இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

படாசாரா


சிராவஸ்தி என்ற மிகப் பிரசித்தி பெற்ற நகரில் ஒரு வியாபாரியின் மகளாகப் பிறந்தாள் படாசாரா.

அவளது இயற்பெயர் தெரியவில்லை. பருவம் வந்த போது அவள், தன் தந்தையிடம் வேலை பார்த்து வந்த ஓர் இளைஞன் மீது மையல் கொண்டாள்.

இந்த விவரம் அறியாத தந்தை தன் கௌரவத்திற்கு ஏற்ற இடத்தில் அவளை மணமுடிக்க நினைத்தார். ஆனால், இந்தச் சங்கடத்தினின்றும் தப்புவதற்காக அந்தப் பெண்ணும் அந்த இளைஞனும் பக்கத்துக் கிராமத்திற்கு ஓடி, அங்கு மணம் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர்.

அவள் கருவுற்ற போது பிறந்த வீடு செல்ல மிகவும் விரும்பினாள்.

ஆனால், புருஷன் அதற்கு இசையவில்லை. இரண்டாவது குழந்தை பிறக்க இருந்த போது அவள் தந்தையிடம் செல்லப் பிடிவாதம் செய்யவும் புருஷன் இணங்கினான்.

ஆனால், வழியிலேயே அவளுக்குக் குழந்தை பிறந்துவிட்டது.

தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பாகக் குடிசை ஒன்று போட்டுத் தருவதற்காகச் செடி கொடி சேகரிக்க அருகிலிருந்த காட்டுக்குச் சென்ற கணவன், நாகம் தீண்டி இறந்து விட்டான்.

பிரசவம் ஆகியிருந்த பெண் அவனுடைய வருகைக்காகக் காத்திருந்து, காத்திருந்து கவலையுற்றாள்.

பின் அந்தத் தள்ளாத நிலையில் தானே எழுந்து சென்று தேடிப் பார்த்தாள்.

புருஷன் பிணமாகக் கிடப்பது கண்டு ‘ஓ’வென அழுதாள்.

பிறகு, மூத்த குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு பிறந்த சிசுவைக் கரங்களில் தாங்கியவாறு அவள் தந்தையின் இல்லம் நோக்கி நடந்தாள். வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது.


இரு குழந்தைகளுடன் ஆற்றைக் கடக்க முடியாது என்பதால் அவள் மூத்தவனைக் கரையில் நிறுத்திவிட்டுக் கைக்குழந்தையுடன் மறுகரை சேர்ந்தாள்.

குழந்தையை ஒரு கல்லின் மீது இருத்திச் சில தழைகள் கொண்டு அதை மூடிவிட்டு மூத்த குழந்தையை அழைத்து வர எதிர்க்கரை நோக்கிப் புறப்பட்டாள்.

பாதி ஆறு கடந்ததும் பெரிய பருந்து ஒன்று மறுகரையில் இருந்த சிசுவை நோக்கிப் பாய்ந்து இறங்கியது. அவள் பரபரப்புடன் அதைத் துரத்துவதற்காகக் கைகளைத் தூக்கி ஆட்டினாள்.

இது கண்டு எதிர்க் கரையில் இருந்த மூத்த குழந்தை, ‘தாயார் தன்னை வருமாறு அழைக்கிறாள்’ என எண்ணி ஆற்றில் இறங்கிவிட்டது.

ஐயோ, கைக்குழந்தையைப் பருந்து தூக்கிச் சென்றது; மூத்தவனை வெள்ளம் அடித்துக் கொண்டு போனது.

இவற்றைக் கண்ட அந்த அபலை நிலைகுலைந்து போனாள்.

வேறு கதியின்றித் தந்தையின் இல்லம் சென்றாள். அங்கு முன் இரவு பெய்த மழையில் அவள் பிறந்து வளர்ந்த பழைய வீடு இடிந்து அவளது பெற்றோரும் சகோதரனும் இறந்துபோன செய்தி அறிந்தாள்.

அவளது தலை சுழன்றது; மூளை குழம்பிற்று. பைத்தியமே பிடித்துவிட்டது.

கண்டபடி பிதற்றியபடியும், பயங்கரமாக விழித்துப் பார்த்துக் கொண்டும் சுய அறிவு அற்றவளாக, பைத்தியக்காரியாக ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தாள்.

ஆனால், அவளது முற்பிறவியின் நல்வினைப் பயனாக அவளுக்கு புத்தரின் கிருபை கிட்டிற்று.

ஓரிடத்தில் மக்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்த போது புத்தர் அந்தப் பைத்தியக்காரியைக் கண்டார்.

அந்தக் கருணாமூர்த்தி அவளைச் சுயநிலைக்கு மீளுமாறு அனுக்கிரகித்தார்.


பின் அவள் புத்தர் முன்வந்து அவளது பெரும் கஷ்டங்களைக் கூறினாள்.

புத்தர் அவளிடம், மகளே, இது போல் உறவினரை இழந்து நீ கண்ணீர் பெருக்கியது உன் முன் ஜன்மங்களில் எத்தனை எத்தனை தடவைகளோ! நீ சிந்திய கண்ணீரையெல்லாம் சேர்த்தால் நான்கு கடல்கள் நிரம்பும்! மகனோ, மகளோ, வேறு உற்றார் உறவினரோ ஒருவரது துயரைப் போக்கமுடியாது. நற்போதனை கேட்டு நன்முயற்சி செய்து நல்லறிவு பெற்று அவரவரே தாம் தம்மை மீட்டுக்கொள்ள வேண்டும்" என்று உபதேசித்தார்.

படாசாராவின் மனம் தெளிந்தது. புத்த சங்கத்தில் பிக்ஷுணியாகச் சேரும் பேறு பெற்றாள். பல நற்காட்சிகள் பெற்று அவள் பௌத்த தத்துவங்களில் தேர்ந்தவள் ஆனாள்.

‘அர்ஹத்’ என்ற பூரண நிலையையும் அடைந்தாள். ஆசாரங்களில் அல்லது கடமைகளில் அவள் மிகத் தேர்ந்தவளாக இருந்ததால் ‘படாசாரா’ என்ற பெயர் பெற்றாள். புத்தரே அவளை மிகவும் புகழ்ந்தார்.

படாசாராவிடம் முப்பது பிக்ஷுணிகள் பயிற்சி பெற்றுப் பெருநிலை எய்தினர். பௌத்த சங்க வரலாற்றில் படாசாரா இன்றும் அழியாப் புகழிடம் பெற்று விளங்குகிறாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1803.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License