இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

பாண்டவர்களில் இறப்பின்றி சொர்க்கம் சென்றது யார்?


மகாபாரத போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகளுக்கு பிறகு காந்தாரியின் சாபத்தால் யாதவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

அதன் விளைவாக அவர்களது குலம் முற்றிலும் அழிந்து போனது.

கிருஷ்ணர் அதைத் தடுக்கவில்லை.

தன்னுடைய அவதாரத்தின் இறுதிக்காலம் முடிவுக்கு வருவதை உணர்ந்து ஒரு மரத்தின் அடியில் கால்களை நன்றாக நீட்டியபடி படுத்திருந்தார்.

அப்போது வேடன் ஒருவனின் அம்பு கிருஷ்ணனின் பாதத்தில் பாய்ந்து அவரது உயிரைக் குடித்தது.

கிருஷ்ணன் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தில் இருக்கும் பாண்டவர்களை எட்டியது.

தங்களுக்கும் முடிவு காலம் நெருங்கியதை உணர்ந்த தர்மர் துறவற வாழ்க்கைக்கு தயாரனார். தர்மருடன் அவரது சகோதரர்களும், திரெளபதியும் துறவற வாழ்க்கைக்கு தயாரானார்கள்.

கிருஷ்ணனின் மறைவு அனைவரையும் உலகப் பற்றிலிருந்து விடுபட வைத்தது.

அர்ச்சுனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிய பாண்டவர்களும், திரெளபதியும் இமயமலையைத் தாண்டி மேரு மலைக்கு மரவுரி தரித்துக்கொண்டு பயணித்தார்கள்.

அந்த மலையைத் தரிசித்துக் கடப்பவர்கள் மனித உடலோடு சொர்க்கலோகத்தை அடைவார்கள்.

அதனால் பாண்டவர்களும் ஆசைகளையும் உலக வாழ்க்கையையும் வெறுத்து மோட்சத்தைத் தேடியே அங்கு பயணித்தார்கள்.

அவர்களது இறுதிக்காலத்தை அவர்களே தீர்மானித்தப்படி மலையைக் கடந்து வந்தார்கள். அவர்களுடன் அவர்கள் வளர்த்து வந்த நாயும் பிரியாமல் சென்றது.

அந்த யாத்திரையில் செல்பவர்கள் பின்னாடி வருபவர்களைத் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி. அதனால் முன்னால் தர்மர் செல்ல அவரைப் பின் தொடர்ந்து பீமன், அர்ச்சுனன், நகுலன், சகா தேவன், திரெளபதி என ஒவ்வொருவரும், அவர்கள் பின்னால் இறுதியாக நாயும் சென்றது.

பல நாட்களுக்குப் பிறகு மேருமலையை அடைந்த பாண்டவர்கள் அதைத் தரிசித்து சென்றார்கள்.

அதன் பிறகு திரெளபதி சோர்ந்து கீழே விழுந்து இறந்து விட்டாள்.

திரெளபதி இறந்ததும் அதிர்ச்சி அடைந்த பீமன், அண்ணா திரெளபதி விழுந்துவிட்டாளே ஏன் அண்ணா என்றான்.

“தர்மத்தின் படி அவள், ஐந்து கணவர்களிடமும் பாசத்தை ஒரே மாதிரி காட்டியிருக்க வேண்டும். ஆனால் அவள் அர்ச்சுனனிடம் மட்டும் கூடுதலாக அன்பை வைத்திருந்தாள். அதனாலேயே அவளால் இந்தப் பயணத்தை நம்மோடு தொடரமுடியவில்லை” என்று சொன்னார்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் சகாதேவன் கீழே விழுந்தான்.

“மீண்டும் தர்மனிடம், சகாதேவன் நம்மில் ஒருவனாயிற்றே. அவன் ஏன் கீழே விழுந்தான்?” என்று பீமன் கேட்டான்.


“சகாதேவனுக்கு தான் மட்டுமே சாஸ்திர அறிவு படைத்தவன் என்னும் கர்வம் உண்டு. அந்த கர்வம்தான் அவனை கீழே இறக்கியது” என்றார் தர்மர் திரும்பிக் கூடப் பார்க்காமல்.

அடுத்ததாக அர்ச்சுனனும் வீழ்ந்தான்.

“வில் வித்தையில் தன்னை மிஞ்ச யாருமே இல்லை என்றதால் அர்ச்சுனனும் கீழே விழுந்துவிட்டான்” என்றார் தர்மர் திரும்பி பார்க்காமலேயே.

பிறகு தர்மர், பீமன், நகுலன் அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.

இன்னும் சிறிது தூரம் கடந்ததும் நகுலன் விழுந்தான்.

உடனே பீமன் தர்மரிடம், “ நகுலன் ஏன் விழுந்தான் அண்ணா? அவன் எந்தத் தவறும் செய்யவில்லையே” என்றான்.

“நகுலனிடமும் ஒரு குணம் உண்டே. அவன்தான் அழகில் சிறந்தவன் என்ற கர்வம் இருந்ததே அது போதாதா?” என்றபடி தர்மர் பயணத்தைத் தொடர்ந்தார்.

பேசிக்கொண்டே வந்த பீமன் தனக்கும் தலை சுற்றுவதைப் போல் உணர்ந்தான்.

“என்னாலும் வரமுடியவில்லை அண்ணா. ஆனால் நான் என்ன தவறு செய்தேன்?” என்றபடி விழுந்தான்.

“ஏனெனில் நீதான் பலசாலி என்று நினைத்துக்கொண்டிருக்கிறாயே...” என்றபடி தர்மன் தன் பாதையில் பயணித்தார்.

இப்போது எஞ்சியிருந்தது தருமரும், அவருடைய நாயும் மட்டுமே.

தர்மர் மேருமலையின் உச்சியை நெருங்கிய போது, தேவேந்திரன் இந்திரலோக விமானத்துடன் வந்திருந்தான். தர்மர் எதுவும் சொல்லாமல் ஏறிய போது, அவருடன் பின் தொடர்ந்த அவரது நாயும் ஏற முற்பட்டது.

ஆனால் தேவேந்திரன் நாயைத் தடுத்து, “சொர்க்கத்துக்குள் நாய்க்கு அனுமதி இல்லை” என்றான்.

தர்மர் எதுவும் சொல்லாமல் காலை எடுத்துவிட்டார்.

“ஏன்?” என்ற தேவேந்திரனிடம், “என்னை நம்பி வந்த நாயை விட்டுவிட்டு, நான் மட்டும் எப்படி சொர்க்கத்துக்கு வரமுடியும்? நானும் இங்கேயே இருக்கிறேன்” என்றான்.


தர்மருடன் வந்த நாய் மறைந்து அங்கு தருமதேவனே நின்றார்.

“எத்தகைய சூழ்நிலையிலும் தருமநெறி தவறாத உன்னை, சோதிக்கவே நான் இத்தகைய சோதனையைச் செய்தேன். ஆனால், நீ எப்போதும் தருமவானாகவே இருந்தாய். மகிழ்ச்சியோடு சொர்க்கலோகமே உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

சோதனைகள் எவ்வளவு வந்தாலும் தரும நெறி தவறாமல் இருந்தால், இறுதிக்காலத்தில் நற்பேறைப் பெறலாம் என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் என்னவாக இருக்க முடியும்?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1368.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License