இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

துரியோதனனுக்குத் தர்மர் யோசனை


மகாபாரதப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.

பகல் வேளையில் போரில் ஈடுபட்டாலும், சூரியன் மறைவிற்குப் பிறகு போர் நின்றதும், பாண்டவர்களும் கௌரவர்களும் பகைமை பாராட்டாமல் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது வழக்கம்.

போரில் பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகிய மூவரும் இறந்துவிட்டனர்.

இந்த நிலையில் துரியோதனன் ஒரு நாள் தர்மரிடம் சென்று, "அண்ணா! நான் போரிடும் போது என் உடலில் போர் ஆயுதங்கள் எதுவும் ஊடுருவிச் சென்று தாக்காதபடி, என் உடல் வலிமையுடன் இருப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்' என்று கேட்டான்.

தர்மர் துரியோதனனிடம் பகைமை பாராட்டாமல், கள்ளம் கபடமின்றி பின்வருமாறு கூறினார்:

"தம்பி! உன் உடலைப் போர்க் கருவிகள் ஊடுருவிப் பாயாமல் இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் உள்ளது. அதைச் சொல்கிறேன் கேள்....! உன் தாய் காந்தாரி மிகச் சிறந்த பதிவிரதை. அவள் தன் கணவன் கண்பார்வையற்றவர் என்பதால், தானும் தன் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு யாரையும் எதையும் பார்க்காமல் வாழ்ந்து வருகிறாள். எனவே, உன் தாயின் கண்கள் ஒரு தெய்வீகச் சக்தியைப் பெற்றிருக்கின்றன. அவர் யாரையாவது ஒரு முறை பார்க்க நேர்ந்தால், அப்படிப் பார்க்கப்பட்டவரின் உடல் வஜ்ரம் போன்று உறுதியும் வலிமையும் பெற்றுவிடும். அதனால் நீ உன் ஆடைகளைக் களைந்து விட்டு, உன் தாயின் எதிரில் போய் நின்று அவளைக் கண் திறந்து உன்னைப் பார்க்கும்படிச் சொல். அவள் பார்வை உன் மீது பட்டதும், உன் உடல் வஜ்ரம் போன்று உறுதியாகி விடும். அதன் பின்பு போர்க்கருவிகள் எதுவும் உன் உடலைத் துளைக்க முடியாது”


துரியோதனன் மகிழ்ச்சியுடன், “அப்படியேச் செய்கிறேன், அண்ணா !” என்று கூறி தர்மரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.

இந்தச் செய்தி அர்ஜுனனுக்குத் தெரிய வந்ததும், அவன் உடனே அதை ஸ்ரீகிருஷ்ணனிடம் கூறினான்.

'தர்மர் துரியோதனனுக்குக் கூறிய யோசனையால் பாண்டவர்களுக்குப் போரில் தோல்வி ஏற்படும்!' என்பதை உணர்ந்து ஸ்ரீகிருஷ்ணன் அதைப் பற்றி சிந்தித்தார்.

அவர் துரியோதனின் செயலைத் தடுக்க எண்ணினார்.

ஆதலால் ஸ்ரீகிருஷ்ணன், துரியோதனனின் பூஜைக்குப் பூக்களைக் கொண்டு செல்லும் தோட்டக்காரனைப் போல் வேடம் கொண்டார்.

அந்த வேடத்தில் அவர் துரியோதனனைச் சந்திக்கச் சென்றார்.

அப்போது துரியோதனன் போர்க்களத்திலிருந்து அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்தான்.

வழியில் அவனைத் தோட்டக்காரன் வேடத்தில் இருந்த ஸ்ரீகிருஷ்ணன் சந்தித்து போர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர் போல் நயமாகப் பேசினார்.


தர்மர் கூறிய யோசனையைத் துரியோதனன், தோட்டக்காரன் வடிவத்தில் வந்த ஸ்ரீகிருஷ்ணனிடம் தெரிவித்தான். “என் உடல் வஜ்ரம் போன்று ஆகப் போகிறது! ஆதலால் என்னை இனி யாராலும் வெல்ல முடியாது! போரைப் பற்றி நான் கவலையேப்படவில்லை! போரில் நான் வெற்றி பெறப் போவது நிச்சயம்!” என்று துரியோதனன் கர்வத்தோடு பேசினான்.

அதைக் கேட்டதும் தோட்டக்காரன் வடிவத்தில் வந்த ஸ்ரீகிருஷ்ணன், "அரசே! தர்மர் நெறி தவறாதவர் என்பது உண்மைதான்... இருந்தாலும் அவர் இப்போது உங்களுக்குப் போரில் எதிரி! உங்களை வென்று உங்கள் ராஜ்யத்தைக் கைப்பற்ற நினைப்பவர்! இதை நீங்கள் யோசிக்க மறந்து விட்டீர்களே! மேலும் தாங்கள் ஆடையின்றி ராஜ மாதா காந்தாரியின் முன்னால் சென்று நின்றால், அவர்கள் பார்வைபட்டதும் உங்கள் உடம்பு எரிந்து சாம்பலாகி விடுமே! நீங்கள் அநாகரீகமாக ஆடையில்லாமல் வந்திருக்கிறீர்கள் என்று நினைத்து, ராஜமாதா உங்களைச் சபித்து விடுவார்களே!” என்று கூறி துரியோதனனின் உள்ளத்தில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினார்.

அதோடு அவர், “அவ்விதம் நேராமல் இருக்கும் பொருட்டு, நீங்கள் இந்தப் பூமாலையால் உங்கள் இடுப்பைச் சுற்றி மறைத்துக் கொண்டு ராஜமாதாவிடம் செல்லுங்கள். அதுதான் தங்களுக்கு நல்லது” என்று ஒரு வழியும் கூறினார்.

துரியோதனன் மனதில், 'இந்தத் தோட்டக்காரன் சொல்வது சரி!' என்று பட்டது.

எனவே அவன் தோட்டக்காரன் கொடுத்த பூமாலையை வாங்கிக் கொண்டு அரண்மனையை நோக்கி விரைந்தான்.

பின்னர் அவன் பூமாலையால் இடுப்புப் பகுதியை மறைத்தபடி காந்தாரியிடம் சென்றான்.

அவன் சென்ற நேரம் துரியோதனன் தன் தாயைச் சந்திக்கும் நேரமல்ல.

அதனால் காந்தாரி, 'துரியோதனன் போர்க்களத்திலிருந்து ஓடி வந்துவிட்டான்!' என்று நினைத்து அவனைக் கடிந்து கொண்டாள்.

துரியோதனன், தர்மரிடம் தான் கேட்டதையும் அதற்குத் தர்மர் கூறியதையும் காந்தாரியிடம் தெரிவித்தான்.

அதைக் கேட்ட காந்தாரி, "மகனே, நீ உன் ஆடைகளைக் களைந்துவிட்டு என் முன் நில்” என்றாள்.

பிறகு அவள் தன் கண்கட்டுகளைப் பிரித்துவிட்டுத் துரியோதனைப் பார்த்தாள்.

துரியோதனன் பூமாலையால் சுற்றி மறைத்திருந்த இடுப்புப்பகுதி அங்கங்களைத் தவிர, அவனுடைய மற்ற அவயவங்கள் அனைத்தும் காந்தாரியின் பார்வை பட்டுக் கடினமாகி உறுதிப்பட்டன.

“இடுப்பைப் பூமாலையால் சுற்றி ஏன் மறைத்திருக்கிறாய்?” என்று காந்தாரி துரியோதனனிடம் வினவினாள்.

துரியோதனன் அரண்மனைத் தோட்டக்காரனின் யோசனையின்படி தான் இவ்விதம் செய்ததை காந்தாரியிடம் விளக்கிக் கூறினான்.

துரியோதனன் கூறியதைக் கேட்டதும், 'போரில் பாண்டவர்களுக்கு உதவும் பொருட்டு ஸ்ரீகிருஷ்ணன் தான் தோட்டக்காரன் வேடத்தில் வந்திருக்கிறான்!' என்பதை காந்தாரி புரிந்து கொண்டாள். அதை அவள் துரியோதனிடமும் தெரிவித்தாள்.

பிறகு போர்க்களத்தில் பீமன் துரியோதனனின் தொடையை முறித்தான். அதன் காரணமாக துரியோதனன் இறந்தான்.

பூசுற்றிய இடைப்பகுதியில் காந்தாரியின் பார்வைபடாத காரணத்தால், அந்தப் பகுதியே துரியோதனனின் மரணத்திற்குக் காரணமாயிற்று.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1739.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License