இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

வெற்றி யாருக்கு?


இரண்டு குறுநில மன்னர்களுக்கிடையே ஒரு முறை போர் மூளும் சூழல் ஏற்பட்டது.

அவர்கள் எதை செய்வதானாலும் அவர்கள் இருவருக்கும் பொதுவான ஒரு குருவிடம் சென்று ஆலோசனை கேட்டு, அதன் பிறகே செய்வார்கள்.

அந்தக் குரு சாதாரணமானவர் அல்ல. மாபெரும் ஞானி பல ஆண்டுகள் தவம் செய்து பல சித்திகள் கை வரப்பெற்றவர். தனது சக்திகளைக் கொண்டு நல்ல காரியங்கள் பல செய்து வந்தார். மக்களுக்கு அவர்களுக்கு வரவிருக்கும் ஆபத்தைப் பற்றிச் சொல்லி அவர்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வந்தார்.

இரண்டு குறுநில மன்னர்களில் முதலமானவன் படைபலம் சற்று அதிகம் கொண்டவன். திறமைசாலி.

ஒரு நாள் குருவைச் சந்திக்க வந்தான். “குருவே, நான் என் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டிய வேளை வந்து விட்டது. போரில் எனக்கு வெற்றி கிடைக்குமா? இல்லையா என்று உங்கள் யோக சக்தியை வைத்துக் கடவுளிடம் கேட்டுச் சொல்லுங்களேன்…” என்றான்.

குருவும் கண்களைச் சிறிது நேரம் மூடிக் கொண்டு தியானம் செய்த பின்னர், “இந்தப் போரில் நீ தான் வெற்றி பெறுவாய்!!” என்றார்.

சந்தோஷமாக விடை பெற்றுச் சென்றான் மன்னன்.

அடுத்த நாள் இரண்டாம் மன்னன் வந்தான். அவனிடம் படைபலம் சற்றுக் குறைவு தான். ஆனாலும் தைரியசாலி. அவனும் இதேக் கேள்வியைக் குருவிடம் கேட்டான்.

அவரும் சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு, “இந்த போரில் நீ தோல்வியடையும் வாய்ப்பே அதிகம்” என்றார்.

அடிப்படையில் இந்த மன்னன் அசாத்திய தைரியசாலி , தன்னம்பிக்கை மிக்கவன். எனவே குரு சொன்னதைக் கேட்டுக் கலங்கவில்லை.

நேராகத் தனது நாட்டுக்குச் சென்று, பாதுகாப்பு அமைச்சர், தளபதி, முன்னணி வீரர்கள் அடங்கிய கூட்டம் ஒன்றைக் கூட்டினான்.

“வீரர்களே, இந்தப் போரில் நாம் வெற்றியடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே நமது எதிரியைத் தோற்கடிக்க, நாம் எல்லா விதங்களிலும் முயற்சிக்க வேண்டும். இன்றிலிருந்து நமது வீரர்கள் போருக்கான ஒத்திகையைத் துவக்கட்டும். அது போக வீட்டுக்கு ஒருவரைத் தயார் செய்யுங்கள். குதிரைகளைத் தயார்படுத்துங்கள். ஆயுதங்களை கூர் தீட்டுங்கள். ஜெயிப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றைக் கூட விடக்கூடாது!” என்றான்.


முதலாவது மன்னனோ, வெற்றிச் செய்தி முதலிலேயே கிடைத்து விட்ட மகிழ்ச்சியில், கேளிக்கைகளிலும் கொண்டாட்டங்களிலும் காலத்தைக் கழித்தான்.

அவன் வீரர்களோ ஒரு படி மேலேச் சென்று, நாம் தான் ஜெயிப்போம் என்று விதி நம் பக்கம் இருக்கும் போது நாம் எதற்கு வீணாக ஒத்திகைகளில் காலத்தை கழிக்க வேண்டும் என்று அஜாக்கிரதையாக இருந்தனர்.

போருக்கான நாளும் வந்தது. இரு நாட்டு வீரர்களும் எதிரெதிரே அணிவகுத்து நின்றனர்.

இரண்டாம் நாட்டு மன்னனும் அவன் வீரர்களும் பல நாட்கள் ஒத்திகை பார்த்து போருக்கு தயார் நிலையில் இருந்தனர்.

முதலாம் நாட்டு மன்னனும் வீரர்களும் முன்தினம் இரவு முழுதும் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையால் முழுக்க முழுக்கப் போதையில் இருந்தனர்.

போர் துவங்கிய சிறிது நேரத்திலேயே இரண்டாம் நாட்டு வீரர்கள் மிகச் சுலபமாக முதல் நாட்டைத் தோற்கடித்து கோட்டையைக் கைப்பற்றி விட்டனர்.

முதல் நாட்டு மன்னன் சிறை வைக்கப்பட்டான்.

தண்டனை விதிக்கப்படும் முன், தன் கடைசி ஆசையாகத் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய தன் குருவைப் பார்க்க வேண்டும் என்றான்.

அதன்படி குருவின் முன்னர் கொண்டு போய் நிறுத்தப்பட்டான்.

“உங்கள் வாக்கு பொய்த்து விட்டதே. நான் தோற்று விட்டேனே… இது நியாயமா?” என்றான்.


குரு சிரித்துக் கொண்டே, “உழைப்பவர்களுக்கே இந்த உலகம் சொந்தம். உன்னிடம் திறமை இருந்தும் நீ தான் வெற்றி பெறப் போகிறாய் என்று நீ தெரிந்து கொண்டதால், உனது வெற்றிக்கு உழைக்கவில்லை. அஜாக்கிரதையாக இருந்தாய். ஆனால், உன் எதிரி நாட்டு மன்னனோ, அவன் தான் போரில் தோற்பான் என்று தெரிந்து கொண்ட போதும், நம்பிக்கையை இழக்காமல், இரவு பகல் பயிற்சி செய்து படையைத் தயார்ப் படுத்தினான். அந்த ஏழு நாட்களும் அவன் தூங்கவில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் கொள், திறமை உழைக்கத் தவறினால், உழைப்பு திறமையை வென்று விடும். இதை மாற்ற யாராலும் முடியாது!” என்றார்.

அர்ப்பணிப்பு உணர்வு கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டால் விதியையும் வெல்ல முடியும் என்று உணர்ந்து கொண்ட மன்னன் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடை பெற்றான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1103.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License