இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

காகத்திற்கு வந்த சோகம்


ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் மரம் ஒன்று அடர்ந்து செழித்து இருந்தது. அந்த மரத்திலே நிறைய காகங்கள் கூடு கட்டி வசித்தன. அந்த மரமும் அதில் உள்ள காகங்களும் பார்ப்பதற்கு எப்போதுமே வசந்த காலத்தின் துவக்கம் போலவே தெரியும். அந்த மரத்தின் காகங்கள் மனிதர்களைப் போலக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தன. அந்தக் காகங்களில் மூத்த காகம் ஒன்று எப்போதும் பார்ப்பதற்குச் சுறுசுறுப்பாகவும் திறமைசாலியாகவும் இயங்கி வந்தது. சில தினங்களுக்கு ஒருநாள் காகங்களெல்லாம் ஒன்று கூடி அந்த மூத்த காகத்தின் சொல் கேட்டு எந்தவித ஆபத்தும் இல்லாமல் சுதந்திரமாய் சந்தோஷமாய் வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் அந்த மூத்த காகம் பறந்து திரியாமல் படுத்தேக் கிடந்தது. மற்ற காகங்கள் எல்லாம் சேர்ந்து அந்த மூத்த காகத்தை விசாரிக்க, தனக்கு உடல்நிலை சரியில்லை என்றது. மற்ற காகங்கள் உடனே ஊரில் தெரிந்த வைத்தியர் காகத்தை அழைத்து வந்தன.

வைத்தியர் காகம் வந்து பரிசோதித்துவிட்டுக் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஒரு நாளைக்கு மேல் இந்தக் காய்ச்சல் நிற்காது என்றும், தான் கொடுத்த மருந்தை இரண்டு நாட்கள் கொடுக்கும்படியும் உங்கள் ஒற்றுமை தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதென்றும் கூறிவிட்டு ஆனந்தமாய் பறந்து சென்றது.

அன்றும், அன்று மறுநாளும் அந்த மூத்தக் காகத்திற்கு உணவுக்கு உணவும் மருந்திற்கு மருந்தும் வேளை தவறாமல் தந்து மற்ற காகங்கள் பணிவிடை செய்தன. மருந்தினாலும் மற்ற காகங்களின் கவனிப்பாலும் ஒரே நாளில் உடல்நிலை தேறிவிட்டக் காகத்திற்கு மறு நாளும் ஓய்வெடுக்க எண்ணம் வந்து படுத்தேக் கிடந்தது.

மூத்த காகம் ஒரு நாள் படுத்து கிடந்ததால் தேவையில்லாத சிந்தனை அதற்குள் வந்தது. மாலை நேரத்தில் மற்ற காகங்களை அழைத்து கம்மிய குரலில் பேசி முதல் முறையாக நடிக்கக் கற்றுக்கொண்டது. தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாலும் தனக்கு வயது கூடிப்போனதாலும் தன்னால் வெளியில் திரிந்து உழைக்க முடியாது என்றும் தனக்கான உணவை தேடிக்கொள்ள முடியாது என்றும், இனி நீங்கள் தான் என்னை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறிப் படுக்கையிலே படுத்துக்கொண்டது.

ஆனாலும், அந்த மூத்தக் காகத்தின் மனசாட்சி இடித்துக்கொண்டே இருந்தது. தனக்கு ஒன்றும் இல்லை என்றும் தன்னால் முன்பு போல நன்றாக இயங்க முடியும் என்றும் தெரிந்தும் தேவையற்ற ஒரு நாள் சோம்பல் ஓய்வினால் அதன் மனம் மாறிப்போனது.


மற்ற காகங்கள் அன்று தான் முதல் முறையாகத் தலைவன் இல்லாமல் ஒன்று கூடி முடிவெடுத்தன. ஒவ்வொரு காகமும் ஒவ்வொரு வேளையாக முறை வைத்து அந்த மூத்தக் காகத்திற்கு உணவு அளிப்பதென முடிவு செய்து அதன்படி செய்தும் வந்தன. ஆரம்பத்தில் இலவச உணவு வகைகள் சுவையாக இருந்தன. நாள்பட நாள்பட சுவை குன்றுவதாக தோன்றியது. அந்த மூத்த காகம், ஒவ்வொரு காகத்திடமும் குறை பேச ஆரம்பித்தது.

நாளடைவில் சண்டையிடவும் ஆரம்பித்தது.

நீண்ட நாட்கள் கழித்து மற்ற காகங்கள் மீண்டும் கூட்டம் கூடி மூத்த காகத்தின் நிறை குறைகளைக் கூறித் தங்களுடைய கஷ்டங்களையும் சொல்லிப் புலம்பின. தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் உணவைத் தேடி மூத்த காதத்திற்கும் சேர்த்து உணவு தேடுவதற்குள் படும்பாட்டைக் கூறி அப்படித் தேடிக்கொடுத்தும், அந்த மூத்தக் காகத்தின் வம்பு பேச்சையும் சண்டையிடும் போக்கையும் சொல்லி மாற்றி மாற்றி புலம்பின.

மற்றக் காகங்கள் அறியாமல் இவைகளை கேட்க நேர்ந்த மூத்தக் காகத்திற்கு நீண்ட நாட்கள் கழித்துச் சுய சிந்தனை பிறந்தது. தன்னை வழிகாட்டியாக நினைத்து வாழ்ந்த காகங்கள் தான் வழி தவறி நடப்பதைப்பற்றி பேசுவதைக் கேட்க நேர்ந்தது தன்னைப்பற்றி சிந்தித்துக் கொண்டே தன்னை அறியாமல் சிறகடித்து வானில் நீண்ட தூரம் பறந்து திரிந்தது. அப்படியே உணவையும் தேடி உண்டது. உண்டுகளைத்து உறைவிடம் வந்து சேர்ந்தது. உறங்கியும் போனது.


மறுநாள் விடிந்ததும் அந்த மூத்த காகம் தன்னை இளங்காகமாய் உணர்ந்து அன்று வழக்கத்திற்கு மாறுதலாய் அதிகாலையிலே அனைத்துக் காகங்களை ஒன்றாய் வரச்செய்து, தனக்கு ஏற்பட்ட சோம்பல் நிலையை வெளிப்படையாய் ஒப்புக்கொண்டது. மற்ற காகங்கள், அந்த மூத்த காகத்தின் மனமாற்ற நிலையை எண்ணி உயர்வான மதிப்பு கொண்டன. மீண்டும் இயல்பு நிலைக்கு மாறின. மூத்தக்காகத்தால் இப்போது அந்த அடர்ந்த மரமும் அதிலே வாழும் காகங்களின் போக்குவரத்தும் அந்த ஊருக்கு முன்பைவிட அழகு சேர்த்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p848.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License