திரௌபதிக்கு தனது வயது எண்பதுக்கு மேல் ஆனது போல இருந்தது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கூட...
அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி விதவைகள் அதிகமாக இருந்தனர். ஒரு சில ஆண்கள் மட்டுமேக் காணப்பட்டனர்.
அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி, அஸ்தினாபுரம் அரண்மனையில் அசையாமல் வெற்றிடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் அந்த அறைக்குள் நுழைய, திரௌபதி ஓடி வந்து கிருஷ்ணனிடம் ஒட்டிக் கொண்டாள்.
கிருஷ்ணா அவள் தலையைத் தடவிக் கொடுக்கிறார். அவளோ அழத் தொடங்கினாள்.
நேரம் மெல்ல நகருகிறது.
கிருஷ்ணர் அவளிடமிருந்து விலகி, அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தார்.
"திரௌபதி, என்ன நடந்தது? ஏன் கவலையாக இருக்கிறாய்?"
"ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா..."
“விதி மிகவும் கொடூரமானது பாஞ்சாலி. நாம் நினைப்பது போல் வேலை செய்யாது. அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது. முடிவுகளையும் மாற்றுகிறது. நீ பழி வாங்க நினைத்தாய், வெற்றி பெற்றாய், திரௌபதி! உன் பழிவாங்கல் முடிந்தது... துரியோதனனும் துச்சாதனனும் மட்டுமல்ல, கௌரவர்கள் அனைவரும் மடிந்து விட்டனர். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்”
உடனே திரௌபதி, "சகோதரா, என் காயங்களைத் ஆற்ற வந்தீர்களா? அல்லது அதனை அதிகரிக்க வந்தீர்களா?" என்றாள்.
கிருஷ்ணர், “இல்லை, திரௌபதி உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன். எல்லாம் நமது தொலைநோக்குப் பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன்” என்றார்.
திரௌபதி, “அதனால் என்ன? இந்தப் போருக்கு நான்தான் முழுப்பொறுப்பா கிருஷ்ணா?” என்றாள்.
கிருஷ்ணர், “இல்லை, திரௌபதி நீ மட்டுமே காரணம் என்று கருதாதே... ஆனால், உன் செயல்களில் நீ கொஞ்சம் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்திருப்பாயானால், நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட் டாய்...” என்றார்.
திரௌபதி, “நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா?” என்றாள் சோகமாக.
உடனே கிருஷ்ணர், “நீ நிறைய செய்திருக்க முடியும். உனது சுயம்வரம் நடந்த போது, கர்ணனை அப்படி அவமானப்படுத்தாமல், போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளித்திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந்திருக்கக் கூடும். அதற்குப் பிறகு குந்தி, உன்னை ஐந்து கணவர்களுக்கு மனைவியாக்கும்படி கட்டளையிட்டதை... அப்போது ஏற்றுக் கொள்ளாதிருந்தாலும் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும். அதற்குப் பிறகு உன் அரண்மனையில் துரியோதனனை அவமானப்படுத்தினாய்... பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள் என்று. அவ்வாறு நீ சொல்லாதிருந்திருந்தால் நீ மானபங்கப் பட்டிருக்க மாட்டாய்... அப்போதும், ஒருவேளை, சூழ்நிலைகள் வேறுவிதமாக இருந்திருக்கும். நம் வார்த்தைகள் கூட விளைவுகளுக்கு பொறுப்புதான் திரௌபதி...” என்றார்.
திரௌபதியும் அதனை ஒப்புக் கொண்டார்.