இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

இறைவன் நைவேத்தியத்தை எப்படிச் சாப்பிடுகிறார்?


அது ஒரு மடாலயம். அதன் தலைவராக இருந்த குரு, மிகவும் அமைதியான ஆழ்ந்த ஆன்மிக சிந்தனை கொண்டவர். அவரிடம் நிறைய சீடர்கள், ஆன்மிக அறிவைப் பெறுவதற்காகச் சேர்ந்திருந்தனர்.

அதில் ஒரு சீடன், சமீபத்தில்தான் சேர்ந்திருந்தான். ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவனது ஆர்வமும், அதற்காக அவன் கேட்கும் கேள்விகளும், குருவுக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு புண்ணிய நாளில் இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்தார்கள். அந்த வழிபாட்டின் முடிவில் குருவிடம் வந்த சீடன், “குருவே... நாம் படைக்கும் நைவேத்தியத்தை இறைவன் சாப்பிடுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால், நாம் பிறருக்கு எப்படிப் பிரசாதமாக அந்த நைவேத்தியத்தை வழங்க முடியும்? கடவுள், நாம் படைக்கும் நைவேத்தியத்தைச் சாப்பிடுகிறார் என்றால், அது குறையவில்லையே?” என்று கேட்டான்.

ஆனால், அப்போது அவனுக்குக் குரு பதில் சொல்லவில்லை. மாறாக, “ஆன்மிக வகுப்புக்கு நேரமாகிவிட்டது. வகுப்பறையைத் தயார் செய்து, மற்ற சீடர்களை அமரச் செய். அதற்குள் நான் வந்துவிடுகிறேன்” என்றார்.

தன் கேள்விக்கு பதில் கிடைக்காத வருத்தம் இருந்தாலும், குருவின் சொல்லைத் தட்டக்கூடாது என்பதற்காக அவர் சொன்னதைச் செய்யச் சென்று விட்டான். ஆன்மிக வகுப்பு தொடங்கிவிட்டது. இறைவனை வழிபடுவதற்கான ஒரு மந்திரத்தை அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தார், குரு. அதை தங்கள் கையில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்து, அனைத்துச் சீடர்களும் வாசித்தனர். பின்னர் மனப்பாடம் செய்யத் தொடங்கினர்.

இப்போது தன்னிடம் நைவேத்தியம் பற்றிய சந்தேகம் கேட்ட சீடனை, தன் அருகில் வரும்படி அழைத்தார் குரு.

அவனும் குருவின் அருகில் சென்று நின்றான். அவனிடம், “என் அன்புக்குரிய சீடனே... இப்போது நான் கூறிய மந்திரத்தை மனதில் ஏற்றிக் கொண்டாயா?” என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த அந்த சீடன், “முழுமையாக என்னுடைய மனதில் உள்வாங்கிக் கொண்டேன் குருவே” என்றான்.

“எங்கே ஒரு முறை அந்த மந்திரத்தைச் சொல் பார்ப்போம்...” என்று குரு கேட்க, கண்களை மூடி மனதை ஒரு நிலைப்படுத்தியவன் கணீர் குரலில் அந்த மந்திரத்தை ஒப்புவித்து முடித்தான்.

குரு மென்மையான சிரிப்புடன், “நீ மந்திரத்தைச் சரியாக மனதில் நிறுத்தியதாகத் தெரியவில்லையே...” என்றார்.

பதறிப்போனான் சீடன். “குருவே... நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால், புத்தகத்தில் இருப்பதைப் போலவேதான், நான் இப்போது கூறினேன்” என்று கூறிப் புத்தகத்தைக் காண்பித்தான்.

அதை கையில் வாங்கிய குரு, “இந்தப் புத்தகத்தில் இருந்து படித்துத்தான் மனதில் உள்வாங்கினாயா? இதிலிருந்துதான் உள்வாங்கினாய் என்றால், மந்திரம் புத்தகத்திலும் இருக்கிறதே. நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றிக்கொண்டாய் என்றால், புத்தகத்தில் அது இருக்கக் கூடாது அல்லவா?” என்றார்.


குருவின் கேள்வியில், அந்தச் சீடன் குழம்பிப் போனான்.

சிறிய புன்னகையுடன் குரு தொடர்ந்தார். “நீ கேட்ட நைவேத்தியக் கேள்விக்கு பதில் இங்கேதான் இருக்கிறது. கவனமாகக் கேள். புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம் (கண்ணுக்கு புலப்படும் உருவம்) ஆனது. ஆனால், அதில் இருந்து உள் வாங்கிய மந்திரம் உன்னுடைய மனதில் பதிந்து உன் நினைவில் சூட்சும வடிவில் (உருவமில்லாதது) இருக்கிறது. அது போலவே இறைவன், சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படும் நைவேத்தியம் ஸ்தூல வடிவமாக இருந்தாலும், அதை இறைவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின்னரும் புத்தகத்தில் உள்ள மந்திரம் அளவில் குறையாதது போலவே, இறைவன் உட்கொள்ளும் நைவேத்தியமும் அளவில் குறையாமல் இருக்கிறது. ஸ்தூலமாக இருக்கும் நாம், ஸ்தூலமாகவும்; சூட்சுமமாக இருக்கும் இறைவன், சூட்சுமமாகவும் நைவேத்தியத்தைச் சாப்பிடுகிறோம். இப்போது புரிந்ததா?” என்று முடித்தார் குரு.

தனக்கு அனைத்தும் அற்புதமாக விளங்கியதை சொல்லும் வகையில், குருவின் பாதம் பணிந்து வணங்கினான், சீடன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1316.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License