இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

சிறந்த மண்டை ஓடு!


ஒரு காலத்திலே ஒரு பெரிய அரக்கன் இருந்தான். அவன் ஒருநாள் இரவு மூன்று மண்டையோடுகளை எடுத்துக் கொண்டு ஓர் அரசனுடைய அரண்மனைக்குச் சென்றான்.

அரசனிடம் அவன், ''ஏ, ராஜாவே! இதோ பார். மூன்று மண்டை ஓடுகளை நான் இப்போது கொண்டு வந்திருக்கிறேன். இந்த மூன்று மண்டை ஓடுகளில் எது மிகவும் சிறந்த மண்டை ஓடு என்று நீ பதில் சொல்லியாக வேண்டும். நீ சொல்லும் பதில் சரியாக இல்லாவிட்டால், உன்னை இப்படியே நான் என் வாயிலே போட்டுக் கரகரவென்று கடித்து மென்று தின்றுவிடுவேன்'' என்று சொல்லி அரசனைப் பயமுறுத்தினான்.

அரசனுக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை. ஏனென்றால் மூன்று மண்டை ஓடுகளுமே பார்ப்பதற்கு ஒரேமாதிரியாக இருந்தன! பார்ப்பதற்கு மட்டுமல்ல, எல்லாவிதத்திலுமே அவைகள் ஒன்று போலவே இருந்தன. ஆதலால் அரசனால் சட்டென்று உடனேப் பதில் சொல்ல முடியவில்லை. சரியாகப் பதிலைச் சொல்லாவிட்டால் அரக்கன் தன்னை விழுங்கிவிடுவானே என்று அரசன் மிகவும் பயந்து போய் விட்டான்.

அரசன் மிரள மிரள விழித்தான். அரக்கனோ, ''உம்! பதில் சொல். பதிலைச் சொல்கிறாயா, இல்லை உன்னைச் சாப்பிட்டு விடட்டுமா?'' என்று சொல்லி மிரட்டினான்.

அரசனுக்கு அப்போது நல்லவேளையாக ஒரு யோசனை தோன்றியது.

உடனே, அவன், ''எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுங்கள். உங்களுடைய கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்லி விடுகிறேன்'' என்று சொன்னான்.

அரக்கனும் அதற்கு ஒப்புக் கொண்டு மூன்று மண்டை ஓடுகளை அரசனிடம் கொடுத்துவிட்டுப் போனான்.

அரசனுக்கு அரக்கன் வந்துபோன பிறகு தூக்கமே வரவில்லை. எப்படி வரும்? அப்போதைக்குத் தப்பித்துக் கொண்டாலும், மூன்று நாளைக்குப் பிறகு அரக்கனுக்கு எப்படியும் பதில் சொல்லியாக வேண்டும் அல்லவா? சரியான பதிலைச் சொல்லாவிட்டால் அவன் சும்மா விடமாட்டானே!


அரசனுக்கு எதிரில் மண்டை ஓடுகள் இருந்தன. அரசன் அவைகளை ஒவ்வொன்றாக எடுத்து, இப்படியும் அப்படியும் எப்படியெல்லாமோ ஆராய்ந்து பார்த்தான். அவைகள் ஒன்று போலவே இருந்தனவே தவிர, அவைகளில் எது சிறந்த மண்டை ஓடு என்று அரசனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எதிரிலிருந்த மண்டையோடுகளைப் பார்க்கப் பார்க்க அரசனுக்கு பயம்தான் அதிகமாகியது.

மறுநாள் அரசன் தன்னுடைய சபையைக்கூட்டி, அந்த நாட்டில் இருந்த பெரிய பெரிய பண்டிதர்களை எல்லாம் வரவழைத்தான்.

அரசவைப் புலவர்கள் உட்பட, அன்றைய நாளில் சபைக்கு ஏராளமான பண்டிதர்கள் வந்து குழுமினார்கள்.

சபையின் நடுவிலே ஒரு மேசை இருந்தது. அந்த மேசையின் மீது மூன்று மண்டை ஓடுகளும் வைக்கப்பட்டிருந்தன.

அரசன், சபைக்கு வந்திருந்த பண்டிதர்களைப் பார்த்து, ''அறிஞர் பெருமக்களே, உங்களுடைய உதவி இப்போது எனக்கு அவசியம் தேவைப்படுகிறது. இங்கே உங்கள் முன்னால் மூன்று மண்டை ஓடுகள் வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இவைகளில் மிகச் சிறந்த மண்டை ஓடு எது என்று ஆராய்ந்து சொல்லும்படி வேண்டிக்கொள்கிறேன்'' என்று சொன்னான்.

மூன்றும் ஒரே மாதிரியாக இருந்த மண்டை ஓடுகளை அறிஞர்கள் பார்த்தார்கள், கைகளிலே தூக்கி வைத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவராலுமே அரசனுடைய கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. 'மூன்றுமே ஒன்றாகவே இருக்கின்றன. இவைகளில் மிகச்சிறந்தது என்று எந்த ஒன்றையுமே நிச்சயம் செய்து சொல்வதற்கில்லை' என்று சொன்னார்கள்.

அனைவருமே இப்படிச் சொல்லிவிட்டதால், அரசனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பாவம் அவன் என்னதான் செய்வான்? ஆனானப்பட்ட அறிஞர்களாலேயே, மூன்று மண்டை ஓடுகளில் எது சிறந்தது என்று சொல்ல முடியவில்லையே!

அரசன் திகைத்துக்கொண்டிருந்த சமயத்திலே, சபையின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த கிழவர் ஒருவர் எழுந்து வந்தார். அவர் தலையிலே தலைப்பாகை சுற்றியிருந்தார். கையிலே நீண்ட ஒரு கோலை வைத்திருந்தார். கொஞ்ச சிவப்பு நிறத்தில் நீண்ட அங்கியை ஆடையாக அணிந்திருந்தார். அவருடைய கண்கள் பார்ப்பதற்குப் பளபளப்பாக பிரகாசத்துடன் இருந்தன. அவருடைய முகத்திலே ஞானஜோதி வீசியது. வயது ஆகியிருந்தாலும் உறுதியான கட்டுடல் அவருக்கு இருந்தது. அந்தக் கிழவரின் பெயர் நரேந்திரர் என்பது. மகா மகாவிவேகி அவர். கிழவர் மேஜையின் அருகிலே சென்று மூன்று மண்டை ஓடுகளையும் கூர்ந்து பார்த்தார். பிறகு அமைதியாக ஒவ்வொன்றாகக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு அந்த அந்த இடத்திலேயே வைத்தார்.


பின்பு அரசனை நோக்கித் திரும்பி, ''மகாராஜாவே, ஒரு இரும்புக்கம்பி எனக்கு இப்போது வேண்டும்'' என்று சொன்னார்.

அரசன் சைகை செய்தான். உடனே ஒரு சேவகன் ஓடிப்போய் ஒரு கம்பியைக் கொண்டு வந்து கிழவரிடம் கொடுத்தான்.

சபையில் இருந்தவர்கள் எல்லோரும் கிழவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கிழவர், கம்பியை முதலாவதாக இருந்த மண்டை ஓட்டின் காதிலே நுழைத்தார். அந்தக் கம்பி, மண்டை ஓட்டின் மறு காது வழியாக வெளியே வந்து விட்டது.

பிறகு கிழவர், கம்பியை எடுத்து இரண்டாவதாக .இருந்த மண்டை ஓட்டின் காதிலே நுழைத்தார். அப்போது அந்தக் கம்பி, மண்டை ஓட்டின் வாயின் வழியாக வெளியே வந்தது!

பிறகு கிழவர், அதே கம்பியை மூன்றாவதாக இருந்த மண்டை ஓட்டின் காதிலே நுழைத்தார். கம்பி இந்தத் தடவை மண்டை ஓட்டுக்கு கீழே, அதாவது இதயத்தை நோக்கி நேராகப் பாய்ந்து விட்டது. அந்த நிலையில் கம்பியிருப்பதே தூரத்தில் இருந்த மற்றவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை.

கிழவர் அரசனை நோக்கித் திரும்பி, ''மூன்றாவதாக இருக்கும் மண்டை ஓடுதான், இங்குள்ள மூன்று மண்டை ஓடுகளிலும் மிகச்சிறந்த மண்டை ஓடு'' என்று சொன்னார்.

அவ்விதம் சொல்லிவிட்டு அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். ''மனிதப் பிறவியின் ஒரேஒரு இலட்சியம் கடவுளை அடைவதுதான். மக்களுள் ஒருவகையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கடவுளைப் பற்றிய ஞான மொழிகளை எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், தங்களுடைய ஒரு காதிலே வாங்கி மறுகாது வழியாக அவைகளைக் காற்றிலே பறக்க விட்டு விடுவார்கள். அதாவது அவர்களுடைய உள்ளத்தில் அந்த உண்மைகள் பதிவதும் இல்லை; கடவுளை அடைவதற்காக அவர்கள் முயற்சி செய்வதும் இல்லை. முதலாவது மண்டை ஓடு அவர்களை உணர்த்துகிறது.

“மக்களுள் இரண்டாவதாக ஒருவகையினர் இருக்கிறார்கள். கடவுளைப் பற்றிய ஞானமொழிகளைக் கேட்கும் அவர்கள், மற்றவர்களுக்கு அந்த உண்மைகளை உபதேசம் செய்வதில் மிகமிக ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களே அந்த உண்மைகளைக் கடைப்பிடிப்பதற்கு முயற்சி செய்வதில்லை. அவர்களுடைய உள்ளத்திலும் அந்த உண்மைகள் பதிவது இல்லை. பிறருக்குப் போதிப்பதிலேயே கருத்துச் செலுத்தும் இந்த வகையான மக்களை, இரண்டாவது மண்டை ஓடு உணர்த்துகிறது.

“மூன்றாவதாக ஒருவகை மக்கள் இருக்கிறார்கள். உண்மையிலேயே இவர்கள்தான் உயர்ந்தவர்கள். இவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைகளைக் கேட்ட உடனேயே, அப்படியே தங்களுடைய இதயத்தில் பதிய வைத்துக்கொள்கிறார்கள். பின்பு அந்த உண்மைகளை எழுத்துக்கு எழுத்து வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு, ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிமிடமும் முயற்சி செய்கிறார்கள். இந்த வகையைச் சேர்ந்தவர்கள் சான்றோர்கள் ஆவார்கள்.


“பரமஹம்சர்களும் நல்ல உள்ளம் கொண்ட உண்மையான பக்தர்களும் இந்தப் பிரிவில் அடங்குகிறார்கள். அவர்களையே மூன்றாவதாக இங்கே வைக்கப்பட்டுள்ள மண்டை ஓடு உணர்த்துகிறது. மக்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது மண்டை ஓடு உணர்த்தும் உண்மைகளுக்கு ஏற்பவே வாழ வேண்டும். இதுவே மூன்று மண்டை ஓடுகளும் உணர்த்தும் நீதி ஆகும். ஆகவே மூன்றாவது மண்டை ஓடுதான் இங்குள்ள மண்டை ஓடுகளிலேயே மிகச்சிறந்த மண்டை ஓடு'' என்று சொன்னார் பெரியவர்.

அவருடைய விளக்கம் அரசனுக்கு முழுமையான திருப்தியைக் கொடுத்தது.

பிறகு அரக்கன் வந்தபோது, அரசன் தான் பெரியவரிடமிருந்து கேட்ட உண்மைகளைச் சொன்னான்.

அரக்கனும் அரசன் சொன்ன விளக்கத்தை மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு போய்விட்டான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1900.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License