ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான். அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.
இச்சூழலில் ஒரு நாள், அவள் ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்படியாக குறையத் தொடங்கியது. அவ்வேளையில் அவளது கணவன் தொழில் விசயமாக வெளியூருக்குப் பயணமாகி இருந்தான்.
அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்தான்.
ஆனால் எவ்விதப் பிரச்சினையும் இன்றி அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.
நாட்கள் செல்லச் செல்ல, அவனது மனைவி அழகு படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள்.
ஆனால், பார்வையிழந்த கணவனுக்கோ இது குறித்து ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிருவரினதும் அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர்.
அவன் அவளை அதிகமாக நேசித்தான், அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறு தான் இருந்தாள்.
அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள்.
அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.
தன் அன்பு மனைவியின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி, அவளை அடக்கம் செய்த பின், அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான்.
அவன் திரும்பி வரும் போது அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து, "உனக்குதான் பார்வையில்லையே, எப்படி உன்னால் தனியே நடந்து செல்ல முடிகிறது? இது வரை நீ உன் மனைவியின் உதவியுடன் தானே நடந்தாய்?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால், அவள் வருத்தப்பட்டு, என்னை விட்டு ஒதுங்கியிருப்பாள் என்பதால், குருடன் போன்று நடித்து வந்தேன். அவள் எனக்குச் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன். அதனால் பார்வையிழந்தது போன்று நடந்து கொண்டு, இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்" எனப் பதிலளித்தான்.