இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் - 8

என் பார்வையில்...

முனைவர் மு. பழனியப்பன்


9. ஒரு பிடி அவல்

ஒவ்வொரு மனிதருக்கும் நட்பு என்பது அவசியமாகின்றது. நண்பர்கள் நல்ல துணையாக அமைபவர்கள். நண்பர்களைத் தேர்ந்து பழக வேண்டும்.

வள்ளுவர் நட்பாராய்தல் என்று ஓர் அதிகாரமே அமைத்துள்ளார். நல்ல நண்பர்கள்அமைந்து விட்டால் வாழ்க்கை வளமாகின்றது.

கண்ணனும் குசேலரும் நட்பின் இலக்கணத்திற்குச் சான்றாவார்கள். இவர்களின் நட்பின் திறத்தைப் பெரிதுபட விவரிக்கின்றது குசேலோ பாக்கியானம். இதனை எழுதியவர் தேவராசப்பிள்ளை ஆவார். இவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். குசேலர் பற்றிய கதை என்பதே குசேலோ பாக்கியானம் என்பதாகும்.

குசேலர் வறுமையின் பிடியில் இருக்கிறார். அவரின் வறுமை போக வழியில்லை. எனவே குசேலரின் மனைவி சுசீலை ஒரு யோசனை செய்கிறாள். குசேலரை அவரின் நண்பரான கண்ணனைப் பார்த்து வரச் சொல்லுகிறாள். கண்ணனும் குசேலரும் இனிய நண்பர்கள். ஒன்றாக ஒரே ஆசிரியரிடத்தில் குருகுலத்தில் இருந்து கற்றவர்கள். கண்ணன் துவராகையின் மன்னனாக இருப்பதால் அவரைக் கண்டு வருவதால் தமது ஏழ்மை மறையும் என்று சுசீலை எண்ணினாள். ஆனால் தன் பிறவி தீர வேண்டும் என்பதற்காகக் குசேலர் கண்ணனைக் காண ஒத்துக் கொள்கிறார். தோழமையுடன் ஏழ்மை பேச அவர் விரும்பவில்லை.

சான்றோர்களை, தம்மிலும் பெரியவர்களைக் காணச் செல்கையில் ஏதேனும் கொண்டு செல்ல வேண்டும் என்பது மரபு. அது கருதி கண்ணனுக்கு எதனைக் கொண்டு செல்லலாம் என்று யோசிக்கிறார் குசேலர். ஏழ்மையிலும் சேமித்து வைத்திருந்த அரிசியை இடித்து அவலாக்கிப் பொருளாகத் தருகிறாள் சுசீலை. அதனைத் தன் கந்தையாடையின் ஒரு புறத்தில் கட்டிக் கொண்டுக் குசேலர் துவாரகையை நோக்கி நடக்கிறார்.

கண்ணன் தன் நண்பன் என்றாலும் அவன் கருணாமூர்த்தி. பிறவியை நீக்கும் பெருங்கடவுள் என்ற நிலையிலேயே துவாரகை மன்னனைக் காணச் செல்கிறார் குசேலர்.

துவராகை வெகுதூரமாக உள்ளது. அவரின் கால்கள் நடந்துச் சோர்வெய்துகின்றன. இரவுப் பொழுதில் தங்க இடம் கிடைக்காது சாலைகளிலேயேப் படுத்து உறங்குகிறார். கல்லும் முள்ளும் கால்களைப் பதம் பார்க்க, காதுகள் அடைக்க, பசி வயிற்றில் நீங்காதிருக்கக் குசேலரின் பயணம் துவாரகையைத் தொடுகிறது. துவராகையைக் கண்டதும் குசேலருக்குக் கண்ணனைக் கண்ட மகிழ்ச்சி. துவாரகை மண்ணில் பதமாக நடக்கிறார். ஒரு சிறு உயிருக்கும் துன்பம் தராத வகையில் பார்த்துப் பார்த்து நடக்கிறார்.

துவராகையின் பெரிய கோட்டைகளைக் கடக்கும் போது அவரின் உடல் சிறுமையடைகிறது. யானை, தேர்காவலாளி ஆகியோரைக் கண்டு ஒதுங்கிப் பதுங்கித் துவாரகைககுள் நுழைகிறார்.

அங்கு மாளிகைகள் வானுயர நிற்கின்றன. அவற்றில் கண்ணன் உருவம் அழகழகாக எழுதப் பெற்றுள்ளன. பல ஓவியங்கள் கண்ணன் நிற்பது போலவே உண்மைத் தன்மையுடன் தோன்றுகின்றன. அவ்வோவியங்களிடத்தில் குசேலர் நின்று கண்ணன் இவனே என்று வணங்குகிறார். மயங்குகிறார். ஒருவாறு தெளிந்துப் பின் துவாரகை அரண்மனைக்குச் சென்று துவாரபாலகர்களிடம் தன் வரவை அறிவிக்கிறார்.



அவர்கள் இவரின் வரவைக் கண்ணனிடம் அறிவிக்கின்றனர். கண்ணன் தன் இளமைக்கால நண்பர் குசேலரை உடனே அழைத்து வரக் கட்டளையிடுகிறான். உடன் அழைத்து வரவில்லை என்றால் தானே வந்து அழைத்து வருவதாகவும் கூறுகிறான். காவலர்கள் ஓடிச்சென்று குசேலரை வணக்கத்துடன் அழைத்து வருகின்றனர்.

தன் நண்பனை மார்பில் அணைத்து உச்சி மோந்து கண்ணன் வரவேற்கிறான். மேலும் அவனைப் பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் விசாரித்து அறிந்து கொள்கிறான். பின்பு உன் மனைவி உன் பயணத்திற்கு உணவாக ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பார். அதையாவது எனக்குக் கொடு என்று கேட்கிறான்.

குசேலர் பத்திரமாகப் பாதுகாத்து முடிந்து வைத்திருந்த அவலைக் கண்ணனுக்கு அளிக்கிறார். கண்ணன் அந்த அவலில் ஒரு பகுதியை அள்ளி எடுத்து ஒரு கைப்பிடி உண்கிறான்.

அடுத்த கைப்பிடி எடுக்கச் செல்லும் போது கண்ணனின் அருகில் இருந்த ருக்குமணி தேவி அவனின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி விடுகிறாள். கண்ணனுக்கு அவளின் உள்குறிப்பு தெரிய வருகிறது. ஆனால் அருகிருப்பவர்களுக்கு எல்லாம் கண்ணனின் கையை ஏன் ருக்குமணி தடுக்கிறாள் என்பது புரியவில்லை. கணவன் ஆசையுடன் உண்பதைத் தடுப்பது நல்ல மனைவிக்கு அழகா என்று எல்லோரும் எண்ணுகிறார்கள். மனைவி செய்யும் உணவினை விட அந்த அவல் சுவை மிகுந்ததோ என்ற எண்ணத்தில் ருக்மணி தடுத்திருக்கலாமோ என்று இப்போது நாம் நினைக்கலாம். இந்த ஐயத்தை முன் வைத்து, படைப்பாளர் ஒரு அரிய இலக்கியச் சூழலைப் படைக்கிறார்.

நெய்யுடைக் கவளம் கொள்ளும் நெடுங்கடக் களிற்றின் கையைத்
தெய்ய வார்த்து ஓடிவந்தோர் சிறுபிடி பிடித்தல் போன்று
தைய நுண்ணிடைக்க லாபம் அடிச்சிலம்ப ஓடிப்
பொய்யிலான் கையைத் தேவி பொருக்கெனப் பிடித்த தோற்றம்


என்பது ஒரு பாடல். இது மற்றொரு பாடலுடன் இணைந்துக் கருத்து முடிவைப் பெறுகின்றது.



நெய்யொடு இணைந்து உண்பதற்குச் சுவையாக உள்ள அவலினை அடுத்த பிடி எடுத்து உண்ணத் தலைப்படுகிறான் கண்ணன். குசேலன் கொண்டு வந்தது அவல் மட்டுமே. அந்த அவலில் நெய் எவ்வாறு கலந்திருக்க இயலும்? குடிக்கக் கஞ்சியில்லா நிலையில் தன் வறுமை போக்க வெறும் அவலை மட்டுமே சுசீலையால் கொடுத்தனுப்பியிருக்க முடியும். நெய்யிருந்தால் அவள் வீடு சற்று வறுமையற்று இருந்தது என்று கொண்டு விடலாம். ஆனால் வறுமையின் கொடுமையால் வெற்றவல் மட்டுமே துவாரகைக்கு வந்தது. அங்கு குசேலர் என்ற நண்பனின் அன்பு கலந்ததால் நெய் கலந்தது போல அந்த அவல் இனிமை கொண்டு விளங்கியது.

ஒரு பிடியை எடுத்துக் கண்ணன் உண்கிறான். அடுத்த பிடியை எடுக்க அவன் முயன்று எடுத்தும் விடுகிறான். அந்நேரத்தில், அவன் வாய்க்குள் அவல் சென்று விடாமல் தடுக்கிறாள் ருக்மணிதேவி.

யானை ஒன்று தன் உணவை உட்கொள்ளும் நிலையில் துதிக்கையில் ஒரு கவளத்தை எடுத்து விடுகிறது. நிச்சயம் யானையின் துதிக்கைக்குக் கிடைத்த பண்டம் அதன் வாயிலிருந்து தப்ப இயலாது. ஆனால், ஆண் யானை போன்ற கண்ணனின் கையைப் பெண் யானை போன்ற ருக்மணிதேவி மேகலையும் சிலம்பும் கலங்கும்படி ஓடி வந்து, தடுத்து உண்ணவிடாமல் பிடித்து விடுகிறாள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதை இது.

இது தவறில்லையா. நண்பன் கொண்டு வந்த உணவை உண்பதற்கு மற்றொரு நண்பனுக்கு உரிமை இல்லையா? அல்லது அடுத்த பிடியைத் தனக்கு உண்ணத்தரக் கருதி ருக்மணி தடுத்தாளா என்றெல்லாம் இப்பாடலைச் சிந்திக்கலாம். இப்பாடலின் முடிச்சினை அடுத்த பாடல் அவிழ்க்கிறது.

தகதின்று பிடி அவற் கேசகம் கொள்ளாப் பெருஞ்செல்வம்
மிகத்துன்றும் அஃது அல்லாமல் ஒரு பிடி
நகத்தின்று விடுவானேல் நாள் பலவும் அன்னவர்க்கு
தொகத்துன்றும் அடிமையாய்ச் சொற்பணிகள் கடவானாய்
தான் அமர வேண்டும் எனும் தக்க கருத்து உள்ளமர...
செங்கை பிடித்துத் தடுத்தாள்


என்ற பாடல் இந்தச் சிக்கலைத் தீர்க்கிறது.



கண்ணன் ஒரு பிடி அவல் எடுத்து உண்டவுடனேயே குசேலர்க்குப் பற்பல செல்வங்கள் வந்து குவிந்து விட்டன. உலகமே கொள்ளாத அளவிற்கான பெருங்செல்வம் குசேலர் வீட்டில் ஒரு அவல் பிடியை உண்ணதற்கே வந்து சேர்ந்தது. மேலும் ஒரு பிடி அவல் எடுத்து உண்டால் காலம் காலமாகக் குசேலர் வீட்டில் கண்ணன் அடிமையாளாக இருந்துப் பணி செய்யும் அளவிற்குக் குசேலர் வீட்டிற்குச் செல்வம் சென்று சேர்ந்து விடும். எனவே தன் கணவன் நிலை தாழாமல் இருக்க நண்பனுக்குச் செய்த அன்பினைத் தடுக்க முனைந்தாள் ருக்மணிதேவி.

ஒருபிடி அவலை அன்போடு அளித்தவர்க்கு உலகம் கொள்ளாத அளவிற்குச் செல்வம் வந்து சேர்ந்து விடுகிறது. அன்பின் வலிமை அத்தகையது. எச்செயலையும் அன்புடன் செய்ய வேண்டும். கடைசிவரை குசேலர் தன் வறுமை தீர் என்று கண்ணனிடம் வேண்டுகோள் வைக்கவே இல்லை. கண்ணனும் உனக்கு நான் இன்னது அளித்தேன் என்று சொல்லவும் இல்லை. இதுவே நட்பின் பெருமை.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p8i.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License