இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

கேள்விக்கு என்ன பதில்?


ஆன்மிகத்தை போதிப்பவர்கள், தயாரிக்கப்பட்ட விடையைத் தந்து சீடர்கள் தேர்ச்சி பெறுவதை விரும்புவதில்லை. உண்மையைத் தேடுவதுதான் முக்கியமே தவிர, தேர்வுக்குப் படிக்கும் மாணவனைப்போல், விடையைக் கண்டு பிடிப்பது முக்கியம் அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான தேர்வு நடக்கும் பயிற்சி அது!

யூத மதத்தைச் சார்ந்த ராபி ஷ்வார்ட்ஸின் வீட்டுக் கதவை, 20 வயதுள்ள இளைஞன் ஒருவன் தட்டினான்.

‘என் பெயர் ஸீன் கோல்ட்ஸ்டீன். நான் ‘தால்மத்’ கற்பதற்காக உங்களிடம் வந்திருக்கிறேன்’ என்றான்.

‘உனக்கு அராமிக் தெரியுமா?’ என்று கேட்டார் ராபி.

‘தெரியாது!’

‘ஹீப்ரூ?’

‘தெரியாது!’

‘நீ தோராவைப் படித்திருக்கிறாயா?’

‘இல்லை. ஆனாலும், கவலைப்படாதீர்கள். நான் தத்துவத்தில் பட்டம் பெற்றிருப்பதுடன், சாக்ரடீஸின் தர்க்கத்திலும் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறேன். தால்மத் பற்றிப் படித்து, என் படிப்பை நிறைவு செய்யலாம் என்று கருதுகிறேன்’ என்றான் அவன்.

அதற்கு ராபி, ‘நல்லது. நீ தால்மத்தைப் படிக்க வேண்டுமென்று விரும்புகிறாய். அது மிகவும் ஆழமான புத்தகம். உனது தர்க்க அறிவைப் பரிசோதிக்க விரும்புகிறேன். அதில் நீ வெற்றி பெற்றால், உனக்கு அதைச் சொல்லித் தருகிறேன்’ என்றார்.

இளைஞனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.

ராபி இரண்டு விரல்களைக் காட்டி, ‘இரண்டு பேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவருடைய முகம் அழுக்காக இருக்கிறது. இருவரில், யார் முகத்தைக் கழுவுவார்?’ என்று கேட்டார்.

‘இதென்ன கேள்வி? அழுக்கான முகத்தோடு இருப்பவரே கழுவுவார்!’ என்றான் இளைஞன்.

‘தவறு! தூய்மையான முகத்தை உடையவரே கழுவுவார். யோசித்துப் பார்… அழுக்கான முகத்துடன் இருப்பவர் சுத்தமான முகத்துடன் இருப்பவரைப் பார்த்து, தன் முகமும் அதேபோல் சுத்தமாக இருப்பதாகவே நினைத்துக்கொள்வார். சுத்தமாக இருப்பவரோ அழுக்கானவரின் முகத்தைப் பார்த்து, தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக்கொள்வார். எனவே, சுத்தமான முகம் உடையவரே முகத்தைக் கழுவுவார்’ என்றார் ராபி.

‘மிகவும் சாமர்த்தியமான பதில்தான். இன்னொரு கேள்வி கேளுங்கள். இம்முறை சரியாகப் பதில் சொல்கிறேன்!’ என்றான் இளைஞன்.


ராபி மீண்டும் இரண்டு விரல்களைக் காட்டி, ”இரண்டு பேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தைக் கழுவுவார்?’ என்று கேட்டார்.

‘மீண்டும் அதேக் கேள்வியா? இதற்கான பதில் ஏற்கெனவே தெரிந்ததுதானே? தூய்மையான முகத்துடன் இருப்பவர்தான் கழுவுவார்’ என்றான் இளைஞன்.

‘தவறு! இருவருமே தங்கள் முகத்தைக் கழுவுவார்கள். ஒரு சின்ன லாஜிக்கை நினைத்துப் பார். அழுக்கு முகத்துடன் இருப்பவர், சுத்தமான முகத்துடன் இருப்பவரைப் பார்ப்பார். எனவே, தனது முகமும் சுத்தமாக இருப்பதாக நினைப்பார். சுத்தமாக இருப்பவரோ அழுக்கானவரின் முகத்தைப் பார்த்து, தனது முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துத் தன் முகத்தைக் கழுவுவார். அதைப் பார்த்து, அழுக்கான முகம் உடையவரும் முகத்தைக் கழுவுவார். எனவே, இருவருமே தங்கள் முகத்தைக் கழுவுவார்கள்!’

‘நான் இதை யோசித்துப் பார்க்கவில்லை. எனது தர்க்கத்தில் இப்படியொரு தவறு இருக்கும் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மறுபடியும் என்னைப் பரிசோதியுங்கள்!’

ராபி மீண்டும் இரண்டு விரல்களைக் காட்டி, ‘இரண்டு பேர் சிம்னியில் இருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறது, மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தைக் கழுவுவார்?’ என்று கேட்டார்.

”இருவருமே முகத்தைக் கழுவுவார்கள்!’

‘தவறு. இருவருமே கழுவமாட்டார்கள். அழுக்கான முகத்துடன் இருப்பவர், சுத்தமான முகம் உள்ளவரைப் பார்த்து தனது முகமும் தூய்மையாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்வார். சுத்தமான முகம் இருப்பவரோ மற்றவரைப் பார்த்து, தன் முகம் அழுக்காக இருப்பதாக நினைத்துக் கொள்வார். ஆனால், அழுக்கான முகம் உடையவர் தன் முகத்தைக் கழுவாததைப் பார்த்துத் தானும் கழுவமாட்டார். எனவே, இருவருமே முகத்தைக் கழுவ மாட்டார்கள்!’ என்றார் ராபி.

இளைஞனான கோல்ட்ஸ்டீன் பதற்றம் அடைந்தான். ‘நான் தால்மத்தைக் கற்க வேண்டும். தயவுசெய்து எனக்கு இன்னொரு தேர்வு வையுங்கள்’ என்று கேட்டுக் கொண்டான்.

ராபி சிரித்துக்கொண்டே, மீண்டும் இரண்டு விரல்களைக் காட்டி, ‘இரண்டு பேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறது, மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தைக் கழுவுவார்?’ என்று கேட்டார்.

‘இருவருமே கழுவமாட்டார்கள்!’


‘தவறு! உங்கள் சாக்ரட்டீஸ் தர்க்கம் தால்மத்தைப் படிக்க போதுமானதாக இல்லை என்பதை உணர முடிகிறதா கோல்ட்ஸ்டீன்? இரண்டு பேர் ஒரே சிம்னியிலிருந்து இறங்கி வரும்போது, ஒருவர் மட்டும் தூய்மையான முகத்துடனும், இன்னொருவர் அழுக்கான முகத்துடனும் எப்படி இருக்க முடியும்? எனவே, கேள்வியே முட்டாள்தனமானது என்று புரியவில்லையா? முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முயன்றால், விடைகளும் முட்டாள்தனமாகத்தான் இருக்கும்’ என்றார் ராபி.

விஞ்ஞானத்தில் ஒருவர் ஓர் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டால், மற்றவர்கள் அதை மீண்டும் கண்டுபிடிக்கத் தேவையில்லை; பயன்படுத்தினால் போதும். ஆனால், மெய்ஞ்ஞானத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பாதைகள் இருக்கின்றன. ஒருவருடையதை இன்னொருவர் ஒருபோதும் பயன்படுத்த முடியாது. சில நேரங்களில் மற்றவர்களுடைய உபதேசங்கள் பயன்படாது. எந்தச் சூழலில் எந்த உபதேசம் என்பதைப் பொறுத்தே, அது முக்கியத்துவம் பெறுகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p938.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License