இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


8. தொண்டை

கடந்த பகுதிகளில் வாய், நாக்கு, உதடுகள், உமிழ்நீர்ச் சுரப்பிகள் பற்றிப் பார்த்தோம்.

இந்தப் பகுதியில் தொண்டையைப் பற்றிப் பார்ப்போம்.

தொண்டை என்றால் என்ன? வாயின் பின் பகுதியாக உள்ளதும் கழுத்திலிருந்து கீழாக உயிர் வாயு மற்றும் உணவு ஊடு செல்வதற்கான செல்வழியே தொண்டை. உணவுக் குழாய்க்கும் மூச்சுக் குழாய்க்கும் இடையே ஆன இணையான சந்திப்பே தொண்டை. இதனைக் கழுத்தின் முன் பகுதி என்றும் குரல்வளை என்றும் சொல்லலாம். 20 முதல் 79 வயது ஆண்களுக்கு தொண்டை 25 மிமீ முதல் 27மி.மீ விட்டமும் பெண்களுக்கு 21 மி.மீ - 23 மி.மீ விட்டமும் இருக்கும். தொண்டையின் தடிமன் 3 மி.மீ. நீளம் நான்கு அங்குலம்.

தொண்டையின் பாகங்கள்

1. உணவுக்குழாய்

2. மூச்சுக்குழாய்

3. பேச உதவும் தொண்டை பெட்டி

4. அடி நாச் சதை.

5. குரல்வளை மூடி.

பற்களுக்கான குறள்கள்
* நோய் காட்டும் தெளிவாக முன்னாடி
வாய் நம்முடலின் கண்ணாடி.

* குட்கா பான்மசாலா சேர்த்தால் குணமாகா
வாய்ப்புற்று நிச்சயம் வரும்.
- தேஜஸ் சுப்பு என்கிற கனலி


மூக்கு - இரு நாசித்துவராங்கள் - மூச்சுக் குழாய் - இரு நுரையீரல்கள் - பின் மீண்டும் மூச்சுக் குழாய் - இரு நாசித்துவாரங்கள். ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுதல்.

வாய் - பற்கள்- உணவுக்குழாய் - இரைப்பை - சிறுகுடல் பெருகுடல் – மலக்குடல் - குதம் வழியாக மலம் வெளியேற்றம்.

உணவோ நீரோ உட்கொள்ளும் போது, மூச்சுக் குழாய் மூடிக்கொள்ளும். சில நேரங்களில் உணவோ நீரோ மூச்சுக் குழாய்க்குள் புகுந்து விட்டால் புரையேறும். புகுந்த உணவையும் நீரையும் வெளியேற்றும் முயற்சியேப் புரையேற்றம் எனப்படுகிறது.

பல் கடித்தல்
பற்களை நறநறவென கடித்தல் (Bruxism) என்பது ஒரு நோய்க்கூறு. சிலர் விழித்திருக்கும் போதும், தூங்கும் போதும் ஓசையுடன் பற்களைக் கடிப்பர். மன அழுத்தம், பதட்டம், தூக்க ஒழுங்கீனங்கள் சில வகை மருந்துகளை உட்கொள்ளுதல் காரணமாக, இந்த பற்களை நறநறத்தல் தொடரும். இது ஒரு அனிச்சை செயல். வயிற்றில் பூச்சி இருந்தாலும் பற்கள் நறநறப்பு இருக்கும். அமெரிக்கன் தூக்கமருந்து அகாடமி பல் நறநறப்பைத் தூக்கம் தொடர்பான குறைபாடு என அறிவித்துள்ளது. மூச்சுப் பயிற்சி, நடத்தை மாற்றம், நாக்கு பல் உதடுகளுக்கு உரிய ஓய்வு மூலம் பற்கள் நறநறப்பைக் கட்டுப்படுத்தலாம். தெர்மோபிளாஸ்டிக் வாய்காப்பு பொருத்தி பற்கள் நறநறப்பை தடுக்கலாம்.


தொண்டையில் ஏற்படும் நோய்த் தொற்றுகள்

* ஜலதோஷம்

* ப்ளூ காய்ச்சல்

* தலைவலி

* தொண்டைப் புற்றுநோய்

* வாய் புற்றுநோய்

* அடி நாச் சதை வளர்ச்சி.

தொண்டைப் பகுதி எப்போதுமே பளபளப்பான இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். மேலண்ண முடிவில் மேலிருந்து கீழாக ஒரு சதை தொங்கும் அதனை உள்நாக்கு என்பர்.


தொண்டைப் பகுதி நோய்களை ஆராய ஒரு கருவி உள்ளது. அந்தக் கருவியின் பெயர் ‘குரல்வளைகாட்டி’ (Laryngoscope) ஆகும். குரல்வளைகாட்டி மூலம் தொண்டைபெட்டி ஒழுங்கீனங்களைக் கண்டுபிடிக்கலாம்.

நோய்வாய்ப்பட்ட தொண்டைப் பகுதியை தொண்டையழற்சி (Pharyngitis) என்பர்.

பறப்பவர்களின் பல்வலி
பறப்பவர்களின் பல்வலியை ஆங்கிலத்தில் Parodontax அல்லது Aerodontalgia என்பர். விமானத்தில் நாம் பறக்கும் போது சுற்றுப்புற அழுத்தத்தால் பல் நசுக்கல் ஏற்படும். பல்வலி தோன்றும். விமானம் தரை இறங்கியவுடன் பறப்பவர்களின் பல் வலி மறைந்துவிடும். 5000 அடி உயரத்திற்கு மேல் பறக்கும் எவருக்கும் இவ்வலி வரலாம். பல் வலி, வீக்கம், பல் கட்டி, பல் உடைப்பு, ஈறு இரத்தக் கசிவு உண்டாகும். பறப்பவர்களுக்கு மட்டுமல்ல ஆழ்கடல் நீச்சல் அடிப்பவர்களுக்கும் இப்பல் பிரச்சனை ஏற்படும். விமானம் தரையிறங்கிய பின்னும் வலி தொடர்ந்தால் பல் மருத்துவரை அணுக வேண்டும். அவர் தகுந்த சிகிsசை தருவார். வலி நிவாரணி அளிப்பார்.


தொண்டை பிரச்சனைகளை கீழ்கண்ட அறிகுறிகள் மூலம் அறியலாம்.

* உணவை விழுங்கும் போது வலி.

* உணவை விழுங்க முடியாத நிலை.

* உணவு சிக்கியது போலொரு உணர்வு

* எச்சில் ஒழுகுதல்

* உணவு எதுக்களித்தல்

* நெஞ்சு எரிச்சல்

* எடை குறைவு

* புகைச்சலும் இருமலும்


உணவை விழுங்க முடியாத நிலைக்கு ‘விழுங்கற்கடுமை’ (Dysphagia) என்பர். விழுங்கற்கடுமை எந்த வயதிலும் ஏற்படலாம். இந்நோய்த் தொற்று முதியோருக்கு அதிகம் வரும்.

பல் அழகு நிலையங்கள்
பல் அழகு நிலையங்கள் (Dental Spas) என்பது பல் சார்ந்த அழகு நிலையம். இவ்வகையான அழகு நிலையங்கள், உரிமம் பெற்ற வாய்வழிச் சுகாதார பராமரிப்பு வழங்குநரால் கண்காணிக்கப்படும் ஒரு பல் தொடர்பான பல சிகிச்சைக்கான வசதி கொண்ட இடமாகும். இதில் அழகூட்டும் சிகிச்சைகளுடன் பல் மருத்துவச் சேவைகளும் சேர்ந்து வழங்கப்படுகின்றன. வாசனை திரவங்களுடன் கூடிய மசாஜ், அமைதியான சூழல், பூப் போன்ற இசை மற்றும் குளியல் சார்ந்த பல் மருத்துவம் இங்கே கிடைக்கும். இங்கே எவ்வகை பல் மருத்துவம் மேற்கொண்டாலும் அழகுணர்ச்சி மிகுந்திருக்கும். சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பல பெரும் நகரங்களில் இந்நிலையங்கள் அமைகப்பட்டிருக்கின்றன.


பற்சுத்தத்தில் முக்கியமான இடம் வகிப்பது தொண்டைச் சுத்தமும், நாக்குச் சுத்தமும் ஆகும். இரண்டும் சுத்தமாக இல்லாவிட்டால் வாய் துர்நாற்றமடிக்கும். சிலருக்கு நாக்கில் வெண்மை படலம் படர்ந்திருக்கும். அந்தப் படலத்தை நாக்கு சுத்தம் செய்யும் பிளாஸ்டிக் அல்லது மெட்டல் தகடு வைத்து அகற்றுதல் சிறப்பு.சுத்தம் செய்யும் போது, நாக்கின் மேற்பகுதியை சுரண்டி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பற்சுத்தம், வாய் சுத்தம், நாக்கு சுத்தம் இல்லாவிட்டால் சுவாசத்தில் கூட துர்நாற்றம் அடிக்கும். உடம்பின் ஒன்பது துவாரங்களில் ஏழு துவாரங்கள் தலையில்தான் உள்ளன என்பதை இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

ஈறுகளில் இரத்தக்கசிவு - கேள்வி பதில்
அ. முகமது காசிம், கோவை.

சந்தைகளில் பல வகையான மின்னணு பல் துலக்கிகள் கிடைக்கின்றதே, அவைகளைப் பயன்படுத்துவது நல்லதா கெட்டதா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

மின்பல்துலக்கி வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்த சிறப்பான வழி. தொடர்ந்து மின் பல் துலக்கி பயன்படுத்தினால் பற்காரை, பல்லில் படர்ந்திருக்கும் சீமைச் சுண்ணாம்பு போன்ற பொருள் மற்றும் பல்காரை எளிதில் நீங்கும். மின் பல்துலக்கி 30 கிராம் எடைதான் இருக்கும். சுழலும் மின் பல்துலக்கி வாங்குவது நல்லது. சுழலும் மின் பல்துலக்கி 1300 - 8000 பிபிஎம் இருக்கும். ஸோனிக் பல் துலக்கிகள் 24,000– 30,000 பிபிஎம் இருக்கும். சில மின் பல்துலக்கிகளில் நேரக் கட்டுப்பாட்டுக் கருவி இருக்கும். தண்ணீரில் பாதிப்படையாத மின் பல்துலக்கி நல்லது. அவ்வப்போது மின் பல்துலக்கி குஞ்சங்களையும் பேட்டரியையும் மாற்ற வேண்டும். சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் மின் பல்துலக்கிகள் கிடைக்கின்றன. மின்பல்துலக்கிகளை மென்மையாக பயன்படுத்துதல் பாதுகாப்பானது. மின் பல்துலக்கிகளினால் கெடுதிகள் ஏதுமில்லை. நன்மைதான் அதிகம். இதன் விலை ரூ,500 லிருந்து 1000 ரூபாய் வரை இருக்கிறது..


ஒரு பல் மருத்துவர் தன்னிடம் வரும் பல் நோயாளிகளைப் பார்க்கும் போது, கண், காது, மூக்கு, தொண்டைப் பிரச்சனைகள் ஏதேனும் நோயாளிக்கு உள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.

வெற்றிலை பாக்கு, சீவல், பான்பராக் போடுபவர்களின் தொண்டையில் வாய்ப்புண் இருக்கும். அந்த வாய்ப்புண் காரணமாகக் கூட வாய் துர்நாற்றம் உருவாகும். இரு உள் கன்னத்துச் சதைகளை ஆராய்ந்தாலே வாய்ப்புற்று நோயைக் கண்டுபிடித்து விடலாம். வாய்ப்பகுதி ஒரு துறைமுகம் என்றால் 32 பற்களும் அங்கு நிற்கும் கப்பல்கள் போன்றவை. துறைமுகம் சரியாக இருந்தால்தான், பல்களின் ஆரோக்கியமும் மேம்பாடும் சரியாக இருக்கும். உணவு என்கிற சரக்குப் போக்குவரத்தும் செழுமையாக நடக்கும்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p8.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License