இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

முனிவரைக் கொல்ல முயன்ற மந்திரவாதி


அந்தக் காலத்தில் காவிரி நதிக்கரையில் ஒரு முனிவர், ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். அவரிடம், பல மாணவர்கள் பல நாடுகளில் இருந்தும் வந்து கல்வி கற்றனர்.

முனிவருக்கும் ஒரு மந்திரவாதிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

அதனால், மந்திரவாதி முனிவரைத் தன் மாந்திரீக சக்தியால் கொன்று விடுவதாக மிரட்டினான்.

முனிவர் அதைச் சட்டை செய்யவில்லை.

ஒருநாள் மந்திரவாதி, குட்டிச் சாத்தான்களை ஏவி, முனிவரின் ஆசிரமத்தில் கல்லெறிய வைத்தான்.

தியானத்தில் இருந்த முனிவர், ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தார்.

"கல்லெறியும் கயவர்களே... நீங்கள் யார்?''

"எங்களைப் பார்த்து யாரென்றா கேட்கிறாய்? ஊசிமூக்கு மூடா... உன்னைக் கொல்ல வந்த எதிரிகள் நாங்கள்!''

"நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும். உங்களை ஏவி விட்டவனையும் நன்கறிவேன். மரியாதையாகச் சென்று விடுங்கள்!''

"உம்மைத் தூக்கிக் கொண்டு வர வேண்டுமென்பது எங்கள் தலைவன் கட்டளை!''

"அழிந்து போவீர்கள்!''

"எங்களை அழிக்க உம்மாலும் முடியாது. உன் பாட்டனாலும் முடியாது. நாங்கள் சாகாவரம் பெற்றவர்கள்'' என்றன குட்டிச் சாத்தான்கள்.

"குட்டிச் சாத்தான்களே... எட்டியே நில்லுங்கள் என்னிடம் வராதீர்கள்!''

"என்ன செய்து விடுவீர்?'' என்று அவை அவரை நெருங்கின.

உடனே முனிவர், அந்த ஆறு குட்டிச் சாத்தான்களையும் வவ்வால்களாக மாற்றி, மரத்தில் தொங்க விட்டு விட்டார்.

இதை எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்த ஏழாவது குட்டிச் சாத்தான், குடுகுடுவென்று ஓடி மந்திரவாதியிடம் சொன்னது.


மூன்றாம் நாள், முனிவர் ஆசிரமத்தில் இல்லாத போது, மந்திரவாதி சென்று மரங்களில் தொங்கிக் கொண்டிருந்த வவ்வால்களை மீண்டும் குட்டிச் சாத்தான்களாக மாற்றிக் கொண்டு வந்து விட்டார்.

அதிலிருந்து மந்திரவாதிக்கும், முனிவருக்கும் பகை தொடர்ந்தது.

மந்திரவாதி முனிவரைப் பழிவாங்க நினைத்தான். முனிவர் கூடுவிட்டுக் கூடு பாயும் கலையைக் கற்றவர்.

மந்திராவதிக்கும், அந்தக் கலை தெரியும் என்று முனிவருக்குத் தெரியாது.

வழக்கமாக, முனிவர் காவிரியாற்றில் காலையில் நீராடுவார். பவுர்ணமி நாள்களில், இரவு நேரங்களில் காவிரியின் ஒரு துறையில் பச்சை நிறத் தவளையாக மாறி நீரில் நீந்தி மகிழ்வார்.

இந்த விஷயத்தைக் குட்டிச் சாத்தான் ஒன்று உளவறிந்து மந்திரவாதியிடம் சொல்லிவிட்டது.

பவுர்ணமி அன்று பச்சைத் தவளையாக மாறி நீரில் குதித்த முனிவரை, மந்திரவாதி பாம்பாக மாறித் துரத்தினான்.

முனிவருக்கு இது தெரிந்தது.

வேகமாகத் நீந்த ஆரம்பித்தார். பாம்பு விடவில்லை. பாம்பு பின்னாலேயேத் துரத்திச் சென்றது.

"ஏய் சாமியாரே.... நில்! உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்!''

"வேண்டாம்... என்னை விட்டு விடு!''

"முடியாது. முடியவே முடியாது. குட்டிச் சாத்தான்களை ஏன் வவ்வால்களாக்கிக் கட்டி வைத்தாய்?''

"என்னைக் கொல்ல வந்தன. அதனால்தான் அப்படிச் செய்தேன்'' என்றார் முனிவர்.

"இப்போது ஒழிந்து போ!''

பாம்பு துரத்தியது. தவளை திக்குமுக்காடியது.

சர்ரென்று நீந்தி வந்த பாம்பின் வேகத்திற்குத் தவளையால் ஈடுகொடுக்க முடியவில்லை.

பாம்பின் வாய்க்குள் போகப் போகிறது தவளை!

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாய்ப் பாம்பின் எதிரே வந்த முதலை ஒன்று, தன் வாலால் பாம்பை அடித்தது.

அடியில் மிரண்டு போன பாம்பால், தவளையைப் பின் தொடர முடியவில்லை.

தவளை கரையில் தாவியது. பின் முனிவராகிய தவளை ஒரு புறாவாக மாறி, வானத்தில் பறந்தது.

அதைப் பார்த்த மந்திரவாதி தான் ஒரு வல்லூறாக மாறி புறாவைத் துரத்தினான்.


புறா பறந்தது. பறந்தது கொண்டே இருந்தது. வல்லூறு துரத்திக் கொண்டே வந்தது.

எதிரே இரை தேடிக் கொண்டிருந்த புறாக் கூட்டத்துடன் முனிவராகிய புறா கலந்து விட்டது.

"டேய் முனிவரே... தனியே வா. எப்படியும் உன்னைக் கண்டுபிடித்துக் கொல்வேன்!''

"உன்னால் என்னைக் கொல்ல முடியாது'' என்று மறுபடியும் புறா பறந்தது.

வல்லூறால் அதைப் பின்தொடர முடியவில்லை.

தப்பித்தோம். பிழைத்தோம் என்று பறந்து வந்த புறா இளைப்பாறுவதற்காக, ஒரு மரத்தின் மேல் அமர்ந்தது.

வேட்டைக்காரன் ஒருவன் அன்று முழுவதும் வேட்டையாடி, பல புறாக்களையும், வேறு சில பறவைகளையும் வேட்டையாடி, தன் கூண்டில் வைத்திருந்தான்.

மரத்தின் மேல் இருந்த மணிப் புறாவைக் குறிபார்த்து எய்ய அம்பை எடுத்தான்.

"வேடனே... என்னைக் கொன்று விடாதே... நான் உண்மையில் புறா அல்ல முனிவர்!''

புறா பேசுவதைக் கேட்ட வேடன், மிகவும் ஆச்சரியப்பட்டான். தன் வில்லைக் கீழே போட்டான்.

"முனிவரே! ஏன் புறாவாக மாறினீர்?''

"அது ஒரு பெரிய கதை. என்னை இப்போது மந்திரவாதி ஒருவன் வல்லூறாக மாறித் துரத்தி வருகிறான். எனக்கு அடைக்கலம் கொடு,'' என்றவாறே புறா அவன் காலடியில் விழுந்தது.

"இங்கே அந்த மந்திரவாதி வல்லூறு வரட்டும். நான் கவனித்துக் கொள்கிறேன். முனிவரே நான் பிடித்து வைத்திருக்கும் புறாக்களோடு கூண்டுக்குள் புகுந்து விடுங்கள்!''

முனிவர் புறாக்களோடு புறாக்களாகக் கலந்து விட்டார்.

அதே சமயம் மந்திரவாதி வல்லூறு அந்த இடத்திற்கு வந்தது.

"வேடனே...அந்தப் புறா எனக்குரியது''

"யார் நீ?''

"அதை உனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.''

"அப்படியென்றால் புறா உனக்குக் கிடைக்காது!''

"அவன் என் எதிரி''

"விளக்கமாகச் சொல்!''

"சொல்ல முடியாது!''

"புறாவைக் கொடுக்க முடியாது... உனக்கு தெரிந்ததைப் பார்த்துக் கொள்!''

"நான் மீண்டும் மனிதனாகி, உன்னைக் கொன்று விடுவேன்.

"நான் இப்போது உன்னைக் கொல்லப் போகிறேன்,'' அம்பை எடுத்தான் வேடன்.

மந்திரவாதியான, வல்லூறு பறந்து விட்டது.

"முனிவரே... நீங்கள் இனி புறா உருத்தில் வெளியேச் செல்ல வேண்டாம். அது ஆபத்தில் முடியும். வேறு உருவத்தில் செல்லுங்கள்!''

முனிவருக்குத் திடீரென்று புலியின் உருவம் ஞாபகத்திற்கு வந்தது. புலி உருவம் எடுத்தார்.

இரவு முழுவதும் வேடனின் வீட்டுக் கூரையில் பதுங்கி இருந்த வல்லூறான மந்திரவாதி, ஒரு முரட்டுக் காளையின் உருவம் எடுத்தான். முனிவர் புலியின் உருவம் எடுத்தது அவனுக்குத் தெரியாது.

வீட்டிலிருந்து வெளியே வந்த புலியைக் கண்டதும், மந்திரவாதியான காளை தப்பித்து ஓட முயன்றது. காளையைப் புலி விரட்டியது. காளை வேகமாக ஓடியது. காற்று வேகத்தில் சென்ற புலி, காளை மீது தாவிப் பாய்ந்தது. தன் கூரிய நகங்களால் அதைக் கிழித்துக் கொன்றது.


இதற்கிடையில், முனிவரின் உடலைத் தீயிட்டுக் கொளுத்த அந்தக் குட்டிச் சாத்தான்கள் முயற்சி செய்து கொண்டிருந்தன.

முனிவர் புலியில் இருந்து குட்டிச் சாத்தான்களிடையே புகுந்து உயிர் பெற்றார். முனிவர் உயிருடன் எழுவதைக் கண்ட குட்டிச் சாத்தான்கள் பயந்து ஓடின.

முனிவர் விடவில்லை. அந்த ஏழு குட்டிச் சாத்தான்களையும் மறுபடியும் வவ்வால்களாக்கி மரத்தில் தொங்க விட்டார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1343.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License