இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

பயனை எதிர்பார்க்கலாமா?


ஒரு கிராமத்தில் இரண்டு துறவிகள் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் சிறந்த தபஸ்விகள். அவர்களை அந்தக் கிராமத்து மக்கள் அனைவரும் பெரிதும் போற்றி, அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து வந்தனர்.

எப்போதும் தியான வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அந்தத் துறவிகள், அவ்வப்போது அக்கிராம மக்களுக்கு நல்லுரை வழங்கி வந்தனர்.

துறவிகளில் ஒருவர் வயதில் மூத்தவர். மற்றொருவர் இளையவர்.

இருவரும் இரவில் நீண்ட நேரம் தியானம் செய்வது வழக்கம்.

அவர்கள் நடுநிசியையும் தாண்டி தியானம் செய்வார்கள்.

இருவரும் கிராமத்துக்கு வெளியில் தனித்தனி ஆசிரமங்களில் வாழ்ந்து வந்தனர்.

அது மின்சாரம் இல்லாத காலம். இரவு வெகு நேரம் விழித்திருப்பதற்கு வெளிச்சம் வேண்டும் அல்லவா? அதற்கு அவர்கள் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தினர்.

அந்த நாட்டில் இறைவழிபாடு செய்யும் போது, ஆலிவ் எண்ணெய் ஊற்றிய விளக்குகளைப் பயன்படுத்துவது வழக்கம்.

துறவிகள் இருவரும் அதிக நேரம் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்ததால் அதிக எண்ணெய் தேவைப்பட்டது.

எண்ணெய்க்கு அடிக்கடி கிராம மக்களை ஏன் தொல்லை செய்ய வேண்டும்? நாமே எண்ணெய்க்கு வழி செய்து கொண்டால் என்ன?' என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது.


அதன்படியே இருவரும் தங்கள் ஆசிரமத்தில் ஆலிவ் மரங்களை வளர்க்கத் திட்டமிட்டனர். 'மரம் வளர்ந்த பிறகு தேவையான எண்ணெயை அதிலிருந்தே எடுத்துக் கொள்ளலாம்!" என்பது அவர்களின் எண்ணம்.

ஒரு நாள் இரவு வழக்கம் போல் மூத்த துறவி இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். அவர் எண்ணெய்க்காக ஆலிவ் மரம் வளர்க்க இருக்கும் தனது திட்டத்தை இறைவனிடம் தெரிவித்தார்.

அதற்கு, “சரி, ஓர் ஆலிவ் கன்றை நட்டு வளர்க்கவும்” என்று இறைவனின் குரல் அசரீரியாகக் கேட்டது.

அதோடு ஓர் ஆலிவ் கன்றும் அவர் முன்பு வந்து விழுந்தது. அந்தக் கன்றை மூத்த துறவி ஈசனின் ஆணையின்படியே தனது ஆசிரமத்தைச் சுற்றியிருந்த திறந்த வெளியில் நட்டு, அதை ஆசையோடு வளர்க்க ஆரம்பித்தார்.

அவர் தினந்தோறும் ஆலிவ் கன்றுக்குத் தண்ணீர் ஊற்றி, தேவையான உரமிட்டு, அதன் வளர்ச்சியிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்.

மூத்த துறவி செய்தது போலவே இளைய துறவியும் ஒருநாள் இரவு இறைவனிடம் விண்ணப்பித்தார்.

அவருக்கும் இறைவன் ஓர் ஆலிவ் கன்றைத் தந்தார். அதை இளைய துறவி தனது ஆசிரமத்தில் நட்டார்.

சில மாதங்கள் சென்றன. இளைய துறவியின் ஆலிவ் கன்று நன்றாகச் செழித்து வளர்ந்திருந்தது. ஆனால், மூத்த துறவியின் ஆலிவ் கன்று வாடி, பட்டுப் போகத் தொடங்கியது.

அதனால் மூத்த துறவி மனம் வருந்தினார்.

அவர், 'எவ்வளவு அக்கறையோடு இதை வளர்க்க ஆரம்பித்தேன்! ஆனால், பயனில்லாமல் கன்று இப்படி வாடி பட்டுப் போகத் தொடங்கிவிட்டதே! என் முயற்சியெல்லாம் வீணாகிவிட்டதே!' என்று தனக்குள் அடிக்கடி நினைத்து மனம் வருந்தினார்.

ஆனால் அதே சமயம் இளைய துறவி நட்ட ஆலிவ் கன்று நன்றாகச் செழித்து வளர்ந்திருந்தது.

அதைப் பார்த்த மூத்த துறவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஆதலால் அவர், 'அதன் ரகசியத்தை இளைய துறவியிடமேக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்' என்று நினைத்தார்.


மூத்த துறவி இளைய துறவியை அணுகி, "தம்பி! நான் எவ்வளவோ அக்கறை எடுத்துக் கொண்டு, என் ஆலிவ் கன்றை வளர்த்தேன். அதன் வளர்ச்சியிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தேன். அதை மிகவும் நல்ல முறையில் நான் பராமரித்தும் அது பட்டுப் போய்விட்டது. ஆனால், அதே சமயம் உனது ஆலிவ் கன்றோ மிகவும் நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கிறது. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதன் மர்மம் என்ன?” என்று வினவினார்.

அதற்கு இளைய துறவி, “அண்ணா! நான் கன்றை நட்டதோடு சரி. அதற்குத் தினமும் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் போது தண்ணீர் ஊற்றுவேன். அவ்வளவுதான். ஆனால், அந்தக் கன்றை நட்ட போதே அதை நான் இறைவனிடம் ஒப்படைத்து விட்டேன். 'இறைவா! இதன் வளர்ச்சியை நீயேக் கவனித்துக் கொள். இந்த உலகில் அனைத்தும் உன் ஆணைப்படியே நடக்கின்றன. இதில் நான் செய்வதற்கு என்ன இருக்கிறது? நான் என் பணியைச் செய்வேன், அவ்வளவுதான்! மற்றதை நீயேப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றேன். அவ்விதம் நான் மரத்தை ஆண்டவனிடம் ஒப்படைத்துவிட்டேன். அவன் கவனித்துக் கொள்கிறான். மரமும் நன்கு வளர்கிறது. அவ்வளவு தான்" என்றார்.

அதைக் கேட்ட மூத்த துறவி தன் நிலையை நினைத்து வருந்தினார். 'இவ்வளவு நாட்கள் தவம் செய்தும், இவ்வளவு வயதாகியும், என் சகோதரத் துறவிக்கு இருக்கும் இந்த மன நிலை எனக்கு வர வில்லையே! என்ன பயன்? என் சிந்தனையெல்லாம் மரத்தின் வளர்ச்சியிலேயே இருந்ததே தவிர, இறைவனிடம் இல்லையே! அதே சமயம் என் அன்பு சகோதரனோ தன் பணியைச் செய்துவிட்டு, சிந்தனையெல்லாம் இறைவனிடமே வைத்திருந்தான், பயனைக் கருதாமல் செயல் மட்டும் புரிந்தான்; பயனை இறைவனிடமே ஒப்படைத்துவிட்டான். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று அறிந்திருந்தும், அதை நான் நடைமுறையில் கொண்டு வரவில்லையே! என்று நினைத்து மனம் வருந்தினார்.

பிறகு அவர் இளைய துறவியிடம் தனது நிலையை விளக்கி, “தம்பி, நீ இன்று என் அகக்கண்களைத் திறந்துவிட்டாய். உனக்கு எப்படி நன்றி செலுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை” என்று நாதழுதழுக்கக் கூறிவிட்டு தன் இருப்பிடம் சென்றார்.

"இந்த உலகில் அனைத்தும் இறைவன் திட்டமிட்டபடியேத்தான் நடக்கிறது. நீ உன் கடமையைச் செய்; பயனைப் பற்றி நினைக்காதே" என்று

- இத்தாலி நாட்டுக் கதை

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1693.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License