இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் - 8

என் பார்வையில்...

முனைவர் மு. பழனியப்பன்
இணைப் பேராசிரியர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை, இராமநாதபுரம் மாவட்டம்.


10. இலக்கியத்தின் பயன்

இலக்கியத்தைப் படிப்பதனால் என்ன என்ன பயன்கள் ஏற்படும்? என்று ஒரு கேள்வியை எழுப்பினால் அதற்குப் பல்வேறு விடைகளைத் தரலாம்.

* இலக்கியத்தைப் படிப்பதனால் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

* படிப்பவர் உள்ளம் பண்படுகிறது.

* நடுக்கம் நீங்கி அமைதி ஏற்படுகின்றது.

இவ்வாறு பதில்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு இலக்கியமும் மனிதனை உயர்வினை நோக்கி அழைத்துச் செல்லவேப் படைக்கப்படுகின்றன, படிக்கப்படுகின்றன. இலக்கியங்கள் அரியதானவற்றை அறிவிக்கின்றன. இலக்கியச் செல்வங்களை இன்று நூல்களின் வடிவில் தரிசிக்கிறோம். நூல்களைப் படிக்கும்போது அறிவு விரிவாகின்றது. நூல்களைத் திறக்கும்போது அறிவின் வாயில்களில் நாம் நிற்கிறோம். அவற்றை வி;ட்டுப் பிரிய மனமில்லாமல் பிரியும் போது நூல்களின் பக்கங்கள் நமக்காகக் காத்து நிற்கின்றன. திறக்கும் போது மகிழ்வையும், மூடும் போது நெகிழ்வையும் தருவன நூல்கள். நூல்கள், படிப்பு, பயன் என்று மனிதனைச் சுற்றி அறிவு என்னும் முழுவட்டம் அமைந்துவிடுகிறது.

இலக்கியத்தைப் படிப்பதனால் ஏற்படும் பயன்களை இலக்கணங்கள் பட்டியல் இடுகின்றன.

பழையனவற்றைக் கழித்துப் புதியனவற்றைத் தருவன இலக்கியங்கள் என்கிறது நன்னூல். அறம்,பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைத் தருவது காப்பியங்களின் பயன் ஆகிறது. கற்றதனால் ஆய பயன் வாலறிவன் நாற்றாள் தொழுதல் என்கிறது வள்ளுவம். வீரசோழியம் என்ற நூல் இலக்கியத்தைப் படிப்பதனால் இருபதிற்கும் மேற்பட்ட பயன்கள் கிடைக்கின்றன என்கிறது.

தமிழின் ஐந்து இலக்கணங்களைப் பற்றி எழுதப்பெற்ற நூல் வீரசோழியம். இதனை எழுதியவர் புத்தமித்திரனார்.



எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அலங்காரம் என்று ஐந்துவகை இலக்கணங்களைத் தன் காலத்திற்கு ஏற்ப வரையறுத்துநிற்கிறது வீரசோழியம் .

வீரசோழிய பொருளதிகாரத்தில் காதல், வீரம் ஆகிய இரு பாடுபொருள்களுக்கும் இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது. காதல் பாடல்கள் இருபத்தேழு கூறுகளை வெளிப்படுத்துவனவாக இருக்கவேண்டும் என்கிறார் வீரசோழிய ஆசிரியர் புத்தமித்திரன்.

சட்டகம், திணை, கைகோள், நடை, சுட்டு, இடன், கிளவி, கேள்வி, எச்சம், இறைச்சி, பயன், குறிப்பு, மெய்ப்பாடு என்று இருபத்தேழு நிலைகளுக்கு உடையதாக காதல் பாடல் பாடப்படவேண்டும்.

இந்த இலக்கண மரபின்படி ஒரு புலவன் காதல் பாடலை எழுதுவது என்பது எத்தனை கடினம். காதல் பாடல் எழுதுவது - மானிடருக்கு வரும் காதல் உணர்வினைக் காட்டிலும் கடினமானது என்பது மட்டும் இந்த இலக்கண வரம்பினைப் படிக்கும்போது தெரியவருகிறது. கண்ணிமைக்கும் நொடிக்குள் காதல் வந்துவிடும் என்ற அனுபவசாலிகள் பலர் இருக்கலாம். ஆனால் காதல் பாடலை எழுதுவது என்பது பல நொடிகளைச் செலவழித்து எழுத வேண்டியது என்பது மட்டும் உண்மை.

ஒரு காதல் பாடல் எழுதுவதற்குப் பல்வேறு இலக்கணக் கூறுகள் தேவைப்படுகின்றன. எம்மொழியிலும் இல்லாத அளவில் தமிழ் மொழியில் காதல் பாடல்கள் பாடுவதற்கான வரையறை வகுக்கப்பெற்றுள்ளது. காதல் பாடல்கள் கொண்டிருக்க வேண்டிய இலக்கண நிலைகளில் ஒன்றுதான் பயன் என்பது. காதல் பாடலினால் என்ன என்ன பயன் விளைந்துவிட இயலும்.

இதற்குப் பதில் சொல்கிறது வீரசோழியம்.

“பயன் எனப்படுவது நயனுறக் கிளப்பின்
வழிபாடு, அன்பே, வாய்மை, வரைவே
விழையா நிலைமை, பெருமை, தலைமை
பொறையே போக்கே புணர்வே மயக்கே
நிறையே எச்சம் நேச நீர்மை
ஐயம் அகறல் ஆர்வம் குணமே
பையப் பகர்தல் பண்பே சீற்றம்
காப்பே வெறியே கட்டு நேர்தல்
பூப்பே, புலப்பே, புறையே புறைவியெனப்
பாற்பட இன்னவை பயத்தலாகும்”

காதல் பாடலினால் கிடைக்கும் பயனும் 27 என்கிறார் வீரசோழிய ஆசிரியர்.



காதல் பாடலினால் ஒருவரை ஒருவர் மதிக்கும் முறைமை கிடைக்கப் பெறுகிறது. உண்மை வெளிப்படுகிறது. திருமணம் கைகூடுகிறது. தலைவனின் பொருள் வேண்டாமல் அன்பு வேண்டும் நிலைமை வெளிப்படும். தலைவன் தலைவியின் பெருமை, தலைமைப் பண்பு, பொறுமை முதலிய குணங்ள் வெளிப்படும். தலைவன் தலைவியின் பிரிவு, இணைவு ஆகியவற்றை உணர்த்தும் நிலையில் பாடல்கள் அமையலாம். ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள மயக்கமும் வெளிப்படலாம்.

ஒருவரைப் பற்றிய முழுமையான குணங்கள், பாசம், விட்டுக் கொடுக்கும் தன்மை முதலியன் வெளிப்படலாம். ஒருவர் மீது வைத்துள்ள சந்தேகம் தீரலாம். ஆர்வம், குணம், மெதுவாகப் பேசுதல், பண்பு, கோபம், காப்பு, அன்பின் மிகுதி, ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள கட்டுமானம், சிறு சண்டை, வெளிப்படல், வெளிப்பட்டு வாழ்தல், தன் வளர்ச்சியை வெளிப்படுத்தி நிற்றல், மீதமுள்ளவை போன்றன காதல் பாடல்களில் குறிப்பிடப்படவேண்டும் என்கிறது வீரசோழியம்.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது. இலக்கியங்கள் பயன் கருதி எழுதப்பெற்றுள்ளன.

இலக்கியத்தினால் கிடைக்கும் பயன் ஒன்றல்ல. இரண்டல்ல 27 என்கிறது வீரசோழியம்.

காதல் பாடல்களுக்குச் சொல்லப்பட்ட இந்த இலக்கணத்தை இலக்கியத்திற்கான இலக்கணமாக எடுத்துக் கொள்ள இயலும். ஓர் இலக்கியத்தைப் படிப்பதனால் உண்மை தெரியவரும். பெருமை, நிறை, பண்பு பொறை போன்ற குணங்கள் இலக்கியப் படிப்பால் கிடைக்கப்பெறும். ஐயம் அகலும். ஆர்வம் தோன்றும். ஒருவரை ஒருவர் மதிக்க இயலும். எனவே இலக்கியம் படிப்பதும் படைப்பதும் மனிதர்களை ஒருநிலையில் இருந்து மெல்ல மெல்ல அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும் வாழ்க்கை முறையாகும்.

தொல்காப்பியம் தொகுநிலைக் கிளவி பயன் என்கிறது. அதாவது தொகுத்துச் சொல்லும் முறைமையைப் பயன் என்று உரைக்கிறது தொல்காப்பியம். தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட ஒரே ஒரு பயனை விரிவாக்கிறது வீரசோழியம்

இன்னும் இன்னும் பயன்கள் விரியும். நல்ல இலக்கியங்கள் மலரும். நாளும் மனித மனம் அன்பால்,பெருமையால். பொறுமையால் மேன்மை நிலை பெறும்.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p8j.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License