ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில், ஒருவன் பசுவைக் கொல்வதற்காக வந்தான்.
பசு அவனைப் பார்த்துக் கண்ணீர் சிந்தியது.
அதைப் பார்த்து, “நான் உன்னைக் கொல்ல வந்துள்ளேன், அது தெரிந்து கண்ணீர் சிந்துகிறாயா?” என்று கேட்டான்.
அப்பொழுது பசு, “நான் எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது. எந்தத் தப்பும் செய்யாமல், யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னைக் கொன்று, என் மாமிசத்தைச் சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்துப் பார்த்தேன். பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைகளுக்குப் பால் கொடுக்கிறேன். ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே. பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையினால் நெய்யைச் செய்தீர்கள். என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்து எரிப்பொருளுக்கு உபயோகித்தீர்கள். அதே போல என்னுடைய சாணத்தினால் எருவினைத் தயார் செய்து விவசாயத்திற்குப் பயன்படுத்தீனீர்கள். அந்தப் பணத்தினால் இன்பமான வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு அழுகிப் போன காய்கறிகளையும், காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள். என்னுடைய சாணத்தினால் எரிவாயு தயார் செய்து, உங்கள் வீட்டை இருட்டிலிருந்து ஒளிமயமாக ஆக்கினீர்கள். ஆனால் என்னைக் கசாப்புக்காரன் போல் கொல்ல வந்திருக்கிறீர்கள்… என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னைக் கொல்ல ஆயுதத்தைத் தூக்க முடிந்தது. அந்த ஆயுதத்தைத் தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான். என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டைக் கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய். உன்னைப் பெற்ற தாயை விட மேலாக உனக்கு ஆதரவாக இருந்தேன். எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகுமோ உன் வருங்காலத்தைக் குறித்து நான் சிந்தித்தேன். கண்ணீர் சிந்தினேன்” என்றது.
அவன் உணர்ந்தான் என்றா... நினைக்கிறீர்கள்...?