இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

அதிகமாக ஆசைப்பட்டால் என்ன கிடைக்கும்?


இலங்கையில் அரக்கர்களின் மன்னராக விபீஷணர் ஆட்சி செய்து வந்தார். அவர் ஒவ்வோர் ஏகாதசியிலும் ஸ்ரீரங்கத்திற்கு வந்து ஸ்ரீரங்கநாதரைப் பூஜித்துப் போவது வழக்கம்.

இது கோவில் அர்ச்சகர் ஒருவருக்குத் தெரிய வந்தது. அந்த அர்ச்சகர் ஒரு நாள் ஏகாதசியன்று விபீஷணர் வருவதைக் குறிப்பாகப் பார்த்து, அவருடைய புஷ்பக் குடலைக்குள் புகுந்து, ஓர் மூலையில் பதுங்கிக் கொண்டார்.

விபீஷணர் பூஜை முடிந்தபின் வழக்கம்போல் குடலையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு இலங்கைக்கு வந்து சேர்ந்தார்.

ராட்சஸர்களுக்கு மனிதர்கள் எறும்பு போன்றவர்கள். ஓர் எறும்பு ஏதேனும் ஒரு பாத்திரத்திற்குள் நுழைந்தால், அதனால் பாத்திரம் பளுவாகத் தோன்றாது. அதுபோல விபீஷணருக்குக் குடலை பளுவாகவே தோன்றவில்லை.

பிறகு விபீஷணர் வழக்கம் போல் புஷ்பக் கூடையைக் கவிழ்க்க, அதிலிருந்து அர்ச்சகர் பொத்தென்று விழுந்தார். அவரைக் கண்ட ராட்சஸர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

விபீஷணருக்கு அர்ச்சகரிடம் தயை உண்டாயிற்று. அவர், "அடே அர்ச்சகா, உன் தைரியத்தை மெச்சினேன். உனக்கு வேண்டியதைக் கேள், தருகிறேன்'' என்றார்.

அர்ச்சகர் அங்குமிங்கும் பார்த்தார். எங்கே பார்த்தாலும் ஒரே தங்கமயமாக இருந்தது. முத்துக்களும் ரத்தினங்களும் வீதிகளில் சரளைக் கற்களைப் போல் சர்வசாதாரணமாக விழுந்து கிடந்தன. அவற்றில் இன்ன கற்கள் தாம் அதிக விலையுள்ளன என்று அர்ச்சகரால் அறிந்து கொள்ள முடியவில்லை. டால் வீசுகிறது. கண் கூசுகிறது. அர்ச்சகருடைய ஆசை அதிகரித்தது.

அவர் மிகுந்த விலையுள்ள ரத்தினங்களைக் கொண்டு போக எண்ணி, விபீஷணரை நோக்கி, “அரசே, இந்த ஊரில் விலை மதிக்கவே இயலாத மிக மிக அபூர்வமான பொருள் எதுவோ அதை எனக்குக் கொடுக்க வேண்டும்" என்றார்.

உடனே விபீஷணர் அவ்வாறே இலங்கை ராஜ்யத்திலேயே கிடைப்பதற்கு அரிய அபூர்வமான பொருளை அர்ச்சகருக்குக் கொடுக்கும்படி பொக்கிஷதாரருக்கு உத்தரவு செய்தார்.


பொக்கிஷதாரர் ஒரு பெரிய பெட்டியில் பத்திரமாய் வைத்திருந்த சிறிய ஓர் ஊசியைக் கொண்டுவந்து அர்ச்சகர் கையில் கொடுத்து, "சுவாமி, உங்கள் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! எங்கள் ராஜா அபூர்வமான இந்த ஊசியை எங்கிருந்தோ சம்பாதித்து வந்து மிகவும் பாதுகாப்புடன் இதுவரையிலும் வைத்திருந்தார். இந்த ஊரில் இந்த ஒரே ஓர் இரும்புச் சாமான் தான் மிகவும் அபூர்வமாக இருந்தது. அப்படிப்பட்ட அருமையான இந்தப் பொருளை எங்கள் அரசர் தங்களுக்குக் கொடுத்துவிட்டாரே! தாங்கள் உண்மையிலேயே மிகவும் பாக்கியசாலி. இனி நாங்கள் இரும்புச் சாமானை எப்போது காணப்போகிறோம்?" என்றார்.

அர்ச்சகருக்கு உண்டான மனவருத்தத்தை யார்தாம் அளவிட்டுச் சொல்ல முடியும்? இதற்குள்ளாக விபீஷணரின் கட்டளைப்படி ஒரு ராட்சஸன் அர்ச்சகரைத் தூக்கிக்கொண்டு, ஆகாயத்தில் பறந்து, ஸ்ரீரங்கத்தில் இறங்கி, அங்கேயுள்ள அம்மா மண்டபத்தினடியில் எறிந்துவிட்டு, இலங்கைக்குப் போய்ச் சேர்ந்தான்.

அப்போது பொழுது விடிய இரண்டு நாழிகை இருந்தன. அந்தச் சமயத்தில் காவேரியில் நீராடிவிட்டு, 'ரங்கநாதா, ரங்கநாதா' என்று ஒரு வைணவர் தியானம் செய்து கொண்டு மண்டபத்துக்கு அருகில் வந்து கொண்டிருந்தார்.

அவர் தலையில் இந்த அர்ச்சகர் தொப்பென்று விழுந்தார். 'அடடா, இதென்ன பெரிய ஒரு கட்டை தலையில் விழுந்ததே!' என்று அந்த வைணவர் பார்த்தார்.

ஆசாமி எதிரில் நின்றார். உடனே கூட்டம் கூடியது, ஊசி சமாசாரம் எல்லோருக்கும் தெரிந்தது. அங்கு வந்த பெண்பிள்ளைகள் எல்லோரும் அர்ச்சகரை நோக்கி உருண்டு உருண்டு சிரித்தார்கள்.

இதனால் மனிதன் எப்போதும் கடவுளை நம்பி, அவர் கொடுப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்றும், அதிகமாக ஆசைப்படுவதில் வீண்முயற்சியே தவிர உபயோகமில்லை என்றும் அறிகிறோம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1758.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License