ஒரு கிராமத்தில் சன்னியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதுமே உண்மையேப் பேசுவார்.
அவர் வசித்த தெருவழியே ஒரு நாள் ஒரு பசுமாடு ஓடியது. சில வினாடிகளில் அந்த வழியே மனிதன் ஒடி வந்தான்.
ஓடி வந்த மனிதன், “ஐயா, இந்த வழியே ஒரு பசுமாடு ஓடியதா?" என்று கேட்டான்.
எப்போதும் உண்மையே பேசும் குரு, “மாடு இந்த வழியேச் சென்றது” என்பதைச் சுட்டிக் காட்டினார்.
மனிதனும் மாடு சென்ற வழியே ஓடினான். தொலைவில் மறைந்து கொண்டிருந்த மாட்டைக் கண்டதும், அந்த மனிதன் அதை வெட்டிவிட்டான்.
காரணம் அவன் ஒரு கசாப்புக்கடைக்காரன்.
வெட்டுண்டு கீழே விழந்த மாடு இறக்கும் முன், கசாப்புக் கடைக்காரனிடமிருந்து தப்பிச் சென்ற, தன்னை அவனிடமேக் காட்டிக் கொடுத்த சன்னியாசியைச் சபித்தது.
பல வருடங்கள் சென்ற பின்பு சன்யாசி மரணமடைந்தான்.
ஊர் மக்கள், “உண்மையேப் பேசியவர் இவர். இவர் ஆத்மா சொர்க்கத்தில் வாழும்” என்று புகழ்ந்தனர்.
ஆனால், சன்யாசியின் ஆன்மாவை எடுத்துச் சென்றவர்கள் யம தூதுவர்கள்.
இது சன்னியாசிக்குக் கூட மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
எமன் முன் நீதி கோரி நின்ற சன்யாசி, “நான் என்ன பாவம் செய்தேன்?” என்றார்.
“நீர் ஒரு பொய் சொன்னீர். அதனால் பாவம் செய்து இங்கு வந்துள்ளீர். ஒரு பசுமாட்டைத் தேடி வந்தவனிடம் அது இருக்குமிடத்தை நீர் காட்டினீர்” என்றான் எம தர்மன்.
“நான் பார்த்த உண்மையைத்தானேச் சொன்னேன். அது எப்படிப் பொய்யாகும்?” என்று வாதிட்டார் சன்னியாசி.
“பார்த்ததை எல்லாம் அப்படியே சொல்வது வாய்மை அல்லது உண்மையாகிவிடாது. பிறருக்குத் துன்பம் நேராமல் பேசப்படும் சொற்கள்தான் உண்மை அல்லது சத்யம் எனப்படும்” என்றான் எமதர்மன்.
“நீர் பேசிய வார்த்தையால் உயிருக்குத் தப்பிவந்த வாயில்லாத உயிரினம் ஒன்று கொடூரமாக மரணமடைந்தது. அதன் சாபம் உம்மைப் பிடித்தது. மாடு எங்கே என்று கேட்டவனிடம் நீ யார்? எதற்காக மாட்டை விரட்டுகிறாய்? என்று கேட்டிருந்தால் அது விவேகம். அதைத் தெரிந்து கொண்டு, மாட்டுக்குத் தீமை வராமல் பதில் கூறியிருந்தால் அதுவே வாய்மை” என்றான் எமதர்மன்.