இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

இலட்சியத்தை விட்டு விடாதீர்கள்!


ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தார். இங்கே வினோதம் என்னவென்றால், அந்த அரசனுக்கு இரண்டு பட்டத்தரசிகள் இருந்தார்கள். பொதுவாக, ஒரு அரசனுக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும், ஒரே ஒருவர் மட்டுமே பட்டத்து அரசியாக இருப்பார்.

ஆனால், அந்த அரசனுக்குத் திருமணமாகும் சமயத்திலேயே, இருவருக்குமே பட்டது அரசியென்ற அதிகாரம் தருவதாக வாக்களித்திருந்தார். அதன்படியே, இருவரும் பட்டது அரசிகளாக அறிவிக்கப்பட்டு, இருவருக்குமே சம உரிமையும் வழங்கியிருந்தார்.

அவர்களில் யாருக்கு முதலில் குழந்தை பிறக்கிறதோ, அந்தக் குழந்தைக்குத்தான் அடுத்து அரசனாகும் உரிமை கிடைக்கும். அது பெண்ணானாலும் சரி, ஆணானாலும் சரி.

ஆனால், அந்த இடத்தில்தான் ஒரு சிக்கல் ஏற்பட்டது. என்னவென்றால், அவர்கள் இருவருக்கும் ஒரே நாள், ஒரே நேரத்தில் குழந்தை பிறந்தது. இரண்டுமே இளவரசர்கள்.

இப்பொழுது, என்ன செய்வதென்றே அறியாத அந்த அரசர், தனது அமைச்சரிடம் சென்று ஆலோசனை கேட்டார்.

அமைச்சரும் "இதற்கு ஒரு வழி இருக்கிறது. முதலில், இரண்டு இளவரசர்களும் வளரட்டும். இரண்டு பேரும் குருகுலக் கல்வியை முடித்து வரட்டும். பின்னர், ஒரு நாளை ஏற்பாடு செய்து, அந்த நாளில் கல்வி, கேள்வி மற்றும் வீரத்தில், அவர்களுக்குள் ஒரு போட்டியை நடத்தலாம். அந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களை நமது அரசராக ஏற்போம்" என்று ஆலோசனை சொன்னார்.

அரசனுக்கும் அது சரியென்று படவே, அந்த இரண்டு இளவரசர்களுக்கும் 'பஞ்சவன்', 'பார்த்திபன்' என்ற பெயரையும் வைத்து, அவர்களை குருகுலக்கல்விக்கு அனுப்பி வைத்தார்.

இருபது ஆண்டுகள் கடந்து சென்றன. குருகுல வாசம் முடிந்து, அந்த இரண்டு இளவரசர்களும் தங்கள் நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள். அரசரும் சிறப்பான பரிவாரங்களோடு, அவர்கள் இருவரையும் வரவேற்றார். அரசிகளும் பல நாட்களுக்குப் பிறகு, தங்கள் மகன்களைக் கண்டு மகிழ்ந்தனர்.

'தங்கள் நாட்டுக்கான பட்டது இளவரசனைத் தேர்ந்தெடுப்பதற்கு, அதுதான் சரியான சமயம்' என்று நினைத்த அமைச்சரும், அந்தப் போட்டியை பற்றி அரசனுக்கு நினைவுபடுத்தினார்.

அடுத்த முப்பது நாட்களில் போட்டிக்கான அந்த நாளும் குறிக்கப்பட்டது.

அந்தப் போட்டியின் நிபந்தனைப்படி, போட்டியில் வெற்றி பெறுபவர், பட்டத்து இளவரசனாகி, பின்னர் அந்த நாட்டின் அரசனாக அரியணையேறுவார். தோல்வியடைபவரோ, நாட்டிலிருந்தே வெளியேறி, காட்டில் வனவாசம் மேற்கொள்ள வேண்டும்.

இரண்டு இளவரசர்களும் அதற்கு ஒப்புக் கொண்டு, அதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொள்ளத் துவங்கினார்கள்.


அந்த நேரத்தில், இளவரசன் பார்த்திபன் ஒரு நாள் தனது தாயை வந்து சந்தித்தான். அவளிடம், "அம்மா! எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இளவரசன் பஞ்சவன் என்னைத் தோற்கடித்து விடுவானோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. ஏனெனில், இளவரசன் பார்த்திபன் கல்வி, கேள்விகளில் சிறந்தவன். அது மட்டுமல்லாமல், வில் வித்தையிலும் வாள் விதையிலும்கூட, அவனை வெல்லும் வீரன் இந்த உலகத்திலேயே பிறக்கவில்லையென்று என் குருவே சொல்லுவார். ஒருவேளை தோற்றுப் போனவர் காட்டுக்குச் செல்ல வேண்டுமென்றால், நானல்லவா காட்டுக்குச் செல்ல வேண்டும்" என்று வருந்திக் கூறினான்.

அரசியும் அவன் கூறியதைக் கேட்டு, மிகவும் வருத்தமடைந்தாள்.

ஆனாலும், "எப்பேர்ப்பட்ட வீரனையும் நம்மால் வெற்றி கொள்ளமுடியும். கலங்காதே!!" என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள்.

அதே நேரத்தில், ஒரு திட்டத்தையும் தீட்டினாள்.

அந்தத் திட்டத்தின்படியே, அவர்களது அமைச்சரின் மகனான ஆனந்தன், இளவரசன் பஞ்சவனை வந்து சந்தித்தான். அவனிடம், "நாம் இருவரும் மாறுவேடத்தில் நகர்வலம் செல்லலாம்" என்றான்.

போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருப்பதால், முதலில் மறுத்த பஞ்சவன், பின்னர் "சரி, இந்த ஒரு இரவுதானே !!" என்று நினைத்துக் கொண்டு, ஆனந்தனோடு சேர்ந்து, மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான்.

அப்பொழுது, ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் மட்டும், மிகுந்த வெளிச்சமாக இருப்பதை அவர்கள் கவனித்தார்கள்.

"இரவு நேரத்தில், இப்படி ஒரு வெளிச்சமா?" என்று ஆச்சரியப்பட்ட இளவரசன், அந்த இடம் நோக்கி தனது குதிரையைச் செலுத்தினான்.

அந்தக் கிராமத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், மக்கள் ஒரு கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். குதிரையிலிருந்து இறங்கி, அந்தக் கூட்டத்திற்கு அருகில் சென்று பார்த்த பொழுது, அங்கு ஒரு மல்யுத்தம் நடப்பது தெரிந்தது.

அதில் ஒரு மல்யுத்த வீரன், தன்னிடம் போட்டியிட்ட அனைவரையும் அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தான்.

அவ்வப்போது ஆனந்தமாக கர்ஜித்து, "என்னை வெல்ல இந்த ஊரில் ஒருவருமே இல்லையா? " என்று சொல்லிக் கொண்டான்.

உடனே அமைச்சரின் மகன் சுனந்தன், "ஏன் ? நான் இருக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு, முன்னால் சென்று சண்டையிட்டுத் தோல்வியுற்றான்.

அது கண்டு கோபமுற்ற இளவரசன் பஞ்சவன், "நீ வீரனாக இருந்தால் என்னுடன் வந்து சண்டையிட்டு வெற்றி பெற்றுக் காட்டு" என்று அந்த மல்யுத்த வீரனுக்கு அறைகூவல் விடுத்தான்.

பின்னர், அவனோடு போட்டியிட்டு வெற்றியும் பெற்றான்.

உடனே, அங்கிருந்தவர்கள் அனைவரும் மாறுவேடத்திலிருந்த பஞ்சவனை வெகுவாக பாராட்டினார்கள்.

ஆனால், அந்த மல்யுத்த வீரனோ "இதெல்லாம் செல்லாது. இந்தமுறை உனக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்துவிட்டது. நான் ஏற்கனவே மற்றவர்களோடு போராடி சோர்வடைந்திருந்ததால், நீ என்னை வெற்றியடைந்து விட்டாய். எங்கே, உனக்கு துணிச்சலிருந்தால் தொடர்ந்து 25 நாட்கள் என்னோடு போட்டியில் கலந்துகொள். ஒரே ஒருநாள் கூட, நீ என்னிடம் தோற்கக்கூடாது. உண்மையிலேயே ஒரு வீரனாக இருந்தால் என்னுடன் அந்தப் போட்டிக்கு வா பார்க்கலாம்" என்று சொன்னான்.

பஞ்சவனுக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. அவனுக்கு எப்பொழுதுமே, 'தான் ஒரு சிறந்த வீரன்' என்ற எண்ணம் உண்டு. அதைச் சீண்டும் வகையில், எதிரியின் அறைகூவல் இருக்கவே, கோபம் அதிகமாகி "பார்க்கலாம் 25 நாட்களில், ஒருநாள் நீ வெற்றி பெற்றால் கூட, நான் உனக்கு சேவகம் புரிவேன்" என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டான்.

பின்னர், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ச்சியாக அந்த மல்யுத்தப் போட்டி நடக்கிறது. பஞ்சவனும் அதில் பங்கெடுத்துக் கொண்டான். தொடர்ச்சியாக வெற்றியும் பெற்றான்.

அவ்வப்போது கோபமடையும் அந்த மல்யுத்த வீரன், பஞ்சவனைப் பார்த்து, "நீ ஏதோ தில்லுமுல்லு செய்கிறாய். அதனால்தான் உன்னால் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது" என்று கிண்டலும் கேலியும் செய்து வந்தான்.

அந்த வீரனின் பேச்சு, பஞ்சவனை இன்னும் அதிகமாக அந்தப் போட்டியில் கவனம் செலுத்த வைத்தது.

'போட்டியில் வெற்றி பெற வேண்டும்' என்ற ஒன்றை மட்டுமே கவனத்தில் வைத்து, கடைசியாக 25 நாள் நாள் நாள் சண்டை போட்டியிலும் தானே வெற்றி பெற்றான். ஒருமுறை கூட, இந்த மல்யுத்த வீரன் வெற்றி பெறவேயில்லை.

கடைசியாக தோல்வி அடைந்த அந்த மல்யுத்த வீரன், தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, தன்னிடமிருந்த ஒரு முத்து மாலையைக் கழற்றி பஞ்சவனின் கழுத்தில் போட்டுவிட்டு, "உண்மையிலேயே, நீ ஒரு பெரிய வீரன்தான்" என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டான்.

இளவரசனுக்கு அது மிகவும் பெருமையாக இருந்தது.


இப்பொழுது பார்த்தால், அரசனாவதற்கான அந்தப் போட்டிக்கு வெகு சில நாட்கள் மட்டுமே, மீதமிருந்தன. அதனால், அதற்கானப பயிற்சிகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான் பஞ்சவன். அப்பொழுதுதான், அவனுக்கு தனது உடல் சோர்வுற்று இருப்பது புரிந்தது. இரவு நேரங்களில் விழித்திருந்து அந்தப் போட்டியில் கலந்துகொண்டது, அவனது உடலை வெகுவாகப் பாதித்திருந்தது. அது மட்டுமல்லாது, சதா காலமும் அந்தப் போட்டியைப் பற்றியே சிந்தித்து வந்ததால், இந்தப் போட்டிக்கு அவன் பெரிதும், பயிற்சியும் எடுக்கவில்லை.

ஆனால் பார்த்திபனோ, வெகு அழகாகப் பயிற்சிகளை மேற்கொண்டு, தனது கவனத்தையும் கட்டுக்குள் வைத்திருந்தான்.

கடைசியாக, போட்டிக்கான நாளும் வந்தது.

பஞ்சவனால், எப்பொழுதும் போல, தனது 100 சதவிகிதத் திறனையும் அங்கு பயன்படுத்த முடியவில்லை. எப்பேர்ப்பட்ட வீரனாக இருந்தாலும், உடலும் மனமும் சோர்வடைந்த நிலையில், தனது முழு ஆற்றலை வெளிப்படுத்தவியலாது அல்லவா? ஆகையால், கல்வி கேள்விகளிலும் வீரத்திற்கானப் போட்டிகளிலும் தோல்வியடைந்தான் பஞ்சவன்.

அவனைவிடத் திறமை குறைந்தவனாக இருந்தாலும், அந்தப் போட்டியில் வென்று நாட்டுக்கே அரசனானான் பார்த்திபன்.

அந்த நாட்டின் பட்டத்து இளவரசனாகப் பார்த்திபன் அறிவிக்கப்பட, இளவரசன் பஞ்சமனோ வனவாசம் மேற்கொள்ள வேண்டி வந்தது.

காட்டுக்குச் சென்று, மன வருத்தத்துடன் வாழ ஆரம்பித்தான். ஒருநாள், காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த பொழுது, சற்று தொலைவிலே, தான் முன்பு சந்தித்த மல்யுத்த வீரனைக் கண்டான். பஞ்சவனைப் பார்த்ததும், ஓடி ஒளிந்துகொண்டான், அந்த வீரன்.

அவன் ஏன் அப்படிச் செய்கிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், அவன் பின்னாலேயே சென்றான் பஞ்சவன்.

அங்கு பார்த்தால், ஒரு சிறிய கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில், இவன் முன்பு மல்யுத்தத்தின்போது பார்த்த மக்கள் அத்தனை பேரும் இருந்தார்கள். யவனர்கள் அனைவரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பஞ்சவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

அவர்களிடம் சென்று, கோபமாக "அப்படியெனில், நீங்கள் என்னை ஏமாற்றினீர்களா? போட்டியாளர்கள், பார்வையாளர்கள் என்று எல்லோருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்களே !! உங்களால் நான் என் நாட்டையும் இழந்தேனே... " என்று கோபத்தோடு கேட்டான்.

உடனே அந்த மல்யுத்த வீரன், "இதை ஏன் எங்களிடம் கேட்கிறாய்? அன்று உன்னுடன் ஒருவன் வந்தானே, அவனிடம் சென்று கேள்... அவன்தான், நான் ஒரு இளைஞனை அழைத்து வருவேன். அந்த இளைஞனிடம் நீங்கள் இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும். 25 நாட்கள் அந்த வாலிபனைச் சமாளிக்க வேண்டுமென்று சொல்லி, பொற்காசுகள் தந்தான். நாங்கள் செய்தோம்" என்று பதிலளித்தான்.


இப்பொழுது பஞ்சவனுக்கு எல்லாமேப் புரிந்துவிட்டது. தனது கவனத்தைத் திசை திருப்புவதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சியில் சிக்கி, இன்று எல்லாம் இழந்து நிற்பது, அவனுக்குப் புரிந்தது.

"சூழ்ச்சியை செய்தவன் அரசனாகி விட்டான். அவனுக்குத் துணை நின்ற சுனந்தன், அமைச்சராகி விட்டான். அடி வாங்கினாலும் மிதி வாங்கினாலும், அந்த மல்யுத்த வீரனுக்கு, அவனுக்குத் தேவையான பணம் கிட்டிவிட்டது. ஆனால், நல்லாவா இன்று காட்டில் திரிகிறோம்... நம்மை அறியாமல் பின்னப்பட்ட இந்த சூழ்ச்சியில், நமது உழைப்பையும் நேரத்தையும் சிந்தனையையும் கொடுத்து நாமல்லவா வருந்துகிறோம்” என்று கண்ணீர்விட்டு வருந்தினான்.

ஆனால், வருந்தி என்ன பயன் ?

உங்களுக்கும், உங்கள் வாழ்க்கையில் ஆயிரம் லட்சியங்கள் இருக்கும். உங்களுக்கான போட்டிகளும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். ஆனால், அதில் மட்டுமே உங்கள் கவனத்தை நீங்கள் செலுத்தும்படி இந்த உலகம் உங்களை விடப் போவதில்லை. உங்களைச் சுற்றி ஆயிரம் விஷயங்கள் நடக்கும். அதில் உங்களுக்குப் பயனுள்ளதாக சிலவும், பிறருடைய சுயலாபத்துக்காகச் செய்யப்பட்டதாகச் சிலவும் இருக்கும். எது எது எப்படிப்பட்டது என்பதை அறியும் அறிவை நீங்கள் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணர்ச்சியைத் தூண்டி, உடலையோ, மனதையோ உளைச்சலுக்கு ஆளாக்கும் எதையும், சீக்கிரமாகக் கண்டறியுங்கள். அவற்றால், இழப்பு உங்களுக்கு மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தேவையில்லாத எதிலும் உங்கள் கவனத்தை அதிகம் வைக்காது, உங்கள் லட்சியத்தில் மட்டுமே உங்கள் கவனத்தை வைத்து, அதில் மட்டுமே உங்கள் உழைப்பைக் கொடுங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1357.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License