இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

யார் பெருங்கவிஞன்?


காளிதேவியின் திருவருளால் காளிதாசன் மகாகவியாகி விட்டான். பல காவியங்கள் இயற்றிய காளிதாசன் புகழின் உச்சியில் இருந்தான்,

போஜ மகாராஜனும், பொதுமக்களும் மகாகவி காளிதாசனைப் பெரிதும் மதித்துப் போற்றினார்கள்.

எனினும் வழக்கமாகப் புலவர்களிடையே உண்டாகும் போட்டியும் பொறாமையும் உருவாகியது.

தண்டி என்னும் பெரும் புலவரும் போஜனின் அவையை அலங்கரித்து வந்தார்.

காளிதாசனிடம் வெறுப்புக் கொண்ட புலவர் அணியினர் தண்டிக்கு ஏற்றம் கொடுத்து வந்தார்கள்.

“தண்டியும் காளிதாசனும் காலத்தால் வேறுபட்டவர்கள்” என்றும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் கருதுகின்றனர். எனினும் தொன்றுதொட்டு வழங்கி வரும் செவிவழிச் செய்திகள் இந்த இருவரையும் இணைத்தேப் பேசுகின்றன.

“தண்டி, காளிதாசன் ஆகிய இருவரில் மிகவும் சிறந்த கவிஞர் யார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

'இந்தக் கேள்விக்கு அம்பிகையைத் தவிர, வேறு எவரும் தக்க விடையளிக்க வல்லவர் அல்லர்!' என போஜன் முதலான அனைவரும் கருதினர்.

எனவே, எல்லோரும் காளிதேவியின் சந்நிதியில் கூடி, "தண்டி, காளிதாசன் ஆகிய இருவரில் பெருங்கவிஞர் யார் என திட்டவட்டமாகத் தெரிவியுங்கள்" என்று காளி தேவியிடம் வேண்டினார்கள்.


"என் அருள் பெற்ற காளிதாசனே பெருங்கவிஞன்” என்றே காளிதேவி கூறுவாள் எனப் பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் காளிதேவியோ, “தண்டியே கவி" என்று மூன்று முறை கூறி உறுதிப்படுத்தினாள்.

இவ்விதம் கூறியதன் மூலம், காளிதேவி தனக்குச் சாதகமான பதிலை அளிக்காததால் காளிதாசன் கோபம் கொண்டான்.

ஆதலால் அவன், "உன்னை நம்பி மோசம் போனேன். என்னைக் கை விட்டாய் காளி!” என்று கூறி புலம்பினான்.

அதோடு அவன், தனக்கு எதிராகத் தீர்ப்பளித்த தேவியை வாயில் வந்தபடி வன்சொற்களால் வசை பாடினான்.

காளிதாசனின் வசை மொழிகளைக் கேட்ட காளிதேவி புன்சிரிப்புடன், “மகனே! நீ என் பதில் முழுவதையும் கேட்காமல் ஆத்திரத்தில் அவசரப்பட்டு என்னைத் திட்டிவிட்டாய்!” என்றாள்.

"என்ன பெரிய பதிலை நீ சொல்லப் போகிறாய்? அதுதான் 'தண்டியே கவி!' என்று அவனைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடி விட்டாயே?” என்று மீண்டும் காளிதாசன் கோபத்துடன் பேசினான்.

“ஆம்! மகனே! மீண்டும் சொல்வேன் தண்டிதான் கவிஞன்! அதில் மாற்றம் இல்லை. ஆனால் நீ யார் தெரியுமா? நானே நீ! என் அருள் பெற்ற நீ என் உருவமாகவே மாறிவிட்டாய் (த்வமேவாஹம், த்வமேவாஹம்) என்று சொல்லி, உன்னை அனைவரின் முன்னால் உயர்த்த நினைத்திருந்தேன். அதற்குள் அவசரப்பட்டு என்னைத் திட்டிவிட்டாயே! மகா காவியங்களைப் பாடும் உன் வாயில் இப்படிப்பட்ட வன்சொற்கள் வரலாமா? ஆதலால், நீ அடுத்த பிறவியில் வாய் திறந்து பேச இயலாத ஊமையாகப் பிறப்பாய்!” என்றாள் காளி.

"தாயே! அறியாமையால் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடு” என்று மன்றாடினான் காளிதாசன்.

“நீ என் அருள் பெற்ற கவிஞன் என்றாலும், தவறு செய்ததற்குத் தக்க தண்டனை உண்டு. எனினும், தக்க தருணத்தில் உன்னைத் தடுத்தாட் கொள்வேன்” என்று காளி திருவாய் மலர்ந்தருளினாள்.

காளிதாசன் அடுத்த பிறவியில் தமிழகத்திலுள்ள காஞ்சீபுரத்தில் பிறந்தான்.

முற்பிறவியின் தொடர்பு அவனைத் தேவியிடம் பக்தி கொள்ளும்படி செய்தது. அவன் காஞ்சி காமாட்சியிடம் இனம் தெரியாத ஈடுபாடு கொண்டிருந்தான்.

வாய் பேச முடியாத அவன், காமாட்சியின் சந்நிதியில் எப்போதும் அமர்ந்திருந்தான்.

கோயிலில் வழங்கிய பிரசாதமே அவனுக்கு அன்றாட உணவு.

இரவு அர்த்த ஜாம பூஜை முடியும் வரையில் அவன் கோயிலிலேயே இருப்பது வழக்கம்.


ஒரு நாள் இரவு அர்த்த ஜாம பூஜை நடந்து திருக்கோயில் நடை சாத்தும் நேரம்... அப்போது தெய்விக அழகு வாய்ந்த இளம் பெண் ஒருத்தி தாம்பூலம் கமழ பேச இயலாத பக்தனை நோக்கி வந்தாள். அவள் தன் வாயில் குதப்பிய தாம் பூலத்தை அவன் வாயில் கொடுத்து அருள் புரிந்தாள்.

ஆம்! அவள் காஞ்சி காமாட்சி தான்!

பேச இயலாதவனாக இருந்தாலும் பூரண ஞானத்துடன் இருந்த பக்தன் காமாட்சியின் அருள் பெற்றதும் உடனே அருட்கவியாகி விட்டான்! அவனிடமிருந்து மடை திறந்த வெள்ளம் போல் கவிதை பெருக்கெடுத்தது.

அதனால் அவன் காமாட்சியின் கருணையின் உயர்வைப் போற்றி 'ஆர்யா சதகம்' என்று ஒரு நூறு பாடல் பாடினான்!

காமாட்சியின் திருவடியைப் போற்றிப் பாதாரவிந்த சதகம்! என்று ஒரு நூறு பாடல் பாடினான்!

'ஸ்ருதி சதகம்' என்று காமாட்சியைத் துதித்து ஒரு நூறு பாடல் பாடினான்!

காமாட்சியின் கடைக்கண் பார்வையைப் பாராட்டி 'கடாக்ஷ சதகம்' என்று ஒரு நூறு பாடல் பாடினான்.

காமாட்சியின் புன்முறுவலைப் புகழ்ந்து ‘மந்தஸ்மித சதகம்! என்று ஒரு நூறு பாடல் பாடினான்!

இவ்வாறு அவன் ஐந்நூறு பாடல்களை அன்னைக்குச் சூட்டினான்.

ஊமையாக (மூகனாக) இருந்து பின்னர் தேவியின் அருள் பெற்றுப் பாடியதால் அவனை ‘மூககவி' என்று மக்கள் அழைத்தார்கள்.

அவன் இயற்றிய ஐந்நூறு பாடல்களும் 'மூகபஞ்சசதி' என்று புகழ் பெற்றது.

மூககவி இயற்றிய 'ஸ்துதி சதகம்' நூலிலுள்ள ஒரு சுலோகத்தின் கருத்து இது:

“நம் புண்ணிய வசத்தால் பசுபதியாகிய சிவபெருமானின் திருவருள் உருவம் கொணடது போலவும், முழுநிலவு போன்ற முகம் கொண்டவளாகவும், இந்திரனால் துதிக்கப்பட்டவளாகவும் விளங்கும் அன்னை காஞ்சியில் எழுந்தருளியிருக்கிறாள். அவள் ஆகாய கங்கையின் வெள்ளம் போல், ஊமைக்கும் கவிப் பெருக்கை அருள்பவள்; அடியார்களின் துன்பம் துடைப்பவள்."

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1740.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License