இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்


12. மணிமேகலை மொழிபெயர்ப்புகள்

எஸ். சரவணன்

மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. இருப்பதை அப்படியே பார்த்து எழுதும் முறைமை உடையது மொழிபெயர்ப்பு இல்லை. மூலமொழியில் இருக்கும் பகுதியைச் சுவை குன்றாமல் மற்றொரு மொழி சார்ந்த வாசகனுக்கு அளிப்பது மொழிபெயர்ப்பாகின்றது. தற்காலத்தில் உலக அளவில் மொழிபெயர்ப்பு என்பது மிகத் தேவையானதாக உள்ளது. அறிவியல் துறையிலும், இலக்கியத் துறையிலும், தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தற்போது மொழிபெயர்ப்பின் அவசியம் மிக மிகத் தேவையானதாக உள்ளது. மொழிபெயர்ப்பின்றி ஓர் இலக்கியம் உலக இலக்கியமாக ஆக இயலாது என்ற சூழலில் இலக்கியப் பகுதியில் மொழிபெயர்ப்பு இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றது.

இந்தியா போன்ற பல மொழிகள் வழங்கும் நாடுகளில் மொழிபெயர்ப்பு என்பது அரசு, ஆட்சி அதிகாரங்களிலும், மக்களின் பண்பாட்டு ஒருங்கிணைப்பிற்கும் தேவைப்படுவதாக அமைகின்றது. இந்தியாவின் உயர் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பிற்குத் தனித்த விருதுகளை வழங்கி வருகின்றது. ஒரு படைப்பாளனுக்கு உள்ள மதிப்பினை மொழிபெயர்ப்பாளனுக்கும் தரும் போக்கினைச் சாகித்திய அகாதமி இவ்வழியில் முன்மொழிந்துள்ளது.

திருக்குறளை, திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காளிதாசரின் சாகுந்தலம், ஜெயதேவரின் கீத கோவிந்தம் ஆகியன வடமொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பெற்றன. பி.சி ராய் வங்கமொழியில் இருந்து மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதுபோன்ற பல முன் முயற்சிகள் இந்திய இலக்கியங்கள் உலக மக்கள் அறிந்து கொள்வதற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன.

தமிழில் உள்ள இலக்கியங்கள் பலவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கண்டுள்ளன. திருக்குறளை ஆங்கிலத்தில் எச்.ஏ. பாப்பா என்பவர் மொழிபெயர்த்துள்ளார். கால்நடையியல் பற்றிய நூல் ஒன்றை வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். சிலப்பதிகாரம் இராமச்சந்திர தீட்சிதர், க.நா. சுப்பிரமணியம் ஆகியோரால் முழுவதும் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் குறிக்கத்தக்க பாடல்கள் ஏ.கே. இராமானுஜம் என்பவரால் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களை ஆங்கில மொழிக்கு ஆக்கிய இவரின் இம்மொழிபெயர்ப்பு உலக அளவில் சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்தது. மா.லெ தங்கப்பா என்பவர் முத்தொள்ளாயிரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இவ்வழியில் மணிமேகலைக்கும் சில மொழிபெயர்ப்புகளும் தோன்றியுள்ளன. மணிமேகலைக்கு ஒலிபெயர்ப்புகளும் தோன்றியுள்ளன. இக்கட்டுரை அவற்றை அறிமுகம் செய்து சில மொழிபெயர்ப்புகளை மதிப்பிடுவதாக அமைகின்றது.



மணிமேகலை காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்

மணிமேகலை முதன் முதலாக ஆங்கிலத்திற்கு ஆர்.பி. கே. அய்யங்கார் என்பவரால் மொழிபெயர்க்கப்பெற்று 1928 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது. 1989 ஆம் ஆண்டில் அலைன் டேனிலோ என்பவரும் டி.வி. கோபால அய்யரும் மணிமேகலையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். மணிமேகலையில் ஜப்பானிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஷகுஸோ மட்சுங்கா என்பவரால் இம்மொழிபெயர்ப்பு ஆக்கம் பெற்றுள்ளது.(1)

புகழ்பெற்ற நாவலாசிரியர் மாதவையாவும் மணிமேகலையை மொழிபெயர்த்து 1929 ஆம் பெண்களும் மொழிபெயர்த்துள்ளனர். இவர்களில் குறிக்கத்தக்கவர்கள் பிரேமா நந்தகுமார், லஷ்மி ஆம்ஸ்ட்ராம் ஆகியோர் ஆவர்.

அலைன் டேனிலோ, டி.வி கோபால அய்யர் ஆகியோரின் மொழிபெயர்ப்பு

அலைன் டேனிலோ என்பவரும் டி.வி கோபால அய்யரும் மொழிபெயர்த்துள்ள மணிமேகலை மொழிபெயர்ப்பு உரைநடைவயப்பட்டது. முப்பது காதைகளும் சொல்லும் கதை நிகழ்வுகளை இம்மொழிபெயர்ப்பு தொகுத்து உரைநடையில் சொல்லுகின்றது. இந்நூல் தி நியு டைரக்சன் புத்தக வெளியீட்டாளரால் நியுயார்க் நகரில் இருந்து வெளியிடப்பெற்றுள்ளது.

இம்மொழிபெயர்ப்பு முன்னால் விரிவான முன்னுரை வழங்கப் பெற்றுள்ளது. இதில் மணிமேகலையின் காலம், அதன் சமயப் பின்னணி, மணிமேகலையில் பயன்படுத்தப்பட்டுள்ள சமயம் தொடர்பான சொற்கள் ஆகியன எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. மேலும் முப்பது காதைகளின் கதைச்சுருக்கமும் ஓரிரு வரிகளில் தரப்பெற்றுள்ளன. இம்முன்னுரைப் பகுதி மிக முக்கியமானதாகும். இதுவே மணிமேகலையை அறிந்து கொள்ள விரும்பும் ஆங்கில மொழி அறிந்த வாசகனுக்குப் போதுமானதாகும். தி டான்சர் வித் மாஜிக் பவுல் என்று மணிமேகலைக்கு இவர்கள் பெயரிட்டுள்ளார்கள். இதனை எழுதியவர் சீத்தலைச் சாத்தன் என்பதை தி மெர்ச்சண்ட் பிரின்ஸ் சாத்தன் என்பதாக இந்நூல் குறிக்கின்றது.

எடுத்துக்காட்டிற்கு மலர்வனம் புக்க காதையின் சுருக்கத்தை இம்மொழிபெயர்ப்பு பின்வருமாறு தருகின்றது. “Manimekalai betakes herself to a garden on the outskirts of the city to gather flowers” என்பதாகும்.



இந்திரவிழா நடைபெற்றதை இம்மொழிபெயர்ப்பு பின்வருமாறு காட்டுகின்றது. “On this occasion the followers of the various creeds gathered in the town, explaining the doctrines expounded in their holy books and discussing the value of profane knowledge and of moral concepts as well as the various ways of attaining release. there was also skilled astrologers who could calculate the periods of the stars and the duration of time ” என்பதாக அமைகின்றது.

இதனைச் சீத்தலைச் சாத்தானரின் மணிமேகலைப்பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இம்மொழிபெயர்ப்பின் திறம் விளங்கும்.

தண்மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்உரை அறிவீர் பொருந்துமின்
ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்குஅறிந்து ஏறுமின்
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்துஉடன் திரிதரும்
நால்ஏழ் நாளினும் நன்குஅறிந் தீர்என்

என்பது மணிமேகலைப் பகுதியாகும். பல சமயத்து அறிஞர்களும் பூம்புகார் நகருக்கு வந்து, தன் சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தனர் என்ற செய்தியை மணிமேகலையைப் பாடல் வரிகள் சொன்ன அளவில் அதே அழுத்தம் தந்து மொழிபெயர்ப்பாளர்களும் மொழிபெயர்த்துள்ள நிலை இங்குக் குறிக்கத்தக்கது.

பிரேமா நந்தகுமார் அவர்களின் மணிமேகலை மொழிபெயர்ப்பு

பிரேமா நந்த குமார் அவர்கள் பாரதியார் பற்றிய பல ஆய்வுகளை எழுதிவருபவர். இவர் பாரதியாரின் பாடல்களை மொழிபெயர்த்தவர். இவர் ஒரு மொழிபெயர்ப்பினை மணிமேகலை துறவு என்ற அடிப்படையில் செய்துள்ளார். மணிமேகலை பற்றிய பிரேமா நந்தகுமார் அவர்களின் ஆங்கிலக் கருத்துரை என்பதாக இதனைக் கொள்ளலாம். இது ஐஐடபிள்யுசி என்ற அமைப்பால் வெளியிடப்பெற்றுள்ளது. பெங்களுரில் இயங்கிவரும் உலக கலாச்சாரத்திற்கான இந்திய மையம் இதனை வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய பதிமூன்று பக்கங்கள் வரை நீளும் இக்கட்டுரை நூல் ஆங்காங்கே மணிமேகலையின் அடிகளைக் கவிதையாகவே மொழிபெயர்த்துள்ளது.

ஈங்குஇப் பாத்திரம் என்கைப் புகுந்தது
நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து
வித்தி நல்அறம் விளைந்த அதன்பயன்
துய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர் உடுத்து
வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி
வெயில்என முனியாது புயல்என மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்
ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித்
தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே

என்ற பாத்திரம் பெற்ற காதையில் வரும் அடிகளைப் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளார் பிரேமாநந்தகுமார்.

In this enormous island of Jambu,
There ate prosperous homes made by good deeds.
In the past: at their entrance stand many
Wearing rags, suffering pangs of hunger,
Unmindful of heat, daring heavy rains,
Loaded with sorrows .innumerable,
The legacy of their past evil ways.
This magical vessel acts through the heart
Even like a mother’s breast when she yields
Sweet milk out of love for her new-born babe.”

These- few lines give us an idea of Manimekalai as a perfect

இவ்விரு பகுதிகளையும் ஒப்பிட்டுக் காணுகையில் மொழிபெயர்ப்பாளரின் திறமும் மூலநூல் ஆசிரியரின் திறமும் இணைந்து செல்வதைக் காணமுடிகின்றது. இதுபோன்று சிற்சில அடிகளுக்குக் கவிதையாகவே மொழிபெயர்த்து இக்கட்டுரையை பிரேமாநந்த குமார் அளித்துள்ளார்.



லட்சுமி ஆம்ஸ்ட்ராம் மொழிபெயர்ப்பு

லட்சுமி ஆம்ஸ்ட்ராம் அவர்களின் மொழிபெயர்ப்பு மணிமேகலைக் கதையை கதைப்பகுதி விடுபடால் உரைநடையில்சொல்லும் பகுதியாக விளங்குகின்றது. இவர் இந்தியாவில் பிறந்து ஐரோப்பிய எழுத்தாளராக மிளிர்பவர். இவர் இந்திய செவ்விலக்கியங்களை மொழிபெயர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். நவீன தமிழ் ஆக்கங்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் ஆங்காங்குப் படங்களுடன் மணிமேகலையை மொழிபெயர்த்து அளித்துள்ளார். இதனை வெளியிட்டவர்கள் ஓரியண்ட் டாங்மன் பதிப்பகத்தார்.

இதில் சிலப்பதிகாரம் முன்பகுதியிலும் பின்பகுதியில் மணிமேகலையும் தரப்பெற்றுள்ளன. கதையை அறிமுகப்படுத்தும் இந்நூல் மூல நூல் பகுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் தனக்கான பகுப்புகளை வைத்துக் கொண்டுள்ளது. இதன் காரணமாக 22 கிளைப்பிரிவுகள் இதனுள் அமைந்துள்ளன. கச்சி நகர் புக்க காதை என்பதை தி பெமினைன் அட் காஞ்சி என்று மொழிபெயர்த்துள்ளார் இவ்வாசிரியர். இதன்வழி இந்த மொழிபெயர்ப்பு பெண்ணியச் சிந்தனை வயப்பட்டது என்பது தெளிவாகின்றது.

இவ்வாறு பல்வேறு மொழிபெயர்ப்புகள் மணிமேகலையை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளன. செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனமும் ஒரு நல்ல மொழிபெயர்ப்பை மணிமேகலைக்குக் கொண்டு வர முயற்சி எடுத்துவருகிறது. இம்முயற்சிகள் வென்று மணிமேகலையையும் தமிழ் இலக்கியத்தையும் உயர்த்தட்டும்.

அடிக்குறிப்புகள்

1. Manimegalai was first translated into English by R. B. K. Aiyangar and was published in 1928 in Manimekhalai in its Historical Setting. The extracts were then republished in Hisselle Dhammaratana’s Buddhism in South India. A more recent translation of the work was done in1989 by Alain Daniélou in collaboration with T.V. Gopala Iyer. The epic was also published in a Japanese translation by Shuzo Matsunaga in 1991.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s1/p12.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License