இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

கடவுளைக் காணவில்லை


ஒரு நகரத்திலே தேவதாசன் என்பவன் இருந்தான். அவன் பல புராணங்களையும், சாஸ்திரங்களையும் நன்றாகப் படித்திருந்தான்.

தேவதாசன் சாதாரண ஆசார அனுஷ்டானங்களையும் கூட மிகக் கடுமையாகப் பின்பற்றி வந்தான். சமயச் சின்னங்களும், அடையாளங்களும் அவனுடைய உடலை அலங்கரித்தன.

ஒரு நாள் தேவதாசனுக்குப் புதுமையான ஆசை தோன்றியது. அதாவது, கடவுளைக் காண வேண்டும் என்று அவன் விரும்பினான்.

கடவுள், மேலே ஏதோ ஒரு உலகத்தில் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்பது அவனுடைய எண்ணம். என்றோ ஒரு நாள் கடவுள் சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்து தனக்குக் காட்சி கொடுப்பார் என்று நம்பி வந்தான்.

ஒவ்வொரு நாளும் தவறாமல் கோயில்களுக்குச் சென்று வழிபட்டான். அவன் கோயில்களின் முன்னால் சிதறவிட்ட தேங்காய்களுக்கு ஓர் அளவே இல்லை.

தேவதாசனின் செலவில் தெய்வங்களின் விக்கிரங்களுக்கு நாள்தோறும் குடம் குடமாகப் பால் அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகங்களுக்கும், யாகங்களுக்கும் அவன் தாராளமாகப் பணம் செலவு செய்தான்.

கடவுளைக் காணவேண்டும் என்பதற்காக தேவதாசன் இவ்வளவு காரியங்களையும் செய்து பார்த்தான். ஆனால், சொர்க்கத்திலுள்ள அவனுடைய கடவுள் கீழே இறங்கி வரவுமில்லை. அவனுக்குக் காட்சிக் கொடுக்கவுமில்லை.

தேவதாசன் ஒரு சிறந்த பக்தன் என்று ஊரில் உள்ளவர்கள் எல்லாம் பேசிக் கொண்டார்கள். அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களிலிருந்து ஏழை எளியவர்கள், அகதிகள், அனாதைகள் எல்லாம் அவனிடம் சிறு சிறு உதவிகள் கேட்டு வர ஆரம்பித்தார்கள்.


தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களை எல்லாம் தேவதாசன் வெறும் கையோடு திருப்பி அனுப்பிவிட்டான். அவனுடைய அன்பு முழுவதும் யாருமே பார்த்திராத சொர்க்கத்தில் உள்ள கடவுளிடமே இருந்தது.

தேவதாசனுக்குக் கடவுளைக் காணவேண்டும் என்ற ஆசை மேலும் தீவிர மாகியது. இன்னும் அதிகமாக ஆசார அனுஷ்டானங்களை மிக மிக தீவிரமாக அனுஷ்டித்தான்.

உபவாசங்கள் இருந்தான். சமய சம்பந்தமான புத்தகங்களை எல்லாம் திரும்பத் திரும்ப படித்தான். ஆனால் அவன் பகவானை மட்டும் பார்க்கவில்லை.

வேதங்களைப் படித்தான், கீதை பாராயணம் செய்தான். ஆனால் கடவுள் மட்டும் வரவே இல்லை.

தேவார, திருவாசகங்களை உருப் போட்டான். ஆனாலும் சிவபெருமானின் காட்சி கிடைக்கவில்லை.

குரானை ஓதினான்; பைபிளைக் கற்றுத் தேர்ந்தான். ஆனால் பரமபிதா வரவில்லை.

கடவுளைத் தரிசிப்பதற்குத் தேவதாசன் நீண்ட தூரங்களிலுள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கும் யாத்திரை செய்தான்.

கயையிலும் காசியிலும் கடவுளைத் தேடினான்.

கையிலை மலையிலும் கன்னியாகுமரியிலும் சிரமப்பட்டு இறைவனைத் தேடினான்.

மசூதியிலும் தேவாலயங்களிலும், மண்டியிட்டுத் தொழுதான். தெய்வத்தைத் தேடி உலகமெல்லாம் அலைந்தான்.

என்ன ஆச்சரியம்! அவன் தேடிய கடவுளை அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஒரு நாள் தேவதாசன் கடவுளைத் தேடிக்களைத்தவனாக ஒரு சத்திரத்திலே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான்.

தான் எங்கு தேடியும் தனக்குக் கடவுள் தரிசனம் தரவில்லையே என்று தேவதாசன் மிக மிக வருந்தினான்.

'தெய்வமே! உன்னை நான் உலகமெல்லாம் தேடிக்களைத்து விட்டேனே? இன்னும் நீ மனம் இரங்கவில்லையா? உன்னை நான் பார்க்கவே முடியாதா?' என்று தேவதாசன் புலம்பினான்.


உடனே அவன் தங்கியிருந்த அறைக்குள் ஒரு பெரிய ஜோதி தோன்றியது.

ஆண்டவனின் குரல் அசரீரியாக அந்த அறையிலே ஒலித்தது:

"தேவதாசா! என்னை ஏன் அங்கும் இங்குமாகத் தேடி அலைகிறாய்? நான் உன்னைத் தேடி ஒவ்வொரு நாளும் உன் வீட்டுக்கு வந்தேன்.

''ஏழையாய் உன்னிடம் யாசகம் கேட்டு வந்தேன். நீ என் பசியைத் தீர்க்கவில்லை. அகதியாய் உன்னை அண்டினேன். என்னை நீ ஆதரிக்கவில்லை. அனாதையாய் உன்னிடம் வந்தேன். நீ எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை. கைம்பெண்ணாக உன் வீடு தேடி வந்தேன். நீ என் கண்ணீரைத் துடைக்கவில்லை.

"அன்பனே! என்னை மசூதியிலோ, அல்லது மலையிலோ குகையிலோ தேடுவதால் மட்டும் பயனில்லை. நான் வேதங்களிலோ புராணங்களிலோ ஆகமங்களிலோ கோயில் கொள்ளவில்லை. கங்கைக் கரையில் கிணறு தோண்டுவது முட்டாள் தனம் அல்லவா? கைப்புண்ணைப் பார்க்கக் கண்ணாடி தேடுவதா? மக்கள் வடிவத்திலே நான் இருக்கிறேன். மனிதனின் ஆத்மாவாக நானே இருக்கிறேன்.

"எவனொருவன் என்னை-ஏழை எளியவர்கள், அகதிகள் அனாதைகள், கைம்பெண்கள், திக்கற்றவர்கள், தாழ்த்தப்பட்டோர்கள், பாமரர்கள் ஆகியவர்களிடம் கண்டு அவர்களுக்குத் தொண்டு செய்கிறானோ-அவனே என்னுடைய தலைச்சிறந்த பக்தன். அவன் என்னை வெளியில் தேடி அலைய வேண்டிய அவசியம் கூட இல்லை. நான் அவனிடம் வாழ்கிறேன். அவன் என்னிடம் வாழ்கிறான்'' என்று தெய்வத்தின் குரல் அசரீரியாக ஒலித்து ஓய்ந்தது.

தேவதாசன் ஒரு பெரிய உண்மையை உணர்ந்தான். அப்போது முதல் கடவுளை மக்கள் வடிவில் பார்த்துச் சேவை செய்யத் தொடங்கினான்.

‘ஒரு பேரொளியாகிய தெய்வத்தின் ஒளிக்கதிர்கள் போன்றவர்களே மக்கள். மனிதனுக்குச் செய்யும் தொண்டே கடவுளுக்குச் செய்யும் தலை சிறந்த வழிபாடாகும்' என்று தேவதாசன் உணர்வு பெற்றான்.

தேவதாசன் மனிதனில் ஈசனைக் கண்டான். மனித சேவையில் இன்பமும், சாந்தியும், திருப்தியும் அடைந்தான்.

அதுவே அவனை மிகப்பெரும் நிலைக்கு உயர்த்தியது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1903.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License