போர் நடந்துகொண்டு இருந்தது.
இரண்டு பக்கமும் இரு நாட்டு வீரர்களும் ஒருத்தரையொருத்தர் சுட்டுகிட்டு இருந்தாங்க. அப்போது ஒரு வீரர் தன்னோட நண்பர் தூரத்தில் எதிரிகளால் சுடப்பட்டு விழுவதைப் பார்த்தார்.
உடனே, தன்னோட நண்பரைத் தூக்கிட்டு வருவதற்காகப் படைத்தலைவரிடம் அனுமதி கேட்டார்.
அந்தப் படைத்தலைவர் அனுமதி தந்தார். ஆனால், “நீங்க அங்கேப் போவதால், ஒரு பயனும் இல்லை. அவர் இறந்திருப்பார். மேலும், நீங்க அங்கேப் போய் விட்டு வருவதற்குள் உங்களுக்கும் பயங்கரமாக அடிபட்டு விடும்” என்று சொன்னார்.
அதைப் பொருட்படுத்தாமல் அந்த வீரர் அங்கேப் போய்த் தன்னோட நண்பரை தூக்கிட்டு வந்தார்.
அவர் நண்பரைச் சோதித்த பிறகு படைத்தலைவர் சொன்னார்:
“நான் முன்பேச் சொன்னேனல்லவா... நீங்க போவதால் ஒரு பயனும் இல்லை என்று உங்க நண்பர் உயிரோட இல்லை, உங்களுக்கும் மோசமாக அடிப்பட்டிருச்சே...”
ஆனால் அந்த வீரர் அமைதியாகப் பதில் சொன்னார்.
“பயன் இருக்கு சார்... நான் அங்கேப் போன போது, என் நண்பர் உயிரோடதான் இருந்தார்... எனக்கு திருப்தி கிடைத்தது. அவர் என்னிடம், ‘நண்பா, நீ எப்படியும் வருவாய் என்று எனக்குத் தெரியும்...”
வாழ்க்கையில் பல வேளைகளில் ஒரு விசயத்தால் பயன் இருக்கிறதோ இல்லையோ, அது நீங்க பார்க்கிற பார்வையிலதான் இருக்கு... உங்க மனது சொல்வதைக் கேளுங்க.. அப்போதுதான் அதைச் செய்யவில்லையே என்று பின்னாடி நீங்க வருத்தப்படாமல் இருக்க முடியும்.
உண்மையான நண்பர்கள், நட்பைத் தவிர எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதையும் இங்கு புரிந்து கொள்ளலாம்.