இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

அந்தணனுக்கு என்ன தண்டனை?


ராமர் நாட்டை ஆண்டு கொண்டிருந்த போது ஒரு நாள் லட்சுமணனைப் பார்த்து, “லட்சுமணா! யாராவது நீதி கோரி நமது அவைக்கு வெளியே வாசலில் நின்று கொண்டிருக்கிறார்களா? பார்” என்று சொன்னார்.

லட்சுமணன் வெளியே சென்று நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்தான். யாரையும் காணவில்லை.

எனவே உள்ளே வந்து, “பிரபோ! உங்களிடம் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி நியாயம் கேட்க வந்துள்ள யாரையும் நான் காணவில்லை” என்று சொன்னான்.

அதற்கு ராமர், “அரசன் நீதியோடும் நேர்மையோடும் அரசு புரிந்தால்தான் மக்கள் நல்ல வழியில் செல்வர். ஆகவே இது விஷயமாக அரசன் மிக்க விழிப்புடன் இருக்க வேண்டும். ஆகவே மீண்டும் ஒரு நடை சென்று யாராவது என்னிடம் நியாயம் தேடி வந்திருக்கிறார்களா என்று பார்” என்று சொன்னார்.

லட்சுமணன் மீண்டும் வெளியே சென்றான். அவன் அங்கு மனிதர் யாரையும் காணவில்லை. ஆனால், ஒரு நாய் மட்டும் மிகவும் வருத்தத்துடன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான்.

லட்சுமணனுக்கு மிருகங்கள், பறவைகள் இவற்றின் மொழி தெரியும். ஆகவே நாயின் மொழியில், “ஏ நாயே! ஏன் இத்தனை வருத்தத்துடன் காணப்படுகிறாய்? உனக்கு ஏதாவது கஷ்டம் ஏற்பட்டிருந்தால் என்னவென்று தைரியமாகச் சொல்” என்றான்.

“ஐயா, நான் அரசர் ராமனைக் கண்டு என் குறையைச் சொல்ல வேண்டும்” என்று நாய் சொல்லிற்று.

உடனே லட்சுமணன் அவையில் வீற்றிருந்த ராமரிடம் சென்று, “ஒரு நாய் தங்களைக் காணக் காத்திருக்கிறது. அது தங்களிடம் ஏதோ முறையிட வேண்டுமாம்” என்று தெரிவித்தான்.

“அதை உள்ளே வரச்சொல்” என்றார் ராமர்.

ஆனால் லட்சுமணன் நாயை உள்ளே வரும்படி அழைத்ததற்கு, அது உள்ளே வர மறுத்தது. “ஐயா, கோயில், அரச சபை, அந்தணர்கள், அக்கினி, இந்திரன், வருணன், சூரியன் ஆகிய தேவர்கள் வசிக்கும் இடங்கள் இவற்றுக்கு என் குலத்தவர் செல்வது தகாது. ஆகவே ராமர் கட்டளையிட்டாலன்றி நான் உள்ளே வரக்கூடாது” என்று நாய் சொல்லியது.

லட்சுமணன் இதை ராமரிடம் சொல்ல, “நான் கட்டளையிட்டதாகச் சொல்லி, அதை அழைத்து வா” என்று சொன்னார் ராமர்.

லட்சுமணன் நாயை உள்ளே அழைத்து வந்தான்.

நாயைப் பார்த்த ராமர், “உன் குறை என்ன என்று சொல். என்னிடம் நியாயம் கேட்க உனக்கு முழு அதிகாரம் இருக்கிறது. என் அரசாங்கத்தில் என்னை வந்து நியாயம் கேட்பதற்கும் மனிதர்களுக்கு எத்தனை உரிமை உண்டோ அத்தனை உரிமை என் அரசாங்கத்திலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் உண்டு” என்று சொன்னார்.


அப்பொழுதுதான் நாயின் தலையில் யாரோ அடித்துக் காயப்படுத்தியிருப்பதை ராமர் கவனித்தார்.

நாய் அவரைப் பார்த்து, “பிரபுவே! குடிமக்களைக் காப்பாற்றுகிறவன் அரசன்தான். பிரஜைகள் தூங்கும் சமயத்தில் தான் விழித்துக் கொண்டிருந்து, அவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் காப்பாற்றுகிறவனும் அரசன்தான். ஆகவே, எனக்கு நேர்ந்த கஷ்டத்தைத் தங்களிடம் சொல்கிறேன், கேட்க வேண்டும். சர்வார்த்தசித்தன் என்ற அந்தணர் இருக்கிறார். அவர் பிட்சை வாங்கித் தம் வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவர் ஒரு காரணமுமின்றி என் தலையில் அடித்துவிட்டார்” என்றது.

உடனே ராமர் அந்த அந்தணரை அழைத்து வரச் சொன்னார்.

அந்தணர் வந்ததும் ராமர் அவரைப் பார்த்து, “நீங்கள் ஏன் இந்த நாயை அடித்தீர்கள்? உங்கள் கோபம் காரணமாகத்தான் இந்தப் பாவத்தைச் செய்தீர்கள் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார்.

உடனே அந்தணர், “நீங்கள் சொல்வது உண்மைதான், அரசே! பிட்சை வாங்குவதற்காக நான் சுற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு இன்று பிட்சை கிடைக்கவில்லை. பசி மிகவும் அதிகமாக இருந்தது. அப்போது இந்த நாய் வழியில் படுத்திருந்தது. இதை நகரும்படி சொன்னேன். இது நகரவில்லை. ஆகவே, கோபத்தினால் கையிலிருந்த கழியால் இதன் தலையில் அடித்தேன். நான் செய்தது குற்றம்தான். ஆகவே அதற்கு உரிய தண்டனையைக் கொடுங்கள். நீங்கள் என்னைத் தண்டித்தால்தான் அந்தப் பாவம் என்னை விட்டு விலகும்” என்று சொன்னார்.

உடனே ராமர் சபையோர்களைப் பார்த்து, “இந்த அந்தணருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று கேட்டார்.

சபையோர் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது, நாய், “நான் சொல்லலாமா, இவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாமென்று?” என்று கேட்டது.


“சொல்” என்று ராமர் சொல்ல, அதற்கு அந்த நாய், “இவரை ஒரு மடாதிபதியாகச் செய்துவிடுங்கள்” என்று கூறியது.

உடனே ராமர் அந்த அந்தணரை மடாதிபதியாக்கி, அவருடைய மடத்திற்கு அனுப்பி வைத்தார்.

“மடாதிபதியாவது எப்படித் தண்டனையாகும்?” என்று சபையோர் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த போது நாய், “நான் போன ஜன்மத்தில் ஒரு மடாதிபதியாகத்தான் இருந்தேன். மடாதிபதியாக இருந்த பொழுது தேவர்கள், துறவியர், குழந்தைகள், பெண்கள், பிராமணர்கள், ஏழை எளியவர் போன்றவர்களுக்காகக் கொடுக்கப்படும் பணத்தை எனக்காகச் செலவழிக்கும் சங்கடம் நேரிட்டது. அந்தப் பாவத்தினால்தான் நான் நாயாகப் பிறந்துள்ளேன்” என்று சொல்லிற்று.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1711.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License