வறுமையில் வாடிய புலவர் ஒருவர் செல்வந்தர் ஒருவரைப் பாடிப் பரிசு பெற்று வரலாம் என்று அவர் வீட்டிற்கு சென்றார்.
அந்த செல்வந்தரோ எச்சில் கையாலும் காக்காய் ஓட்டாதவர்.
புலவர் வந்த காரணத்தைச் சொன்னதும், செல்வந்தர் ஏளனமாக சிரித்துக் கொண்டே, ''பாட்டுக்கு காசு வேண்டுமா?காசா லேசா?''என்றார்.
புலவருக்கு கோபம் வந்து விட்டது.
அவர், “காசா லேசா, காசா லேசா” என்று கோபமாய்ச் சொல்லிவிட்டு அங்கிருந்து விரைந்து வெளியேறிவிட்டார்.
செல்வந்தருக்கும் அங்கிருந்த மற்றோருக்கும் ஒன்றும் புரியவில்லை.
செல்வந்தர் காசா லேசா என்றார்.
புலவரும் அதையே இரண்டு தடவை சொல்லிச் சென்றதன் பொருள் என்ன என்று புரியாமல் குழம்பினர்.
புலவரின் நண்பர்ஒருவர் புலவரின் பின்னாலேயே சென்று அவர் சொன்னதற்கு என்ன பொருள் என்று கேட்டார்.
அதற்குப் புலவர், “அவனுக்கு பாட்டின் மகிமை தெரியவில்லை. காசா லேசா என்கிறான். அதனால்தான் நானும் கோபத்துடன் காசாலே சா, காசாலே சா என்றேன். அதாவது காசாலே செத்துப்போ என்று பொருள்” என்று விளக்கம் சொன்னார்.
இதைக் கேள்விப்பட்ட செல்வந்தர் புலவரின் சாபத்துக்கு அஞ்சி அவரிடம் மன்னிப்புக் கேட்டுப் பரிசு கொடுத்து அனுப்பினார்