இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

நான்கு ரகசியங்கள்


ஒரு பெரிய ஆலமரத்தடியில் ஞானி ஒருவர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார்.

அந்த ஊரிலிருக்கிற மக்கள் நிறையபேர், அவரிடம் வந்து தங்களது குறைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு நாள், ஒரு வியாபாரி அவரைப் பார்க்க வந்தார். அவருக்குத் தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டுப் பெரிய அளவில் மனக்கஷ்டத்தோடு இருந்ததையும் அந்த ஞானியிடம் பகிர்ந்து கொண்டார்.

அதைக் கேட்டபின் அந்த ஞானி, தனது மூட்டைக்குள்ளிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்து அந்த வியாபாரியிடம் கொடுத்து, "இதில் நான்கு ரகசியங்கள் இருக்கின்றன. இவற்றால், நீ நிச்சயம் உன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தைத் தொட முடியும்" என்று சொன்னார்.

அவனும் மிக ஆசையோடு அதை வாங்கிக் கொண்டு, தனது வீட்டுக்குத் திரும்பினான்.

வீட்டுக்கு வந்தவுடன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதில், நான்கு பொருட்கள் இருந்தன. ஒரு மணி, ஒற்றை ருபாய் நாணயம், ஒரு சிப்பி, ஒரு வெண்முத்து ஆகியவை இருந்தன.

அதையெல்லாம் பார்த்ததும், அந்த வியாபாரிக்கு ஒரு பெரிய ஏமாற்றம். ஏதாவது தங்கம், வெள்ளின்னு இருந்திருக்கலாம். அல்லது ஒரு சாமி சிலையாவது இருந்திருக்கலாம். “இது என்ன ? எந்தத் தொடர்புமில்லாமல் ஏதேதோ இருக்கிறதே” என்று வருந்தினான்.

ஆனாலும், அதற்குள் ஏதோ புதிர் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அதனால், மறுபடியும் அந்த ஞானியைச் சந்திக்கச் சென்றான்.


அந்த ஞானியோ, "நாளை வா" என்று சொன்னார்.

அடுத்த நாளும், அந்த வியாபாரி அந்த இடத்துக்குச் சென்றார்.

அடுத்த நாளும் இதே தான். "நாளைக்கு வா" என்று சொன்னார் ஞானி.

வியாபாரி மறுபடியும் வந்தான். இந்த ஞானியும் சொல்வதாக இல்லை. அந்த வியாபாரியும் விடுவதாக இல்லை. இப்படியேப் பத்து நாள்கள் ஆகிவிட்டன.

பதினோராவது நாள். அன்று அந்த ஞானி, அந்த ஊரை விட்டுக் கிளம்பும் நாள், அதுதான்.

அன்று எப்படியும் தனக்கான பதிலை அவர் சொல்லுவார் என்ற நம்பிக்கையில் அந்த வியாபாரி வந்தார்.

அந்த ஞானியும் அவரிடம் அந்தப் பெட்டியைத் திறக்கும்படிச் சொன்னார். அன்று பார்த்தது போலவே, அந்தப் பெட்டியில் ஒரு மணி, ஒற்றை ருபாய் நாணயம், ஒரு முத்து ஆகியவை இருந்தன.

சிரித்துக்கொண்டே, அவற்றுக்கு விளக்கம் சொன்னார் அந்த ஞானி.

அந்த மணி, காலத்தைக் குறிக்கிறது. அந்த ஒற்றை ருபாய் நாணயம், செல்வதைக் குறிக்கிறது. அந்தச் சிப்பியும், அந்த முத்துக்களும் வார்த்தைகளைக் குறிக்கின்றன.

அந்த மணி, காலத்தைக் குறிக்கிறது. முதலில், ஒரு மனிதன் தனது நேரத்தைச் சரியாகக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். தனது நேரத்தைச் சரியாகக் கையாள்கிறவன், எல்லாவற்றையுமே சரியாகக் கையாள்கிறான்.

இரண்டாவது, அந்த ஒற்றை ருபாய் நாணயம். ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் செல்வத்தையும் சரியாகக் கையாள வேண்டும். உழைத்துச் சேர்க்கும் செல்வத்தை எப்பொழுது எப்படி எதற்குச் செலவழிக்க வேண்டும் என்பதை யோசித்துச் செயல்பட வேண்டும்.

அதே நேரத்தில், எவ்வளவுதான் செல்வத்தைச் சேர்த்தாலும், இறுதியில் இந்த ஒற்றை ருபாய் நாணயம் கூட நமக்குச் சொந்தமில்லை என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஞாபகம் வைத்தால் மட்டுமே, வாழ்வில் நிம்மதியும் இருக்கும்.

மூன்றாவது, அந்த முத்துக்கள். மூழ்கியெடுக்கும் முத்துக்களைப் போல, நீ பயன்படுத்தும் வார்த்தைகள் இருக்க வேண்டும். என்னதான் முத்தாக இருந்தாலும், தேவையில்லாத இடத்தில் அதை வீசி எறியக் கூடாது. மதிப்பு இருக்காது. அதைப்போலத்தான் வார்த்தைகளும். தேவையில்லாத இடத்தில், பேசக்கூடாது. தேவையான இடத்தில், ஆராய்ந்து அளந்து பேச வேண்டும்.

"இவைதான் நான் சொன்ன ரகசியங்கள்" என்று சொன்னார் அந்த ஞானி.


"நான்கு ரகசியங்கள் என்று சொன்னீர்களே. அந்த நான்காவது ரகசியம் என்ன ?" என்று கேட்டான் அந்த வியாபாரி.

"இந்த மூன்று ரகசியங்களையும் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அதை செயல்படுத்தவும் தெரிய வேண்டும் " என்று சொல்லி முடித்தார் அந்த ஞானி.

நாம் பல நேரங்களில், நேரத்தை வீணடித்த பின்தான் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். பணத்தை விரயம் செய்த பின்தான், பணத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். கோபத்தில் வார்தையைப் பேசிவிட்டுக் காயப்படுத்திய பின்னரோ, ரகசியங்களை சொல்லிவிட்டு துரோகத்தை அனுபவித்த பின்னரோதான், வார்த்தைகளின் முக்கியத்துவத்தை அறிகிறோம்.

ஆக மொத்தத்தில், எல்லாம் கைமீறிப் போன பின்னர்தான், அதனதன் முக்கியத்துவமேப் புரிகிறது. அந்த மாதிரி இல்லாமல், முன்னரே அவற்றின் முக்கியம் அறிந்து செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால், உண்மையோடு இருந்தால், விடாமுயற்சியோடு செயல்பட்டால், நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1358.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License