இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

படிக்காமல் பண்டிதர் ஆக முடியுமா?


பீர்பாலின் அறிவுத் திறமையால் பலனடைந்தவர் பலர். சிலர் தனது முட்டாள்தனமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பீர்பாலின் அறிவுத்திறமையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினர்.

அப்படிப்பட்டவர்களுக்குப் பீர்பால் சரியான பாடம் புகட்டத் தவறியதே இல்லை.

ஆக்ராவில் பீர்பால் பெரும் புகழோடு விளங்கிய சமயம் நகரில் கிரிதலால் என்னும் பெயரில் பெரும் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவர்கள் முன்னோர்கள் சம்பாதித்து வைத்துவிட்டு சென்ற சொத்துக்களை வைத்துக்கொண்டு அவன் சுகமாக வாழ்ந்து வந்தான்.

ஆனால், கிரிதலால் படிக்காதவன். சிறிய வயதிலிருந்தே அவன் சரியாகப் பள்ளிக்கு சென்றதில்லை. அவனுடைய தந்தை அவனை எவ்வளவோ கண்டித்தும் பார்த்தார் கடைசியில் எப்படியோத் தொலையட்டும் என்று விட்டுவிட்டார்.

கிரிதலாலுக்கு இருபது வயது ஆன பொழுது, அவனுடைய தந்தை இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு, முன்னோர்கள் சம்பாதித்தச் சொத்துக்கள் எல்லாம் கிரிதலலாவுக்குச் சொந்தமாயின. எனவேப் படிப்பு இல்லை என்பதைத் தவிர, அவனுக்கு வேற எந்தக் குறையும் இல்லை. கிரிதலாலின் முன்னோர்கள் அனைவரும் நன்கு கற்று அறிந்த பண்டிதர்களாக இருந்தனர்.


எனவே, அவனுடைய குடும்பத்தை ஊர் மக்கள் அனைவரும் பண்டிதர் குடும்பம் என்று அழைத்து வந்தனர்.

கிரிதலால் பணக்காரனாக இருந்ததால் அவனிடம் பரிசில் பெறுவதற்காக பல பண்டிதர்களும், பல கவிஞர்களும் அவனை நாடி வந்தனர். ஆனால், கிரிதலால் படிக்காமல் இருந்ததால் அவர்களுடைய கவிதைகளும், அவர்களுடைய பேச்சும் அவனுக்குச் சரியாகப் புரியவில்லை.

அப்போதுதான் அவனுக்குப் படிப்பின் அருமை புரிய வந்தது. இளமையிலேயேத் தானும் நன்றாக படித்திருந்தால் கற்று அறிந்த பண்டிதர்களுடன் தானும் சரிக்கு சமமாக அமர்ந்து இருந்திருப்பேன் அல்லவா என்று எண்ணி ஏங்கினான். அதோடு தனது காலத்தில் மறைந்து விட்ட பண்டிதர் குடும்பம் எனும் தனது குடும்பப் பெயரை மீண்டும் நிலைநாட்டவும் அவன் விரும்பினான்.

எனவே, எப்படியாவது பண்டிதர் ஆகி விட வேண்டும் என்னும் முடிவில், வயது கடந்த காலத்தில் கிரிதலால் படிக்க தொடங்கினார். ஆனால், அவன் எவ்வளவுதான் படித்தும், எதுவும் அவன் மண்டையில் ஏறவில்லை.

ஆனால், கிரிதலால் தனது முயற்சியை விட்டுவிடவில்லை. தான் எப்படியாவது ஒரு பண்டிதராகி விட வேண்டும் என்றும், எல்லோரும் தனது முன்னோர்களை அழைத்தது போலவே தன்னையும் பண்டிதர் என்று அழைக்க வேண்டும் என்று விரும்பினார்.

பண்டிதர் என்னும் பெயரை பெறுவதற்காக, தனது சொத்துக்களைச் செலவிடவும் அவன் தயாராக இருந்தான். எவ்வளவுதான் முயற்சி செய்தும் யாரும் அவனைப் பண்டிதர் என்று அழைக்க யாரும் முன் வரவில்லை. ஒருவேளை, அக்பர் சக்கரவர்த்தியின் மந்திரியான பீர்பாலிடம் சென்றால், நான் பண்டிதராக அவர் ஏதாவது யோசனை சொல்லக் கூடும் என்று கிரிதலால் நினைத்தான்.

கிரிதலால் ஒரு நாள் பீர்பாலிடம் சென்று, ”ஐயா எல்லோரும் என்னைப் பண்டிதர் என்று அழைக்கத் தாங்கள்தான் ஏதாவது ஒரு யோசனை கூற வேண்டும்” என்று கேட்டான்.

பீர்பால் கிரிதலாலையைப் பற்றியும், அவனது ஆசையைப் பற்றியும் ஏற்கனவே நிறையக் கேள்விப்பட்டு இருந்தார்.

அவர் கிரிதலாலைப் பார்த்து, “ஐயா நீங்கள் நிறைய படித்து கல்வியில் சிறந்தவராக ஆகிவிட்டால், எல்லோரும் உங்களைப் பண்டிதர் என்று அழைப்பார்கள்” என்று கூறினார்.

“ஐயா நானும் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்துவிட்டேன். ஆனால் ஒன்றுமே மண்டையில் ஏறவில்லை. எனவேப் படிக்காமலே எல்லோரும் என்னைப் பண்டிதர் என்று அழைக்க, தாங்கள் தான் ஏதாவது ஒரு யோசனை கூற வேண்டும்” என்று கிரிதலால் பீர்பாலிடம் கெஞ்சினான்.

பீர்பால் சற்று நேரம் யோசித்தார். பின்னர், ஏதோ முடிவுக்கு வந்தவராக, “சரி இனிமேல் எல்லோரும் உங்களைப் பண்டிதர்” என்று அழைப்பார்கள் என்றார்.


இனி நீங்கள் போகலாம் என்று கூறி கிரிதலலாலை அனுப்பி வைத்தார்.

பின்னர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்களைக் கூப்பிட்டு, “அதோ ஒருவர் போகிறாரே, அவர் பின்னால் சென்று அவரைப் பண்டிதர் பண்டிதர் என்று அழைக்க வேண்டும். அவர் அடிக்க வந்தாலும் ஓடி விடக்கூடாது அவரை தொடர்ந்து பின்னால் சென்று பண்டிதர் பண்டிதர் என்று சத்தம் போட வேண்டும்” என்று பீர்பால் கூறினார்.

பீர்பால் சொன்னபடி அந்த சிறுவர்கள் கிரிதலால் பின்னால் சென்று “ஓய் பண்டிதரே, பண்டிதரே, நலமா?” என்று கேலியாகக் கேட்டனர்.

“ஏய் பண்டிதரை அவ்வாறு கேலி செய்தால் அவருக்கு கோபம் வந்துவிடும்” என்று சொன்னான் அந்த சிறுவர்களில் ஒருவன்.

சிறுவர்கள் கேலி செய்வதை கண்ட கிரிதலாலுக்கு உண்மையிலேயேக் கோபம் வந்துவிட்டது. அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்துக் கோபத்துடன் சிறுவர்கள் மீது வீசினான்.

மூலைக்கு ஒருவராக சிதறி ஓடிய சிறுவர்கள், பின்னர் மீண்டும் திரும்பி வந்து “ஓய் பண்டிதரே பண்டிதரே” என்று முன்பை விட உரத்த குரலில் கத்தினர்.

சிறுவர்கள் பின்னால் கத்திக் கொண்டு செல்வதையும், கிரிதலால் அவர்களைத் துரத்துவதற்காகக் கற்களை எடுத்து வீசுவதையும் கண்ட அந்த வழியாகச் சென்ற பெரியவர்கள் சிலர், கிரிதலால் உண்மையிலேயே ஒரு பைத்தியக்காரன் என்று கருதினர்.

அவர்களும் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு கிரிதலாலைப் பார்த்து, “பண்டிதர் பண்டிதர்” என்று கத்தினார்கள்.

கிரிதலாலுக்கு பண்டிதராகும் ஆசையே வெறுத்து விட்டது. எல்லோரும் தன்னை பண்டிதர் என்று அழைக்காவிட்டாலும் கூட பரவாயில்லை. நிம்மதியாக வாழ விட்டால் போதும் என்று நினைக்கத் தொடங்கினான்.

ஆனாலும் அன்று முதல், அவனுக்குப் பண்டிதர் என்றும் பெயர் நிலைக்கத் தொடங்கிவிட்டது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1615.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License