இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

நத்தத்தனார் பார்வையில் விறலி

முனைவர் மா. பத்மபிரியா


பண்டைத்தமிழரின் சொத்துக்கள் சங்க இலக்கியங்களான பாட்டும் தொகையும், பத்துப்பாட்டில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படைகள். ஆற்றுப்படைகளில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் விறலி பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. விறலியின் அழகினை நத்தத்தனார் வருணித்துள்ள பாங்கினை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆற்றுப்படை

ஆறு + படை = ஆற்றுப்படை, ஆறு - வழி, படை - படுத்துவது, ஆற்றுப்படை - வழிப்படுத்துவது. இதனைத் தொல்காப்பியர் புறத்திணையியலில் அரசர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடும் முறை கூறும் பாடாண் பகுதியில்

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்”

என்று குறிப்பிட்டுள்ளார்.

நத்தத்தனார்

சிறுபாணாற்றுப்படை என்னும் நூலை இயற்றியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். தத்தனார் என்பதே இவர் இயற்பெயர். ‘ந’ என்பது சிறப்பை உணர்த்தும் இடைச்சொல். கடைச் சங்க காலத்துப் புலவர். கலைமகனாள விறலியை நத்தத்தனார் கண் கொண்டு ஆய்வோம்.

கலைமகளிர்

ஆடல், பாடல், கூத்து இவற்றில் சிறந்து விளங்கும் மகளிர்கள் விறலியர் பாடினியர் என்று சுட்டப்பட்டனர். இவர்கள் பாணர், பொருநர் என்பவர்களோடு சென்று மன்னர்களையும், வள்ளல்களையும் சந்தித்துத் தங்களின் ஆடல் பாடல்களால் அவர்களை மகிழ்வித்து அதற்குப் பாpசாக ‘பொற்பூ’ பெற்றவர்களாவர்கள். பாணரையும், பொருநரையும் மணம் செய்து கொண்டு இவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். சமூகத் தொடர்புடைய இப்பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்திருக்க வேண்டும் என்பது இரா. பிரேமா அவர்களின் கருத்தாகும்.



விறலி

எண்வகையான மெய்ப்பாடுகளையும் புலப்படுத்தும் விறல் (வீரம் திறமை) மிக்கவளே விறலி எனப்பட்டாள். விறலியாற்றுப்படை என்று ஒரு துறையே தமிழிலக்கியத்தில் உள்ளது. பின்னணி இசைக்கேற்ப அடிபெயர்த்துத் தோள் அசைத்து விறலி ஆடுவாள். கூத்துக்கள் நிகழ்த்த வேண்டி இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்வாள் விறலி. அவ்வாறு செல்லும் போது அயலிட நிகழ்ச்சிகளுக்குத் தனித்துச் செல்வதில்லை. விறலியர் கற்பு தமிழிலக்கியங்களில் பல இடங்களில் வியந்து பேசப்பட்டுள்ளது. “முல்லை சான்ற கற்பின் மெல்லியல்” எனச் சிறுபாணற்றுப்படை (30) இயம்புகின்றது. விறலியர் என்போர் ஆடலும் பாடலும் நிகழ்த்தும் பெண்டிராவர். ஆடல் தொழில் புரியும் ஆடவர் கூத்தர் எனவும், பெண்டிர் விறலியர் எனவும் குறிப்பிடப்பட்டனர். பாடல் பாடுவோரைப் பாடினி என்றும், அரங்கில் நடிப்போரை விறலி என்றும் பிரித்துப் பேசுவதுண்டு. விறலி தலைவியின் ஊடலைத் தீர்க்கும் வாயில்களில் ஒருத்தி என்றும் கூறுவர்.

விறலியர் என்பது கூத்தர் என்ற சொல்லின் பெண்பால். மலைபடுகடாம் நூலைக் கூத்தராற்றுப்படை என்பர். அதில் விறலியர் தொன்றுதொட்டு வரும் மரபுப்படி முதலில் கடவுளை வாழ்த்திப் பாடி ஆடுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ( மலைபடுகடாம் - 536 )

விறலி என்பவள் பாண்மகள் எனவும் அழைக்கப்படுகிறாள். (பதிற்றுப்பத்து - 60)

விறலியர் இசைக்கருவிகளுடன் செல்வர் (புறம் - 64)

பாட்டுப்பாடிப் பண்ணிசைக்கேற்ப ஆடுவர். பாட்டின் பொருள் புலப்படும்படி உடல் அசைத்துக் காட்டுவர். இவர்கள் இவ்வாறு காட்டுவர். இவர்கள் இவ்வாறு காட்டுவதற்கு ‘விறல்’ என்று பெயர்.



சிறுபாணாற்றுப்படையில் விறலி

சிறுபாணாற்றுப்படையில் 13 ஆம் அடி முதல் 31 ஆம் அடி வரை பதினெட்டு அடிகளில் விறலியின் வருணனை அமைந்துள்ளது.

“ஐதுவீழ் இகுபெயல் அழகுகொண்டு அருளி
நெய்கனிந்து இருளிய கதுப்பின் கதுப்புஎன
மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன்... ... ...
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்
நடைமெலிந்து அசைஇய நல்மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவரப்” (13-33)

எண்ணெய் பூசப் பெற்ற கருமையான மென்மையான கூந்தல் மழை பெய்யும் மேகம் போன்ற அழகைக் கொண்டிருந்தது. அக்கூந்தல் போன்ற கருந்தோகைகளைப் பரப்பி ஆடும் ஆண்மயில்கள் விறலியர் சாயலுக்குத் தாம் ஒப்பாகவில்லையே என பெண் மயில்களின் நிழலில் மறையும்.

இதுசங்கிலித் தொடர் போன்ற தொடை நயமுடையதாக அமைந்துள்ளது. விறலியின் உறுப்புகள் புனைந்துரைக்கப்படுகிறது. அந்தாதித் தொடை உவமை அல்லது ஒற்றைமாலை அணிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இவ்வடிகள்.

நத்தத்தனார் பார்வையில் விறலி

விறலியர் என்போர் பாணர்களின் கூட்டத்தில் இடம் பெறுபவர்கள். இவர்கள் அக உணர்வுகளைப் புறத்தே வெளிப்படுத்திக் காட்டுவதில் விறல்பட (திறம்பட) நடிக்கும் ஆற்றல் உடையவர்கள். இவர்களும் பாணர்களும் பாலை வழியாக வருகின்றனர். இவர்களின் மென்மை மிக்க இயல்பையும் அழகையும் சிறுபாணாற்றுப்படை (13 -33 ) அடிகளில் அழகாக கேசாதிபாதமாக தலை முதல் கால் வரை வருணிக்கிறார்.



வருணனை

தமிழ்ப்புலவர்கள் வருணிப்பதில் இருவகை நெறிகளைப் பின்பற்றுகின்றனர். அவை;

1. கேசாதிபாதம்
2. பாதாதிகேசம்

கேசாதிபாதம்

கேசம் + ஆதி + பாதம்

கேசம் - முடி (தலை)
ஆதி - முதல்
பாதம் - அடி

அதில் ஒவ்வோர் உறுப்பாக எடுத்துக் கொண்டு உவமை கூறி வருணிப்பர். முடி முதல் அடி வரை அதாவது தலை முதல் கால் வரை வருணிப்பது கேசாதிபாதம் ஆகும்.

பாதாதிகேசம்

கேசாதிபாத வருணனைக்கு நேர் மாறானது பாதாதிகேசம். பாதம் + ஆதி+ கேசம் = பாதாதிகேசம். அதாவது அடி முதல் முடி வரை வருணித்தல். பிற்காலத்தில் பாதாதிகேச வருணனை முறை தெய்வங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று இலக்கணம் வகுத்தனர்.

நத்தத்தனார் விறலியை கேசாதிபாத முறையில் வருணித்துள்ளார்.

· விறலியரின் கூந்தல்

உலகிற்கு அருள் செய்ய வல்ல மெல்லியதாய் வீழ்கின்ற மழையைப் போன்ற அழகு உடைய கருமையான கூந்தல்.

சாயல் (மென்மை)

மழைமேகத்தைக் கண்டு தோகை மயில்கள் தம் தோகையை விரித்து ஆடுவது இயற்கை. விறலியரின் கூந்தலை மழை மேகம் என்று மயில்கள் நினைத்தன. அதனால் மகிழ்ச்சியாகத் தம் தோகையை விரித்து ஆடின. ஆகாலும் அவற்றிற்கு வெட்கம் வந்து விட்டது. ஏன் தெரியுமா? தமது தோகையின் சாயல் விறலியரின் கூந்தல் சாயலுக்குச் சமமாகாது என்று மயில்கள் கருதியதால் ஆகும்.

நுதல்

நுதல் என்றால் நெற்றி. இது ஒளி மிக்கதாக உள்ளது.பெண்களின் நெற்றி ஒளி வீசக்கூடியது என்று கூறுவது வழக்கம்.

கண்

நீலமணி போன்ற கண்கள்

பார்வை

மருட்சி எடைய இளமையான மானின் பார்வை போன்று உள்ளது. எயிறு

எயிறு என்றால் பல். நுங்கின் இனியநீர் போன்று சுவையை உடையதாக எயிற்று நீர் அமைந்துள்ளது. முலை

கோங்கு என்ற மலரின் அரும்பைப் போன்று அணிகலன்களுக்கு இடையே அடங்கிக் கிடக்கும் மார்பகம். தொடை

கரிய பெண் யானையின் தும்பிக்கையைப் போன்ற செறிந்த தொடை. ஓதி (மயிர் முடிப்பு)

வாழைப்பூவின் தோற்றம் போன்ற அழகிய ஓதி. அடி

ஓடி இளைத்த வருந்துகின்ற நாயின் நாக்கைப் போன்ற பாதம். சிலம்பு முதலிய அணிகலன் ஏதும் இன்றி அழகற்று இருக்கிறது. சுணங்கு

வண்டுகள் மொய்த்து ஆரவாரம் செய்கின்ற வேங்கை மலர் போன்ற சுணங்கு.


விறலியர் இயல்பு

விறலியரின் கூந்தல், சாயல், நுதல், கண், பார்வை, எயிறு, முலை, தொடை, ஓதி, அடி, சுணங்கு ஆகியவை பல்வேறு உவமைகளால் விளக்கப்பட்டுள்ளன. இத்தகு அழகு வாய்ந்த விறலியரின் மென்னையான இயல்பையும் புலவர் குறிப்பிடத் தவறவில்லை. விறலியர் முல்லை சான்ற கற்பும் மெல்லியல்பும் மான் நோக்கும் வாள் நுதலும் உடையவள் என்பதை,

“முல்லை சான்ற கற்பின் மெல்லியள்
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்” (30-31) என்னும் அடிகள் சுட்டுகின்றன.

  • ஆற்றுப்படையில் ஒரு பெண்ணின் அங்கங்களை வருணிக்க வேண்டியதின் அவசியம் என்ன ?

  • இருபது அடியில் நீண்ட நெடிய வருணனை செல்லும் வழியைப் பற்றி இருந்தால் பரவாயில்லை பெண்ணைப் பற்றிய வருணனை தேவையா?.

  • *****


    இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

    இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p99.html
    

      2025
      2024
      2023
      2022
      2021
      2020
      2019
      2018
      2017


    வலையொளிப் பதிவுகள்
      பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

      எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

      சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

      கௌரவர்கள் யார்? யார்?

      தமிழ் ஆண்டுப் பெயர்கள்

      பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

      வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

      பண்டைய படைப் பெயர்கள்

      ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

      மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

      மரம் என்பதன் பொருள் என்ன?

      நீதி சதகம் கூறும் நீதிகள்

      மூன்று மரங்களின் விருப்பங்கள்

      மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

      மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

      யானை - சில சுவையான தகவல்கள்

      ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

      நான்கு வகை மனிதர்கள்

      தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

      மாபாவியோர் வாழும் மதுரை

      கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

      தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

      குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

      மூன்று வகை மனிதர்கள்

      உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


    சிறப்புப் பகுதிகள்





    முதன்மைப் படைப்பாளர்கள்

    வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


    சிரிக்க சிரிக்க
      எரிப்பதா? புதைப்பதா?
      அறிவை வைக்க மறந்துட்டானே...!
      செத்தும் செலவு வைப்பாள் காதலி!
      வீரப்பலகாரம் தெரியுமா?
      உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
      இலையுதிர் காலம் வராது!
      கண்ணதாசனின் நகைச்சுவைகள்
      குறைச்சுத்தான் எடை போடறாரு...!
      அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
      குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
      இடத்தைக் காலி பண்ணுங்க...!
      சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
      மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
      மாபாவியோர் வாழும் மதுரை
      இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
      ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
      அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
      ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
      கவிஞரை விடக் கலைஞர்?
      பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
      கடைசியாகக் கிடைத்த தகவல்!
      மூன்றாம் தர ஆட்சி
      பெயர்தான் கெட்டுப் போகிறது!
      தபால்காரர் வேலை!
      எலிக்கு ஊசி போட்டாச்சா?
      சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
      சம அளவு என்றால்...?
      குறள் யாருக்காக...?
      எலி திருமணம் செய்து கொண்டால்?
      யாருக்கு உங்க ஓட்டு?
      வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
      கடவுளுக்குப் புரியவில்லை...?
      முதலாளி... மூளையிருக்கா...?
      மூன்று வரங்கள்
      கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
      நான் வழக்கறிஞர்
      பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
      பொழைக்கத் தெரிஞ்சவன்
      காதல்... மொழிகள்
    குட்டிக்கதைகள்
      எல்லாம் நன்மைக்கே...!
      மனிதர்களது தகுதி அறிய...
      உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
      இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
      அழுது புலம்பி என்ன பயன்?
      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
      கடவுளைக் காண உதவும் கண்ணாடி
      தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
      உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
      ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
      அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
      கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
      எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
      சிங்கத்திற்கு வாழைப்பழம்!
      வலை வீசிப் பிடித்த வேலை
      சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
      இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
      கல்லெறிந்தவனுக்கு பழமா?
      சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
      வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
      ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
      அக்காவை மணந்த ஏழை?
      சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
      இராமன் சாப்பாட்டு இராமனா?
      சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
      புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
      பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
      தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
      கழுதையின் புத்திசாலித்தனம்
      விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
      தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
      சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
      திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
      புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
      இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
      ஆணவத்தால் வந்த அழிவு!
      சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
      சொர்க்க வாசல் திறக்குமா...?
      வழுக்கைத் தலைக்கு மருந்து
      மனைவிக்குப் பயப்படாதவர்
      சிங்கக்கறி வேண்டுமா...?
      வேட்டைநாயின் வருத்தம்
      மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
      கோவணத்திற்காக ஓடிய சீடன்
      கடவுள் ரசித்த கதை
      புத்தர் மௌனமாக இருக்கலாமா?
      குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
      சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
      தேங்காய் சிதறுகாயான கதை
      அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
      அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
      கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
      சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
      அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
      விமானத்தில் பறந்த கஞ்சன்
      நாய்களுக்கு அனுமதி இல்லை
      வடைக்கடைப் பொருளாதாரம்
    ஆன்மிகம் - இந்து சமயம்
      ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
      தானம் செய்வதால் வரும் பலன்கள்
      முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
      பிரதோஷம் எப்படி விஷேசமானது?
      விநாயகர் சில சுவையான தகவல்கள்
      சிவராத்திரி விஷேசமானது ஏன்?
      முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
      தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
      கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
      எப்படி வந்தது தீபாவளி?
      தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
      ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
      ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
      அனுமனுக்கு வடை மாலை ஏன்?
      திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
      விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
      கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
      சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
      முருகா என்றால் என்ன கிடைக்கும்?
      குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
      விபூதியின் தத்துவம்
      கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
      தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
      கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
      இறைவன் ஆடிய நடனங்கள்
      யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
      செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
      கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
      விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
      இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
      நவராத்திரி பூஜை ஏன்?
      வேள்விகளும் பலன்களும்
      காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
      பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
      அம்பலப்புழா பால் பாயாசம்
      துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
      சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
      ஈசன் உபதேசித்தத் தலங்கள்
      பரமபதம் விளையாட்டு ஏன்?
      வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
      பதின்மூன்று வகை சாபங்கள்
      இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
      சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
      பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
      சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
      உணவு வழித் தோசங்கள்
      திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
      மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
      பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
      நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
      சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
      மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
      இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
      பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
      கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
      அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
      தீர்க்க சுமங்கலி பவா


    தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                  


    இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
    Creative Commons License
    This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License