இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் - 8

என் பார்வையில்...

முனைவர் மு. பழனியப்பன்


4. தமிழில் வேதாந்தச் சிறப்பு

தமிழ் மொழி இலக்கணச் சிறப்பும், இலக்கியச் சிறப்பும், தத்துவச் சிறப்பும் கொண்ட மொழி. தமிழில் எழுதப் பெற்றுள்ள தத்துவ நூல்கள் உயிர், உடல், இறை பற்றிய பல தெளிவுகளைத் தருகின்றன. தமிழில் சைவ சித்தாந்த நூல்கள் பலவும், வேதாந்த நூல்கள் பலவும் படைக்கப் பெற்றுள்ளன. இத்தத்துவங்கள் அனைத்தும் உண்மையைத் தேடிப் பயணிக்கின்றன. தத்துவ நிலையில் உயிர்களைப் பேரின்பம் பெறச் செய்ய உதவுகின்றன.

கோவிலூர் மடத்தின் மரபில் அமைந்த வேதாந்த நூல்கள் பதினாறு ஆகும். இந்நூல்கள் அனைத்தும் வேதாந்தச் சார்புடையன. மோட்சத்திற்குச் செல்ல விரும்புவோர் இந்நூல்களைப் படிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். அதன்வழி நிற்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

வேதாந்த வழிப்பட்ட பதினாறு நூல்களில் ஒன்று கீதாசாரத் தாலாட்டு என்பதாகும். பாகவதமோ, பகவத் கீதையோ தமிழில் படைக்கப்படாத நிலையில் அவற்றை நிறைவு செய்யும் வகையில் அமைந்த நூல்களுள் ஒன்று கீதாசாரத் தாலாட்டு என்ற ஒன்று ஆகும். இது வேதாந்தப் பாடங்களைக் கற்பவருக்குத் தொடக்க நிலையில் சொல்லித் தரப்பெறும் தத்துவ நூலாகும். இதனைப் படைத்தவர் திருவாமத்தூர் ஸ்ரீ திருவேங்கடநாதர் ஆவார். இவர் தொண்டை நாட்டில் அமைந்திருந்த மாதை என்ற பகுதியின் மன்னராக விளங்கியவர். இவர் வேதாந்தப் பழக்கமுடையவர். இவருக்கு இரு பெண்பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கு உரிய வயதில் இவர் திருமணம் செய்து வைத்தார். இவ்விருவர்களில் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. இதன் காரணமாக அப்பெண்ணின் குறையைப் போக்க இவர் ஒரு கண்ணன் பொம்மையைக் கொடுத்து அதனைத் தொட்டிலில் இட்டு வளர்த்துவரச் சொன்னார். அக்குழந்தையைத் தாலாட்டுவதற்காக ஒரு தாலாட்டு ஒன்றையும் பாடித் தந்தார். அவ்வாறு எழுதப்பெற்றதே கீதாச்சாரத் தாலாட்டு என்பதாகும். இத்தாலாட்டினைப் பாடிப் பாடி கண்ணன் உருவத்தைத் தாலாட்டிய அந்தப் பெண்ணிற்குப் பின்னாளில் குழந்தை பிறந்தது என்பது வரலாறு. இவ்வகையில் கீதையைப் போற்றவும், கேட்டது கிடைக்கவும் இத்தாலாட்டு உதவுகிறது.

இத்தாலாட்டு கேள்வி பதில் முறையில் அமைந்துள்ளது. அர்ச்சுணன் போர்க்களத்தில் இருந்தபடி வினாக்களைத் தொடுக்கிறான். சாரதியாக இருக்கும் கண்ணன் தேர்த்தட்டில் அமர்ந்தபடி கேள்விகளுக்குத் தக்க விடையளிக்கிறார். வினாக்களும், விடைகளும் கூர்மையும் தத்துவ ஆழமும் கொண்டன. இருப்பினும் இந்நூல் படிக்க எளிமையாக இருக்கிறது. கீதையை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது.



போர்க்களத்தில் காண்டீப வில்லைத் தூக்கி வீசிவிட்ட அர்ச்சுணனை ஆசுவாசப்படுத்துகிறார் கண்ண பரமாத்மா. அவன் தெளிந்து சில சந்தேகங்களைக் கண்ணனிடம் கேட்க முனைகிறான். அவன் முதல் கேள்வியைத் தொடங்குகிறான்.

“ கிருஷ்ணா! ஞானிகளாக இருந்தாலும் தனக்கோ, தன் சுற்றத்தினருக்கோ துன்பம் வரும்போது கலக்கம் கொள்ள மாட்டார்களா?”

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுகிறார் கண்ண பரமாத்மா.

இவ்வுலகில் உள்ள அனைவரும் பிறப்பும் இல்லாதவர்கள். இறப்பும் இல்லாதவர்கள். பிறப்பும் இறப்பும் முன் பிறவியில் செய்த வினை காரணமாக உடலுக்கு ஏற்படுகிறது. ஆனால் ஆன்மாவிற்கு ஏற்படுவதில்லை. உலகில் உன் வடிவம் என்பது அழிவில்லாத ஆன்மாவின் வடிவமாகும். இவ்வான்மாவிற்கு இறப்பும் கிடையாது. பிறப்பும் கிடையாது. ஆகவே உடலழிவிற்காக நீ வருந்தவேண்டாம். ஆன்மா நித்தியமானதாக என்றும் இருக்கிறது என்று பதில் தருகிறார் கிருஷ்ணபரமாத்மா.

இவ்வாறு கேள்வியும் பதிலுமாக விரியும் இத்தாலாட்டில் எளிமையான முறையில் வேதாந்தத் தத்துவங்கள் விளக்கப் பெற்றுள்ளன. அவற்றை எண்ணிக் கற்கும் போது உலக வாழ்வில் பல தெளிவுகளைப் பெற வேண்டியிருப்பது புரிகிறது.

ஆன்மா என்பது என்ன? அது ஒன்றா, இரண்டா, பலவா? ஆன்மாவிற்கும் அறிவுக்கும் தொடர்புண்டா? இப்படிப் பற்பல அடிப்படைக் கேள்விகள் ஞானத்தின் பாதையைத் தொடுபவர்களுக்கு எழும். இக்கேள்விகளை அர்ச்சுணன் கேட்பதாகவும் கிருஷ்ணர் பதிலளிப்பதாகவும் அமைத்துச் சிறக்கிறது கீதா சாரத் தாலாட்டு.

ஆன்மா என்றால் என்ன என்ற கேள்விக்குத் தரப்படும் பதில்;

“நித்தியம் ஆகிய ஆன்மா நின் சொரூபம் என்றவாரோ” என்பதாகும். அதாவது அழியாத நிலையில் அமைவது ஆன்மா என்பதை உணரச் செய்கிறது கண்ண பரமாத்மாவின் பதில்.

மேலும், அறிவு என்பது உடல் சார்ந்ததா? உள்ளம் சார்ந்ததா என்றால் இக்கேள்விக்கும் பதில் உரைக்கிறார் கிருஷ்ணர்.

“பிறிவு செயில் அசித்து உடலம்
பிரம்மம் அறிவு என்றவரோ”

என்பது கிருஷ்ணரின் மொழி. அதாவது ஆன்மா எனப்படும் உயிரும் உடலும் இணைந்து நடக்கும் நிலையில் அறிவு இரண்டிற்கும் அமைகிறது. உடல் வேறு, ஆன்மா வேறு என்று பிரித்துப் பார்த்தால் அறிவற்றது உடல். அறிவுடன் விளங்குவது ஆன்மா.

அறிவற்ற நிலையே மாயை எனப்படுகிறது. இதன் காரணமாக அறிவு பெறும் நிலை ஞானம் ஆகின்றது. இந்த ஞானத்தைப் பெற்று முழுமை அடைவது ஆன்மாவின் பணி.

ஆன்மா என்பது ஒன்றா, இரண்டா என்றால் அதற்கும் சளைக்காது பதிலுரைக்கிறார் கிருஷ்ண பரமாத்மா. ஆன்மா ஒன்றே. அது பலவாகத் தோன்றுவது ஏன் என்றால்

“பலகடத்தில் சலத்து உடு பானவிம்பம் தோன்றுதல்போல்
தொலைவுஇல்புத்தி தொறும் ஆன்மா தோன்றுதல் காண் என்றவாரோ”

என்ற பாடலடிகளில் பதில் உள்ளது. ஆன்மா ஒன்றுதான் என்றால் ஏன் பற்பல உயிர்களாகப் பிறக்கவெண்டும் என்பது அடிப்படைக் கேள்வி.



பானைகளில் நீர் ஊற்றிவைக்கிறோம். அந்நீரில் சூரியனின் பிம்பம் படுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பானையிலும் ஒவ்வொரு சூரியன் இருக்கும். ஆகவே சூரியன் பல இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்து விட இயலுமா.சூரியன் ஒன்றுதான். அதன் பிம்பங்கள் பல. அதுபோல ஆன்மா ஒன்றுதான். அது தன் மனம், புத்தி, சித்து, அகங்காரம் ஆகிய நிலைகளால் பலவாக உருவெடுத்து நிற்கிறது. பின்னர் அது ஒரே ஆன்மாவுக்குள் அடங்கும் என்று வேதவிளக்கம் கிடைக்கிறது.

ஆன்மா சீவன் முத்தர் தன்மையைப் பெறுவது என்பது அதற்குரிய நோக்கமாகும். இந்தச் சீவன் முத்தர்கள் என்பவர்கள் யார் என்றால்

“வரும் கருவு பிறப்பினொடு வளர்தல் பருத்தல் குறைதல்
ஒருங்கலும் மெய்க்கென்று அதனை ஒறுத்திருப்பர் என்றவாரோ”

என்ற பண்புடையவர் ஆவார். அதாவது, தாயின் கருவறையில் இருந்துப் பிறத்தல், வளர்தல், பெருத்தல், சிறுத்தல், அழிதல் ஆகிய வேறுபாடுகள் உடலுக்கு என்று உறுதியாக எண்ணுபவர்கள் சீவன் முத்தர்கள். இவற்றைச் சகித்துக் கொண்டு ஆன்மாவிற்கு அறிவு விளக்கம் தருபவர்கள் சீவன் முத்தர்கள் ஆவர்.

ஆன்மாவைப் பற்றிய வேதாந்த விளக்கங்களை அள்ளித்தரும் செவ்விய நூல் கீதாசாரத் தாலாட்டு ஆகும். இத்தாலாட்டின் நிறைவுப்பகுதியில் கீதையைத் தந்த ஞானாசிரியரே தொட்டிலில் இனிமையாக உறக்கம் கொள்க என்று முடிக்கிறார் திருவேங்கடநாதர்.

தமிழ் நூல்களில் காணப்படும் தத்துவங்கள் உண்மையைத் தேடுவன. அவற்றை விடாது கற்று நல்வாழ்வு பெறுதல் வேண்டும்.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p8d.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License