இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

எது மாயை?


கோசல நாட்டில் காதி என்னும் பெயருடைய அந்தணர் இருந்தார். அவர் சிறந்த புத்திமான். சாஸ்திரங்களை நன்கு அறிந்தவர். நல்லொழுக்கம் உடையவர். அவருக்கு வைராக்கியம் ஏற்படவே காட்டுக்குச் சென்று தவம் செய்ய ஆரம்பித்தார்.

பகவானைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தவிர, அவருக்கு வேறு எந்த ஆசையும் இருக்கவில்லை. ஆகவே, ஒரு குளத்திலுள்ள நீரில் நின்று கொண்டு கடுந்தவம் இயற்றினார்.

எட்டு மாதகாலம் அவர் கடுந்தவம் இயற்றிய பிறகு பகவான் விஷ்ணு அவர் முன் தோன்றினார்.

`உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்?'' என்றார்.

வேதாந்த விஷயங்களைப்பற்றி வெகு நாளாகக் காதி சிந்தனை பண்ணிச் சிந்தனை பண்ணி ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஆகவே பகவானைப் பார்த்து, ``இந்தப் படைப்பையே மாயை மூடிக் கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறார்களே அந்த மாயையை நான் பார்க்க வேண்டும்'' என்று கேட்டார்.

''அப்படியேப் பார்ப்பாய்'' என்று சொல்லி விட்டு, பகவான் மறைந்தார்.

ஒரு நாள் காதி குளத்தில் மூழ்கி ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று மந்திரம் ஞாபகம் வரவில்லை. அதோடு அவருக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது.

வனத்தில் இருந்த தாம் வீடு திரும்பி விட்டதாகவும், அங்கே தாம் இறந்து கிடப்பதாகவும், அதை அவருடைய சூட்சுமசரீரம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் உணர்ந்தார்.

உறவினர்கள் எல்லாரும் அழுது கொண்டிருந்தார்கள். கடைசியில் உடலை எடுத்து மயானம் சென்று அதைத் தகனம் செய்தார்கள்.

சூட்சும உடலில் இருந்த காதி உடனே ஒரு சண்டாள ஸ்திரீயின் கர்ப்பத்தில் புகுந்தார். சில நாட்களில் அவர் அந்த ஸ்திரீயின் மகனாகப் பிறந்தார்.

ஆனால், உண்மையில் இந்தக் கனவை அவர் கண்டு கொண்டிருந்த சமயத்தில் காட்டில் அந்தக் குளத்தின் தண்ணீரில் மூழ்கியபடிதான் இருந்தார்.


சண்டாள ஸ்திரீக்குப் பிறந்த அந்தப் பிள்ளைக்குக் கடஞ்சன் என்று பெயர் வைத்தார்கள்.

கடஞ்சன் பெரியவன் ஆனதும், ஒரு சண்டாளப் பெண்னை மணந்தான். அவனுக்கு நிறையக் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை வைத்துக் கொண்டு அவன் இன்பமாக வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில், அந்தக் கிராமத்தில் அம்மை நோய் கண்டது. மனைவி, குழந்தைகள் எல்லாரும் மடிந்துவிட, கடஞ்சன் பைத்தியம் பிடித்தவன் போல ஊர் ஊராக அலைய ஆரம்பித்தான்.

கடைசியில் கீரதேசம் என்னும் நாட்டை அடைந்தான். அவன் போன சமயம் அந்த நாட்டின் அரசன் மரணமடைந்துவிட்டதால், புது அரசனைக் கண்டுபிடிப்பதற்காகப் பட்டத்து யானையை வெளியில் விட்டிருந்தார்கள். அது யாரைத் தூக்கிக்கொண்டு வருகிறதோ அவன்தான் அரசன்.

பட்டத்து யானை கடஞ்சனைத் தன் முதுகில் தூக்கிக் கொண்டு அரண்மனை திரும்பவே, அவன் அந்த நாட்டு அரசனானான். ஆனால் அவன் யாரிடமும் தான் சண்டாள குலத்தில் பிறந்தவன் என்றோ, தன் பெயர் கடஞ்சன் என்றோ சொல்லிக் கொள்ளவில்லை.

எட்டு வருடகாலம் அவன் அந்த நாட்டு அரசனாக விளங்கினான். பல ராணிகளைக் கல்யாணம் செய்து கொண்டான்.

ஒரு நாள் அந்த நாட்டுச் சண்டாளர்கள் எல்லாரும் சேர்ந்து ஓர் உற்சவம் கொண்டாடினார்கள். எல்லாரும் ஆடிப்பாடிக் கொண்டு கூட்டமாகத் தெருவில் வந்தார்கள்.

வேடிக்கை பார்ப்பதற்காக அரசன் கடஞ்சன் அரண்மனைக்கு வெளியே வந்து நின்றான்.

அப்பொழுது சண்டாளர் கூட்டத்தில் ஒரு கிழவர் இருந்தார். அவர் கடஞ்சன் பிறந்த கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்குக் கடஞ்சனைக் குழந்தைப் பருவத்திலிருந்தேத் தெரியும்.

அதனால் கடஞ்சனைப் பார்த்து, ``என்னடா கடஞ்சா! உன்னைக் காணோம் என்றல்லவா பார்த்தேன்! நீ இங்கேதான் அரசனாக இருக்கிறாயா? அப்படியானால் நீ அதிர்ஷ்டசாலிதான்டா! சண்டாளனுக்கு அரசப்பதவி கிடைக்க வேண்டுமென்றால் நீ எத்தனை அதிர்ஷ்டம் பண்ணியிருக்க வேண்டும்!'' என்றார்.

அதைக் கேட்டதும், அந்த நகரத்து மக்கள் எல்லாருக்கும் தங்கள் அரசன் சண்டாளன் என்று தெரிய வந்தது.

`ஒரு சண்டாளன் கையிலா நாம் இத்தனை நாளும் சாப்பிட்டோம்? அவனோடா சேர்ந்து பழகினோம்?' என்று அந்த ஊர் அந்தணர்கள் வருத்தப்பட்டார்கள். உடனே எல்லோருமாகச் சேர்ந்து தீர்மானம் பண்ணி, ஒரு சிதை மூட்டி அதில் விழுந்து உயிர்விட்டார்கள்.


அதைக் கண்ட கடஞ்சன், `நம்மாலன்றோ இத்தனை பேரும் உயிர்விட்டார்கள்?' என்று வருத்தப்பட்டு, தானும் அந்தச் சிதையில் விழுந்து உயிர்விட்டான்.

கடஞ்சனைத் தீ எரிக்க ஆரம்பித்த அதே கணம் இங்கு அந்தணர் காதி, நதியில் மூழ்கினவர் வெளியே எழுந்தார்.

அவர் நதியில் மூழ்கி எழுந்து ஒரு நொடிகூட ஆகியிருக்காது. இத்தனை சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன.

`இரவில்தான் இது' போலக் கனவு காண்பார்கள். நாம் நதியில் ஒரு நொடி மூழ்கி எழுவதற்குள் இப்படிக் கனவு கண்டுவிட்டோமே!'' என்று ஆச்சரியப்பட்டார்.

இப்படிச் சில நாட்கள் கழிந்ததும் ஒருநாள் இவருக்குத் தெரிந்த ஓர் அந்தணர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் மிகவும் இளைத்திருந்தார்.

அவரைப் பார்த்து காதி, ''ஏன், இவ்வளவு துரும்பாக இளைத்திருக்கிறீர்களே?'' என்று கேட்டார்.

அதற்கு அந்த அந்தணர், ''அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்! நான் சிறிது காலத்திற்கு முன் கீரதேசம் என்று அழைக்கப்படும் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் எல்லோரும் என்னை அன்பாக வரவேற்று உபசரித்தார்கள். அப்பொழுது ஒரு நாள் அந்த நாட்டை ஒரு சண்டாளன் எட்டு வருட காலம் ஆண்டான் என்றும், அது தெரிந்ததும் அந்த ஊர் அந்தணர்கள் தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர் என்றும், அந்தச் சண்டாள அரசனும் தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டான் என்றும் கேள்விப்பட்டேன். அதனால் அந்த நகரில் இருக்கப் பிடிக்காமல் அதற்குப் பிராய்ச்சித்தம் செய்து கொள்வதற்காக நான் பிரயாகை சென்றிருந்தேன். அப்படி அலைந்துதான் நான் இளைத்துவிட்டேன்!'' என்று சொன்னார்.

அதைக் கேட்டதும் காதி ஆச்சரியப்பட்டு, ``உண்மையில், கீரதேசம் என்ற ஒரு நாடு இருக்கிறதா?'' என்று கேட்டார்.

``நான் அங்கு இருந்தேன் என்று சொல்லுகிறேன், இருக்கிறதா என்று கேட்கிறீரே!'' என்றார் அந்த அந்தணர்.

அவர் சென்ற பிறகு, காதி எங்கெல்லாமோ அலைந்து, கடைசியில் கடஞ்சன் என்கிற சண்டாளன் பிறந்த கிராமத்தைக் கண்டுபிடித்தார்.


அங்கு விசாரித்ததில், கடஞ்சன் என்ற ஒரு சண்டாளன் அங்கு இருந்ததாகவும், அவனுடைய மனைவி மக்கள் வைசூரியினால் இறந்தார்கள் என்றும், அதன் பிறகு அவன் எங்கோ சென்றுவிட்டான் என்றும் கேள்விப்பட்டார்.

தாம் கனவில் கண்டது எப்படி நனவாக இருக்க முடியும்? என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே கீரதேசம் என்று ஒரு நாடு இருக்கிறதா என்று விசாரித்துக் கொண்டு அந்த நாட்டைக் கண்டுபிடித்தார்.

அங்கே சென்றால், ஒரு சண்டாள அரசன் தங்களை எட்டு வருடகாலம் ஆண்டான் என்றும், அது காரணமாக அந்தணர்கள் தீயில் குளித்தார்கள் என்றும், கடைசியில் அந்த அரசனும் தீயில் குளித்து இறந்தான் என்றும் கேள்விப்பட்டார்.

அந்தணர் காதிக்குத் தலை சுழன்றது. தாம் கனவில் கண்டது எப்படி நனவாக இருக்கும் என்று திகைத்தார்.

ஆகவே இதற்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்று மீண்டும் கடும் தவம் செய்ய ஆரம்பித்தார்.

அவர் தவத்தை மெச்சி ஒரு நாள் பகவான் விஷ்ணு அவர் முன் தோன்றினார்.

''என்ன, மாயையைப் பார்க்க வேண்டும் என்றாயே, பார்த்தாயா? நீ எது உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, அது வெறும் பிரமைதான். உலகில் நாம் பார்க்கும் எல்லாக் காட்சிகளும் நம் சித்தத்தின் கற்பனைதான். ஜகத் என்னும் இந்தச் சிருஷ்டி உன் சித்தத்தின் கற்பனையிலிருந்து உண்டானதுதான். நீ பார்த்ததெல்லாம் பிரமைதான். ஆகவே, இதுதான் மாயை என்று தெரிந்துகொள்'' என்றார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1872.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License