இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

நரகத்திற்குச் சென்ற தருமபுத்திரர்

தர்மத்தின் திருவுருவமாக விளங்கிய தர்மபுத்திரருக்கும், தானத்தில் சிறந்து விளங்கிய கர்ணனுக்கும் ஈடாக உலகம் இதுவரையில் எவரையும் கண்டதில்லை. அப்படிப்பட்ட தர்மபுத்திரரே ஒரு தடவை நரகத்திற்குச் செல்லும்படி ஆயிற்று!

மகாபாரதப் போர் மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆசாரியர் துரோணர் பாண்டவர்களின் படையைச் சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருந்தார். சிறந்த அஸ்திரங்களைப் பல தடவை பிரயோகித்தார். பாண்டவர்களைச் சேர்ந்த வீரர்கள் எவரேனும் அவர்முன் காணப்பட்டால் உடனே அவர்கள் இந்த உலக வாழ்வை முடித்துக் கொண்டார்கள். பாண்டவர் சேனை குழப்பும் காரணமாகச் சிதறிக் கிடந்தது. மகாரதிகள் எனப்பட்ட சிறந்த படைத்தலைவர்கள் கூட என்ன செய்வது என்ற சிந்தனையில் மூழ்கினர்.

துரோணர் தமது கையில் அஸ்திரங்களை வைத்துக் கொண்டு, அவரே அவற்றைப் பிரயோகம் செய்யும் வரையில் அவரை யாராலும் வெல்ல முடியாது. எனவே அவராக முன்வந்து அஸ்திரங்களைக் கீழே வைத்தாலன்றி அவரை வெல்லுவது என்பது, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதைப் போன்றதாகும். இதை நினைத்தே அனைவரும் கலங்கினார்கள்.

அப்போது பாண்டவர்களின் துயர் துடைப்பதற்கே உருவெடுத்த கண்ணபிரான், அவர்களைத் தேற்றும் வகையில் ஒரு விஷயத்தை அவர்களுக்குக் கூறினார்-"யுத்தம் ஆரம்பிக்கும் போது துரோணர் கூறியதை நீங்கள் அனைவரும் மறந்து விட்டீர்களா? 'மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான யாராவது ஒருவர், ஏதாவது விரும்பத்தகாத ஒரு விஷயத்தைச் சொல்லக் கேட்டால், அப்போது நான் என் கையிலுள்ள அஸ்திரங்களைத் தூர எறிந்துவிட்டுத் தியானத்தில் ஆழ்ந்து விடுவேன்' என்று துரோணர் கூறியிருக்கிறார்'' என்று கண்ணபிரான் சொல்லி, பாண்டவருக்கு நினைவூட்டி, ஏதாவது ஒரு வழியைக் காணச் சொன்னார்.

கண்ணன் சொன்னதைக் கேட்டவுடனே எல்லோரும் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தனர். கடைசியாகப் பீமசேனனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி பீமன் துரோணரின் மகன் அசுவத்தாமாவுடன் போரிடக் கிளம்பினான். சண்டையின் நடுவில் பீமன் கீழே குதித்தான். குதித்த அவன், நேரே அசுவத்தாமனின் தேருக்கு அடியில் தன் கதையைக் கொடுத்து ஒரு நெம்பு நெம்பினான். அவ்வளவுதான்! அசுவத்தாமா ரதத்தோடு கூட யுத்தக்களத்திலிருந்து வெகு தூரம் சென்று எங்கோ போய் விழுந்தான்.


உடனேயே பீமன் கௌரவர்களின் சேனையில் "அசுவத்தாமா' என்ற பெயருடைய ஒரு யானையை ஒரே அடியில் கொன்று போட்டான். யானை இறந்தவுடன் அவன் நேராகத் துரோணர் இருக்கும் இடத்திற்குச் சென்று, "அசுவத்தாமன் கொல்லப்பட்டான்! அசுவத்தாமன் கொல்லப்பட்டான்!?" என்று உரத்த குரலில் கூச்சல் போட்டான்.

துரோணரின் காதில் பீமன் போட்ட சப்தம் விழுந்தது. அவர் திடுக்கிட்டார். என்றாலும் அவர் பீமனின் வார்த்தையை நம்பத் தயாராக இல்லை. ஆகவே அவர் உண்மையைத் தெரிந்து கொள்வதற்காகத் தமது ரதத்தைத் தர்மபுத்திரர் இருக்கும் இடத்தை நோக்கிச் செலுத்தினார்.

துரோணரின் ரதம் நெருங்கி வருவதை மாயக்கண்ணன் பார்த்தார். யுதிஷ்டிரர் எங்காவது உண்மையைச் சொல்லிக் காரியத்தைக் கெடுத்து விட்டால் என்ன செய்வது என்று முன் எச்சரிக்கையோடு கண்ணபிரான், "தர்மரே! உங்களைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், இதை விட்டால் வேறு வழி கிடையாது. எனவே துரோணாசாரியார் வந்து கேட்டால், 'அசுவத்தாமன் கொல்லப்பட்டான்' என்று தாங்கள் சொல்லத்தான் வேண்டும். நான் சொல்லுவதால் தாங்கள் இதைக் கூறியே ஆகவேண்டும்" என்று கட்டளை போட்டு விட்டார்.

பாவம், யுதிஷ்டிரருக்குத் தர்மசங்கடமாயிற்று. எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவர் பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் ஸ்ரீகிருஷ்ண பகவானின் வார்த்தையைத் தட்டவும் அவரால் முடியவில்லை. துரோணர் தர்மரின் அருகில் வந்து விட்டார். அவர் தர்மபுத்திரரிடம், "யுதிஷ்டிரா! பீமன் சொல்வது உண்மைதானா'' என்று கேட்டும் விட்டார். தர்மர் மிகவும் சங்கடத்துடன், “அசுவத்தாமன் கொல்லப்பட்டான்!'' என்றார். இதைத் தவிர வேறு பொய் அவர் வாயிலிருந்து வந்ததே இல்லை.

தர்மபுத்திரர் அத்தோடு நிறுத்தவில்லை. அவர் மனச்சாட்சி உறுத்திப் படாதபாடு படுத்தியது. அவர் வாயிலிருந்து மேலும் ‘’மனிதனா, யானையா?'' என்ற வார்த்தைகள் வெளிவந்தன. ஆனால் இந்த வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வருவதற்கு முன்பாகவே, அதாவது ‘அசுவத்தாமன் கொல்லப்பட்டான்!" என்ற வார்த்தை வந்தவுடனே, ஸ்ரீகிருஷ்ண பகவான் ஒரு விநாடியும் தாமதிக்காமல் தமது பாஞ்சஜன்யம் என்ற சங்கைப் பலமாக ஊதி மீதி வார்த்தைகள் துரோணரின் காதில் விழாமல் தடுத்து விட்டார்!


துரோணர் தர்மபுத்திரரின் மீது வைத்திருந்த மகத்தான நம்பிக்கை காரணமாகத் தமது மகன் அசுவத்தாமன்தான் கொல்லப்பட்டான் என்று நினைத்து மிகவும் சோகத்துடன் கையிலிருந்த அஸ்திரங்களை விட்டெறிந்து விட்டார்.

சாதாரணமாக யுதிஷ்டிரரின் தேர் பூமியிலிருந்து எப்போதும் நான்கு அங்குல உயர்த்தில் தான் இருக்கும். மற்றத் தேர்களைப் போலத் தரையைத் தொடாது. ஆனால், கபடமாக இந்த ஒரு பொய்யைச் சொன்னாரோ இல்லையோ, அவரது தேரும் மற்றவர்களின் தேரைப் போலவே பூமியைத் தொட்டுக்கொண்டு ஓட ஆரம்பித்தது!

தமது உடலுடன் சொர்க்கம் செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்ற தர்மபுத்திரர், அந்த ஒரே ஒரு பொய்யைச் சொன்னதனால் ஒரு தடவை நரகத்தைக் காண நேர்ந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1777.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License