நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?
பெர்னாட்ஷா மீது விருப்பம் கொண்ட ஒரு அழகிய பெண்மணி அவள் ஒருநாள் அவரிடம் வந்து, "நான் பேரழகி. நீங்கள் அறிவுச் சுரங்கம். நாமிருவரும் திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தை என்னைப் போல் அழகாகவும், தங்களைப் போல அறிவாளியாகவும் இருக்கும்" என்றாள்.
பெர்னாட்ஷா உடனே சொன்னார், "சரி... என்னைப் போன்ற அழகும், உன்னைப் போன்ற அறிவும் கொண்டதாகக் குழந்தை பிறந்தால் என்னாவது?" என்றார்.
அந்தப் பெண்மணி தலைகுனிந்து நின்றாள்.
- தேனி. எஸ். மாரியப்பன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.