இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

வைக்கோலைத் தங்க இழைகளாக்குபவள்


ஒரு ராஜா நாட்டு மக்களின் நிலையை நேரில் தெரிந்துகொள்ள விரும்பினார்.

அதன் பொருட்டு ஒரு நாள் அவர் ஊரைச் சுற்றிப் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணத்துடன் புறப்பட்டுச் சென்றார்.

ஓர் இடத்தில் தறிநெசவு வேலை மிகவும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

பெரியவர் ஒருவர் தறியில் நெசவு வேலை செய்து கொண்டிருந்தார்.

அவர் பக்கத்தில் ஓர் அழகான பெண் உட்கார்ந்து நூல் சுற்றிக் கொண்டிருந்தாள்.

ராஜா அந்த பெரியவரைப் பார்த்து, “யார் இந்தப் பெண்?'' என்று விசாரித்தார்.

ராஜா இப்படிக் கேட்டதும் பெரியவருக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஏனென்றால், உட்கார்ந்திருந்தவள் அவரது மகள்!

''அரசே, இவள் என் மகள். வேகமாக நூல் திரிக்கக் கூடியவள். வைக்கோலை எடுத்து இவள் திரித்தால் கூட அதெல்லாம் தங்க இழையாக வெளிவரும். அப்படி ஒரு ராசி இவளுக்கு!'' என்று பெருமைப் பொங்க பெரியவர் அரசரிடம் கூறினார்.

ராஜா அதைக் கேட்டதும் அசந்து விட்டார்.

“அப்படியா! இவ்வளவு அழகும் சாமர்த்தியமும் உள்ள இந்தப்பெண் என்னுடன் வரட்டும்.... இவளை நான் என்னுடைய மருமகளாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன்'' என்றார் அரசர்.


அந்தப் பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை... 'ஏதோ கொஞ்சம் பெருமையாகச் சொல்லப் போக, அது இப்படி ஆகிவிட்டதே!' என்று அவர் கவலைப்பட்டார்.

இருந்தாலும் ராஜா பேச்சைத் தட்ட முடியுமா? வேறு வழி இல்லாமல் பெரியவர் தன் மகளை அரசருடன் அனுப்பி வைத்தார்.

ராஜா அந்தப் பெண்ணை அரண்மனைக்கு அழைத்து வந்தார். அங்கே அவளை ஓர் அறையில் வைத்துப் பூட்டிவிட்டார்.

அந்த அறை முழுவதும் வைக்கோலைக் கொண்டு வந்து போட்டு நிரப்பினார்கள். அதோடு மூன்று ராட்டைகளும் வேறு கொண்டு வந்து வைத்தார்கள்.

“நாளைக்குப் பொழுது விடிவதற்குள் நீ இந்த வைக்கோலையெல்லாம் தங்க இழைகளாக நூற்றுக் காட்ட வேண்டும். நாளைக்குக் காலையில் நான் வந்து இந்த அறையின் கதவைத் திறப்பேன். அப்போது உன் தந்தை கூறியது போல் இந்த வைக்கோல் முழுவதும் தங்கமாக மாறி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ உயிர் தப்ப முடியாது!" என்று அரசர் உத்தரவு போட்டு விட்டுச் சென்றார்.

பாவம் அந்தப் பெண். மிகவும் பயந்து விட்டாள். 'திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை!' என்ற பெரியோர் வாக்கு அவளது நினைவுக்கு வந்தது.

அதனால் அவள், "இறைவா, எனக்கு நல்ல ஒரு வழியைக் காட்டு....'' என்று பகல் முழுவதும் அழுது கொண்டேப் பிரார்த்தனை செய்தபடியே உட்கார்ந்திருந்தாள். இரவு முழுவதும் தூக்கம் வராமல் அழுதபடியே இறைவனிடம் பிரார்த்தனை செய்தாள். அவளது பிரார்த்தனை வீண் போகவில்லை.

மறுநாள் விடியற்காலையில் யாரோ அறையின் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது.

பயந்து கொண்டே அவள் எழுந்து சென்று திறந்தாள்.

திறந்து பார்த்தால்.....வெளியிலே மூன்று அவலட்சணமான பெண்கள் நின்றிருந்தார்கள். ஒருத்திக்குக் கால் அகலமாக முறம் மாதிரி இருந்தது... இன்னொருத்திக்குக் கட்டைவிரல் கரண்டி மாதிரி பெரியதாக இருந்தது... மூன்றாவது பெண்ணுக்கு உதடு தடித்து ரப்பர் மாதிரி தொங்கிக் கொண்டிருந்தது.

''யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று அந்தப் பெண் கேட்டாள்.

‘’நாங்கள் உனக்கு உதவிச் செய்வதற்காக வந்திருக்கிறோம்'' என்று சொல்லிக் கொண்டே மூன்று பெண்களும் உள்ளே வந்தார்கள். உட்கார்ந்தார்கள். சிறிது நேரத்திற்குள் உள்ளே இருந்த வைக்கோலையெல்லாம் தங்க இழைகளாக மாற்றிக் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்கள்.

காலையில் ராஜா வந்தார்.

பார்த்தார். ''ஆகா...அருமை!'' என்றார்.


மேலும் அவர், 'இன்னும் கொஞ்சம் வைக்கோலைக் கொண்டு வந்து இந்த அறையில் போடுங்கள்' என்று வேலைக்காரர்களிடம் கூறினார்.

"இந்த வைக்கோலையும் இன்றைக்குத் தங்கமாக மாற்றிவிடு... நாளை மறுநாள் உனக்கும் இளவரசனுக்கும் திருமணம்!'' என்று அரசர் அந்த அப்பாவிப் பெண்ணிடம் கூறிவிட்டுச் சென்றார்.

அன்றைய இரவும் அந்த மூன்று பெண்கள் வந்தார்கள்.... வைக்கோலை பொன் இழைகளாக மாற்றினார்கள்.... புறப்பட்டார்கள்.

அந்தப் பெண் அவர்கள் காலில் விழுந்து வணங்கி, ''என் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்!'' என்று கண்ணீர் மல்கக் கூறினாள்.

அதற்கு அவர்கள், ''பயப்படாதே! நீ விரும்பினால் எங்களுக்கு ஓர் உதவி செய்யலாம். உன்னுடைய திருமணத்திற்கு நாங்கள் மூன்று பேரும் வருகிறோம். நீ எங்களை வரவேற்று அரசரிடமும் இளவரசரிடமும், 'இவர்கள் என்னுடைய பெரியப்பாவின் பெண்கள்' என்று சொல்லி எங்களை அறிமுகப்படுத்தி வை. நாங்கள் விருந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறோம்'' என்றார்கள்.

"இதைக் கேட்டதும் இந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியுடன், ''சரி, அப்படியே செய்கிறேன்' என்று ஒப்புக்கொண்டாள்.

திருமண நாள் வந்தது. திருமணம் மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அனைத்து நாடுகளிலிருந்தும் அரசர்கள் தங்கள் பட்டத்து ராணிகளுடன் வந்திருந்தார்கள்.

அந்த மூன்று அவலட்சணமான பெண்களும் உரிய நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்.

''யார் இவர்கள்?'' என்று அரசர் கேட்டார்.

''என் பெரியப்பா பெண்கள்'' என்றாள் அந்த நெசவாளியின் மகள்.

அரசர் அவர்களிடம், ''காலும் உதடும் கட்டைவிரலும் ஏன் உங்களுக்கு இப்படி அவலட்சணமாக இருக்கின்றன?'' என்று விசாரித்தார்.


அதற்கு அந்தப் பெண்கள் பதில் கூறினார்கள்

''என்ன செய்வது: ஓயாமல் வைக்கோலை நூற்று ஒருத்தியின் கட்டைவிரல் அப்படி கரண்டி மாதிரி ஆகிவிட்டது! நாக்கில் தொட்டுத் திரித்து இன்னொருத்தியின் உதடு அப்படியாகிவிட்டது! காலால் கட்டையை அழுத்தித் தறி போட்டதால் இன்னொருத்தியின் கால் இப்படி ஆகிவிட்டது! உங்கள் மருமகளாக வந்திருக்கும் இந்தப் பெண் அந்த மூன்றையுமே செய்யத் தெரிந்தவள்... இவளுக்கு இன்னும் கொஞ்சம் நாட்களில் என்ன ஆகப் போகிறதோ!'' என்றார்கள்.

அவ்வளவுதான்! ராஜா பயந்து விட்டார்.

“அம்மா என் மருமகளே! இன்று முதல் நீ இளவரசனின் மனைவி.... நீ எப்போதும் அழகாக இருக்க வேண்டும். ஆதலால் நீ இனிமேல் வைக்கோலைத் திரிக்கவே கூடாது!'' என்று அரசர் உத்தரவிட்டார்.

அவளை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றிய அந்த மூன்று பெண்களும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்கள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1862.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License