பெர்னாட்ஷாவின் நகைச்சுவை!
பெர்னாட்ஷா ஒரு வயலின் கச்சேரியைப் பார்க்கச் சென்றிருந்தார். வயலின் கச்சேரி முடிவில் அதன் பெண் நிர்வாகி ஷாவைப் பார்த்து, "வயலின் கலைஞரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
உடனே ஷா "இவர் எனக்கு பாதரவ்ஸ்கியை (பாதரவ்ஸ்கி இன்னொரு இசைக் கலைஞர்) நினைவூட்டுகிறார்" எனப் பதிலளித்தார்.
வியப்புற்ற அந்த நிர்வாகி "பாதரவ்ஸ்கி ஒரு வயலின் கலைஞர் இல்லையே..." என்றார் சட்டென்று.
அமைதியாக ஷா, "இவரும் தானே!" என்று பதிலளித்தார்.
நிர்வாகி வாயடைத்துப் போனார்.
- தேனி.எஸ்.மாரியப்பன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.