இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் - 8

என் பார்வையில்...

முனைவர் மு. பழனியப்பன்
இணைப் பேராசிரியர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை, இராமநாதபுரம் மாவட்டம்.


11. காளமேகம் அறிமுகம்

அறிமுகம் செய்வது என்பது பெரிய கலை. ஒருவரைப் பற்றி ஒருவரிடம் அறிமுகம் செய்யும்போது இருவரின் மனங்களும் கசங்கி விடாமல், நொருங்கி விடாமல் மென்மையான சொற்களால் மேன்மையாக அறிமுகம் செய்யவேண்டும்.

சுய அறிமுகம் செய்து கொள்வது என்பது இன்னும் கடினமாகது. எதிரில் நிற்பவரிடம் நம்மைப் பற்றி அதிகமாகவும் சொல்லிவிட முடியாது. குறைவாகவும் சொல்லமுடியாது. எதனை விடுவது, எதனைக் காட்டுவது என்ற குழப்பத்திற்கு ஆளாகி எதையும் சொல்லாமல் வெற்றாளாக நின்று விடுகிற நிலைகூட ஏற்பட்டிருக்கலாம்.

காளமேகப்புலவர் ஒரு பெருங்கவிஞர். இவரின் இயற்பெயர் வரதராசன் என்பதாகும். இவர் மேகம்போல கவிமழை பொழிவதால் காளமேகம் என்று சிறப்பிக்கப் பெற்றார். இவரின் இயற்பெயர் மறைந்து காளமேகம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்துவிட்டது. இலக்கிய வரலாறுகளிலும் ஆளுமை பெற்றுவிட்டது.

காளமேகத்திடம் அதிமதுரக் கவி என்ற கவிஞர் “யார் நீவீர்” என்று கேட்டார்.

அப்போது;

“ஐந்து நாழிகையில் தூதினைப் பாடுவேன்
ஆறு நாழிகையில் மாலை பாடுவேன்
ஏழு நாழிகையில் அந்தாதி பாடுவேன்
பத்து நாழிகையில் மடல் கோவை பாடுவேன்
ஒரு நாள் முழுவதும் இருந்து பரணி பாடுவேன்
காவியம் இரு நாள்களில் பாடி முடிப்பேன்”

என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் காளமேகம்.



எத்தனை பெரிய தன்னம்பிக்கை அவரிடம். அதெல்லாம் சரிதான். அதென்ன நாழிகைக் கணக்கு. இருபத்து நான்கு நிமிடங்கள் ஒரு நாழிகை ஆகும்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரத்தில் தூது இலக்கியம் பாடிடும் வல்லமை பெற்றவர் காளமேகம். அவருக்கு இரண்டரை மணி நேரம் மாலை இலக்கியம் பாடப் போதுமானது. உலா, அந்தாதி இலக்கிய வகைகளைப் பாட இரண்டே முக்கால் மணி நேரங்கள் போதுமானது. நான்கு மணி நேரத்தில் மடல், கோவை பாடும் வல்லமை பெற்றவர் காளமேகம். நாள் முழுவதும் பாடுவது பரணி. இரு தினங்களில் பாடுவது காவியம்

இந்தப் பட்டியலில் காளமேகத்தின் கவி வல்லமை தெரிகிறது. அதே நேரத்தில் எந்த இலக்கியப் படைப்பு எவ்வளவு நேரத்தில் எழுதப்பட இயலும் என்பதையும் அறிந்து கொள்ளமுடிகின்றது. தூது இலக்கியம் கண்ணி என்ற பாவகை சார்ந்தது. அது பாட எளிமையானது என்பது தெரியவருகிறது. மாலை இலக்கியம் தூதுக்கு அடுத்த நிலையில் பாடுவது எளிமையானது. உலா, அந்தாதி அடுத்த நிலையில் பாடவல்லது. அதவாது நூறு பாடல்கள் உடையது அந்தாதி. அந்தாதித் தொடையில் பாடப்படுவது. இதில் ஒரு பாடல் பாட ஒன்றரை நிமிடங்கள் போதுமானதாகக் காளமேகத்திற்கு இருந்துள்ளது. பரணி இலக்கியம் பாடுவது கடினமானது என்பதும், காவியம் பாடுவதும் கடினமானது என்பதும் இந்த வரிசையின்படி தெரியவருகிறது.

அதிமதுரகவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னதாக இன்னொரு தனிப்பாடலும் கிடைக்கிறது.

“இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ - சும்மா
இருந்தால் இருந்தேன். எழுந்தேனே ஆயின்
பெருங்காளமேகம் பிள்ளாய்”

என்னும் பாடல் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் காளமேகம்.

இம் என்று சொல்லுமுன்னே எழுநூறு பாடல்கள் எண்ணூறு பாடல்கள் பாடும் ஆற்றல் பெற்றவன். அம் என்று சொன்னால் அந்தக் கால எல்லைக்குள் ஆயிரம் பாடல்கள் பாடி முடித்துவிடுவேன். சும்மா இருந்தால் இருப்பேன். பாடக் கிளம்பிவிட்டால் நீர் நிறைந்த காளமேகம் போலப் பொழிவேன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் காளமேகக்கவி.

பாடல் பாடுவதே தன் வாழ்க்கை என்று வாழ்ந்திருக்கிறார் காளமேகக்கவி. கவிதைகள் படைக்காத நேரம், சும்மா இருக்கும் நேரம் என்றும் காளமேகம் குறித்திருப்பது அவரின் கவிதையாற்றலின் மேன்மையைக் காட்டுவதாக உள்ளது.

எமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்ற பாரதியின் வாக்குக்கு முன்னோடி காளமேகப் புலவர். இவரின் பாடல்களில் நேரடியாகப் பொருள்களைப் பெறுவதை விட மறைமகமாகவே பெற இயலும். இவரின் பாடல்களில் புதிர்கள் நிறைந்திருக்கும். இந்தப் புதிர்களுக்குள் வாழ்வின் உண்மைகள் ஒளிந்திருக்கும்.

இதோ அவரின் இனிய பாடல் ஒன்று;

“பண்புளருக்கு ஓர் பறவை. பாவத்திற்கு கோர் இலக்கம்
நண்பிலாரைக் கண்டக்கால் நாற்காலி - திண்புவியை
ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு அரவம்
நீள்வாகனம் நன்னிலம்”

என்பது அவரின் பாடலாகும்.



இந்த நான்கு அடிப்பாடலில் நான்கு செய்திகள் ஒளிந்து கிடக்கின்றன.

பண்புளருக்கு ஓர் பறவை என்ற அடியில் ஒளிந்திருப்பது ஈ என்ற பறவை. பண்புள்ளவர்களுக்கும் ஈக்கும் என்ன தொடர்பு. நல்ல பண்புகளைப் பெற்றவர்களுக்குப் பொருள்களைக் கொடுக்கவும். அதாவது ஈயவும் என்பதையே பண்புள்ளவர்களுக்கு ஓர் பறவை என்று புதிர் வைக்கிறார் காளமேகம்.

பாவத்திற்கு ஓர் இலக்கம். பாவத்திற்கும் இலக்கத்திற்கும் என்ன சம்பந்தம். இணைக்க முடியாதவற்றை இணைப்பவன் கவிஞன். இணைப்பது கவிதை. பாவத்திற்கும் எண்ணுக்கும் என்ன தொடர்பு. பழி, பாவத்திற்கு அஞ்சு. அதாவது பழி பாவம் செய்வதற்கு அஞ்சவேண்டும் என்பதைத்தான் பாவத்திற்கு ஒர் இலக்கம் என்று புதிராக்குகிறார் காளமேகம்.

அடுத்து நண்பிலாரைக் கண்டக்கால் நாற்காலி. போலி நட்புடையவர்களை நாற்காலியில் அமர வைக்கவேண்டுமா? ஐயையோ அது சரியா என்று எண்ணலாம். நாற்காலி என்றால் என்ன பொருள். இருகாலி மனிதன், பறவை. நாற்காலி யானை புலி போன்ற விலங்கு. நாற்காலி என்பதற்கு விலங்கு என்று பொருள் கொள்ளவேண்டும். இப்போது நண்பிலாரைக் கண்டக்கால் நாற்காலி என்பது புரியவரும். நண்பில்லாதவரைக் கண்டால் விலகி விடவேண்டும் என்பதே இந்தப் புதிர்.



அடுத்த அடி இன்னும் அதிக பொருள் வளம் கொண்டது. சொக்கர்க்கு அரவம் நீள் வாகனம் நன்னிலம் என்பது நிறைவடி. இதில் அரவம் என்றால் பாம்பு என்றுதானே பொருள் கொள்ளுவோம். இந்தப் பாடலுக்கு அரவம் என்பதைப் பணி என்று பொருள் கொள்ளவேண்டும். சொக்கருக்கு எது வாகனம். விடை என்ற காளை. பணிவிடை என்பதை அரவம், வாகனம் என்ற இரண்டு சொற்கள் வழியாகப் பெற்றுக்கொண்டோம். நன்னிலம் என்பது செய் நிலம் என்று இலக்கியங்களால் குறிக்கப்படும். பணவிடை செய் என்பதை அரவம், வாகனம், நன்னிலம் ஆகிய சொற்கள் கொண்டு வருவித்துக் கொள்கிறார் காளமேகம்.

காளமேகம் பாடல்களில் பூட்டும் இருக்கும். சாவிகளும் இருக்கும். பூட்டைச் சரியான சாவிகளால் திறந்து மறைந்து இருக்கும் பொருளை உணர்ந்து கொள்ளவேண்டும். இது படிப்பவருக்கு சாவால். படைப்பவரின் வெற்றி.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p8k.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License