இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் -6

என் பார்வையில்...

முனைவர் மு. பழனியப்பன்


3. நந்தனார் கண்ட சிதம்பரம்

சிதம்பரம் பக்தி உணர்வின் சிகரம் ஆகும். அது பக்திமான்களின் தலைநகரமும் ஆகும். தில்லைச் சிற்றம்பலத்திற்கு ஈடு இணை எங்கும் இல்லை. வானத்தின் அடையாளமாக விளங்குவது தில்லைச் சிற்றம்பலம். உலக இரகசியத்தின் உன்னதச் சின்னம் தில்லைச் சிற்றம்பலம். இந்தத் தில்லைக்கு வந்து சேருவது என்பது ஓர் அடியாருக்கு மிகவும் அரிய செயலாக இருந்தது. இத்தனைக்கும் அவர் சிதம்பரத்திற்கு அருகிலேயே ஒரு சில மைல்கல் தொலைவிலேயே வசித்து வந்தார். இத்தனை சொன்ன பிறகு யார் அந்த அடியார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். திருநாளைப் போவார் என்ற நந்தனார் என்பவரே அந்த அடியார்.

நாளைக்குச் சிதம்பரம் சென்றுவிடுவேன், நாளைக்குச் சிதம்பரம் சென்றுவிடுவேன் என்று சொல்லிக் கொண்டே இருந்ததால் அவருக்குத் திருநாளைப்போவார் என்றே பெயர் அமைந்துவிட்டது. ஆனாலும் அவர் சிதம்பரம் செல்லும் நாளும் வந்தபாடில்லை. அவரும் சிதம்பரத்திற்குச் சென்ற பாடில்லை. நந்தி விலகினார் கோயில் என்று தற்போது அழைக்கப்பெறும் திருப்புன்கூர் என்ற ஊரைச் சார்ந்தவர் நந்தனார். நந்தனாருக்காக நந்தியே விலகி நின்று திருப்புன்கூர் இறைவனின் காட்சியைக் காட்டி நின்றது. இருந்தாலும் தான் சிதம்பரம் கோயிலுக்கு வந்து அங்கு உள்ள இறைவனைக் காணவேண்டும் என்ற கொள்கையை தன் மனதில் வைத்திருந்தார் நந்தனார். ஆனால், அதற்குப் பல தடைகள் அவருக்கு எழுந்தன. அவற்றை எல்லாம் மீறிக் கடந்து அவர் சிதம்பரத்திற்கு வந்து சேர்ந்தார்.

அவரின் வாழ்வைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் செய்யுட்பகுதியாக பாடினார். இசைக் கோலத்தில் நந்தனார் சரித்திரத்தைத் தந்தவர் கோபால கிருஷ்ண பாரதியார். இவர் நந்தனார் சரித்திர கீர்த்தனை என்று இசைப் பாடல் வடிவமாக நந்தனார் சரித்திரத்தைப் பாடினார். இக்கதையை மட்டும் அல்லாது திருநீலகண்டர், இயற்பகையார் போன்ற பலரின் வரலாறுகளையும் இசை வடிவில் பாடி மகிழ்ந்தவர் கோபல கிருஷ்ண பாரதியார். இந்துஸ்தானி இசை, கர்நாடக இசை போன்றவற்றில் தேர்ந்த அவரின் இசைப் புலமை நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் பெரிதும் வெளிப்பட்டுள்ளது. நந்தனின் பக்தியும் வெளிப்பட்டுள்ளது.



சிதம்பரம் செல்வதால் பெரும் நன்மையைப் பின்வருமாறு நந்தனார் கீர்த்தனை சொல்கிறது.

தெரிசிக்க வேணும் சிதம்பரத்தைத் தெரிசிக்கவேணும்
தெரிசித்தவுடன் உடல் கரிசைப் பிணிகள் அறும்.
பத்தர் பணியுந் திருக் கூத்தன் சந்நிதி தொழுது
தெரிசிக்க வேணும் சிதம்பரத்தைத் தெரிசிக்கவேணும்
வேதனை அடியவர் போதனை முனிவர்கள்
தெரிசிக்க வேணும் சிதம்பரத்தைத் தெரிசிக்கவேணும்
நாதனே கரம் குவித்து ஆதரவாக
ஈசனே! புலியூரில் வாசனே! கனக சபேசனே என்று
நடராசனைப் போற்றி காமத்தை அகல்வர்
வாமத்தினின்று சிவ நாமத்தைச் சொல்லி
அர்த்த சாமத்தில் வந்து தெரிசிக்கவேணும்
சிதம்பரத்தைத் தெரிசிக்கவேணும்.

என்று சிதம்பரத்தைத் தரிசித்தே ஆனந்தக் கூத்தனைத் தரிசித்த நிம்மதியைப் பெற்றார் நந்தனார். இத்தகைய காட்சிகளைக் காண எல்லோரும் சிதம்பரத்திற்குச் செல்லவேண்டும் என்று நந்தனார் குறிப்பிடுகிறார். பாவங்கள் போக, காமங்கள் நீங்க, பிறவித் துயர் நீங்க சிதம்பரம் போகவேண்டும்.

நந்தனார் சிதம்பரத்திற்குச் சென்றபோது அவ்வூரில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கண்ணுற்று அதிசயப்படுகிறார். ஆனந்தம் கொள்கிறார். இதனைக் கோபால கிருஷ்ண பாரதியார் இசை வடிவில் தந்து மகிழ்கிறார்.

ஆகமங்கள் வேதியர்கள் சிவனடியார்கள் கூட்டம்
மன தேகமாகி எப்போதும் விளைகின்ற யோகிமுனிகள் ஆட்டம்
பூலோகம் இது கைலாசம் என்று இதைப் போற்றுவார்கள் ஆட்டம்
...வேள்வி செய்யும் புகை மேலுலகம் எழும்பிப் போகுதையே
புண்ணியவான்கள் புரியுந்தவம்
அரகரசிவன் என்று ஆடிப்பாடிக் கொண்டு
பரிவுடன் தனைப் பிரதட்சணம் வரும் இடம்
மணியாடுது வெகு சனம் கூடுது வீதி வலமாகுது



சிதம்பரத்தில் ஒரு புறம் ஆகம பூசை நடைபெறுகிறது. வேதியர்கள் வேதங்கள் ஓதுகின்றனர். சிவனடியார்கள் கூட்டமாக நின்று ஆண்டவனைத் தொழ வந்த வண்ணம் இருக்கிறார்கள். உடலை வெறுத்து மனதுளே கடவுளை நிறுத்தும் யோகிகள், முனிகள் கூட்டம் ஒரு புறம் ஆண்டவனைக் காணச் செல்கிறது. இதனைக் கைலாசம் என்று பலரும் வணங்குகிறார்கள். வேள்விகள் பல செய்யப்படுகின்றன. அதனால் ஏற்படும் மங்கலப் புகையானது மேலுலகம் செல்லுகின்றது. புண்ணியவான் தவம் புரிந்துகொண்டுள்ளனர். அரகர சிவ மந்திரம் எங்கும் கேட்கிறது. மணியாடுகிறது வெகு சனம் கூடுகிறது என்று சிதம்பரத்தின் நிகழ்ச்சிகளைப் பட்டியலிடுகிறார் கோபால கிருஷ்ண பாரதியார்.

கோபால கிருஷ்ண பாரதியார் நாள்தோறும் சிதம்பரம் கோயிலுக்கு வந்து யோகநிட்டையில் இருப்பார். சிதம்பரம் கோயிலில் தனியிடம் ஒன்றில் அவர் நாளும் யோகநிட்டை பயிலுவார். அந்த இடத்தில் ஒரு நந்தனார் சிலை நின்ற நிலையில் இருக்கும். இந்தச் சிலையே கோபால கிருஷ்ணபாரதியாருக்கு நந்தன் கதையைப் பாடத் தூண்டுகோலாக இருந்தது என்று காரணம் சொல்லப்படுகிறது. பல சிரமங்களுக்கு இடையில் தில்லைச் சிற்றம்பலம் வந்த நந்தனார் நடராச அருள் உருவத்தைக் காண்கிறார். கண்டு அவ்வுருவத்தை மனத்துள் கொள்கிறார். அத்திருவுருவத்தில் முதலில் அவருக்குத் தெரிவது தூக்கிய திருவடி. பின் தெரிவது இடையில் அணிந்த கச்சு, அதற்குப் பின்பு அவர் காண்பது ஆடல், அதற்குப் பின்பு அவர் காண்பது நீலகண்டம். இதனைத் தொடர்ந்து நாடராசர் செம்பவள வாயில் சற்றே தெரியும் குமிழ் சிரிப்பு. இதனைத் தொடர்ந்து நெற்றிக்கண் இவையெல்லாம் நந்தனாருக்குத் தெரிகின்றன. பாதம் முதல் முடி வரை நடராச உருவத்தை நயந்து பார்க்கிறார் நந்தனார். இப்படிப் பார்த்த ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு பாடலைப் பாடுகிறார் கோபால கிருஷ்ணபாரதியார். அதில் ஒரு பாடல்;

ஊனத்தை நீக்கி உலகறிய என்னை ஆட்கொண்டவன்
தேனொத்து எனக்கு இனியான் தில்லைச் சிற்றம்பலவன் எங்கோன்
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கு
மேனத் தெயிறு கண்டாற் பின்னைக் கண்டு கொண்டு காண்பதென்னே



என்ற பாடல் நடராசனாரின் நீலகண்டத்தை நந்தனார் கண்ட அதிசயத்தை விளக்குவது. தில்லைச் சிற்றம்பலவன் எனக்குத் தேன் போன்றவன் என்கிறார் நந்தனார். தேன் உயரமானது. அணுகுவதற்கு எளியது அல்ல. ஆனால், அதன் இனிமை தேனின் அருகில் செல்ல வைக்கும். தேனீக்கள் தேனை மற்றவர்கள் அடையாமல் பாதுகாக்கும். இந்நிலையில் ஆண்டவனைத் தேனாக்கி தனக்கும் அவனுக்கும் இடையே உள்ள தூரத்தைக் காட்டுகிறார் நந்தனார். உயிர்களின் ஆணவம் என்ற ஊனத்தை நீக்குபவன் தில்லைச் சிற்றம்பலவன். வானத்தவர் வாழ்வதற்காக நஞ்சு உண்டவன் பரம்பொருள். அவன் உண்ட விஷம் இன்னமும் கண்டத்தில் இருக்கிறது. அதன் மேல் விலங்குகளின் பற்கள் அணிகளாக விளங்குகின்றன. அவற்றை நான் கண்டபின் வேறொன்றைக் காண என் கண்கள் விரும்பாது என்று உரைக்கிறார் நந்தனார்.

இவ்வாறு தேனாக இறைவனைக் கண்டு தெளிந்த நந்தனாரின் இறை விருப்பம் போற்றத்தக்கது. அனைவருக்கும் இறைவழியைக் காட்டுவது. அவரைக் கண்ட கண்கள், அவர் வரலாற்றைக் கேட்ட காதுகள் வேறொன்றும் அறியாது.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p8c.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License