இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


24. மாய மந்திரங்களில் மனிதப் பற்கள்

மனிதர்கள் பற்களில் பச்சை குத்துதல், சாயம் பூசுதல் போன்ற நம்பிக்கைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்க, மாயஜால மந்திர வித்தைகள் மற்றும் பில்லி சூன்யம் எனப்படும் செய்வினைச் செயல்களிலும் மனிதப் பற்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பாவின் இருண்ட காலத்தில் மனிதப் பற்களை வைத்து சூன்யமும் மாந்திரீகமும் நடந்திருக்கின்றன.

* குழந்தைகளைச் சூன்யக்காரிகளிடமிருந்து காப்பாற்ற, விழுந்த பால் பற்களை எரித்தனர் அல்லது புதைத்தனர்.

* பால்கன் நாகரிகத்தில் குழந்தையின் பற்களைப் பொம்மையின் மீது பதித்தனர். அதன் மூலம் மனிதர்களின் எண்ணங்களையும் செயல்களையும் கட்டுப்படுத்தியதாக நம்பினர்.

* ஜப்பானியர்கள் சடங்குகளில் பற்களைப் பயன்படுத்தினார். அதன் மூலம் நோய்களையும் பற்சொத்தைகளையும் தடுத்ததாக நம்பினர்.

* பற்களை வைத்து வேண்டாத மனிதர்களைச் சாபங்களால் சபித்தனர். ஒரு மனிதனைத் தனக்குக் கீழ் அடிமையாக்கினர்.

* துர் ஆவிகளிடமிருந்து குழந்தைகளை பாதுகாத்தனர்.

* நோர்ஸ் பண்பாட்டில் போர்களை வென்றெடுக்க சிறுவர் சிறுமியர் பற்கள் பயன்படுத்தப்பட்டன.

* தென்னாப்பிரிக்கக் பண்பாட்டில் குழந்தைகளின் பற்கள் காலணியில் பதிக்கப்பட்டன.

* ந்யூரிட் கர்வின் புத்தகத்தில் சூன்யக்காரிகள் குழந்தைகளின் பற்களை தலையணைக்கு அடியிலிருந்து சேகரிக்கத் துடைப்பக் கட்டையில் பறந்தனர்.

பல் கவிதை
* உன்
ஜில்லியன் டாலர் புன்னகையைத்
திருடிக் கொண்ட பிறகு
தூக்கம் தொலைந்து போனது
திரும்பித் தர வருகிறேன்
என்னை விடுதலை செய்வாயா?
- முகமது பாட்ஷா


சர்ஜி (Circe), வில்லோ (Willow), தபிதா (Tabitha), அரோரா (Aurora), எஸ்மெரல் டா (Esmeral daa), உர்சுலா (Ursula) என்று பெண் சூன்யக்காரிகளும், ஆண் சூன்யக்காரர்களில், ஜெர்மனியில் ட்ரட்னர் (Drudner), பிரெஞ்ச்சில் கிராமரே (Gramar ye ), கிரேக்கத்தில் கல்லிகராட்ஸ் (Kalli krates), ஆங்கிலத்தில் மேகே (Mage), லத்தீனில் மேலிபிகஸ் (Maleficus) என்று பல சூன்யக்காரர்கள் இருந்திருக்கின்றனர்.

சீனாவிலும், வியட்னாமிலும் குழந்தைகள் தங்களின் விழுந்த பற்களைக் கூரை மீது வீசினர். இந்தியாவிலும் இப்பழக்கம் இருந்து வருகிறது. டென் யெல்லா பண்பாட்டு மக்கள் விழுந்த பற்களை மர உச்சியில் பதுக்கினர்.

மேற்கத்தியப் பண்பாட்டில் இரு கற்பனை கதாபாத்திரங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவர். ஒன்று, கிறிஸ்துமஸ் தாத்தா. இவரின் உண்மையான பெயர் செயின்ட் நிக்கோலஸ். இவருக்கு சின்டி கிளாஸ் என்கிற பெயரும் உண்டு. சிவப்பு உடை வெள்ளை தாடி கருப்பு கச்சை அணிந்து கலைமான்கள் பூட்ட்ப்பட்ட வண்டியில் கிறிஸ்மஸ் தாத்தா பயணித்து டிசம்பர் 24 ஆம் நாளிரவில் வந்து குழந்தைகளுக்குப் பரிசளிப்பார்.


இரண்டாவதாக, பல் தேவதை எனப்படும் டூத் பேரி (Tooth Fairy). இந்தப் பல்தேவதை ஒரு பொய் புனைவுக் கதாப்பாத்திரம். பற்களை இழக்கும் குழந்தைகளைத் தைரியப்படுத்த இந்தப் பல் தேவதை உருவாக்கப்பட்டாள். 1908 ஆம் ஆண்டில் சிகாகோ செய்தித்தாளில் தோன்றிய இந்தப் பல் தேவதை, ஹிஸ்பேனி பண்பாட்டில் குழந்தைகள் தங்கள் பற்களைத் தலையணைக்கு அடியில் பாதுகாத்து, அதனை எல் ரோட்டன்சிடோ பெரஸ் எனப்படும் வெள்ளை நிற எலிக்குத் தானம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக அமைந்தது.

1927 ஆம் ஆண்டில் எஸ்தர் வாட் கின்ஸ் அர்னால்டு நாடகத்தில் பல் தேவதை பிரபலப்படுத்தப்பட்டாள். இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு பல் தேவதை கூடுதல் புகழ் பெற்றாள். பல் தேவதை குழந்தைகளிடமிருந்து பற்களை வாங்கிக் கொண்டு பணமோ, பரிசோ தருவாள் என்பது நம்பிக்கையாக இருந்தது.

1984 ஆம் ஆண்டில் ரோஸ்மேரி வெல்ஸ் என்பவர் பல்தேவதை எப்படி இருப்பாள்? என்பதனை அறிய ஒரு கணக்கெடுப்பு நடத்தினார். அக்கணக்கெடுப்பில், 74 சதவீத மக்கள் பல் தேவதை ஒரு பெண் என்றும், 12 சதவீத மக்கள் பல் தேவதை ஆணும் அல்ல பெண்ணும் அல்ல என்றும், 8 சதவீத மக்கள் பல் தேவதை ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம் எனப் பதில் அளித்தனர். பல் தேவதை இறக்கைகள் மற்றும் மந்திரக்கோலுடன் நடுத்தர வயதினவளாகக் காட்சியளிப்பாள் என்றனர் சிலர். பல் தேவதை முயல் அல்லது எலி போன்ற ஆள் என்றனர் சிலர். சில காமிக் புத்தகங்கள் பல் தேவதையை இறக்கைகள் முளைத்த சிறுமியாக, நற்குறளியாக, பறக்கும் நாகமாக, நீல நிற அம்மாவாக, கூட்டு நடனப் பெண்ணாக, இரட்டை குள்ள கிழவர்களாக, சிகரட் புதைக்கும் தொப்பை மனிதனாக, வௌவாலாக, கரடியாகச் சித்தரித்தனர்.

பல் தேவதைக்கு நிலையான உருவம் இல்லாவிட்டாலும் பல் தேவதையின் முக்கியத்துவம் சிறிதும் குறையவில்லை.

பல் தேவதையைப் பற்றி, மெரியம் வெப்ஸ்டர், கோலின்ஸ், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு லேனர் டிக்ஸ்னரி, பிரிட்டானிகா உள்ளிட்ட பல அகராதிகளில் குறிப்பிட்டுள்ளன. இந்த அகராதிகளில், மின்னும் முத்து இறக்கை கொண்டவள் (Shimmer Pearl Wing), டாலடிக்கும் பல் பாதுகாவலர் (Twinkle Tooth Keeper), படபடக்கும் பல் பாதுகாவலர் (Flutter Toothkeeper), பல் பொக்கிஷங்களின் தலைமை தேவதை (Chief Fairy of Dental Treasures) என்று பல புதுமையான பல் தேவதைகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெனிஸ் நகரத்தில் பல் தேவதையை மரேன்டேகா (Marantega) என்றும், இத்தாலியில் பேட்டினா டெப் டென்டி (Fatina Dei Denti) என்றும், பிரான்ஸில் லா பெட்டிட் சோரிஸ் (La Petite Soris) என்றும் அழைக்க்கின்றனர்.

எந்த பல் துலக்கி பயன்படுத்துவது?

ராசிக், திருநெல்வேலி

பல் துலக்குவதற்கு நெகிழி பல் துலக்கி சிறந்ததா?, மூங்கில் பல் துலக்கி சிறந்ததா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

உலகம் முழுவதும் 400 மில்லியன் டன் எனும் அளவில் நெகிழி பயன்பாடு இருந்து கொண்டிருக்கிறது. நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் மூங்கில் பல் துலக்கிகளைப் பயன்படுத்துவது சிறந்ததுதான். கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்படும் மூங்கில் பல் துலக்கிகள் பயன்பாடு அதிகரித்தால், அந்தக் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனும் நோக்கில், மூங்கில் பல் துலக்கிகளை நாம் ஆதரிக்கலாம். நெகிழி பல் துலக்கி, மூங்கில் பல் துலக்கி என்பதில் தங்கள் பண வசதிக்கேற்ப எதையும் பயன்படுத்தலாம்.



சீனர்கள் குறிப்பிட்ட பற்களுக்கும் குறிப்பிட்ட உடல் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறினர்.

* மேல் முன் பற்கள் – சிறுநீரகம், சிறுநீர் பை, இனப்பெருக்க உறுப்பு, கூம்பு சுரப்பி.

* கோரைப்பற்கள் – கல்லீரல், கண்கள், பித்தப்பை.

* மேல் முன்கடைவாய்ப் பல் – நுரையீரல், வயிறு மற்றும் நுகரும் திறன்.

* மேல் கடைவாய்ப் பல் – கணையம், பெருங்குடல், தைராய்டு சுரப்பி, சுவை உணர்வு.

* மேல் அறிவுப் பற்கள் – சிறுகுடல், இதயம், செவித்திறன்.

* கீழ் முன்னம் பற்கள் – சிறுநீரகம், சிறுநீர்பை, இனப்பெருக்க உறுப்புகள்.

* கீழ் கோரைப்பற்கள் – கல்லீரல், பித்தப்பை, கண்கள்.

* கீழ் முன்கடைவாய்ப் பல் – கணையம், வயிறு, சுவை உணர்வு.

* கீழ் கடைவாய்ப் பல் – நுரையீரல், பெருங்குடல்.

* கீழ் அறிவுப் பற்கள் – சிறுகுடல், இதயம், செவித்திறன்.

என்று ஒவ்வொரு பற்களும் சில உடலுறுப்புகளின் செயல்பாட்டில் தொடர்புடையவைகளாக இருக்கின்றன என்று சீனர்கள் சொல்கின்றனர்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p24.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License