இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்


26. மணிமேகலை காலச் சமுதாயம்

முனைவர் சொ. சேதுபதி

இந்தியச் சமயங்கள் அனைத்தையும் ஆதரித்து ஏற்று அவற்றினிடையே பொதுமையையும், அவற்றின் வழி புதுமையையும் தமக்கென ஆக்கிக்கொண்ட மொழி தமிழ். அதற்கான தரவுகளை விரித்து மேலும் மேலும் எழுத்தாக்கம் புரிந்தவர்கள் இலக்கியவாணர்கள். இலக்கணவல்லுநர்கள்கூடத் தத்தம் சமயப்பணிகளின் ஊடே மொழிப்பணியையும் முன்னெடுத்திருப்பது தமிழுக்குக் கிடைத்திருக்கிற சிறப்பு. இவற்றின் ஊடாக நமக்குத் தெரியவருகிற இன்னொரு உண்மை, வாழ்வின் இயங்குதளத்தில் மொழிகளோடு சமயங்கள் கைகோர்த்திருக்கின்றன என்பதை அவர்கள் கண்டு கொண்டதாகும்.

எனவே, தம் சமகால வாழ்வை, இலக்கியமாகப் புனைய வருகிற ஒருவர், தம் புனைவியல் தன்மைகளோடு யதார்த்த வாழ்வியலின் நிலைப்பாடுகளையும் சித்திரித்தாக வேண்டிய தேவையிருக்கிறது. என்னதான் சமயப் பரப்புரை ஒத்ததாகத் தன் காப்பியத்தை அமைத்துக் கொண்டபோதிலும், காப்பியத் தேவை கருதித் தன் காலச் சமுதாயத்தைச் சித்திரித்துக் காட்டியாக வேண்டியிருக்கிறது சாத்தனாருக்கு. அதிலும், பௌத்த சமயத்தைச் சொல்லவேண்டிய கதை என்பதால் ஏனைய சமயத்தரவுகளையும் உள்ளடக்க வேண்டியாகியிருக்கிறது அவருக்கு, அந்த அடிப்படையில், பௌத்த சமயக் காப்பியமாகக் கருதப்பட்டாலும் மணிமேகலை, பௌத்த சமயத்தை மட்டும் பேசுவதாக இல்லை. தன் காலத்துச் சமயங்களை எடுத்துக்காட்டி, தத்துவப்பொருளோடு வாழ்வியல் நிலையில் அவை இயங்குந்திறங்காட்டி, மணிமேகலை பௌத்த நெறி சார்ந்தமைக்கான காரண காரியங்களை அவற்றினூடே அலசுகிறது; விளக்கம் சொல்லிப் பார்க்கிறது.



மணிமேகலைக்கு முன்பு

சங்ககாலத்தில், இயற்கையோடு இயைந்த தமிழர்தம் வாழ்வில் சமயம் பேரளவில் தனித்துவம் பெறவில்லை. சாதிய நிலைப்பாடும் அவ்வாறே! தத்தம் தொழில் அடிப்படையில், வாழ்வியல் போக்கில் கண்டு உணர்ந்து கடைப்பிடிக்கத் தகுந்த சீலங்களை மேலெடுத்துச் சென்ற ஒழுங்குகளை ஒன்றுதிரட்டிச் சமயங்களாகப் பின்னர் பகுத்து விரித்திருக்க வேண்டும். சைவ, வைணவ, பௌத்த, சமணம் முதலான சமயக்கூறுகள் கொண்டு விளங்கிய சங்ககாலத்திற்குப்பின்னர், கள்ளும் காமமும் பெருத்த நிலைப்பாட்டில் அறநெறிபுகட்டும் ஆக்கங்கள் தோன்றின. மனிதநேயத்தின் அடிப்படையில் தாமறிந்த சிந்தனைகளைக் குறுகிய பாவகைகளில் அவை விரித்தன.

பின்னர் சங்கமருவிய காலத்தில் எழுந்த இருபெருங்காப்பியங்கள் சிலம்பும் மணிமேகலையும். இரட்டைக் காப்பியங்களாக அறியப்பெறும் இவற்றுள் சிலம்பானது சமணசமயத்தை வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. உண்மையில் அது சமயப் பொதுமையை, சிறுதெய்வ மற்றும் பெருந்தெய்வ வழிபாடுகளை, மரபுகளை, பெரிதும் சார்புநிலை காட்டாது பொதுமை நிலையிலேயே விரித்துச் செல்கிறது. காப்பிய நாயகியாகிய கண்ணகியின் சிலம்பினை முன்னிறுத்திக் கொண்டு விரியும் அக்கதையில் வரும் கௌந்தியடிகள் சமணத்தின் பெருவிளக்கமாக அமைகிறார். அக்காலத்துப் பிற சமயங்களையும் சமணத்தையும் விளக்கிப் பேசும் அக்காப்பியத்துள் சமயப் பொதுமை எளிது துலங்குகிறது. வைதிகத் தாக்கமும் மறுப்பும் நிலவுவதையும் அறிய இயலுகிறது.

சிலம்போடு கதைத்தொடர்புடைய மணிமேகலை காலச் சமுதாயத்தில் சமயம் நிறுவனமயமாக்கப்பட்டதாக அமைகிறது. சைவம், வைணவம், சமணம் இவற்றோடு சிறுதெய்வ வழிபாட்டு மரபுகளும் ஆங்காங்கே சுட்டப்படுகின்றன. அனைத்துச் சமய நெறிகளையும் கற்றுக் கொள்ள முனைகிற மணிமேகலையின் வாழ்க்கைப் பதிவில், சமயங்கள் தனித்த நிலை பெற்றமைகின்றன.



சமயமும் சமுதாயமும்

“சமுதாயத்திலேயே தோன்றி, சமுதாயத்திலேயே வளர்ச்சியுறுகின்ற நிறுவனங்களுள் ஒன்றாகக் சமயம் விளங்குமாற்றால் சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் இடையே பல்வேறு தொடர்புகள் காணப்பெறுமாற்றை அறியலாம். சமுதாயமும் சமயமும் நெருங்கிய உட்தொடர்புடையன என்றும், ஒன்றின் இயக்கமின்றி மற்றொன்று செயல்பட முடியாது என்றும் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். சமூகவியலாளர்கள் சமயம் என்ற நிறுவனத்தைக் குறித்து மேற்கொண்ட ஆய்வுகள் பலவும் சமயத்தின் செயற்பாடுகளை (Social functions) விளக்குகின்றன. டாக்கியாம் என்பவர் சமயம் ஒருவகையான சமூகவியல் என்றும், மனித வாழ்க்கையையும், மனித இனங்களுக்கிடையேயுள்ள உறவுகளையும் சுற்றுப்புற உலகை அடிப்படையாகக் கொண்டு அது விளங்குகின்றது என்றும் குறிப்பிடுகிறார். சமயமே சமூகம் என்பதும், சமூகமே சமயம் என்பதற்கும் அவர் கொண்டுள்ள துணிவு, மேலும் மசயம் சமூகத்தால் புனிதமானதெனக் கொள்ளப்பெறும் மனித வாழ்க்கையின் கூறுகளைக் கொண்டுள்ள ஒரு சமூக இயல் நிகழ்ச்சி (Social phinomenon) என்ற கருத்தும் நிலவுகின்றது. மக்களால் உருவாக்கப் பெறுவனவும், விளக்கப் பெறுவனவுமே சமயமுறைகளாக (Religious systems) திகழ்கின்றன. எனவே, சமயம் சமுதாய உற்பத்திகளுள் (Social products) ஒன்றாகக் கருதப்பெறுகின்றது. மக்களே அதனைக் கூட்டாகச்சேர்ந்து உருவாக்குகின்றனர். இவற்றால் சமுதாயத்துடன் சமயம் என்ற நிறுவனம் கொண்டுள்ள தொடர்புகள் புலனாகின்றன.” (முனைவர் தா.ஈசுவரப்பிள்ளை, பக்தி இலக்கியத்தில் சமுதாயப் பார்வை, பக்.12-13) இவ்வாறு சமயமும் சமுதாயமும் பின்னிப் பிணைந்து இயங்கும் தமிழ்ச்சூழலில் மணிமேகலைக் காலச் சமுதாயத்தில் நிலவும் சமயங்களின் போக்கை ஒரு சமயக் காப்பியமாகக் கருதப்பெறும் மணிமேகலை நுட்பமாகப் பல வகைகளில் சித்திரிக்கின்றது. அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம். முன்னதாக மணிமேகலைக் காலச் சமயங்கள் குறித்துக் காணலாம்.



மணிமேகலை காலச் சமுதாயம்

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்பெறும் மணிமேகலை தன் காலச் சூழலைக் காப்பியப் போக்கில் சித்திரித்து நிற்கிறது. தத்தம் தொழில் அடிப்படையில் வளர்ந்த மனித சமுதாயத்தில் சாதிய உறுதிப்பாடுகள் நிலைபெற்று விடுகின்றன. வருணாசிரமக் கருத்தாக்கமும் சாதிய நிலைப்பாடும் மணிமேகலைக் காப்பியத்தில் அழுத்தமாகவே இடம் பெற்றுள்ளன. தொழில் அடிப்படையில் தோன்றிய குடிகள், குலங்களாக விரிந்து, சாதிகளாக நிலைபெற்று விடுகின்றன. கொள்வினை கொடுப்பினை என்கிற மணவினைகளில் சாதிய முக்கியத்துவம் பேணப்பட்ட போது அது இன்னும் உறுதி பெற்றுவிடுகிறது. காமத்துய்ப்புக்கு இடமளிக்கும் மணவினைகள் சாதிய எல்லைகள் கடந்து போகிறபோது பிறக்கும் குழந்தைகள் இழிவானதாகக் கருதப்பட்டனர். காமத் துய்ப்பிற்கென்றே பரத்தையர் குலம் விரிவாக்கம் பெற்றிருக்கின்றது. அந்தந்தக் குலத்தில், சாதியில் பிறந்தவர்கள் அந்தந்த ஒழுகலாறுகளுடனேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவற்றைப் பேணிக்காக்கும் கடமை மன்னருக்கு இருந்தது.

வருணக்காப்பிலள் பொருள்விளையாட்டி (மணி.5-87)

என்று மணிமேகலை குறித்த கருத்தாக்கத்தை உதயகுமாரன் வைக்கிறான்.

ஆக, வருணக்காப்பு மன்னனால், மக்களால், தெய்வத்தின் பெயரில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் உருவாகிய சாதிய ஒழுக்கங்களை ஏற்று வாழ்தல் ஒன்றே நியதி என்கிற நிலை உறுதிப்பட்டுவிடுகிறது. பிறப்புத் தொடங்கி, இறப்பு வரை இத்தகு சாதிய அழுத்தங்களில் இருந்து மனிதத்திற்கு விடுபாடு இல்லை.

நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் (மணி. 6-59-58)


என்ற அடிகளில் நால்வகை வருணத்தார்க்கும் தனித்தனியான சுடுகாடுகள், இறுதிச்சடங்குகள் செய்யும் முறை அமைக்கப்பட்டிருப்பது பதிவாகின்றன. பிறப்பில் வாய்த்த சாதியத்தின் வழி நின்று தத்தம் சாதிக்குரிய தொழில்களைச் செய்வதே வாழ்வியல் கடப்பாடு. அதனை மீறுவோர் அரசனால் தண்டிக்கப்படுவர். சாதிய நிலைப்பாட்டைக் காப்பாற்ற, தத்தம் சாதியினரிடையில் மட்டுமே மணவினை அமைத்துக் கொள்ள அனுமதி உண்டு. அதனை மீறி நடந்தோர்க்குத் தத்தம் சாதியத்தில் இடம் இல்லை. அது பிழைமணம் என்றே சாத்தனாரால் குறிக்கப் பெறுகிறது.

இதனை எதிர்த்துக் குரல் கொடுப்பவனாக, ஆபுத்திரன் வருகிறான். அந்தணப்பெண் சாலி, முறை தீயொழுக்கத்தால் வழியில் பெற்ற சூழலால் பிறந்த பிள்ளையை ஒரு தோட்டத்தில் இட்டு நீங்கிவிடுகிறாள். பசு ஒன்று பால் சொரிந்து பேணிய அக்குழவியை, வழிப்போக்கனாகக் கண்ட பூதி என்னும் அந்தணன் ‘தன் மகன்’ என்று கொண்டுபோய் வளர்க்கிறான். கல்வியும் ஞானமும் எய்தி அந்தணக் குழந்தையாகவே அவன் வளர்ந்த போதிலும் அவனை அச்சமூகம் ஏற்கவில்லை. வேள்விச்சாலையில் துயருறும் பசுவைமீட்டுப் போகும் அவனைப் பிற பார்ப்பணர்கள் நீசமகன் என்றும், புலைச்சிறுவன் என்றும் ஏசுகிறார்கள். ஆவின் துயருக்காகப் பரிந்து காக்கும் அவனை ஆவின் புத்திரன் என்றே ஏசுகிறார்கள். அதனைச் செவிமடுத்த ஆபுத்திரன்,

ஆன்மகன் அசலன் மான் மகள் சிருங்கி
புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரிமகன் அல்லனோ கேசம்பளன்
ஈங்கு இவர் நும்குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்குஉயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ
நான்மறை மாக்காள் நல்நூல் அகத்து?” (மணி-13-62-69)

என்று ரிஷிகணங்களுள் சிறப்புப் பெற்று விளங்கும் அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேசம்பளன் உள்ளிட்டோரின் பிறப்புக் குறித்த கதைகளை முன்னிறுத்தி வினாத் தொடுக்கிறான். உடனே, எதிர்நின்ற பிராமணர்களுள் ஒருவன் இவனது பிறப்புச் செய்தியை விரித்து இவன் ஆபுத்திரன் என்றே உறுதிப்படுத்துகிறான். ஆயினும் அவற்றைக் கேட்டுச் சிரித்துவிட்டுத் தம்பணி தொடர்பவனாக ஆபுத்திரன் கதைப்போக்கில் வளர்கிறான். இந்த இடத்தில் பிறப்பின் அடிப்படையில் சாதியம் நிலைபெற்று விடுகின்றது. பிறப்பில் பிறழ்ந்த சாதியினர் பெற்ற குழந்தைகளைப்போலவே, மாற்றுத் திறனாளிகளாக இன்றைக்குச் சுட்டப்பெறுகிற ஊனமுற்றோரும் ஒதுக்கப்பெற்றிருக்கின்றனர். காணார், கேளார், கால்முடப்பட்டோர், பேணுநர் இல்லோர், பிணிநடுக்குற்றோர் பலரும் புகலிடமாகத் தங்கியிருந்த இடம் சிந்தாதேவி கோவில் முன்பிருந்த அம்பலம். அங்கிருந்து அம்மக்கட்கு உணவளித்து மீந்ததைத் தான் உண்டு வாழ்ந்தவனாக ஆபுத்திரன் விளங்குகிறான்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s1/p26.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License