இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Kitchen
சமையல் - வீட்டுக் குறிப்புகள்

கோடைக்கேற்ற தகவல்கள்


கோடைக்கால வெப்பம் அதிகமாக இருக்கும் காலம் இது. இக்காலத்தில் வெப்பத்தினால் உடலிலிருந்து வெளியேறக் கூடிய / வீணாகக் கூடிய சக்திகளால் உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறைந்து அதிக சோர்வு ஏற்படுகிறது. இந்த இழப்பை ஈடுகட்ட அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது. தண்ணீர் குடிப்பதால், தாகம் தீர்ந்து போய் விடுவதுடன், சிறிதளவு நீர்ச்சத்தும் கிடைக்கும். இருப்பினும், கோடைக்காலத்தில் தண்ணீரை விட அதிக அளவிலான நீர்ச்சத்து கிடைக்கக் கூடிய சில உணவுகளை உண்பது / அருந்துவது நல்லது.

வெள்ளரிக்காய்

வெயிலினால் உடலில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் போன்றவைகள் வீணாவதை வெள்ளரிக்காய் ஈடுசெய்கிறது. வெள்ளரிக்காயைத் தயிரில் ஊறவைத்தும் சாப்பிடலாம். இதில் நீர்ச்சத்து 96.3%, கார்போஹைட்ரேட் 2.5%, பைபர் 0.4% கால்சியம் 10mg/dl போன்றவை உள்ளன.

கேரட்

கோடை நேர உணவுகளில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், வெயில் நேரங்களில் அதிகமாகச் சாப்பிடலாம். காரணம், இந்நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் அதிகம் உஷ்ணமாவதால் திடீர் மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்களுக்கு ரத்த அழுத்தம் சீரற்று இருக்கும். ஆகையால் கேரட்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும். இதில் நீர்ச்சத்து 86%, கார்போஹைட்ரேட் 10.7%, பாஸ்பரஸ் 530mg/dl, கால்சியம் 80mg/dl உள்ளது.

கேரட் மற்றும் வெள்ளரிக்காய்

கேரட் - 2 மற்றும் வெள்ளரிக்காய் - 3 என்று இரண்டையும் சேர்த்து ஜூஸ் செய்து தினமும் இரண்டு முறை பருகினால் உடல் உஷ்ணம் குறைந்து, தோள் நோய் ஏற்படுவதும் குறையும். இதனைக் கோடைக்காலச் சிறப்பு உணவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தர்ப்பூசணி

வெப்பத்தினால் வறண்டு போகிற உள் உறுப்புக்களுக்குச் சக்தி கொடுத்துச் சுறுசுறுப்பாக்கிறது. கொழுப்பு சக்தி இல்லாமல் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கக் கூடிய அற்புதமான பழம், தர்ப்பூசணி. கோடை நேரங்களில் இதை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழலாம் என்கிற அளவிற்கு இதில் நீர்ச் சத்து உள்ளது. தர்ப்பூசணி சாதாரணமாக சாலையோரக் கடைக்களிலேயே கிடைக்கிறது. இதில் வைட்டமின் நீ 4.5 dl , வைட்டமின் கி 556.3 மிஹி/லி2 பொட்டாசியம் 176.32 mg/dl உள்ளது.


எலுமிச்சை

கோடைக்காலத்தில் வெப்பத்தினால் இழப்பாகும் வைட்டமின் சி சக்தியை, மீண்டும் உடலுக்குத் திருப்பிக் கொடுத்து, உடல் முழுவதும் சோர்ந்து துவண்டுபோகாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். உடலின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக இருக்கும், நரம்புகளில் ஏற்படும் கொழுப்புப் படிமங்களைக் கரைக்கக் கூடிய சக்தியும் இதற்கு உண்டு. எலுமிச்சையோடு சர்க்கரை கலந்து குடிக்காமல், உப்பு கலந்து குடிப்பதன் மூலம் உடலில் தங்கும் நச்சு வியர்வையை வெளியேற்ற உதவும். இதில் நீர்ச்சத்து 85%, வைட்டமின் சி 55mg/dlம் அதிகமாக உள்ளதால் நம் உடலை நீர்த் தன்மையோடு வைத்திருக்க உதவும்.

தர்ப்பூசனி மற்றும் எலுமிச்சை

தர்பூசணிச் சாறுடன் எலுமிச்சை சாறைச் சேர்த்து அருந்தினால், கண்கள் பாதிப்பு அடையாமல் உஷ்ணத்திலிருந்து காப்பாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.

சீதாப்பழம்

மற்ற எல்லா பழங்களையும் விட கோடைக்குச் சிறந்தது சீதாப்பழம். ஏனென்றால் இதில் குளுக்கோஸ் உள்ளது. இதன் மூலம் அதிகமான சுறுசுறுப்போடும், எனர்ஜியோடும் இருக்க உதவும். இதில் குளுக்கோஸ் அளவு 14.5%, நீர்ச்சத்து 73.2%, சாக்கரோஸ் 1.7%, புரோட்டீன் 0.8% உள்ளது.

தக்காளி

கோடை வெப்பத்திற்கு தக்காளி ஜூஸ் சிறந்தது. அதில் சர்க்கரையைக் கலந்து குடிக்காமல், தேன் கலந்து குடிப்பது நலம். காரணம், சர்க்கரை கலந்து குடிப்பதால் வாயு, தொண்டைப் பிரச்னைகள் வரும். சர்க்கரை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் தேவை. தேன் சுலபமாக உடலில் கலந்து விடும். மேலும், வெயில் நேரங்களில் உடல் உறுப்புகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் நச்சுக்களை உடலிருந்து வெளியேற்றக் கூடிய சக்தி தக்காளிக்கு உண்டு. நீர்ச்சத்து 91.1%, புரோட்டீன் 0.9%, ஃபைபர் 0.8%, வைட்டமின் சி 30mg/dl, கார்போஹைட்ரேட் 3.4% உள்ளது.

இஞ்சி

இஞ்சியும், வெள்ளைப் பூண்டும் ஒரே அளவான சக்திகளை நம் உடலுக்குக் கொடுக்கிறது. இவைகளுக்கு இடையேயான ஒரே வித்தியாசம் இஞ்சியில் நீர்ச்சத்து அதிகம். கோடைக் காலத்தில் ஏற்படும் மயக்கம், குடலுக்குள் நீர்ச்சத்துக் குறைவதால் ஏற்படும் வாயுக் கோளாறுகள், வாந்தி போன்றவற்றைத் தடுக்கும். நீண்ட பயண நேரங்களில் இஞ்சிச் சாறுடன் தேன் கலந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் அடைத்துக்கொண்டு போங்கள். பயணத்தால் வரும் உடல் கோளாறுகளைத் தவிர்க்கலாம். நீர்ச்சத்து 81.0%, புரோட்டீன் 2.3% கார்போஹைட்ரேட் 12% அளவும் உள்ளது.


இளநீர்

சிறுநீரகம், கல்லீரல் இவைகளில் வெயில் காலத்தில் உப்புப் படிவங்கள் உருவாகி, அதுவே கல்லாக மாறும் நிலை உருவாகாமல் தடுக்கிறது. ‘ஒரு நாளைக்கு ஒரு இளநீர் என்கிற ரீதியில் குடித்து வந்தால், நோயாளிகளாக மருத்துவமனைக்குச் செல்லும் தேவை இருக்காது’ என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த அளவிற்கு, நம் உடலை பார்த்துக் கொள்ளக் கூடிய சக்தி இந்த இளநீருக்கு உண்டு. இளநீர் மூலம் சிறுநீரகம் சீராகச் செயல்படுவதோடு, உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதிலும் நீர்ச்சத்து அதிகம்.

வாழைப்பழம்

உணவு முடித்த ஒவ்வொரு வேளையிலும் வாழைப்பழம் உண்பது நலம். இது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்ள உதவும். மேலும் குடல் சீராகச் செயல்பட்டு, குடலுக்குள் நச்சுத் தன்மைகள் தங்கி வயிறு வலி போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. குடல் புண் உருவாகாது. ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களுக்கு உத்வேகத் தன்மையாகச் செயல்படும். வாழைப்பழம் உண்பதால் ரத்தத்தில் ஏற்படும் நீர்ச்சத்து குறைவிற்கு பாதுகாப்பு ஏற்படுகிறது. நீர்சத்து 70.1%, புரோட்டீன் 1.2%, கால்சியம் 85mg/dl, பாஸ்பரஸ் 50mg/dl, கார்போஹைட்ரேட் 7.2%.

மாதுளைபழம்

வெயிலில் அலைவதால் உடல் வியர்க்கிறது. வியர்வை உடலில் தங்குவதால் தொல்லைகள் அதிகம். கோடை காலத்தில் ஏற்படும் வயிற்றுப் போக்கு, தோலில் ஏற்படும் அரிப்புகள், வயிற்றில் உள்ள பூச்சிகள் போன்றவையில் இருந்து பாதுகாக்கப்படும். வெயில் அதிகமான நேரங்களில் உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் சிக்கல்களை மாதுளைபழம் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். ஜுஸாக குடிப்பதன் மூலம் அதிக தண்ணீர் தாகம் எடுப்பதைத் தவிர்ப்பதற்கு உதவுகிறது. நீர்சத்து 78.0%, பாஸ்பரஸ் 70.mg/dl, ஃபைபர் 5.1%, புரோட்டீன் 1.6%.


கூடுதல் தகவல்கள்

* சமையல் காய்கறிகளில் விதையுள்ள காய்கறிகள் குளிர்ச்சியைத் தரும்.

* தயிர், மோர் தாராளமாக அருந்துங்கள். மோருடன் வேக வைத்த பூண்டு, மிளகுத் தூள், சிறிதளவு இஞ்சிச் சாறு சேர்த்துப் பருகுங்கள்.

* பழவகைகள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.

* காலைக் குளியலுக்கு வெந்நீரைத் தவிர்ப்பது நலம். சோப்புப் போடுவதற்கு முன்பு வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, தயிர், கடலை மாவு அரைத்து உடலில் பூசி குளியுங்கள்.

* தக்காளியுடன், இளநீரும் இஞ்சி அல்லது பூண்டு சேர்த்துக் குடிப்பதும் உஷ்ணத்தைத் தணிக்கும்.

* வாழைப்பழத்துடன் சீதாபழத்தையும் சேர்த்து ஜூஸ் வைத்துக் குடித்தால் சோர்வு குறையும்.

- கவிதா பால்பாண்டி, மதுரை.

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/kitchen/homenotes/p21.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License