது. உண்ணாத அழாத கண்ணைத் திறக்காத நம்மாழ்வாரைப் பெற்றோர்கள் குருகூர்ப் பெருமாள் ஆலயத்தில் கிடத்தி வருந்தி வணங்கினர். அந்தக் குழந்தை நகர்ந்து நகர்ந்து அருகில் இருந்த புளியமரத்தின் பொந்திற்குள் சென்றது. அங்குதான் 16 ஆண்டுகள் ஞான யோகத்தில் (நம்மாழ்வார்) குழந்தை வளர்ந்தது. இவ்வாறாக இவரைப் பற்றிய செய்திகளை அறிஞர்கள் கூறுகின்றனர்.



திருவிருத்தத்தில் உவமை

உலகில் எல்லாப் படைப்பாளர்களும் உவமையை அமைத்துத்தான் தனது படைப்பை விளக்குகின்றனர். அந்த வகையில் நம்மாழ்வாரும் தமது படைப்பில் உவமையை மிகத் தெளிவாக எடுத்துக் கையாண்டுள்ளார்.

கருடாழ்வார் சினம்

திருமாலின் வாகனம் கருடாழ்வார் இந்தப் பறவை மிகுந்த சினம் கொண்டது என்பதை அறிவிக்க நம்மாழ்வாருக்கு உவமைத் தேவைப் படுகிறது. அதற்குப் பயன்படும் பொருளை உவமையாகப் பாடலில் அமைத்துள்ளார்.

“குழல் - கோவலர் மடப் பாவையும்
மண்மகளும் திருவும்
நிழல் போல்வனர் கண்டும் நிற்கும் கொல்
மீளும் கொல் தண் அம் துழாய்
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல்
விண்ணோர் தொழ கடவும்
தழல் போல் சினத்த அப் புள்ளின் பன்
போன தனி நெஞ்சமே!”

இப்பாடலில் கருடாழ்வாரின் சினம் தீயைப் போல உள்ளது என்கிற செய்திகளைத் தருகிறார் ஆசிரியர். அதாவது பிற தெய்வங்கள் எல்லாம் பெரும்பாலும் சினம் கொண்ட தன்மையை உடைய விலங்குகளான சிங்கம், பாம்பு, புலி போன்றவற்றைப் உடன் வைத்திருக்கின்றன. அந்த அடிப்படையில் கருடாழ்வார் சினம் கொண்ட தன்மையை உடையது என்று நம்மாழ்வார் படைத்திருக்கிறார் என்று கூறலாம்.

திருமாலின் கண்கள்

நம்மாழ்வார் திருமாலின் கண்களை ஒப்பிடும் போது, மிகையான கற்பனையைக் கொண்டு விளக்குகிறார். உயர்வானப் பொருளை உவமையாகக் கொள்ள வேண்டும் என்பது தமிழர் மரபு. ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காளே’ என்று தொல்காப்பியரும் கூறியுள்ளார். அந்த அடிப்படையில் இது உரையில் கூறாத பொருளாகக் கண்ணிற்கு தரும் உவமை சிறப்புடையதாக அமைகின்றது.

“ நீலத் தடவரைமேல் புண்டரீக நெடுந்தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் - பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான், விசும்புக்கும் பிரான், மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணினின் கோலங்களே”

என்று பாடலைப் புனைந்துள்ளார். திருமாலின் கண்கள் அவற்றின் அழகு நீலமான பெரிய மலையின் உச்சியில் உள்ள செந்தாமரை பூத்துள்ள பெரிய தடாகங்கள் போல விளங்குகின்றனவாம். நம்மாழ்வாருக்கு இந்த உவமை தெய்வத்தின் மீது கொண்டுள்ள பக்தியின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது. மேலும் தடம் போல் என்றும் உவமை மிக அருமையான தொன்றாக இடம்பெற்றுள்ளது. திருவிருத்தத்தில்

“வன்காற்று அறைய ஒருங்கே மறித்து கிடந்து அலர்ந்த
மென்கால் கமலத் தடம்போல் பொரிந்தன மண்ணும் விண்ணும்
என்காற்கு அளவின்மை காண்மின் என்பான்ஒத்து வான்நிமிர்ந்த
தன் கால் பணிந்து என் பால் எம்பிரான் தடம் கண்களே!”

இப்பாடலில் நம்மாழ்வார் மீது கடைக்கண்கள் திருமால் காட்டிவிட்டார் என்பதனால் நம்மாழ்வார் திருமாலின் கடைக்கண்ணை சாய்ந்து கிடந்து மலர்ந்த மெல்லிய நானத்தை உடைய தாமரைத் தடாகத்திற்கு ஒப்பிடுகிறார்.



இவ்வாறாக நம்மாழ்வார் திருமாலின் கண்களைத் தாமரைத் தடாகத்திற்கு உவமை அமைத்துப் பலப் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் ஒரு பாடலில்

“வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் குளிர் விழிய
துன் மென் கமலத் தடம் போல்”

என்று எழுதியுள்ளார். இது போல உவமையை நம்மாழ்வார் புனைந்து பாடியுள்ளதால் திருமால் எப்போதும் குளிந்த தன்மையில் இருப்பவர் என்பதைக் காட்டுகிறது.

மலையும் திருமாலும்

நம்மாழ்வார் மிகத் தெளிவாக உவமையை அமைத்துள்ளார். திருமாலைப் பற்றி உவமை அமைக்கும் போது, அவரின் ஒரு பகுதியான கண்ணை மலையின் உச்சியில் உள்ள தடாகத்திற்கு ஒப்பிட்டார், ஆனால் அவரின் உடம்பிற்கு உவமை தரும்போது அந்த மலையையே உவமையாக்கியுள்ளார்.

“கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ, எம்பிரானது எழில் நிறமே!

இப்பாடலில் மலையை திருமாலின் உடல் முழுவதற்குமாக உவமை கூறியுள்ளார் நம்மாழ்வார் இப்போக்கினைத் தொல்காப்பியர்

“முதலும் சினையும் என்று ஆயிரு பொருட்கும்
நுதலிய மரபின் உரியவை உரிய”

என்று கூறுகின்றார். அந்த வகையில் மலை என்பது முதல் திருமாலின் உடல் என்பதும் முதல். எனவே முதலுக்கு முதலை உவமையாகக் கூறியுள்ளார்.

உலகமும் நெற்றியும்

திருமால் இந்த உலகத்தைக் காப்பாற்றியவன் ஒரு முறை சிறு வயதில் இந்த உலகத்தை உண்டு, பின்பு உமிழ்ந்து காப்பாற்றினலன் என்பது நம்மாழ்வார் தருகின்ற செய்தி. இந்தச் செய்தியைக் கூற வந்த நம்மாழ்வார் பெண்ணின் நெற்றியோடு உலகை ஒப்பிட்டு பாடலில் அழகியலை உண்டு பண்ணுகிறார்.

“பண்டு பலபல வீங்கு இருள் காண்டும் இப்பாய் இருள்போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் பாள வண்ண
வண்டு உண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண்நேர் அன்ன ஒண் நுதலே!”

இங்கு திருமால் காப்பாற்றிய உலகு போன்ற நெற்றியை உடைய பெண் என்று நம்மாழ்வார் பாடியது மிகையாக இருந்தாலும் இப்பாடல் பெருமாளின் சிறப்பை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. அதற்கு உவமை பயன்பட்டுள்ளது.



கருக்காய் கடிப்பவர்

திருமாலின் மீது அன்புருகி நம்மாழ்வார் பல்வேறு விதமான உவமையைக் கையாண்டு பாடலைப் பாடியுள்ளார். பெருமானை அடைய முடியாதவராக இருக்கும் நம்மாழ்வார் திருநாமத்தையாவது தருசிக்க முயன்றேன் என்பதை அழகான உவமை கொண்டு விளக்குகிறார்.

“இருக்கு ஆர்மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த
திருத்தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா
ஒழுக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமச் சொல் கற்றனமே!

இப்பாடலில் திருமாலை அடைய முடியாதவர் அவரின் நாமத்தையாவது தரிசிக்க முயற்சிக்கிறார்கள் என்கின்ற உலகியலைக் கூறுவதற்கு ‘பழம் கிடைக்காதவர் பிஞ்சைத் திண்பது போல’ என்கின்ற உவமையைத் தெளிவாகக் கையாண்டுள்ளார்.

முடிவுரை

தமிழ் இலக்கிய உலகில் வைணவப் பாசுரங்கள் இன்னிசையாகப் பாடப்படும் அற்புதப் பாடல்கள் தமிழ் பக்தி இலக்கியங்களில் மிகப்பெரிய சொத்து நம்மாழ்வாரின் பாடல்கள் அவற்றில் உவமையைப் பற்றி இக்கட்டுரை சில துளிகளைக் காட்டுகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p91.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License