ஒரு வீட்டிலேத் திருமணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டி ஒரமாக நின்ற வேலைக்காரனை அங்கு வந்த அவனது நண்பன் அழைத்தான்.
“இங்கே எப்படி உன் வேலை?” என்று கேட்டான்.
அதற்கு வேலைக்காரன், “சாதாரண நாளிலேயே இந்த வீட்டு வேலை இழவு வீட்டு வேலை மாதிரி இருக்கும். இப்போ கலியாண வீட்டு வேலை, பேரிழவாய் இருப்பதற்குக் கேட்பானேன்..." என்றான்.
“திருமண வீட்டிலே இழவு, பேரிழவு என்று பேசலாமா?” என்று நண்பன் கேட்டான்.
அதற்கு அவ்வேலையாள், “நேற்று சீர்வரிசை கொண்டு வரும் போது, எல்லோரும் பழத்தட்டு, பாக்கு, கற்கண்டு, பூத்தட்டு தூக்கிக் கொண்டார்கள். என் தலையிலே தேங்காய்த் தட்டைத் தூக்கி வைத்து விட்டார்கள். நான் என்ன செய்வது? பிணத்தைத் தூக்குகிற மாதிரி, அவ்வளவு கனமாக இருந்தது. தூக்கித்தானே நடக்கணும்" என்று சொன்னான்.
இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த, திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் ஒரு பெரியவர், “என்னப்பா, தாலி கட்டப் போகிற சமயத்திலே இழவு, பேரிழவு, பிணம் என்று பேசலாமா?” என்று கேட்டார்.
அதற்கு வேலைக்காரன், “போங்கையா தாலி கட்டியதும் நீங்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுங்க. என் பாடல்ல இங்கே தாலி அறுது” என்று சொன்னான். அதற்கு ஒன்றும் பேசாமலேப் பெரியவர் எழுந்து போய் விட்டார்.
“எதை, எங்கு, யார், எவரிடத்தில், எப்படிப் பேசுவது?” என்பதை இன்னும் பலர் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கு இது ஒரு சான்று.