இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Ladies Only
மகளிர் மட்டும்

வள்ளுவனும், வாசுகியும் போல் வாழ்க!

தி. செல்லப்பா


கேள்வி கேட்டால் என்ன சொல்ல வேண்டும். இதென்ன கேள்வி? பதில் தான் சொல்ல வேண்டும். ஆனால், கேட்ட கேள்விக்கு வாய் திறந்து பதில் சொல்லாமல், வேறு விதமாய்ச் சொன்னார் ஒருவர். யார் அவர்?

உலகிற்கே ஒன்றரை அடி வரிகளில் உபதேசம் செய்த நம் தெய்வப்புலவர் வள்ளுவர்தான்.

வள்ளுவர் பற்றி எத்தனையோ செய்திகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இது முற்றிலும் வித்தியாசமான செய்தி.

அவருக்கும் வாசுகிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடாயிற்று. வாசுகியின் தந்தை மார்க்க சேயோன், வள்ளுவரின் பரம ரசிகர். அவரது எழுத்துக்கள் சேயோனை மிகவும் கவர்ந்தன. ‘இந்த வள்ளுவனே, தனது மகளுக்கு கணவனாக வாய்த்தால், அவளது வாழ்வும் கவிதை போல் இனிக்குமே’ என்று நினைத்தார். நினைத்ததை முடிக்கும் வேளை வந்தது. ஆனால், வள்ளுவர் விடாக்கண்டனாயிற்றே. பெண் பார்க்கச் சென்ற இடத்தில், மணமகளுக்கு ஒரு சோதனை வைத்தார்.

‘பாட்டு பாடு, ஆட்டம் போடு’ என்றெல்லாம் போட்டி இல்லை. ஒரு பிடி மண்ணை எடுத்தார். அந்தப் பெண்ணிடம், கொடுத்து, ‘இதைச் சமைத்துச் சோறாக்க முடியுமா?’ என்றார்.

வாசுகி யோசிக்கவில்லை. அடுப்படிக்குச் சென்றாள். மணல் சோறானது. எடுத்து வந்து ‘சாப்பிடுகிறீர்களா?’ என்றாள்.


அசந்து விட்டார் வள்ளுவர். கற்புத்திறனுள்ள ஒரு பெண் எதையும் சாதிப்பாள் என்பதை உணர்ந்தார்

. ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்’

என்ற குறள் வரிகள், அப்போது தான், அவர் மனதில் பதிவாகியிருக்க வேண்டும்.

கற்புத்திடமுள்ள ஒரு பெண் மட்டும் கிடைத்து விட்டால், அதை விடப் பெற வேண்டிய ஒன்று ஏதுமில்லை என்பது இதன் பொருள்.

பிறகென்ன, மணவிழா சிறப்பாக நடந்தது.

புது மணமக்கள் இனிய இல்லறம் நடத்தி வரும் வேளையில், வள்ளுவரின் வீட்டுக்கு வந்தார் ஒரு விருந்தினர். வள்ளுவரும் அவரும் உரையாட ஆரம்பித்தனர்.

“வள்ளுவரே! துறவறம் உயர்ந்ததா, இல்லறம் உயர்ந்தா?” இதுதான் வந்தவரின் சந்தேகம்.

ஒரு புதுமாப்பிள்ளையிடம் கேட்க வேண்டிய கேள்வியா இது? வள்ளுவர் சிரித்துக் கொண்டாரேத் தவிர, பதில் ஏதும் சொல்லவில்லை.

திடீரென ‘வாசுகி’ என சத்தமாகக் குரல் கொடுத்தார் வள்ளுவர்.


அப்போது, வாசுகி கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தாள். ஒரு மர வாளியில் தண்ணீர் நிறைய இருந்தது. கிட்டத்தட்ட மேலே வந்து விட்டது. கயிறை அப்படியே விட்டு விட்டு, “என்னங்க!” என்றபடியே ஓடி வந்தாள், வாசுகி.

தண்ணீர் வாளி எந்த நிலையில் இருந்ததோ, அப்படியேக் கிணற்றில் நின்றது. உள்ளே விழவில்லை. கணவன் கூப்பிட்ட குரலுக்கு, “கொஞ்சம் பொறுங்க! தண்ணீர் இறைத்து விட்டு வருகிறேன்’ என்று கூடச் சொல்லாமல், எந்த ஆட்சேபமும் இல்லாமல் ஓடி வந்தாளே! அதுதான் இனிய இல்லறம்.

உள்ளே வந்தவள், இருவருக்கும் வாழை இலையில் உணவு பரிமாறினாள். வள்ளுவரின் இலையிலிருந்து சில பருக்கைகள் கீழே விழுந்தன. அவரது இலை முன், ஒரு மரக்குச்சியும், ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் இருந்தது. ஏன் இப்படி வைக்கச் சொல்கிறார் என்பதற்கான காரணத்தை வந்தவரும் கேட்கவில்லை. வாழ வந்த நாளிலிருந்து, வாசுகியும் கேட்டதில்லை. இருந்தாலும் விருந்தினர், அவளது முகத்தை நோக்க, “அவருக்கு முதல் முறையாகப் பரிமாறும் போது, தண்ணீர் கிண்ணமும், குச்சியும் வைக்கச் சொன்னார். அதைச் செய்கிறேன்” என்று மட்டும் பதிலளித்தாள்.

இன்னொரு நாள், வள்ளுவர் பட்டப்பகலில் தன் வீட்டுத் தறியில் துணி நெய்து கொண்டிருந்தார். அப்போது தறியின் குறுக்கும் நெடுக்குமாக நூலை எடுத்துச் செல்லும் கருவி கீழே விழுந்து விட்டது.

“வாசுகி, அந்த விளக்கை எடுத்து வா!” என்றார் வள்ளுவர்.

பட்டப்பகலென்றும் பாராமல், விளக்கேந்தி வந்தாள் அந்த காரிகை. “கருவி விழுந்து விட்டது. அதைத் தேடவே விளக்கைக் கொண்டு வரச் சொன்னேன்,” என்றார்.

“பட்டப்பகலில் உமக்கு கண் தெரியவில்லையா?” என்றெல்லாம் பேசவில்லை அவள். சொன்னதைச் செய்தாள். விருந்தினர் அசந்து விட்டார்.

“இல்லறம் தான் உயர்ந்தது, பொறுமையான மனைவி அமைந்து விட்டால்...” என்ற பதில், வள்ளுவர் சொல்லாமலேயே அவருக்கு விளங்கி விட்டது.

விடை பெற்று ஊருக்கு கிளம்பி விட்டார், விருந்தினர்.

வாசுகியின் இறுதிக்காலம்..அவள் மரணப்படுக்கையில் இருந்தாள்.

“அன்பே! நான் உனக்கு ஏதாவது குறை வைத்தேனா? ஏதாவது திட்டினேனா? என்னிடம் ஏதாவது கேட்க வேண்டியுள்ளதா?” என்றார் வள்ளுவர்.

“உங்களுடன் வாழ்ந்த காலம் பொற்காலம். ஒன்றே ஒன்றுக்கு மட்டும் தான் விடை தெரியவில்லை. நீங்கள் சாப்பிடும் போது, குச்சியும், தண்ணீரும் ஏன் கொண்டு வர சொன்னீர்கள்? பதில் கிடைக்குமா?” என்றாள்.

“வேறொன்றுமில்லை. அன்னம் பரப்பிரம்மம். உணவு கடவுளுக்கு சமமானது. அதை வீணாக்கக் கூடாது. அது தரையில் விழுந்தால், மணல் ஒட்டியிருக்கும். அதை நீரில் நனைத்துச் சுத்தமாக்கிச் சாப்பிட நினைத்தேன். ஆனால், அதற்கு ஒருநாள் கூட வேலையே இல்லாமல், நீதான் சிந்தாமல் சிதறாமல் பரிமாறினாயே! பொறுப்புள்ள மனைவியல்லவா நீ” என்று வாய் தழுதழுக்கச் சொன்னவர், கண்ணீர் வடித்து விட்டார்.

புன்னகையுடன், அவளது ஆவி பிரிந்து விட்டது.


அவள் இறந்ததும் குறள் அல்லாத ஒரு கவிதை எழுதினார் வள்ளுவர்.

“அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதாய் என் தூங்கும் என் கண் இரவு”

இந்தக் கவிதையில், ‘படி சொல்லா, பதி சொல்லா’ என்ற சந்தேகம் தேவையில்லை. “நான் சொன்னபடி செய்யத் தவறாதவளே’ என்பதே இதன் பொருள்.

திருமண விழாக்களில், ‘வள்ளுவனும், வாசுகியும் போல் வாழ்க’ என்று மணமக்களை வாழ்த்துகிறார்களே! அதற்குக் காரணம் இந்த நிகழ்வுகள்தான்.

வள்ளுவர் 133 அதிகாரம் எழுதியதற்காக, அவருக்கு சிலை வடித்தார்களோ இல்லையோ... அவர் நடத்திய இல்லறத்துக்காகவே அவருக்கு நாடெங்கும் சிலை வைக்க வேண்டும். தனியாக அல்ல... அவரது துணைவியாருக்கும் சேர்த்து... குமரிக்கடலில், வள்ளுவர் அருகே வாசுகிக்கும் சிலை வடித்து, அவரது இல்லற வாழ்வையும் கல்லில் வடித்து வையுங்கள். இந்திய இணைகளின் மன வீட்டில் இவர்கள் என்றும் தங்கியிருப்பார்கள். நெஞ்சில் நிறைந்திருப்பார்கள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/ladies/p27.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License