இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

26. அகநானூற்றில் சுற்றுச்சூழல் சிந்தனைகள்


ப. கோகிலவாணி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
அறிஞர் அண்ணாஅரசுக் கலைக்கல்லூரி, நாமக்கல். .

முன்னுரை

அழகு பொழியும் வனங்கள், அங்கு வாழும் எண்ணற்ற விலங்குகளின் செயல்கள், பருவம் தவறாத சாரல் மழையின் இனிமை, ஆழமான சுனைகள், இயற்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்ட உழவுமுறை, எங்கெங்கு காணினும் மகிழ்வோடு சுற்றித்திரியும் பறவை இனங்கள், தாங்கள் வாழும் சூழலுக்கேற்ற உணவு, உழவு, உறைவிடம் போன்றவற்றை அமைத்து மகிழ்வோடு வாழ்ந்த தொன்மைக்கால மனிதர்கள் போன்ற நிகழ்வுகள் சங்க இலக்கியம் முழுமையும் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன.

இத்தகு சூழல்சார் நிகழ்வுகளைச் சங்ககாலப் புலவர்கள் பதிவு செய்து வைத்தமை வெற்று வருணனையோஅல்லது வரலாறோஅல்ல, மாற்றாக இப்பதிவுகள் அனைத்தும் சங்ககால மக்களின் சுற்றுச்சூழல்சார் சரியான புரிதல்களைப் பெற்று இயற்கையை அளவாகப் பயன்படுத்தியமையால், இயற்கை அவர்களுக்கு அளித்த அன்புக் கொடையே அவர்களின் மகிழ்வான ஆரோக்கிய வாழ்வு என்பதனை நாம் உணர்ந்து கொள்வதற்கான அற்புதப் படைப்புகளாகும். இதனை அடியொற்றியே பழங்கால மக்கள் இயற்கையைப் பேணிக் காத்தமையையும், அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சிந்தனைகளை எங்ஙனம் பெற்றிருந்தனர் என்பதனையும் அகநானூற்றின் வழி இக்கட்டுரைஆராய முனைகின்றது.

நீர்ப் பயன்பாடு

நீர் இன்றி இவ்வுலக இயக்கம் சாத்தியமற்றது. உயிரினங்களின் உயிர்மைக்கு ஆதாரமாகத் திகழ்வது நீர். ஆனால், சாயப்பட்டறைகள், வீட்டுக் கழிவுநீரை ஆறு மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் கலத்தல், மரங்களை வெட்டுதல், செயற்கை எரிபொருட்களின் அதீதப் பயன்பாடு, சரியான பராமரிப்பற்ற நீர் நிலைகள், புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் மழைப்பொழிவு குறைந்து நீர்ப்பற்றாக்குறை ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் மாசுபாடும் கணிசமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

பல ஏக்கர் பரப்பில் வீட்டைக் கட்டும் நாம் நீரைச் சேமிக்க ஓர் செங்கல் கூட எடுத்து வைப்பதில்லை என்பதுவே உண்மை. இத்தகைய மனப்பாங்கு மனிதர்களிடம் இன்னும் சில காலம் நீடித்தால் இவ்வுலகில் உயிரினமே அற்றுப் போகும் அபாயம் ஏற்பட்டுவிடக் கூடும். ஆனால், பழங்கால மக்கள் நம்மைப் போன்று இல்லை, அவர்கள் நீரின் இன்றியமையாமையை முற்றிலும் உணர்ந்திருந்தனர். மலைகளில் இருந்து வழிந்து வரும் அருவி நீர் மற்றும் மழை நீர் போன்றவற்றைத் தேக்கி வைத்தனர். இதனை

“நாயுடைமுதுநீர்க் கலித்த… … …” (அகம்: 16-1)

“படுமலைபொழிந்தபயமிகுபுறவின்
நெடுநீர் அவல… … …” (அகம்: 154-1,2)

“வார்பெயல் வளர்த்தபைம்பயிர்ப் புறவில்
பிறைக்கன் அன்னநிறைச்சுனைதோறும்
துளிபடுமொக்குள் துள்ளுவனசாலத்”(அகம்: 324-5-7)



என்ற பாடல் வரிகளால் அறியலாம். மேலும் நீர்த் துறைகளை மிகவும் அகலமாகவும், ஆழமாகவும், மதகுகள் அமைத்துப் பாதுகாத்தும் நீரைஅதிக அளவில் தேக்கி முறையாகப் பயன்படுத்தினர் என்பதனை,

“அகன் துறைப் பகுவாய் நிறைய” (அகம்:256-3,4)

“நீர்வழிந்தோடும் மதகுகளைஉடையகாவிரிக்கரை” (அகம்:326-11)

ஆழமான சுனை என்பதனை

“நீடுநீர்நெடுஞ்சுனை” (அகம்:358-7) போன்ற பாடல்களால் அறியலாம்.

மேலும் ஆற்றின் கரைகளிலே மரங்களை நட்டு வைத்தனர். அம்மரங்கள் ஆற்றின் கரைகளில் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்தன என்பதனை, அகம்: 97-16-20 என்ற பாடலிலும், ஆற்றின் கரைகளை உயர்த்தினர் என்பதனை அகம்: 93-21-23 என்ற பாடலிலும் அறியலாம். இவ்வாறான நீரின் மதிப்புணர்ந்த பயன்பாட்டுச் செயல்முறைகளே அக்கால மக்களின் வளமான வாழ்வின் காரணமாகும்.

வேளாண் தொழில்நுட்பம்

கனிகளையுண்டு காடெங்கும் சுற்றித் திரிந்த ஆதிமனிதன் இன்றுள்ள நாகரீக வளர்ச்சியை எட்டுவதற்குப் பல்வேறு பரிணாம நிலைகளைக் கடந்துள்ளான். அதில் முக்கியமான இடம் வேளாண்மைக்கு உண்டு. சமனற்ற உழவுமுறை,செயற்கை உரப் பயன்பாடு, நிலத்தின் தன்மைக்குப் பொருந்தாத உழவுமுறை போன்றவற்றால் மண் வளமிழந்து வருகின்றது. இதன் விளைவு உற்பத்திக் குறைவும், உணவுப் பஞ்சமும் ஆகும். ஆனால் பண்டைய மக்களின் உழவுமுறை இவ்வாறு அமையவில்லை. நீரைத் தேக்கி வைத்து அதனை வேளாண்மைக்குப் பயன்படுத்தினர். மண்ணின் தன்மைக்கேற்ப பயிர் செய்து மிகுந்த வளம் பெற்றனர். இதனை,

1. பழங் கொல்லையாகிய மேட்டு நிலத்திலே கொழுத்த செந்தினைப் பயிரை விதைத்தல் (அகம்: 88-1)

2. சிவந்த மேட்டு நிலத்திலே வரகினை விதைத்தல் (அகம்: 367-6,7)

3. பாலை நிலத்திலே பருத்தியை விதைத்தல் போன்றவற்றால் அறியலாம்.

அடுத்து மண்ணை நன்கு பிறழும்படி உழுத பின்பு விதை விதைத்தலே நல்ல விளைச்சலைத் தரும் என்பதனை,

“பல உழுசெஞ்செய் மண்போல் நெகிழ்ந்து” (அகம்: 26-24)

“மண் பிறழும்படிஉழுதல்” (அகம்: 41-6,7)

என்ற வரிகளால் அறியலாம். மேலும் புதுப்புனமாக்கும் பொருட்டாகப் பழம்புனத்தைச் சுட்டெறித்தனர் என்பதனை அகம்: 140-11 என்பதால் அறியலாம்.

பயிர்களைப் பூச்சிகள் மற்றும் பறவைகளிடம் இருந்து காப்பதற்காக அவர்கள் எவ்விதச் செயற்கை உரங்களையும் பயன்படுத்தவில்லை மாற்றாக வயலின் நடுவே பரண் அமைத்து கிளி கடிகருவி, தழல், தட்டை, குளிர், தீப்பந்தம் போன்றவற்றைக் கொண்டும், குரல் எழுப்பியும் தினைப்புனம் காத்தனர் என்ற செய்தியினை அகம்: 12-6, 32-5,6,7, 92-6,7, 94-9,10, 292-7-12, 308-10,போன்ற பாடல் வரிகளால் அறியலாம்.

இயற்கை முறையிலான நெல் பிரித்தெடுத்தலுக்கு வைக்கோலைக் கெடாவிட்டு அலைத்து தூய்மை செய்தனர் என்பதனை அகம்: 37-5,6-ல் அறியப் பெறும். இங்ஙனம் சிறந்த வேளாண் தொழில்நுட்பத்தைக் கொண்டு இயற்கை சார் உழவு செய்து அதீத பயன்பெற்று உலகின் பஞ்சம் போக்கி மகிழ்ந்தனர்.



வன வளம்

அதிக மழைப் பொழிவிற்கு முக்கியக் காரணமாக அமைவது மரங்களே ஆகும். அவை வனங்களில் நிறைந்துள்ளன. எனவேதான் வனம் மற்றும் மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. ஆனால் இன்று நாம் வனங்களிலுள்ள மரங்களை வெட்டிப் பலவாறு பயன்படுத்தி வருகின்றோம். இவ்வாறான வன அழிவே இன்று மழையற்றுப் போனதற்கான முக்கியக் காரணமாகும். ஆனால் அன்றைய மனிதன் மரங்களைஅழிக்கவில்லை. அன்று சூரியனின் கதிர்கள் கூட நுழையமுடியாத அளவிலான அடர்ந்த மரங்களைக் கொண்ட வனங்கள் நிறைந்திருந்த செய்தியை,

“மான்றமைஅறியாமரம்பயில் இடும்பின்” (அகம்: 238-1)

என்ற பாடலாலும், அவ்வனவளத்திற்குக் குறைவற்ற மழைவளமே காரணம் என்பதனை,

“கார்ப்பெயற்குஎதிhpயகாண்தகுபுறவில்” (அகம்: 204-5)

என்ற பாடலாலும் அறியலாம். வன வளத்தைப் பொறுத்தே மழைவளம் அமையும் என்பதனை அவர்கள் தெற்றென உணர்ந்திருந்தனர்.

உணவு உறைவிடத் தூய்மை

செயற்கைக் குளிர்பானங்கள், நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றால் விளையும் தீங்கறியாமல் அதனைப் பெருமளவில் நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் சங்ககால மக்கள் தாங்கள் வாழும் சூழலுக்கு ஏற்புடைய உணவு வகைகளையே உண்டனர். வாழும் சூழலின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்புடைய உணவினை உண்டதனால் அம்மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட்டுத் திகழ்ந்தது. நெல்லினை உரலில் இட்டுத் தூய்மை செய்து மண் பானையில் சமைத்து உண்டனர். இதனை,

“பண்ணைவெண்பழத்துஅரிசிஏய்ப்பச்... ... ...
... ... ... குடவர்புழுக்கிப் பொங்கவிழ்ப் புன்கம்” (அகம்: 393-9-16)

என்ற பாடலாலும், மேலும் அவற்றை இட்டு உண்ண எவ்வித நெகிழிப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை, வாழை இலை அல்லது தேக்கு இலைகளையேப் பயன்படுத்தினர் என்பதனை,

“புகர்அரைத் தேக்கின் அகல்இலைமாந்தும்” (அகம்: 107-10)

“மழவிடைப் பூட்டியகுழாஅய்த் தீம்புளி
சேவியடைதீரததேக்கிலைப் பகுக்கும்” (அகம்: 311-10,11)

“... ... ... தேக்கின்
ஆகலினைகுவித்தபுதல் போல்
குரம்பைஊண்புழுக்குஅயரும் முன்றில்... ... ...” (அகம்: 315-15-17)

என்ற பாடல் வரிகளாலும் அம்மக்களின் உணவுத் தூய்மையும் அதன் விளைவாக அவர்கள் பெற்ற ஆரோக்கிய வாழ்வும் புலப்படுகின்றது.

இன்றுள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு முக்கியக் காரணியாக அமைவதில் ஒன்று நகரமயமாதல். நாம் நகரமயமாதல், நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் வனங்களையும், வேளாண் நிலங்களையும் அழித்து அடுக்குமாடிக் கட்டிடங்களை அமைத்துச் சூழலைப் பெருமளவில் அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றோம். ஆனால் சங்ககால மக்கள் எளிமையாகக் கிடைக்கக்கூடிய இயற்கைப் பொருள்களைக் கொண்டு எளிமையான இல்லங்களை அமைத்து இனிய வாழ்வு வாழ்ந்தனர். இதனை,

“புல்வேய் குரம்பை” (அகம்: 87-3)

“காயல் வேய்ந்ததேயாநல்லில்” (அகம்: 370-5)

என்ற பாடல் பகர்கின்றது. விழாக் காலங்களில் வீட்டுச் சுவற்றில் செம்மண் பூசி தரையில் பழைய மணலை அகற்றிப் புதுமணல் பரப்பித் தூய்மை செய்தனர் மற்றும் விலங்குகளிடம் இருந்து வீட்டைப் பாதுகாக்க முள்வேலி அமைத்தனர் என்பதனை அகம்:394-8,9 மற்றும் அகம்: 221-5 போன்ற பாடல்களால் அறியலாம்.



முடிவுரை

“இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளி மண்டலமெங்கும் மாசு, பயனிழந்த நதிகள், தாழ்ந்து கொண்டே போகின்ற நிலத்தடி நீர்மட்டம், நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்கின்ற சீரமைக்கப்படாத கழிவுகள், காணாமல் போன காடுகள் என சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. (சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு பக்:18) இன்றுள்ள இந்நிலை தொடர்ந்தால் சுற்றுச்சூழல் மிகவும்பாழ்பட்டு உயிரின வாழ்வு கவலைக்கிடமாகி விடக்கூடும். 1980 மற்றும் 1990 களில் தொடங்கி இன்று வரை பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களும், சிந்தனையாளர்களும் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை முன்மொழிகின்ற நிலையிலும் அதன் சாராம்சங்களை அரசும் கவனத்தில் கொள்வதில்லை, மக்களும் கருத்தில் நிறுத்தவில்லை என்பதுவே உண்மைநிலை. ஆகவே நாம் நம் முன்னோர்கள் (சங்ககாலமக்கள்) கடைப்பிடித்த இயற்கைசார் வாழ்வியல் முறைகளையும், அவர்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிந்தனைகளையும் காணும் போது நாமும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வாழ்வியலைக் கடைபிடித்து, நமதுசந்ததிகளுக்கு இயற்கையை அதன் இயல்புநிலை பிறழாமல் பாதுகாத்து அளிக்க வேண்டும் என்ற சிந்தனையைப் பெற இயலுமென்பதனை இக்கட்டுரை முன்மொழிகின்றது.

பார்வை நூல்கள்

1. அகநானூறு உரை, புலியூர்க் கேசிகன், சாரதா பதிப்பகம்.

2. சுற்றுச்சூழலியல், ராமச்சந்திர குஹா (தமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன்), எதிர் வெளியீடு.

3. பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி..., பாவை பதிப்பகம்.

4. சுற்றுச்சூழல் ஒரு பார்வை, ஏற்காடு இளங்கோ, சாரதா பதிப்பகம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p26.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License