இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

முன்னேற்றத்துக்கு முதுமை தடையில்லை


ஐரோப்பிய நாடுகள் ஒன்றில் மிகுந்த தொலைவில் ஒரு சிற்றூர் இருந்தது. அந்த ஊரில் பழமையான தேவாலயம் ஒன்று இருந்தது.

அந்தத் தேவாலயத்தில் துறவி ஒருவரும் பணியாளர்கள் பலரும் சேவையில் ஈடுபட்டிருந்தனர்.

ஒருநாள் ஆலய துறவி புதியவர் ஒருவர் மாற்றலாகி வந்தார். வந்தவர் முதல் நாளில் இருந்தே ஆலயத்தில் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.

ஆய்வு செய்தவர், ஆலயத்தில் தேவையற்ற செலவுகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும், அவைகளை உடனடியாகக் குறைக்க முடிவுகள் எடுக்கப்பட்டுச் செயல்படுத்தப் போவதாகவும் அனைவருக்கும் அறிவிப்பு செய்தார்.

அதனால் பல வருடங்களாக அங்கு வேலை புரியும் பணியாளர்கள் முதல் புதியவர் வரை அனைவரும் ஒருவிதப் பயத்தில் ஆழ்ந்தனர்.

திட்டத்தைச் செயல்படுத்தத் துவங்கினார் அந்தத் துறவி.

ஆலயக் கணக்குகளைப் பார்க்கும் பணி காலியாக இருந்தது. தனது புதிய திட்டமாகிய செலவு குறைப்பின் அடிப்படையில் ஆலயத்தில் இருக்கும் ஒருவரிடமே, அந்தப் பணியையும் சேர்த்து ஒப்படைக்கத் திட்டமிட்டார் அந்தப் புதிய துறவி.

எனவே அவர் அங்கு பல வருடங்களாக ஆலயமணி அடிக்கும் முதியவரிடம் சென்று, அவரின் வேலைகள் என்னென்ன? என்று கேட்டார்.

முதியவரோ தினமும் நேரத்திற்கு ஆலயமணி அடிப்பது மட்டுமேத் தனது பணியென்றார்.

உடனே துறவி, 'இன்றுமுதல் ஆலயக் கணக்குகளையும் நீரேப் பார்த்துக்கொள்ளும்' என்றார்.

பதறிய முதியவரோ... 'மன்னியுங்கள் ஐயா... எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது' என்று கூறினார். அதை ஏற்க மறுத்தார் துறவி.

அது மட்டுமல்லாது, முதியவரிடம் தான் அவருக்கு முப்பது நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் எழுதப் படிக்கக் கற்றுப் பொறுப்பேற்கவும் உத்தரவிட்டார்.

நிலைமையைப் புரிந்து கொண்டு சரி என்றார் முதியவர்.

பின்வந்த முப்பது நாட்களும் தனக்குத் தெரிந்த வழிகளில், தனக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என் எல்லோரிடமும் தனக்குக் கற்றுத் தந்து உதவுமாறு கேட்டு அலைந்தார்.

நாட்கள் மிக வேகமாக நகர்ந்தன. முப்பது நாட்கள் முடிந்தது. முதியவர் தனது மணி அடிக்கும் பணியில் இருந்தார்.

அதே நேரம் துறவி முதியவரிடம், 'நான் சொன்னது போல் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டீரா?' என வினவினார்.

முதியவரோ தழுதழுத்தக் குரலில் 'இல்லை...' என்றார்.

துறவி, 'அப்படியானால் உமக்கு இனி இங்கு வேலை இல்லை... இன்றுடன் நீங்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டும்' என்றார்.

முதியவரோ, 'அய்யா... இந்தத் தள்ளாடும் வயதில் ஆலயமணி அடிப்பதைத் தவிர வேறு பணி எதுவும் தெரியாது... என்னை இந்த வேலையை விட்டு அனுப்பிவிடாதீர்கள்...' என்று துறவியிடம் கெஞ்சினார்.

மனம் இரங்காத துறவி முதியவரைப் பணியிலிருந்து நீக்கி வெளியேற்றினார்.


என்ன செய்வதென்று அறியாத முதியவர் வெளியில் ஓர் இடம் பார்த்து அமர்ந்து, தான் இனி வாழ என்ன செய்வதென்று தவித்தவாறே அமர்ந்திருந்தார்.

அது ஒரு பெரும் பனிக்காலம்... பூமழையாய் வானிலிருந்து பனி உதிர்ந்து கொண்டிருந்தது.

எங்குபோவது? என்ன செய்வது? என்று குழம்பியிருந்த முதியவருக்குச் சற்று நேரத்தில் குளிர் பொறுக்க முடியவில்லை. எனவே குளிர் தாங்க ஒரு வெண்சுருட்டு புகைக்க எண்ணி, அருகாமையில் இருந்த கடைக்கு வாங்கச் சென்றார்.

கடைக்காரர் வந்த முதியவரிடம் இல்லை என்றார்.

உடனே முதியவர் வேகமாக மற்றொரு கடைக்கு சென்றார். அங்கும் இல்லை.

மீண்டும் வேறு கடைக்கு... அங்கும் இல்லை... இவ்வாறு அடுத்தடுத்த கடைகளுக்குச் சென்றும் எங்குமே இல்லை.

நொந்துபோன முதியவர் ஒரு ஓரமாக நின்றார்.

திடீரென அவருக்குள் ஒரு யோசனை.. 'நாம் ஏன் வெண் சுருட்டை வாங்கி இங்கிருக்கும் கடைகளுக்கெல்லாம் வினியோகிக்க கூடாது?' என எண்ணினார்.

கையில் தான் சேமித்திருந்த பணத்தை வைத்து தனக்குத் தோன்றிய வியாபாரத்தைத் துவங்கினார்.

கடுமையாக உழைத்தார்... வளர்ந்து பெருகினார்.

வெகுசில வருடங்களிலேயே அந்த நாட்டில் பெரும் பணம் படைத்தவர்களில் ஒருவரானார்!

ஒருநாள் அவரை நேர்காணல் செய்யப் பத்திரிக்கையாளர் ஒருவர் வந்திருந்தார்.

நேர்காணல் முடிவடையும் நேரத்தில்...

பத்திரிக்கையாளர், ' உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா?' என்று கேட்டார்.

முதியவர், 'இல்லை... எனது பணியாளர்கள் எல்லாவற்றையும் எனக்காகப் பார்த்துக் கொள்கிறார்கள்...' என்றார்.


பத்திரிக்கையாளர், ' நீங்கள் இந்தத் தொழிலுக்கு வராமல் இருந்திருந்தால், என்ன செய்து கொண்டிருந்திருப்பீர்கள்?' என்று கேட்டார்.

அதற்கு அந்த முதியவர், 'தேவாலயத்தில் மணி அடித்துக் கொண்டிருந்திருப்பேன்.. என் ஆயுளின் பாதிக்கு மேல் அந்தப் பணிதான் செய்து கொண்டிருந்தேன்' என்றார்.

முதியவரின் கடின உழைப்பால் ஏற்பட்ட முன்னேற்றத்தை கண்முன் கண்டு வியந்து போனார் அந்தப் பத்திரிக்கையாளர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1341.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License