இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
இயன்முறை மருத்துவம்

தசைச்சிதைவு நோய்

டாக்டர் க. கார்த்திகேயன்


விண்ணை முட்டும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சியை நோக்கி உலகம் அசுர வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அத்தகைய அறிவியலுக்கே சவால் விடும் சில நிகழ்வுகளும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன, உதாரணமாக மருத்துவத்துறையின் வளர்ச்சி என்பது பல கொடிய நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டிருக்கும் போதிலும், சில நோய்களிடம் தோல்வியை சந்திக்க நேரிடுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட நோய்களின் வரிசையில் குறிப்பிடும்படியாக தசைச்சிதைவு நோய் இருப்பது ஒருபுறம் வேதனையும், வருத்தமும் அளிக்கக்கூடியதாக உள்ளது.

தசைச்சிதைவு நோய் என்பது குழந்தை கருவில் உருவாகும் பொழுதே மரபணு குறைபாடுகளால் ஏற்படும் ஒரு நோயாகும், தசை நார்கள் (MUSCLE FIBERS ) ஒன்றிணைந்து தசைத்தொகுப்பு உண்டாகிறது. இந்த தசை நார்களில் ஏற்படும் புரதக் குறைபாடே இந்நோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது .இதன் காரணமாக தசை தன் கட்டுறுதியை இழந்து இறுகும் நிலையை அடைவதால் உடல் தனது கட்டுக்கோப்பை இழக்கிறது. பொதுவாக, மனித உடலின் தசைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. இயங்கு தசைகள் (நுரையீரல் மற்றும் இதயத்தசைகள் இவை மனிதக் கட்டுப்பாடின்றி தாமாகவே இயங்குபவை)

2. இயக்கு தசைகள் (மனிதனால் இயக்கக்கூடிய உடலிலுள்ள ஏனைய தசைகள்)

தசைச்சிதைவு நோயானது, முதலில் இயக்கு தசைகளையே பாதிக்கிறது. இந்தியாவில் 3000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது எனவும், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளின் மீதே இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக நமக்குப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன .

இந்நோய் பற்றிய விழிப்புணர்வும், புரிதலும் சமூகத்தில் போதுமான அளவில் இல்லை என்பதே உண்மை. இந்நோயினை மருத்துவ உலகம் ஒன்பது வகையாக வகைப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பெரும் பொருட்ச்செலவில் பல்வேறு ஆராய்ச்ச்சிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தாலும், இன்னும் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது சோகமான செய்தியே! தற்போதைய நிலையில் மருத்துவர்கள் உயிர்காக்கும் நிலையைக் கைவிரிக்கும் அளவிற்கே இந்நோய்க்கான சிகிச்சை முறை உள்ளது. இந்நோயின் பாதிப்பினை உடலியக்கப் பரிசோதனைகள் மற்றும் திசுச்சோதனைகள் (MUSCLE BIOPSY) மூலம் கண்டறியலாம் .



நோய்க்கான அறிகுறிகள்

நடக்கும் பொழுதே அடிக்கடி கீழே விழுவது, நடப்பதில், ஓடுவதில் சிரமம், தசைகள் தளர்ந்தநிலை, உட்கார்ந்த நிலையிலிருந்தோ, படுத்த நிலையிலிருந்தோ எழ மிகச்சிரமப்படுத்தல், உடல் தோரணையில் மாற்றம், கால் நுனி விரல்களால் நடப்பது, தசைகளில் இறுக்கம் மற்றும் வலி, மூட்டுகளில் இறுக்கம் மற்றும் வலி, கற்றலில் குறைபாடுகள் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.

ஆங்கில மருத்துவ முறைகளில் குணப்படுத்தமுடியாதெனினும், வலிகளுக்கு மருந்துகள், மூட்டு இறுக்கத்திற்கு அறுவை சிகிச்சைகள், இதயத்தசைகளில் பாதிப்பு ஏற்பட்டால் இதயத்துடிப்பிற்கு இதய மின்னியக்கி (PACEMAKER ) போன்ற தற்காலிக சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகின்றன. இந்நோயாளிகளை மருத்துவ உலகம் கைவிட்டால் கூட ஒரு ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி இயன்முறை மருத்துவம் மூலம் இவர்களின் வாழ்நாளினைத் தள்ளிப்போடும் சிகிச்சைகளை அளிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. எனவே இந்நோய்க்கான இயன்முறை சிகிச்சை விவரங்களை சற்றுச் விரிவாகவேப் பார்ப்போம்.


இயன்முறை சிகிச்சையின் நோக்கம்

தசைச்சிதைவைத் தடுத்தல், தசைகளில் ஏற்படும் வலிகளைக் குறைத்தல், தசை இறுக்கத்தைப் போக்குதல், எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகளைக் குறைத்தல், உடல் தோரணையை சரிசெய்தல், ஊன நிலையை (DISEBILITY ) தவிர்த்தல், சரியான முறையில் மருத்துவ உபகாரணங்களைக் கொண்டு உட்கார, நிற்க, நடக்க வைத்தல், அன்றாட வழக்கமான நிகழ்வுகளுக்கு ஏதுவாக பாதிக்கப்பட்டவரை தயார் செய்தல்.



இயன்முறை சிகிச்சைகள்

மின் சிகிச்சையின் மூலம் அளிக்கப்படும் மெழுகு ஒத்தடம் (WAX THERAPY ), அல்டராசவுண்ட் சிகிச்சை ,வெப்பச்சிகிச்சைகள் (HEAT THERAPY ) ஆகியவை தசை, மூட்டு, எலும்பு மற்றும் நரம்பு வலிகளைக் குறைக்க உதவும்.

உடலியக்கப் பயிற்சிகள் தசைச்சிதைவு, மூட்டுகளின் இறுக்கம் இவற்றைக் குறைப்பதுடன் தசையின் கட்டுறுதியை நிலை நிறுத்துவதோடு தசைகளுக்கு பலத்தைக் கொடுக்கும். இயன்முறை மருத்துவரின் மேற்பார்வையின் படி நிற்கும் நிலை, உட்காரும் பயிற்சிகள், மண்டியிடுதல், உடல் தோரணையுடன் நடத்தல் மற்றும் தசையை வலுவாக்கும் உடலியக்கப் பயிற்சிகளை மேற்கொண்டால் நல்ல பலனைப் பெறமுடியும். இது மட்டுமின்றி நீரியல் சிகிச்சை (HYDRO THERAPY ), நீச்சல் பயிற்சி, இதய மற்றும் நுரையீரல் தசைகளுக்கான மூச்சுப்பயிற்சி ஆகியவை முக்கியமானதாகும். இயங்கு தசைகளான நுரையீரல் மற்றும் இதையத்தசைகள் பாதிப்படையாமல் இருக்க மூச்சுப் பயிற்சியானது அவசியம். ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் 40 லிருந்து 50 நிமிடங்கள் கட்டாயமாக மூச்சுப்பயிற்சியினை இயன்முறை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ள வேண்டும், இதனால் சுவாசம் எளிதாவதுடன் ,நுரையீரல் பலம் பெறும். உடலியக்கப் பயிற்சிகள் செய்யும் பொழுது அவசியம் இயன்முறை மருத்துவரின் ஆலோசனையும், மேற்பார்வையும் தேவையாகும்.



முகத்தில் ஏற்படும் தசை இறுக்கத்தினால் பேச்சு பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதால் பேச்சுப் பயிற்சியாளரின் (SPEECH THERAPIST ) சிகிச்சை அவசியமாகும். ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் எனப்படும் தொழில்முறை சிகிச்சையாளரின் பங்கும் இத்தகைய நோயாளிகளுக்கு அவசியம். தினசரி வாழ்க்கை முறைகளுக்கு ஏதுவாகவும் தொழில் மற்றும் வீடு சார்ந்த சூழ்நிலைகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தொழில்முறை சிகிச்சையாளர் மேற்கொள்ள உதவுவார்.

நிறைந்த மனோதிடமும், நோய்ப் பற்றிய புரிதலும், தொடர் இயன்முறை மருத்துவ சிகிச்சையினையும் மேற்கொண்டால் இந்நோயின் கடுந்தன்மை குறைவதுடன் உயிர் இழப்பிலிருந்தும் நாட்களைத் தள்ளிப் போடலாம்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/physiotheraphy/p11.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License