இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்


1. மணிமேகலைக் காப்பியத்தின் கதையமைவும் அதன் மையமும்

முனைவர் மு. பாண்டி

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம் கதையமைவாலும், காப்பியத்தலைமையாலும் மற்ற காப்பிய மரபுகளில் இருந்து வேறுபட்டு அமைகின்றது. பௌத்த மதச் சார்புடன் விளங்குவது என்பது இக்காப்பியத்தின் மற்றொரு சிறப்பு. சமண சமயத்தின் ஆளுமை பெற்ற பகுப்பில் பௌத்த சமயம் சார்ந்த இந்நூலும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக இடம் பெற்றிருப்பது இதன் தகுதியால் ஆகும். அரசன் மகன் ஒருவனின் கதையாக மணிமேகலை அமைந்தாலும், அவனின் நிறைவேறாக் காதலுக்கு இடம் தரும் கதையமைவைக் கொண்டது இக்காப்பியம். அரசன் மகனே என்றாலும் பெண்ணின் மனதிற்கு முக்கியத்துவம் தந்து அவளின் விருப்பு வெறுப்பிற்கு வழி வைத்து அதனை வெளிப்படுத்தி நிற்கிறது இம்மணிமேகலைக் காப்பியம். காப்பியத்தலைமை பெரும்பாலும் எல்லாத் தமிழ்க் காப்பியங்களிலும் ஆணாகவே இருக்க, இக்காப்பியத்தில் மட்டும் பெண்ணாக அமைக்கப் பெற்றிருப்பது குறிக்கத்தக்க மாற்றம் ஆகும். அதிலும் துறவி ஒருத்தியைக் கதைத்தலைவியாகப் படைத்திருப்பது என்பதும், சமுதாய விளிம்புநிலையில் உள்ள பரத்தை குலம் சார்ந்தவளை அவளின் கொள்கை வழியாகச் சிறந்தவளாகக் காட்டுவது என்பதும் இக்காப்பியத்தின் முக்கியமான மாற்றங்கள் ஆகும்.சீத்தலைச் சாத்தனார் என்ற படைப்பாளர் இப்பெரும் மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளார்.

மணிமேகலைக் காப்பியத்தின் கதையமைவு என்பது பல திருப்புமுனைகளை உடையது என்றாலும், அது மணிமேகலை என்ற பெண்ணின் பின்னால் செல்லும் பான்மை உடையது. மணிமேகலை துறவும், அறமும் வழிப்பட்டுத் தன் வாழ்வை அமைத்துக் கொள்வதால் அதன் வழியிலேயே காப்பியமும் நடைபோடுகின்றது. இக்கட்டுரை மணிமேகலைக் காப்பியத்தின் கதையைச் சுட்டி அதன் வளர்முறையை எடுத்துரைப்பதாக உள்ளது.



கதைத்திறம்

பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியான சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டிணத்தில் வணிகப் பெருஞ்செல்வரான மாசாத்துவானின் மகன் கோவலன். அக்கோவலனின் மனைவி கண்ணகி ஆவாள். இவர்களின் இல்லறத்தில் மாதவி என்ற நடனப் பெண் அதாவது பரத்தைப் பெண் இடையீடு படுகிறாள். இதன் காரணமாக மாதவியின் மீது மனம் வைத்து அவள்பால் செல்கிறான் கோவலன். அவ்வாறு சென்றதன் காரணமாக மாதவிக்கும் கோவலனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. இக்குழந்தைக்குத் தன் குலதெய்வமான மணிமேகலா தெய்வத்தின் பெயரைக் கோவலன் வைத்து அழைக்கிறான். இருப்பினும், குழந்தை பிறந்த சில நாள்களில் கோவலன் மாதவியை விட்டுப் பிரியவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதன் காரணமாகக் கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்துக் கண்ணகியுடன் வந்துவிடுகின்றான்.

வாழ வழியற்ற நிலையில் கண்ணகியை அழைத்துக் கொண்டு கோவலன் நடந்தே மதுரை மாநகருக்கு வருகிறான். அங்கு கண்ணகியின் சிலம்பினை விற்க முயன்ற போது, பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கொலை செய்யப்படுகிறான். இதனைக் காவிரிப்பூம்பட்டிணத்தில் இருந்த மாதவி அறிகிறாள்.

மாதவி மிகவும் துயர் எய்தி தன் வாழ்வைத் துறக்க எண்ணுகிறாள். தன்னிடம் உள்ள பொருள்களை எல்லாம் போதி மரத்தின் கீழ் அறவண அடிகள் முன்னர் தானம் செய்து துறவறம் ஏற்கிறாள். தன் பெண்ணான மணிமேகலையையும் துறவினை நாடச் செய்கிறாள். இந்நேரத்தில் காவிரிப்பூம்பட்டிணத்தில் இந்திரவிழா தொடங்குகின்றது. இவ்விழாவில் ஆடலை ஆடும் வாய்ப்பினைப் பெற்றவர்கள் மாதவியின் குடும்பத்தினர். வழிவழியாக இவ்வாடலை அவர்கள் நடத்தி வர இம்முறை மாதவி, மணிமேகலை இருவரும் துறவு பூண்டதால் நடனமாட வரவில்லை. குறிப்பாக மணிமேகலை தற்போதுதான் நடனமாடக் கூடியவளாக முதன் முறையாக இவ்வாய்ப்பினைப் பெற்றவளாக உள்ளாள். இதன் காரணமாக ஊர் தூற்றுகின்றது. இதனை அறிந்த மாதவியின் தாய் சித்திராபதி மாதவியின் தோழி வயந்தமாலையிடம் மாதவி செய்வது சரியல்ல. உடன் வந்து நாட்டியம் ஆடுவதற்கு உரியவளாகவேண்டும் என்று சொல்லித் தூதுவிடுகிறாள்.

வயந்தமாலை சித்திராபதியின் விருப்பத்தையும் ஊர் மக்களின் அலர் தூற்றலையும் வந்து மாதவியிடம் சொல்கிறாள். அதற்கு மாதவி மணிமேகலை என்றுடைய மகள் அல்ல. கண்ணகியின் மகள். கோவலனின் மகள். அவள் தீத்தொழில் படமாட்டாள் என்று மறுத்துக் கூறுகிறாள். மேலும் மணிமேகலை துறவு பூணப்போகிறாள் என்ற செய்தியையும் குறிப்பிடுகிறாள்.

இந்நேரத்தில் மணிமேகலையிடம் மாதவி கோவலனுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கூறுகிறாள். இதனைக் கேட்ட மணிமேகலை கண்ணீர் சிந்துகிறாள். இதன் காரணமாக அவள் கட்டிய பூமாலையில் கண்ணீர் பட்டுத் தூய்மை கெடுகிறது. இதன் காரணமாக வேறு மாலை புனைய மணிமேகலை தன் தோழி சுதமதியுடன் உவவனம் செல்லுகிறாள்.

அவளின் போக்கினைக் கண்ட எட்டிகுமாரன் தன் சுயநினைவிழந்து அழிகிறான். அப்போது அப்பக்கமாக வந்த சோழநாட்டு இளவரசன் உதயகுமாரன் எட்டிகுமாரனின் நிலையைக் கண்டு எதனால் இவ்வாறு ஆனாய் எனக் கேட்க அதற்கு அவன் மாதவியின் மகள் மணிமேகலை, உலக அழகுகளின் இருப்பிடமான அவள் செல்லுவதைக் கண்டு நான் இவ்வாறு மயங்கிக் கிடக்கிறேன் என்றான். இதனைக் கேட்ட உதயகுமாரன் அவ்வளவு சிறந்த அழகியைத் தான் பார்க்கவேண்டும் என எண்ணி மணிமேகலை சென்ற வழியில் அவளைத் தேடிய வண்ணம் வருகிறான்.

மணிமேகலை அவனிடம் இருந்துத் தப்பிக்க பளிக்கறையில் புகுகின்றாள். அவனால் மணிமேகலையை அடைய முடியவில்லை. இதுமுதல் மணிமேகலையைத் தேடி அவனது பயணம் காப்பியத்தில் அமைகின்றது. மணிமேகலையின் மனமும் அவனை நாடுவதாக அவள் உணர்கிறாள். இதற்குக் காணரம் மணிமேகலையும் உதயகுமாரனும் முற்பிறவியில் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் ஆவர். இத்தொடர்பு இப்பிறவியிலும் அவளையும் அவனையும் இணைக்க முயலுகின்றது என்பதே ஆகும்.



இவ்வாறு மனம் கலங்கிய நிலையில் இருந்த மணிமேகலையை மணிமேகலா தெய்வம் காண்கிறது. அவள் மனம் கலங்கி, மயங்கியபோது அவளை மணிபல்லவத் தீவிற்கு அழைத்துக் கொண்டு போகின்றது. சுதமதி காவிரிப்பூம்பட்டிணத்திலேயே மயங்கிய நிலையில் இருக்க மணிமேகலை மட்டும் மணிபல்லவத் தீவிற்கு எடுத்துச் செல்லப் பெறுகிறாள்.

மணிபல்லவத் தீவில் மயக்கம் தெளிய, மணிமேகலைக்குத் தான் வேறு இடத்தில் உள்ளோம் என்பது தெரியவருகிறது. அவளை மணிமேகலா தெய்வம் தேற்றிப் புத்த பீடிகை ஒன்றைக் காட்டி வணங்கச் சொல்கின்றது. அப்பீடிகை வணங்கியவர்களுக்கு முற்பிறப்பு நிலையை எடுத்துரைக்கும். அவ்வகையில் மணிமேகலையின் முற்பிறப்புச் செய்தியை அப்பீடிகை உணர்த்தியது.

மணிமேகலை முற்பிறப்பில் அசோதர நாட்டு மன்னன் இரவிவன்மன் என்பவனுக்கும் அரசி அமுதபதி என்பவளுக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறக்கிறாள். அப்பிறவியில் அவள் இராகுலன் என்பவனை மணக்கிறாள். அவன் அகால மரணம் அடைய இவள் தீப்புகுகிறாள். இப்பிறவியில் இராகுலனே உதயகுமாரன். இலக்குமியே மணிமேகலை என்பதால் தனக்குள் உதயகுமரன் மீது அன்பு உறைந்திருக்கிறது என்பதை மணிமேகலை உணர்கிறாள்.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தேற்றி அவளின் தூய உள்ளம், துறவு உள்ளம் மேம்பட மூன்று மந்திரங்களைத் தருகின்றது. வேற்று உருவம் அடையும் மந்திரம், வான்வழி செல்லும் மந்திரம், பசி போக்கும் மந்திரம் ஆகியவற்றை மணிமேகலைக்கு அளிக்கின்றது மணிமேகலா தெய்வம்.

இந்நேரத்த்தில் மணிபல்லவத் தீவைக் காத்துவரும் தீவதிலகை என்ற தெய்வம் மணிமேகலை முன் தோன்றுகிறது. அவள் அத்தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கையில், புத்தர் பிறந்த தினமான வைகாசித் திங்கள் விசாக நட்சத்திர முழுநிலவு நாளில் அமுதசுரபி என்ற அட்சயபாத்திரம் தோன்றும் என்று தீவதிலகை குறிப்பிடுகிறாள்.

இப்பாத்திரம் ஆபுத்திரன் கையில் இருந்தது என்றும் இப்பாத்திரத்தில் இடும் உணவானது எடுக்க எடுக்கப் பெருகிக் கொண்டே இருக்கும் சிறப்புடையது என்றும் கூறுகிறாள். இன்று இப்பாத்திரம் உன்னை வந்து சேரும் என்றும் கூறுகிறாள். அதனைக் கேட்ட மணிமேகலை கோமுகிப் பொய்கையை வலம் வருகிறாள். அப்போது பொய்கையில் தோன்றிய அமுதசுரபி மணிமேகலையின் கையில் வந்து சேர்கிறது. அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வான்வழியே புகார் நகரை அடைகிறாள்.

சுதமதி இருந்த இடத்திற்கு வந்த மணிமேகலை அவளுடன் இல்லம் சார்கிறாள். அதன்பின் அறவண அடிகளைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறுகிறாள். மணிமேகலைக்கு அறவண அடிகள், சிந்தாதேவி ஆபுத்திரனுக்கு அமுதசுரபியைக் கொடுத்த வரலாற்றைக் கூறுகிறார். ஆபுத்திரன் தருமம் செய்தது, இந்திரன் செயலால் அவன் தன் உயிரை நீத்தது, தற்போது அவன் சாவக நாட்டில் பிறந்திருப்பது போன்ற விவரங்களைக் கூறுகிறார். மேலும் ‘ஆபுத்திரன் மூலமாக உலக மக்களின் பசியைப் போக்கிய அமுதசுரபி பயன்படுத்தப்படாமல் இருப்பது தவறு. எனவே நீ அப்பணியை மேற்கொள்’ எனவும் உரைக்கிறார். அதனைக் கேட்ட மணிமேகலை அறவண அடிகளை வணங்கி, அமுதசுரபியை ஏந்தியவாறு புகார் நகர வீதிக்கு வருகிறாள். அவளைப் புகார் நகர மக்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அவர்களில் வித்தியாதர மங்கையாகிய காயசண்டிகை என்பவள் கற்பில் சிறந்தவளான ஆதிரையிடம் முதல் பிச்சை பெறுமாறு கூறுகிறாள். ஆதிரையின் வரலாற்றையும் கூறுகிறாள்.

ஆதிரையின் கணவன் சாதுவன். அவன் தீய ஒழுக்கம் கொண்டு கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பொருட்கள் தீர்ந்தபின் கணிகை அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள். சாதுவன் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது. சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். சாதுவன் உயிரோடு இருப்பதை அறியாத அவர்கள் அவன் இறந்து விட்டதாகக் கூறினர். அதனைக் கேட்ட ஆதிரை தீயில் பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள். தீயில் குதித்தாள். ஆனால் தீ அவளைச் சுடவில்லை. ஆதிரை ‘தீயும் சுடாத பாவியானேன்’ என்று வருந்தினாள். அப்போது ‘உன் கணவன் இறக்கவில்லை. விரைவில் திரும்புவான்’ என அசரீரி கேட்டது. ஆதிரை மகிழ்ச்சியோடு வீடு திரும்பி நல்ல அறங்களைச் செய்து வந்தாள்.

கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர் தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண முயன்றனர். சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். நல்லறிவு பெற்ற நாகர் தலைவன், சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான். அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான். ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். இவ்வாறு ஆதிரையின் வரலாற்றைக் கூறினாள் காயசண்டிகை.



மணிமேகலை ஆதிரை வீட்டினுள் நுழைகிறாள். ஆதிரை பிச்சையிட்டதும் அமுதசுரபியில் உணவு எடுக்க எடுக்கக் குறையாது வந்து கொண்டே இருந்தது. காயசண்டிகை மணிமேகலையிடம் ‘‘தாயே! என் தீராப்பசியைத் தீர்த்தருள வேண்டும்’’ என வேண்டுகிறாள். மணிமேகலை ஒரு பிடி உணவு அள்ளியிட அவள் பசி தீர்ந்தது. பின் காயசண்டிகை தன் வரலாற்றை மணிமேகலைக்குக் கூறுகிறாள்.‘வடதிசையில் காஞ்சனபுரம் என்பது என் ஊர். காவிரிப் பூம்பட்டினத்தில் நடைபெறும் இந்திர விழாவைக் காண நானும் என் கணவனும் வான் வழியே பறந்து வந்தோம். இடையே ஓர் ஆற்றங்கரையில் தங்கினோம். அங்கு விருச்சிகன் என்ற முனிவன் நீராடிவிட்டு வந்து உண்பதற்காக ஒரு பெரிய நாவல் கனியைத் தேக்கு இலையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். நான் என் தீவினையால் அக்கனியை என் காலால் சிதைத்து விட்டேன். நீராடிவிட்டுத் திரும்பிய முனிவன் சினந்து, ‘இக்கனி பன்னிரண்டாண்டுக்கு ஒருமுறை ஒரு கனியைத் தரும் நாவல் மரத்தில் உண்டானது. இதை உண்பவர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பசியில்லாமல் இருப்பர். நான் பன்னிரண்டாண்டு நோன்பிருந்து இதை உண்ணும் வழக்கமுடையவன். இதை நீ சிதைத்தாய். ஆகவே இனி நீ வான் வழியே செல்லும் சக்தியை இழப்பாய். யானைத் தீ என்னும் தீராப்பசி நோயால் துன்பப்படுவாய். பன்னிரண்டு ஆண்டுக்குப்பின் கிடைக்கும் நாவல் கனியை நான் உண்ணும் நாளில் உன் பசி தீர்வதாக’ எனச் சபித்தான். முனிவன் சொன்ன பன்னிரண்டு ஆண்டுகள் முடியும் நாள் இதுபோலும், உன்கையால் உணவு பெற்றுப் பசிதீர்ந்தேன்’ என்று கூறிய காயசண்டிகை தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்கிறாள்.

மணிமேகலை, உதயகுமரன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் காயசண்டிகையின் வடிவம் கொண்டு பசிப்பிணி தீர்க்கும் நல்லறத்தைப் புரிந்து வருகிறாள். காயசண்டிகையின் வடிவில் இருப்பவள் மணிமேகலையே என்று அறிந்த உதயகுமரன் அவளை அடைய முற்படுகிறான். அப்போது காயசண்டிகையைத் தேடி வந்த அவள் கணவன் காஞ்சனன் என்பவன் உதயகுமரன் காயசண்டிகையை அடைய விரும்புகிறான் எனத் தவறாக எண்ணி அவனை வாளால் வெட்டிக் கொன்று விடுகிறான். அங்கே இருந்த கந்திற்பாவை காஞ்சனனுக்கு உண்மையை உணர்த்துகிறது. காயசண்டிகை ஊர் திரும்பும்போது யாரும் மேலே பறக்கக் கூடாத விந்திய மலை மீது பறந்து சென்றதையும் அதனால் மலையைக் காக்கும் விந்தாகடிகை அவளை இழுத்துத் தன் வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டதையும் கூறுகிறது. காஞ்சனன் வருந்தி ஊர் திரும்புகிறான்.

உதயகுமரன் இறப்பிற்கு மணிமேகலையே காரணம் என எண்ணிய அரசன் அவளைச் சிறையில் இடுகிறான். அரசமாதேவி தன் மகன் மேல் கொண்ட பாசத்தினால் மணிமேகலையை வஞ்சித்து வருத்திட முயல்கிறாள். மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு அவளுக்கு மயக்க மருந்து ஊட்டுகிறாள். அவளுக்குத் தீங்கு இழைக்குமாறு கல்லாத இளைஞன் ஒருவனை ஏவுகிறாள்; புழுக்கறையில் அடைக்கிறாள்; ஆனால் மணிமேகலை இக்கொடுஞ் செயல்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அஞ்சித் தன் பிழையினை உணர்கிறாள். மணிமேகலை அவளுக்கு நல்லறங்களைப் போதிக்கிறாள். காமத்தின் கொடுமை, கொலையின் கொடுமை, கள்ளின் கொடுமை, பொய்யின் தீமை, களவின் துன்பம் எனத் தீய குற்றங்களின் தன்மையை உணர்த்துகிறாள். பசிபோக்குவதும் உயிர்களிடத்து அன்பு செலுத்துவதுமே அறம் என்கிறாள். அப்போது அங்கு வந்த அறவண அடிகள் அரசிக்கு மேலும் பல அறநெறிகளை அருளுகின்றார். மணிமேகலை அனைவரையும் வணங்கிச் சாவக நாட்டிற்குச் செல்கிறாள்.

சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருந்த ஆபுத்திரனைச் சந்திக்கிறாள். அவன் தன் பழம் பிறப்பை உணர்ந்து கொள்ள மணிபல்லவத் தீவிற்குச் செல்லுமாறு தூண்டுகிறாள். தானும் மணிபல்லவத் தீவை அடைகிறாள். அங்குப் புண்ணியராசன் தன் பிறப்பை உணர்ந்து கொள்கிறான். அப்போது காவல்தெய்வமான தீவதிலகை மணிமேகலையிடம், கோவலனின் முன்னோன் ஒருவன் கடலில் விழுந்து தவித்த போது, மணிமேகலா தெய்வம் அவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது. உயிர்தப்பிய அவன் தான தருமங்கள் பல செய்தான். அவன் செய்த நற்செயல்களை அறிந்து கொள்ள வஞ்சி நகருக்குச் செல்லுமாறு கூறுகிறது. மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் உரைத்துப் பின் வஞ்சி நகருக்குப் புறப்படுகிறாள்.

மணிமேகலை வஞ்சி மாநகரை அடைந்து, அங்கிருந்த சமயக் கணக்கராகிய அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ஆகிய பலரும் தம்தம் சமயத்தின் நுண் பொருட்களை உரைக்கக் கேட்டு அறிகிறாள். அவள் மனம் அமைதி பெறவில்லை. அங்கிருந்து காஞ்சி மாநகரம் செல்கிறாள். அங்கு அறவண அடிகளைச் சந்தித்து மெய்ப்பொருள் உரைத்தருளுமாறு வேண்டுகிறாள். அறவண அடிகள் மணிமேகலைக்குப் பிறர்மதமும் தம்மதமும் எடுத்துரைத்து மெய்ப்பொருளாகிய தரும நெறியின் நுண்மையான பொருட்களை விளக்குகிறார். மணிமேகலை அவர் உணர்த்திய ஞான விளக்கின் துணையால் தெளிவு பெறுகிறாள் முடிவில் ‘என் பிறப்புக்குக் காரணமாகிய குற்றங்கள் நீங்குக’ என வேண்டி நோன்பு நோற்கத் தொடங்குகிறாள். இதுவே மணிமேகலையின் கதைக்களமாகும்.

மணிமேகலைக் காப்பியத்தின் மையப் புள்ளி என்பது அறம் சார்ந்து இயங்குகின்றது. அறம் செய்வதற்கு சாதி, மத வேறுபாடு இல்லை என்பதே இக்காப்பியத்தின் மையப் புள்ளியாகும். அறம் செய்ய தூய்மையான உள்ளம் இருந்தால் போதுமானது என்பதையே இக்காப்பியக் கதை உணர்த்துகின்றது.

இவ்வகையில் மணிமேகலை கதை என்பது பல திருப்புமுனைகளுக்கு உட்பட்டு, மணிமேகலை என்ற ஒரு பாத்திரத்தின் செயல்பாடாக விரிகின்றது. இப்பாத்திரத்திற்கு ஏற்பட்ட பல இக்கட்டுகளை இப்பாத்திரம் அமைதியான முறையில் எதிர்கொண்டு வெற்றி பெறுகின்றது என்பது கவனிக்கத்தக்கது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s1/p1.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License