இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

25. சங்கஇலக்கியத்தில் களவியல் பாத்திரங்கள்

பெ. காளிதாஸ்
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்காடு.

முன்னுரை

சங்க இலக்கியத்தில் மானிடப் பாத்திரங்கள் மிகமிகத் தேவை என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். சங்கப் பாடல்களில் விலங்குகளும் பறவைகளும் புரியும் காதலும் சாதனைகளும் உவமைகளின் மூலம் முதன்மைப் பாத்திரங்களாக இருக்கக்கூடாது. தொல்காப்பியரின் இலக்கணக் கோட்பாட்டின்படி காதல், வீரம் ஆகியவற்றிற்கே இலக்கியத்தில் முதலிடம் இருப்பதால் மானிடப் பாத்திரங்களுக்கே சங்க இலக்கியத்தில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது எனலாம். சங்க இலக்கியத்தில் களவியல் பாத்திரங்களான தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய் போன்ற பாத்திரங்களின் தன்மையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியர்

தொல்காப்பியர் (492) என்ற நூற்பாவின் அடிப்படையில் பார்த்தால் தொல்காப்பியர் இப்பாத்திரங்களை மட்டுமே களவில் பேச அனுமதித்திருக்கிறார் என்பது இதன் பொருளாகும். தொல்காப்பியர் கூறும் கூற்றுக்கான நிகழ்ச்சிகளைக் கொண்டு இப்பாத்திரங்களின் தன்மையினை நாம் வரையரை செய்ய முடியும்.

தலைவன்

எல்லா சங்க இலக்கியத்திலும் இருப்பது போலவே தொல்காப்பியமும் நாயகன் என்ற பாத்திரத்தையே கதாநாயகனாகக் கொண்டிருக்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் முல்லை முதலிய நிலத்தின் அடிப்படையில் ஐவகைத் தலைவர்கள் உள்ளனர் என்பதை நம்மால் அறிந்துக் கொள்ள முடிகிறது. தலைவனுக்கு நற்குடிபிறப்பு, ஆண்மை, பருவத்தோற்றம், அன்பு, சான்றாண்மை, கருணை, செல்வம் ஆகிய பத்து பண்புகள் தலைவனிடம் இருக்க வேண்டும் என்கிறது. நூற்பா (269) நூற்பா (270) போன்ற நூற்பாக்களில் தெளிவுபடுத்தி இருக்கின்றார் தொல்காப்பியர். காழ்ப்புணர்வு, கொடுமை, கர்வம், புறங்கூறல், கடுஞ்சொல், துணிவின்மை, சோம்பேறித்தனம், குடியிருப்பு பற்றிய கர்வம், பிறன்பழிகூறல், ஏழ்மையை மறுத்தல், பொருந்தாக் காமம் ஆகிய பன்னிரு பண்புகள் இருத்தல் கூடாது.

“முன்னிலை யாக்கல், சொல்வழிப்படுத்தல்
நன்னயம் உரைத்தல், நகைநனி உறாஅது” (தொல்.களவியல்.நூற்.1047)

“குறை அவள் சார்தி மெய்யுறக் கூறலும்
மேய்தொட்டு பயிரல், பொய்பாராட்டல்” (தொல்.களவியல்.நூற்.1048)

அவனிடம் மனிதப் பண்புகள் இருப்பதைக் கண்டு ஆசைமொழியில் தன்னுடைய நிலையினை சொல்லுகின்றான். பின்பு பறவையிடமோ, விலங்கிடமோ பேசுவது போன்று அடுத்த நாள் பேசுகிறான். மனவடக்கத்தால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறான். அவளைப் புகழ்ந்தால் அவன் மகிழ்ச்சி அடைவாள் என்று அவன் மனநிலையை நினைக்கிறான். தன்னுடைய நிலையினைக் கூறுகிறான். அவன் மனதை அளக்கிறான். பின்பு, அவள் தன்னை உண்மையில் என்ற முடிவிற்கு வருகிறான்.



இரண்டாம் சந்திப்பின் போது அவளது அவயங்களைத் தொடுகிறான். மன்னிப்பும் தலைவன் கோருகிறான். அவளைச் சந்தித்து தன் விருப்பத்தைத் தெரிவிப்பதில் விருப்பமுடையவனாக இருக்கின்றான். தற்காலிகமான பிரிவிற்கும் வருந்துகிறான். தலைவியைச் சந்திக்கத் தன் நண்பனிடம் வேண்டுகிறான். உடன்படாவிட்டால் தலைவியின் தோழியிடம் தங்களது சந்திப்பிற்காக முறையிடுகிறான். பரிசுகளைக் கொடுத்து மகிழ்விக்கின்றான். அவள் ஆர்வம் கொள்ளவில்லை என்றால் மடலேறுவதாகப் பயமுறுத்துகிறான்.

இரவிலோ, பகலிலோ குறிப்பிட்ட நேரத்தில் அவளைச் சந்திக்க விரும்புகிறான். குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் அவளிடம் மன்னிப்பும் கேட்கிறான். தன் வரவினை தலைவிக்கு அறிவிக்கச் சந்கேதக் குறிப்புகளைச் செய்கிறான். சந்திக்க முடியாமல் போனால் வருந்துகிறான் வரவில்லை என்றால் தன் வரவையுணர்த்தச் சில தடயங்களை விட்டுச் செல்கிறான்.

சந்திப்பதில் இடர்கள் ஏற்பட்டால் மகிழ்ச்சி காண்கிறான். திருமணம் செய்து கொள்ள பொறுப்புணர்வு இருந்தாலும் தனியாகச் சந்திப்பதையே விரும்புகிறான். தனியாகச் சந்திப்பது பெற்றோருக்கு தெரிந்துவிட்டால் மணப்பதற்கு விருப்பமுடையவன் என்ற செய்தியை அவர்களுக்கு உணர்த்துகிறான். அனுமதி கிடைத்தால் சமயச்சடங்குகளோடு மணம் செய்து கொள்கிறான் இல்லை என்றால் உடன்போக முடிவு செய்கிறான். தலைவியினுடைய பெற்றோர் அறியாவண்ணம் அவளை அழைத்துச் செல்லும் முன், போக வேண்டிய வழியைப்பற்றி முடிவு செய்கிறான். செல்லும் பயணம் இன்பமாகவும், பருவகாலம் சரியாக இல்லை என்றாலும் அழைத்துச் செல்வதில்லை, சில நேரங்களில் பாலைகளங்களிலே அழைத்துச் செல்கிறான். பல சமாதான மொழிகளைக் கூறி இடர்களை மறக்குமாறு செய்ய முயலுகிறான் தலைவன், தந்தையோ தமையனோ குறுக்கிட்டால் மணக்கப் போகவதாகக் கூறி பிறிதோர் இடத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோர் வரவிற்காக காத்திருந்து பிறகு மணம் முடிப்பதாகத் தலைவனின் பாத்திரப்பண்புகளை இலக்கியங்களில் அமைக்கின்றனர்.

தலைவி

அகத்திணையில் தலைவியைப் பற்றி பேசும் சந்தர்ப்பங்களைத் தனிச் சூத்திரங்களாகத் தொல்காப்பியர் கூறவில்லை. தலைவியின் கூற்றாக களவியலில்

“இருவகைக் குறி பிழைப்பாகிய இடத்தும்
காணா வகையில் பொழுதுநனி இசுப்பினும்“ (தொல்.களவியல். 1053)

முதல் சந்திப்பில்லே தலைவனைத் காதலிப்பதை உணர்ந்து நாணத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாள். இரண்டாவது சந்திப்பில் பலசாக்கு சொல்லித் தொடும் போது, அவன் ஆசையும் உணர்ச்சியும் கொண்டிருக்கின்றான் என்பதை அறிந்து உடன்படுகிறாள். உடலுறுப்புகளில் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். எல்லா வகையிலும் தலைவனுக்கு ஏற்றவள் ஆகுகின்றார். தலைவனைப் போலவே அவளும் பத்துப் பண்புகளைக் கொண்டு இருக்கின்றாள். தன் உணர்ச்சியினைத் தோழியின் மூலம் எடுத்துரைத்துத் தனியே சந்திப்பதற்குரிய இடத்தைச் சுட்டுகின்றாள். காதலின் விருப்பத்திற்கு இணங்குவதே தன் கடமை என்றறிந்து அவனுக்கு எதிராக அவள் செல்வதில்லை.

தலைவன் இடையூறுகளை எடுத்துக் கூறும் போது, பொறுமையோடு கேட்டு, அவளை ஏற்றுக் கொள்ளத் தவறுகின்றாள். ஆசையுடையவளாகிறாள். அவனைக் காணாதவாறு அவளைப் பார்க்கின்றாள், சிறிய இடைவெளி செல்லா வண்ணம் காவல் வறுத்தாலும் சந்திக்கும் வாய்ப்பைத் தேடுகிறாள். குறித்த காலத்தில், நேரத்தில் வந்துவிட்டான் என்றறிந்து மற்றவர்கள் உறங்கிய பின் மெதுவாக எழுந்து வர முயலுகின்றாள்.



சந்திப்பில் தடை ஏற்பட்டால் வருந்தி வெளிப்படையாகவேப் பேசுகின்றாள். களவில் கண்டு மகிழ்ச்சி அடைகிறாள். தன் உடல்உறுப்புகள், உயிரற்ற பொருள்கள் பார்த்து பேசுகின்றாள். தலைவர் பிரிவில் உணவு கொள்வதில்லை, வேலனிடம் அழைத்து சென்றால் உண்மையைத் தலைவி கூறுவதில்லை. தலைவன் காலம் தாழ்த்தி வந்தாள் வேதனை அடைபவளாகவும், பெற்றோர் திருமணம் பற்றிப் பேசும் போது தலைவனுக்கு அறிவுறுத்தியும், கற்பினைக் காக்க மன்றாட முடிவு செய்பவளாகவும், மறுத்தால் உடன்போக்கிற்கு போகவும், சரியான நேரத்தில் தம் காதலைப் பெற்றோரிடம் கூறி அறிவுறுத்துபவளாகவும், படைக்கப்படுகிறாள். தன்னுடைய உடலில் தோற்றம் மாற்றங்கள் தன் காதலை பெற்றோருக்கு வெளிப்படுத்தி விடுவதாகச் சங்க இலக்கியங்களில் தலைவியின் பாத்திரத்தின் தன்மையை நம்மால் பார்க்க முடிகின்றது.

தோழி

களவியலில் தலைவியின் முக்கியப் பாத்திரம் தோழி ஆவாள். தலைவியின் குழந்தைப் பருவம் முதல் வளர்க்கப்படும் செவிலித்தாயின் மகள்தான் தோழி களவியலில் முக்கியமான பாத்திரத்தை ஏற்றுக் கொள்கிறாள்.

“தோழி தானே, செவிலி மகளே” (தொல்.களவியல்.நூற்.123)

மூன்று நிலைகளில், தலைவனின் காதலை தோழி உணர்ந்து கொள்கிறாள். காதலன் உதவியை நாடும் போது, உளப்பாங்கு, சந்திக்க வருதல் போன்ற நிலைகளில் காதலைப் புரிந்து கொள்பவளாகவும் தோழி படைக்கப்படுகிறாள். தலைவன், தலைவிக்குச் சந்திக்க வேண்டிய இடங்களையும், சந்திக்கும்பொழுது தலைவியுடன் உடன் இருப்பவள் தோழியாகவும் தலைவியின் மனம், தோற்றம், நடத்தை, மறதி, நடை செயல்கள் மூலம் புரிந்து கொள்பவளாகவும், கேள்விகளைக் கேட்டு அவள் மனதினை அறிபவளாகவும், திருமணம் செய்து கொள்ளத் தலைவனை அறிவுறுத்துபவளாகவும், தலைவியைப் பற்றி ஐயுறும் நிலைகளில் நம்புமாறு செய்பவளாகவும், தலைவனுக்கு உதவுபவளாகவும், தோழியின் துயரத்தை விபரத்தை அறிவுறுத்துபவளாகவும் தோழி பாத்திரம் படைக்கப்படுகிறது.

தலைவியைச் சில நாள்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்று கூறுவது அவளது கடமையாகும். தலைவனின் குடிபிறப்பு, பெருந்தன்மை பற்றி நினைவுறுத்தித் திருமணம் செய்து கொள்ள வேண்டுபவளாகவும், தலைவியின் உறவினர்கள் சந்தேகப்பாட்டினை நீக்குபவளாகவும், தலைவியை வேலனிடத்தில் அழைத்துச் செல்லும் போது சாமர்த்தியமாகவும் நடந்து கொள்பவளாகவும், பெற்றோர் வேறெருவருடன் மணம் முடிக்க நினைத்தால் தலைவியிடம் அறிவுத்துபவளாகவும் படைக்கப்படுகின்றாள். திருமணத்திற்கு ஒப்புவித்தால் தோழியே தலைவனிடம் கூறுகின்றாள். பெற்றோர் அறியாமல் சென்றுவிட்டால் தனக்கு ஆறுதல் கூறுபவளாகவும், தலைவனைப் புகழ்ந்தோ, இகழ்ந்தோ பேசும் உரிமை தோழிக்கு உண்டு என்பதைத் தோழியின் பாத்திரப் படைப்பினைச் சங்க இலக்கியத்தில் தெரிந்து கொள்ள முடிகின்றது.



செவிலித்தாய்

தாயைக் காட்டிலும் தலைவியிடம் நெருக்கம் உடையவள் செவிலி. தொல்காப்பியர் செலித்தாயின் கூற்றாக அகத்திணையியலில் ஒரு நூற்பா (38) செலித்தாயின் பண்புகளை கூறிச் சென்று இருக்கின்றார். குழந்தைப்பருவம் முதல் உடனிருந்து, ஊட்டி வளர்த்து, தாய்நாட்டின் பண்பாட்டையும் கற்றுக்கொடுத்தவள் செவிலியே, வளர்ந்த பின்னும், தலைவி செவிலியுடனே உறங்குவதை நம்மால் சிந்திக்க முடியும். தலைவியுடன் படுக்கும் தனியுரிமை பெற்றவளாகவும், தலைவி தூக்கத்தில் உளறுவதைக் கொண்டு அவளின் காதல் நடவடிக்கைகளை அறிவபவளாகவும், நன்மைக்காக இறைவனை வழிபடுவளாகவும், தலைவனுடன் போய்விட்டாள் என்பதற்காக வருந்தினாலும், அவள் தன் கற்பைக் காத்துக் கொண்டதற்காகப் பெருமை கொள்பவளாகவும், வழியில் ஏற்படும் இடர்களுக்காகத் தலைவனால் விடப்பட்ட பின்பும் அவள் மனஉறுதி கண்டு பெருமை கொள்பவளாகவும், தலைவனின் குடிப்பிறப்பு முதலியவற்றோடு தலைவியின் குடிப்பிறப்பு முதலியவற்றை ஒப்பு நோக்கி, தகுந்த தலைவனைத் தேர்ந்தெடுக்கிறாளா என்று ஆராய்கின்றவளாகவும். அவள் தான் பெற்றோர்க்குத் தலைவியின் காதல் விவகாரங்களை அறிவிக்கின்றவளாகவும் செவிலித்தாயின் பாத்திரம் சங்க இலக்கியங்களில் படைக்கப்பட்டு இருக்கின்றது.

முடிவுரை

காதலையும், வீரத்தையும் கூறும் இலக்கியங்களில் மானுடப்பாத்திரங்கள் மிகமிகத் தேவை என்பது தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய் பாத்திரப்படைப்பின் தன்மையினைக் கொண்டு அறிந்து கொள்ள முடிகின்றது. தொல்காப்பியரின் இலக்கியக் கோட்பாட்டின்படி காதல், வீரம் ஆகியவற்றிற்கே இலக்கியத்தில் முதலிடம் இருப்பதால் மானிடப் பாத்திரங்களுக்கே இலக்கியத்தில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p25.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License