இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

பாவத்தில் பங்கு கொள்வார்களா?


முன்னொரு காலத்தில் ரத்னாகரன் என்ற ஓர் அந்தணன் இருந்தான். அவன் சகவாச தோஷத்தினால் திருடன் ஆகிவிட்டான்.

காட்டில் அவன் ஒற்றையடிப் பாதையில் ஒளிந்து கொண்டு நிற்பான். அந்த வழியாக யாராவது யாத்திரிகர் வந்தால் அவர்கள் மீது பாய்ந்து அவர்களைக் கொல்வான். பிறகு அவர்களிடமுள்ள பொருள்களைக் களவாடி அவர்களின் உடலை அப்பால் தூக்கி எறிவான்.

ஒருதடவை தேவரிஷி நாரதர் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் ரத்னாகரன் அவர் மீது பாய்ந்து தன் கையிலிருந்த கத்தியை உருவினான்.

``நீ எதற்காக அப்பா என்னைக் கொல்ல வருகிறாய்? நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்?'' என்றார் நாரதர்.

``நீங்கள் எனக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லை. ஆனால் உங்களைக் கொன்று உங்கள் உடைமைகளை எடுத்துக் கொள்வேன்!''

``மனிதர்களைக் கொல்லாமல் காய் கிழங்குகளை உண்டு நீ வாழ்க்கை நடத்த முடியாதா?''

``நான் காய் கிழங்குகளைச் சாப்பிடலாம். ஆனால் என் பெற்றோர், என் மனைவி, என் குழந்தைகள் இவர்களால் காய் கிழங்குகளைச் சாப்பிட முடியுமா?''

``அப்பா, நீ யாருக்காக இப்படி மனிதர்களைக் கொல்லும் பாவத்தைச் செய்கிறாயோ, அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ளப் போகிறார்களா? உன் பாவத்தை நீ தான் அனுபவிக்க வேண்டும்; தெரிந்ததா?'' என்றார் நாரதர்.


``இது எப்படி நியாயம் ஆகும்? என் பாவத்தினால் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு யார் வாழ்க்கை நடத்துகிறார்களோ அவர்கள் என் பாவத்தில் ஒரு பங்கை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?''

``அப்படி இல்லை அப்பா! உன் பாவத்தில் யாரும் பங்கெடுத்துக் கொள்ள மாட்டார்கள். உனக்குச் சந்தேகமாக இருந்தால் நான் இங்கேயே நிற்கிறேன். நீ வீட்டிற்குப் போய்க் கேட்டுவிட்டு வா.''

``ஐயா, பெரியவரே! என்னை என்ன மடையன் என்று நினைத்துக் கொண்டீர்களா? என்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, நீ்ங்கள் ஓடிப் போய்விடலாம் என்று பார்த்தீர்களா?''

``நான் எங்கும் ஓடிப் போகமாட்டேன். ஆனால், உனக்கு இந்தச் சந்தேகமே வேண்டாம். நீ என்னை இந்த மரத்தோடு கட்டிப் போட்டுவிட்டு உன் வீட்டிற்குச் செல்'' என்று சொல்லிவிட்டு நாரதர் மரத்தின் அருகில் போய் மரத்தோடு மரமாக நின்றார்.

ரத்னாகரன் அவரைக் காட்டுக் கொடியினால் மரத்தோடு கட்டினான். கட்டிவிட்டு நேரே வீட்டை நோக்கி ஓடினான்.

``அப்பா, நான் தினம் பாவமான கொலைத் தொழில் புரிந்துதான் உங்களையெல்லாம் காப்பாற்றி வருகிறேன். அந்தப் பாவத்தில் உங்களுக்கும் பங்கு உண்டா, இல்லையா?'' என்று கேட்டான்.

தகப்பனார் சற்று நேரம் யோசித்தார். பிறகு சொன்னார் - ``பிள்ளாய்! நாங்கள் உன்னை வளர்த்துப் பெரியவனாக்கினோம். இப்பொழுது எங்களுக்கு மூப்பு வந்துவிட்டது. நாங்கள் உன்னைக் காப்பாற்றியது போல, இப்பொழுது எங்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதற்கு வேண்டிய பணத்தை நீ எப்படிச் சம்பாதிக்கிறாய் என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆகவே, உன் பாவத்திலோ புண்ணியத்திலோ எங்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது.''

ரத்னாகரன் இந்தப் பதிலைக் கேட்டுச் சற்று அயர்ந்தான். பிறகு தாயாரிடம் இதே கேள்வியைக் கேட்டான். தகப்பனார் சொன்ன பதிலைத்தான் அவளும் சொன்னாள்.

ரத்னாகரன் இதே கேள்வியை மனைவியிடம் கேட்டான். அவள் சொன்னாள்- ``மனைவியைக் காப்பாற்ற வேண்டியது கணவனின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற நீங்கள் எப்படிப் பொருள் சம்பாதிக்கிறீர்கள் என்பதைப்பற்றி எனக்குக் கவலை கிடையாது. ஆகவே உங்கள் பாவத்தில் எனக்கு எப்படிப் பங்கு ஏற்படும்?''

கடைசியில் தன் மகனையும் இதே கேள்வியைக் கேட்டான். அதற்கு மகன் சொன்னான்- ``அப்பா, நான் இப்பொழுது சிறுவன். தாங்கள் என்னைக் காப்பாற்றி வருகிறீர்கள். நாளைக்கு நான் பெரியவனானதும் நான் உங்களைக் காப்பாற்ற ஆரம்பிப்பேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். ஆகவே உங்கள் பாவத்தில் என்னால் எப்படிப் பங்கேற்றுக் கொள்ள முடியும்?''

இவர்கள சொன்ன பதில்களைக் கேட்ட பிறகுதான் ரத்னாகரனுக்கு ஞானோதயம் பிறந்தது.

நாரதரைக் கட்டிப் போட்டிருந்த இடத்திற்கு ஓடினான். அவரை விடுவித்து அவர் காலில் விழுந்து கதறி அழுதான்.

``என் குடும்பத்தைக் காப்பாற்ற நான் இதுவரையில் எத்தனையோ பாவகாரியங்களைச் செய்திருக்கிறேன். இருந்தும் அவர்களில் ஒருவராவது என் பாவத்தில் பங்கு கொள்ளமாட்டேன் என்கிறார்களே! சுவாமி, நீங்கள்தான் என் பாவங்களுக்கு ஒரு பிராயச்சித்தம் சொல்ல வேண்டும்'' என்று கேட்டான்.

``நல்லோரைக் காண்பதுவும் நன்றே'' என்று சொல்வார்கள். அது ரத்னாகரன் விஷயத்தில் மிகவும் உண்மையாகிவிட்டது. இத்தனை நாளும் தான் செய்தது தவறு என்று உணர ஆரம்பித்துவிட்டான்.

நாரதர் அவனுக்கு ஒரு பிராயச்சித்தம் சொல்லிக் கொடுத்தார். ராமநாமம் ஜபிக்கச் சொன்னார். ஆனால் அவனால் `ராம' என்ற நாமத்தைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. எனவே நாரதர் தான் கட்டப்பட்டிருந்த மரத்தின் பெயரான மராவை `மரா' என்று ஜபிக்கும் படிச் சொன்னார்.


அவ்வளவுதான், ரத்னாகரன் அங்கேயே உட்கார்ந்து 'மரா, மரா' என்று ஜபம் செய்யத் தொடங்கினான். நாளடைவில் அது 'ராம, ராம' என்று மாறிற்று.

வருஷங்கள் சென்றன. ஆனால் ரத்னாகரன் அங்கேயே உட்கார்நது தன்னை மறந்து ராமஜபம் செய்துகொண்டேயிருந்தான். அவனைச் சுற்றிப் புற்று உண்டாகிவிட்டது. அவர் தவத்தை மெச்சிப் பிரம்மா, ஒரு நாள் அவர் முன் தோன்றி, அவரை வெளியே வரும்படி அழைத்தார். வெளியே வந்தவா் பழைய ரத்னாகரன் அல்ல; புதிய வால்மீகி!

வடமொழியில் புற்றை வல்மீகம் என்று அழைப்பார்கள். ஆகவே வல்மீகத்திலிருந்து வெளிப்பட்ட அவர் வால்மீகி எனறு அழைக்கப்பட ஆரம்பித்தார்.

அந்த வால்மீகிதான் ஆதி கவியாகி, அழியாப் புகழ் பெற்ற ராமாயணக் காவியத்தை இயற்றினார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1914.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License